ஒவ்வொருமுறை
வீடு மாறும்போதும்
பரண்மேலோ படுக்கையினடியிலோ
தூசு படிந்து ஒளிந்திருக்கும்
அப்பத்தாவின் தகரப்பெட்டி
Category: கவிதை
வேம்பில் ஒரு செண்பகம்
பூப்பெய்திய பருவம் முதல் கசப்புக்குள்ளே சில இனிய உணர்வுகளின் ஊடுறுவல்கள் இளமையின் நியதிகளான வாழ்வியல் காற்றின் வேகங்களை திசைகள் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது வயதின் மூப்பில் உலர்ந்துகொண்டிருக்கும் இளமையின் சுவைகள் ஆறிப்போன உணவாகி வெறுமையாக செரித்துவிடுகிறது முதிர் பருவத்தை நோக்கி கசந்துகொண்டிருக்கும் சுவர்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது இளமையின் நிறுவிட இயலாத சுவடுகள் மட்டும் “வேம்பில் ஒரு செண்பகம்”
மரணபரியந்தம்
மரணபரியந்தம் கைளை உயர்த்தாதே என்றார்கள் கைகளைக் கட்டி நின்றேன்.. கைகளே கைகளை சிறைப்பிடித்தது. கால்களை மடக்கி வை என்றார்கள். தரையில் மண்டியிட்டேன். பாதைகள் இருந்தும் பயணம் முடிவுக்கு வந்தது. கண்களை மூடு என்றார்கள் இறுக்கி மூடிக்கொண்டேன். சூழ்ந்தது இருள். காதுகளை மூடு என்றார்கள். அதற்கும் காது கொடுத்தேன். “மரணபரியந்தம்”
ப. கல்பனாவின் குரல்: பார்வையிலிருந்து சொல்லுக்கு
படைப்பு மொழி நிமிர்ந்து நிற்கும் மொழி, பிறர் பரிவுக்காக காத்திருக்கும் மொழியல்ல, பசிவயிற்றில் இருந்தாலும், யாசித்து அல்ல உழைத்து அப்பசியைப் போக்கிக்கொள்ளத் தெரிந்த தன்மான மொழி. அவ்வை முதல் ப. கல்பனாவரை இப்பெண்கவிஞர்களின் கவிதைமொழி காலம் காலமாய் மானுடத்திற்கு தெரிவிப்பது இச்செய்தியை த்தான். எனவே எழுதியவர், பெண்ணா ஆணா. எந்த சாதி, எந்தகுலம் என்பதெல்லாம் முக்கியமல்ல அவர்களின் படைப்பே முக்கியம். வலிமை என்பது உடல் சார்ந்த து அல்ல மனம் சார்ந்தது.
வெளியும் உள்ளும்
புராதன வெளியில் வந்திறங்குகின்றனவலசைப் பறவைகள்.வரப்புகளில் தேங்கும் நீரில் சுற்றிலும் புல்வெளியில்அவை தனித்துப் பொருத்தமற்று தோன்றுகின்றன. பறவைகள் ஒன்றை ஒன்றுபார்த்து நிற்கையில்புல்வெளியின் பரப்பில்மார்கழி இரவின் பனிகாலைக் கதிரவனின் வெம்மையில்மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது.
ஆதி விடம்
அவன் முன்பின் நகரமுடியாத இக்கட்டில் மாட்டியபோது சரியாக அச்சொல்லை எய்ய இவனைத் தூண்டி அவன் குருதியைக் கொப்பளிக்க வைத்தேன் சொல் தைத்துப்பெற்ற தீந்துயரை திரும்ப அளிக்கக் காத்திருந்து பிடுங்கப்பட்ட அதேசொல்லை எறிந்தான் இவனை நோக்கி எளிய வழியில் எதிரிக்கு வெந்நோவை அளிக்க பாவனை செய்கிறான் இவன் வலிக்காதது போல “ஆதி விடம்”
மேசன்களின் உலகம்
இன்று காலை வீட்டை விட்டு வெளியேறி சாலையில் இறங்கியதும் கருப்புக் கண்ணாடியுடன் மோதி விடுவதுபோல் வந்த மேசன் எவர் செய்த புண்ணியமோ, என்று எண்ணும்படி லாவகமாய் வாகனம் திருப்பி நொடிப்பொழுதில் இடிக்காமல் சென்றார். நரை கூடிக் கிழப்பருவம் எய்தி காதிகிராப்ட் கைத்தடியில் வெள்ளை ஜிப்பாவுடன் சந்தனத்தை திருநீறாய் அணிந்து “மேசன்களின் உலகம்”
சுருண்டிருக்கும் உயிர்
காடுகளில் சுற்றித்திரியும் ஆனைகளின் காலடியில் முட்டிமோதும் குட்டியைப்போல் கழிந்திருக்கிறது சிறுபிராயம்… பழகாத துடுப்பால் சுழலும் ஓடமாய் பள்ளி நாட்கள் சுழன்றிருக்கின்றன கல்வி நீரோட்டத்தில் … சகமாணவரின் சூட்டிகை அறைகூவல்களும் வர்க்கத்தின் பாரபட்ச பரிகாசங்களும் உடைந்துபோன மனக்கிளையில் துளிர்த்த அறிவு தளிர்களை வளர்ந்தெழாமலே செய்திருக்கின்றன… வேர்க்கும் வினாக்களை அதிகாரம் எழுப்புகையில் “சுருண்டிருக்கும் உயிர்”
பெறப்படாத பிரியம்
அவளுக்கென பிரத்யேகமான மூலக்கூறுகளுடன் துளித்துளியாய் மனதினுள் ஊறி தளும்பும் பிரியத்தை மறுத்தால் என்செய்வது … பிறருக்கு வழங்கலாமெனில் ஏற்கனவே பெறுகிறார்கள் அவரவரின் கொள்கலனுக்கேற்ப .. புதியவருக்கென யோசித்தால் தனித்தன்மையுடையதை எப்படி …. துளிர்க்கும் ஊற்றுக்கண்ணை வெறுப்பின் இருண்மை கொண்டு அடைக்கலாமெனில் அதன் தொழில்நுட்பம் கைவரப் பெறவில்லை…. பிரியத்தை மறுக்காதீர் “பெறப்படாத பிரியம்”
தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன் (5)
குழுவும் நுண் தொளை வேயினும், குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும், இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த நாள் முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெம் கனல் கதுவியது ஒப்பது பாராய். (2162)
குழலிசையினும் யாழிசையினும் இனிமையானவளே! அடர்ந்த மரங்களில் பூத்திருக்கும் சிவந்த முருக்க மலர்கள் காடு தீ பற்றி எரிவதைப் போல காட்சி தருவதைப் பார்.
எழுத்தாளன் கவிதை
என்ன வேண்டுமானாலும் எழுதலாம்
உன் எழுத்துக்களை மட்டுமே வாசிக்கிறது இவ்வுலகு
ஒயினை அருந்தியபடியே
புகைமூட்டம் மணக்கும்
உண்டியலின் மேல் சிறு இறகு
எப்போதாவது கேட்க
வாய்க்கிற
குயிலின் கூவல்
எதிர்க்குரலின்றி
3 கவிதைகள்
வானிலிருந்து பிரிந்து எழுகிறது முழுநிலா,
பதறி கண்மூடித்திறக்கையில்
மென் ஒளி கரும்பட்டுத்திரையில்
வட்ட ஒளிக்கல்.
மண் உறும் முரசு இனம் மழையின் ஆர்ப்பு உற
இப்பாடலில் கம்பர் கோசல நாட்டின் அமைச்சர்களின் சிறப்பைக் கூறுகிறார். ஒரு நாடு என்பது மன்னனால் மட்டுமே ஆனது அல்ல. ஆக்கபூர்வமாக இயங்கும் ஒரு நாட்டில் அரசு, அமைச்சு, படை, வணிகம், வேளாண்மை ஆகியவை சிறப்பாக இருக்கும். அவ்வாறான நாட்டில் ஓர் அரசின் பணி வாணிகம் செழிக்கவும் குற்றங்களை கட்டுக்குள் வைக்கவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதாக இருக்கும். அவ்வாறான நிலையில் அமைச்சுப் பணி அதற்கென சில தன்மைகளைக் கொண்டதாக இருக்கும். கோசல நாட்டின் அமைச்சர்கள் தலைமுறைகளாக அப்பணியைச் செய்து வருபவர்கள். அமைச்சுப் பணியின் அடிப்படைகளை – மனநிலைகளை தந்தையிடமிருந்து பாட்டனிடமிருந்து பெற்றவர்கள். அப்பணியின் நுணுக்கங்களும் விபரங்களும் சிறு வயது முதல் கேட்டு அறிந்தவர்கள்.
கமலதேவி – இரு கவிதைகள்
அன்று கவரப்பட்ட
திரௌபதியின் வஸ்திரம்
கிடைக்கவேயில்லை…
கண்ணன் தந்த ஆடையோடு
இதுவரையும் வந்துவிட்டாள்.
இரு கவிதைகள் – சதீஷ் குமார்
எப்போதும்
பகலாக..
இரவோடு
புணர விரும்பா
நகரத்து இரவு
கிராமத்து இரவுக்கான
கவிதைகள்- சுசித்ரா மாரன்
வெற்றிலையை
இடித்துக்கொண்டிருக்கும் ..
வாழ்க்கை மென்று
துப்பிய பாட்டிகளின் சரணாலயம்..
திருவையில் அரைத்துக் கொண்டே
இருக்கும் காதலை இல்லாமல் செய்து
இல்லா காதலுக்கு கரம் சிரம் பொருத்தும்
திரைக்கதை அரசிகள்
பக்கத்துவீட்டுஅத்தைகளின்
நட்சத்திர விடுதி…
யானை பிழைத்த வேல் – பகுதி இரண்டு
தடுத்து இமையாமல் இருந்தவர் தாளின்
மடுத்ததும் நாண் நுதி வைத்ததும் நோக்கார்
கடுப்பினில் யாரும் அறிந்திலர் கையால்
எடுத்தது கண்டனர் இற்றது கேட்டார் (783)
அந்நிகழ்வு அரிதானது என்பதால் அதன் எந்த ஒரு துளியையும் தவறவிட்டுவிடக் கூடாது என இமைக்காமல் அதனை நோக்கியிருந்தனர். அப்படியிருந்தும் இராமன் கையில் வில்லை எடுத்ததைப் பார்த்தனர். அது முறியும் சத்தத்தை கேட்டனர். இமைப்பொழுதுக்கும் குறைவான நேரத்தில் இராமன் வில்லை முறித்தான்.
கவிதைகள்- லாவண்யா, வான்மதி செந்தில்வாணன்
கையெழுத்து மறையும் நேரம்
கருவேலமுள் மண்டிக்கிடக்கும்
காட்டுப்பாதையில் நடந்துபோகையில்
கால்செருப்பு கைச்செருப்பானால்
ஒருவன் மனதில் என்ன தோன்றும்?
யானை பிழைத்த வேல் – பகுதி ஒன்று
இராமனும் சீதையும் பார்த்துக் கொண்ட போது விழிகள் சந்தித்தன. இருவரின் உணர்வும் ஒன்றென ஆனது.
பருகிய நோக்கு எனும் பாசத்தால் பிணைத்து……..
இருவரும் மாறிப் புக்கு இதயம் எய்தினார் (600)
விழிகளில் உருவான காதல் இராமனின் இதயத்தில் சீதையையும் சீதையின் இதயத்தில் இராமனையும் இடம்பெறச் செய்தது.
இந்திரநீலம் ஒத்து இருண்ட குஞ்சியும்
சந்திர வதனமும் தாழ்ந்த கைகளும்
சுந்தர மணி வரைத் தோலுமே அல
முந்தி எம்உயிரை அம்முறுவல் உண்டதே (619)
இராமனின் மென்முறுவல் தன் உயிரை உண்டது என்கிறாள் சீதை. இராமனின் மென்முறுவலிடம் சென்று சேர்கிறது சீதையின் அகமும் உயிரும்.
இந்திர நீலம் போன்ற சிகையும் பிரகாசிக்கும் சந்திரனைப் போன்ற முகமும் நீண்ட கைகளும் மலை போன்ற தோள்களும் முதலில் என் உயிரைக் கவரவில்லை; மாறாக இராமனின் புன்னகையே தன் உயிரைக் கவர்ந்தது என்கிறாள் சீதை.
சுபத்ரா; கமலதேவி; வே.நி.சூர்யா கவிதைகள்
இருபத்தோராம் நூற்றாண்டின்
தர்மத்தின் முன் நம்மால் என்ன செய்யமுடியும்?
தன் உணவு
தன் உடைமை தவிர
எஞ்சியவை சுமை.
கவிதைகள் – அன்பழகன் செந்தில்வேல், கமலதேவி
நூல்சுற்றும் உருளை
மொழுமொழுக் கன்னங்களும்
இடையே குருவி வாயும்
மேல்வரிசையின்
இருமுயல் பற்களும்,
அணைத்துக் கொள்ள வசதியான
உயரமும்,
தழுவலின் இயல்பான ஏற்பும்…
அத்தனை உறவுச் சிக்கல்களையும்
ஒற்றை நூலென மாற்றும்.
மூவர் கவிதைகள்
அண்ணன் புத்தாடையும்
முகப்பூச்சுமாய்
உள்ளேயும்வெளியேயும்நடக்க,
திருந்தா நடையோடும்
இடை உள்ளாடையோடும்,
ஊருக்கு செல்லும் பிடியில்
வாசலில் இருந்த வாளியில்
வாலஸ் ஸ்டீவென்ஸின் உன்னதத் தேடல்
சமய உணர்வு மற்றும் சுதந்திர வேட்கை வெளிப்படும் மனநிலையில், அவற்றுக்கு அர்த்தம் இருக்கும் சூழலில், இது போன்ற உன்னத ஏக்கங்கள் இயல்பாகவும் பொருத்தமாகவும் தோன்றுகின்றன. ஆனால் அவ்விதமான பரவசங்கள் இல்லாத நிலையில், நம் காலம் போன்ற வறிய காலத்தில், புலப்பாட்டு எல்லைக்குக் கிட்டாத புலப்படாத் தூண்டுதல்களை நிகழ்த்தும் ‘சப்லிமினல்’ விளம்பரங்கள் மனதை மாற்ற யத்தனிக்கும் யுகத்தில், ஒருவன் உன்னத நாட்டத்தை ஆற்றிக் கொள்வதோ, அதை எதிர்கொள்வதோ எவ்வாறு? ‘நவீன காலத்துக்கான உன்னத நாட்டம்” என்று நான் அழைக்கவிருக்கும் உணர்வு நிலையின் ஒரு சன்னலை மகத்தான அமெரிக்க கவிஞர் வாலஸ் ஸ்டீவென்ஸ் கவிதைகளில் நாம் காண இயல்கிறது.
ஆச்சி – சுபத்ரா ரவிச்சந்திரன் கவிதை
நான் சிரித்துவிட்டதை என் தம்பி பார்த்தான்
அம்மாவைச் சுற்றியமர்ந்து ஒப்பாரி வைத்தனர் ஊர்மக்கள்
ஆச்சிக்காகத் திடுமென முளைத்த
முறுக்குக்கம்பிகளும் ஷாம்புக்களும் கோ ஸ்பான்ஸர்ட் பை தருணங்களும் – கவிஞர் இசையின் கவிதை குறித்து.
கவிதையாக்கம் குறித்து நமக்கிருக்கும் மயக்கங்களைத் தாண்டி கவிஞர் இசையின் வரிகளைப் பார்க்க வேண்டியுள்ளது. இவை வார்த்தைகளின் வரிசை மீதும், கவிதை இலக்கணம் மீதும் மதிப்புள்ள கவிதைகள அல்ல. இயல்புக்கும் கற்பனைக்கும இடையே சஞ்சரிக்கும் வேடிக்கை உலகத்தைப் பற்றிப்பேசுபன. மரபு வழி மனது கொண்டவர் என்றாலும் அதை மறுதலித்து சற்றேனும் தளர்த்திக்கொள் என எதிர் தரப்பிலிருந்து தன் கவிதை உலகை அமைத்துக்கொள்பவராகக் கவிஞர் தெரிகிறார். அவர் மனம் இயங்கும் முறை அப்படி இருக்க வேண்டும், இல்லாவிட்டால் ஏதேனும் ஒரு சொல்லேனும் நீ எங்கள் உலகவாசி அல்ல எனத் தள்ளிவிட்டுவிடக்கூடும்.
மழையில் மறைந்து பெய்யும் மழை
வீடு
மூழ்கும்
வெள்ளத்தில் மூழ்கிய இருளில்.
தனிமை – கு.அழகர்சாமி கவிதை
வெயிலில்
தனிப் பனையின்
சொற்ப நிழல்.
அது
போதும்;
ஆடு சுகம் காணும்.
நான்கு கவிதைகள்
பெரிய பொறாமைக்காரன் நான்
எந்த அளவுக்கெனில் ஒரு பாராட்டுக்காக
அத்தனை கால உங்கள் நட்பையே சந்தேகிக்கும் அளவிற்கு
இதற்காக வெகு காலமாய் தனித்திருக்க செய்த தண்டனையில் பிழையில்லை
என்ன நடக்கிறது ஹெராக்ளிட்டஸ் நதியில்?
ஓடும் நதியோடு கூடப் போகாது கரையில் நின்ற இடத்திலேயே நின்று கொண்டு என்ன செய்கிறது இந்த மரம்?
எதை அறியக்
கடுந்தவம் நோற்கிறது?
தன்னை அறியவா?
தான் இருக்கும் விதம் ஓடும் நதியில் தேடித் தேடி இன்னும் தெளிவாகவில்லையா?
நான்கு கவிதைகள்
விபத்தில் வீங்கிய கை
அடிபட்ட நாயைப்போல
எப்போதும் அழுகிறது
“டேய், சும்மா இரு” என்று
செல்லமாக அதட்டினாலும்
உடம்பைக் குறுக்கி
பிருட்டத்துக்கு அடியில்
இரு கவிதைகள்
கனவுள்ளே கனவுள்ளே
கனவுலகில்,
மழையின் சத்தம்.
அத்தனை கனவுகளின்
கண்களும் விழித்து
மூன்று கவிதைகள்
எப்போதும் அணிந்து செல்லும்
முகமூடியை
அத்தனைக்கும்
அணிந்து
அணிந்து
மலிவாகிவிட்டதின் பொருட்டு
பைரவி
முன்மதிய நேரம்
பூசனை முடிந்த தருணம்
கதவைத் தட்டினார் யாரோ.
பிறந்தமேனியாயெதிரில் நின்றது
அதிர்ஷ்டசாலிகள்
விரைவுச் சாலையில் மழையில் மாட்டிக் கொண்ட போது
நேரம் மாலை ஆறு பதினைந்து
நில், முதல் கியருக்கு மாறு, மீண்டும் நில்
நாங்கள் எல்லாம் அதிர்ஷ்டசாலிகள், பணியிலிருப்பவர்கள்
நான்கு கவிதைகள்
எங்கோடி கண்டனை விளித்து
வம்பழந்து
ஊர்ப்பாடு புலம்பி
முதுகு காட்டிக் கொண்டே
வீடு திரும்பும் வழி முச்சந்தியில்
ரத்தம் சொட்டப்பிளந்து கிடந்த
பூசணிக்காய்தான்
இறுதியில் உண்மையைச் சொன்னது
ஹகீம் ஸனாய் – பாரசீக மெய்ஞானி
சுற்றுச்சுவரினால் மூடப்பட்ட நந்தவனத்தை சுல்தானும் படையும் கடக்க நேரிட்டது. தோட்டத்திலிருந்து மேலெழுந்து வந்த கீதம் – சுல்தானைப் பெரிதும் வசீகரித்தது. தன் தளபதிகள் மற்றும் ஹகீம் ஸனாய் பின்தொடர தோட்டத்தினுள்ளே நுழைந்தான். சங்கீத மயக்கத்தில் இருந்த அவனை, உள்ளே கண்ட காட்சி திணறவைத்தது. ஒரு குடிகாரன். அவனைச் சுற்றிலும் தடதடக்கும் இன்னிசை; நாட்டியம். யாரது என உற்றுப்பார்த்ததில் தெரிந்தது. லாய்-குர் (Lai-Khur) ! சுல்தானின் வருகையை அலட்சியம் செய்ததோடல்லாமல் மதுவை வழங்கிக்கொண்டிருக்கும் பெண்ணிடம் கோப்பையை நீட்டினார் லாய்-குர். கூடவே குழறலாக ஒலித்தது அவர் குரல்: ’நிரப்பு கோப்பையை.. சுல்தான் ஒரு குருடன் எனக் கூவியே குடிக்கின்றேன்!’ என்று சொல்லி கோப்பையை நிரப்பிக்கொண்டார்.
இரு கவிதைகள்
பச்சை பச்சையாய்
அள்ளி முடிக்க முடியாத
இலைக்கூந்தல் மரத்தடி
பருத்துச் சடைத்த
வேர்க்கால் திரண்டு
அவளை மடியாகித் தாங்கிற்று
இரவு – கவிதைகள்
நிழல்
சபிக்கப்பட்ட வசைகளாய்
வடிவங்களின்றி
என்னைக் காட்டிக் கொண்டிருந்தது
சலனமில்லாத குளத்தின் தோலுக்கடியில்
ஊரும் பார்வைகள்
குமிழியிட்டு ஒளிந்து மறைகின்றன
மூன்று கவிதைகள்
பாதை என
தனியாக ஒன்று
எங்குமில்லை..
என் ஒவ்வொரு காலடிக்கும்
முன்பு கைப்பிடி கருங்கற்களை
நானே நிரப்பியப்படி செல்கிறேன்
கவிதைகள் நான்கு
மண் நீரூட்டும்
விதை கன்றாகும்
கன்று செடியாகி பூ பூக்கும்
வண்ணப்பூச்சி முத்தமிட
மலர் காயாகும்
கவிதைகள்
குவிந்து கிடக்கும் சங்குகளையும்
உறங்கும் எரிமலைகளையும்
மினுங்கும் பாறைகளையும்
பசேல் பாசிகளையும்
கசை உரு தழைகளையும்
கவிதைகள்: நெகிழன், ஆனந்த் பத்மநாபன், கு.அழகர்சாமி
உறங்காமல் எண்ணங்கள் கலைந்தாலும்
உறங்கியெழுந்து முற்றிலும் புதிதாய் ஒன்று வளர்ந்தாலும்
ஏற்றுக்கொள்வேன்.
இரவு நீள நீள
உறங்காமல் வளர்த்த பித்தை
நுண்ணொடி அயர்ந்தே மாந்து விழிக்கையில்
அழித்து சிரிக்கிற காலம்
நந்தகுமார் கவிதைகள்
அங்கு வெளிச்சங்கள்
ருசி கெட்டிருந்தன
இருளைத் துழாவி
நீலம்
திட்டுத் திட்டாய்
படிந்திருந்தது
சாபங்களின் பெருங்கூச்சல்
கவிதைகள்: ராமலக்ஷ்மி, ஆதி கேசவன், சரவணன் அபி
காலைப் பனித்துளி அளவிலான
சிறிய வினாக்களுக்கோ
விடாது பெய்யும் அடைமழையாக
சரளமாக அளிக்க இயன்றது
விரிவான விடைகளை
யாருமற்ற சாலையில்
சற்றுத் தொலைவில்
பறவை ஒன்று நடந்தபடியே
சாலையைக் கடந்தது
அது பூமியில் தன் மெல்லிய
கால்தடம் பதித்து நடந்ததை
அந்த பச்சை பிரபஞ்சம்
பார்த்துக் கொண்டிருந்தது.
கவிதைகள்
கடலைப்பார்த்து
நெடுநாட்கள் ஆகிறது:
பரிசுத்தமான அன்புடன்
ஆர்ப்பரித்து ஓடிவந்து
கால்தழுவி உள்ளடங்கிய
கவிதைகள்
எவனோ புகைத்த
சிகரெட்டின் புகைத்திட்டுகளாக
சூழும் மேகங்கள்
முதுமையின் வெண்நரை கலந்த கேசத்தை நினைவூட்டுகின்றன
கவிதைகள்
ஒரு குழந்தையின் பிடிவாதத்துடன்தான்
மீண்டும் மீண்டும்
என் கைகளில் ஏறினாய் .
இருந்தும் உன்னை முழுக்க நழுவவிட்டு விட்டுதான்
வானம் பிறந்து சுழலத் தொடங்கியது
அலகுகளை
முன்நீட்டிக்கொண்டு
பறந்து சென்றன சில பறவைகள்.
