நா.பாலா கவிதைகள்

முற்பகல் முடிவதற்குள்
ஐன்ஸ்ட்டின் ஆக மாற எத்தனிக்கையில்
பசி வந்துவிடுகிறது.
மந்தம் சூழ்ந்த மதியப் பொழுதுகளில்
லாவ்-சு ஆகிக் காற்றையும் இலைகளையும்
பார்த்துக் கிடக்கிறேன்.

உண்மைக்கும் புனைவிற்கும் இடையே ஊடுருவிப்பாயும் கலை – ரொபெர்த்தோ பொலான்யோவின் கவிதைகள்

கவிஞனின் ஒரு சிறு எண்ணத்துளியை, அவன் வாழ்க்கையின் சிறு கணத்தையே ஒரு நவீனக்கவிதை காட்சிப்படுத்துகிறது என்பதால் எல்லா சமயங்களிலும் அது சமநிலை கூடிய சிந்தனையின் புள்ளியிலிருந்து உருவாகி வருவது சாத்தியமில்லை என்பதும், தத்தளிப்புகளும் அலைக்கழிப்புகளும் கொண்ட கவிஞனின் ஒட்டுமொத்த அகத்திற்கு அவனின் ஒரு சிறு எண்ணத்துளி மட்டுமே மாதிரியாக அமையாது என்பதும், எந்த வாசகனும் எளிதில் புரிந்துகொள்ளக்கூடியதே.

கவிதைக்களத்தில் விளையாட்டாக…

அவருடைய சிறந்த படைப்புகள், எழுத்து மற்றும் எழுதும் வாழ்க்கை பற்றியவை. “விதிகள் இல்லை” என்ற ஒரு கவிதையில் அவர் அறிவிக்கிறார்: “சொல்லுங்கள் அந்த மடையன் ஆர்னால்ட் பென்னட்டிடம், சதி குறித்த அவனது விதிகள் அனைத்தும் மற்ற நாவல்களின் நகல்களான நாவல்களுக்கு மட்டுமே பொருந்தும் என.” இந்தக் கவிதை நகைச்சுவையாக, அடைப்புக்குறிக்குள் பின்வரும் வார்த்தையுடன் முடிவடைகிறது: “கைதட்டல்.”

ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்

1.    அன்றாடப் பணி காரண காரியம் உருப்பெருவதன் வழி ஒரு சாய்சதுரம் அசைவது போல் நிகழ்கிறது, என் அன்றாடப் பணி   அற்புதமான ஒரு சூரிய அஸ்மதனதிற்கு எதிரே துப்பறிவாளனைப் போன்ற துணிகரமான பார்வை. இனி நிகழப்போகும், என்னால் காணமுடியாத ஓர் இனிய நாளின்மீது உடனடியாக எழுதப்படும் வேகமாக “ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்”

இரா. கவியரசு- கவிதைகள்

நினைவுகளற்ற காற்றிடம்
வீட்டைப் பற்றியும்
குழந்தைகளைப் பற்றியும்
சொல்லிக் கொண்டேதான் இருக்கிறான்
நிறுத்துவதே இல்லை
அது ஒரு வியாதி
சொல்லுதல்தானே வாழ்வு

புஷ்பால ஜெயக்குமார்- கவிதைகள்

எழுதப்படுவதும் எல்லாமும் ஒன்றொன்றாக
மீதி என் கேள்விகள் தேவைகள் விருப்பங்களென
நான் தேடுகிறேன் குப்பைகள் பறக்கும் என் மனதில்
காத்திருக்கிறேன் காரியம் கைகூடுமென
வரிந்து கட்டிக்கொண்டு ஆழ்மனத்திலிருந்து
வந்து விழுகிறது நம்பிக்கை தரும் கனமான சொல்லொன்று
அதுவே இதுகாறும் பிறப்பித்த விதையின் விருட்சம்

புஷ்பால ஜெயக்குமார் – கவிதைகள்

நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறையும்
எனது சுதந்திரம் அர்த்தமற்றது என்னைப் போலவே
மிகைகொள்ளாது நிலைபெற்ற வழியில் வெடித்தபோது
வெளியே நடமாடுகிறேன் நான்

இரா. கவியரசு – இரு கவிதைகள்

ரேகைகள் கலக்கும் போது
தொலைகின்றன நதிகள்
விட்டுவிடக் கூடாது என்பதற்காக
இன்னும் இறுக்கமாக
பற்றிக் கொள்கிறோம்

கவிதைகள் – கா. சிவா

பல தடைகளைத் தாண்டி
இறையுருவைத் தரிசிக்கையில்,
மெய்யன்பை எப்போதாவது
எதிர்கொள்கையில்,
இயையிசையின் ஒரு சுரம்
உயிராழம் தீண்டுகையில்…

கவிதைகள்- வ. அதியமான்

என் பெருவிரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்குமான
இதே விரலிடுக்கில்
எத்தனை முறை
எத்தனை உலகங்கள்
நழுவிப்போயிருக்கிறது
என்பதை
மறந்து போனபடி…

வைரம் பாய்ந்த மரம்

விறகாக எரியும் போது முனகும் ஒலி
காட்டில் உள்ள
எல்லா மரங்களையும் குழப்புகிறது
விதை

கோடிட்ட இடங்களில் நிரம்புகிறோம்

நிச்சயமின்மையுடன் இணைகையில் நம் எச்சமாகக்
கோடுகளே மிஞ்சுகின்றன
கோடுகள் என்றும்
கோடுகளால் தான்
நிரப்பப்படுகின்றன.

தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்

மலையகப் பெண்ணொருத்தி  மஞ்சள் வயல்வெளியில்  தனியளாய் நிற்பது காண். பாடலே துணையாய்  கதிரறுக்கும் அவள் குரல் கேட்காதோர் பையவே சென்றிடுக.  தனியே கதிரறுத்துக் கட்டுமவள் இசைக்கும் அழுத்தமிகு  சோக கீதம்   வெளியெங்கும் ததும்பி வழிகின்றதே  கேட்டீர்களா?  பாலை நிலங்களில்  களைத்துப் போன  தேசாந்திரிகளுக்கு உற்சாகமூட்டும்  குளிர் சோலைக் குயில்கள் “தன்னந்தனியே – வோர்ட்ஸ்வொர்த்”

நிழலென்னும் அண்ணன்

நேற்று கண்ட நிஜம் போல என் கண்களில் நிழலாடுகின்றன நினைவுகள் ஆளுக்கு பாதியாய் பிரித்து அம்மா தந்த பத்தல்கள் நேற்று சுவைத்ததாய்தான் எனக்கு ஞாபகம் இருக்கிறது.. விவரமறியா பருவத்தில் வாங்கிய என் பங்கு அடிகளுக்கு இதுதானா உன் தண்டனை? பள்ளி நாட்களில் நீ என் உடன் இருந்தாய்.. கல்லூரிச் “நிழலென்னும் அண்ணன்”

லாவண்யா- கவிதைகள்

எந்தக் குதிரை பறக்கும் குதிரையென
சல்லித்துப் பந்தயம் கட்டின பல்லாண்டு.
கனவுக் குதிரைகள் ஒவ்வொன்றும்
கல்குதிரை, மண்குதிரை, மரக்குதிரையானதில்
பேச்சிழந்தான் ஒருவன். மூச்சிழந்தான் ஒருவன்.
முச்சூடுமிழந்தான் மற்றொருவன்.

கவிதைகள்

கணினியில் ஏதோ தட்டிக்கொண்டிருப்பான்
வாய்க்கு வராத பெயரிலிருப்பவற்றை
வாய்க்குள் திணித்து
நவநாகரிகத் தொட்டிலுக்குள்
சவப்பெட்டியாகக் கிடப்பான்

கேதார்நாத் சிங் கவிதைகள்

தரை மேல் என் காலை அப்போது தான் தூக்கியிருந்தேன்
குறுஞ்சிறு வார்த்தையொன்று
குருதியில் குளித்து
எங்குமில்லாததிலிருந்து
என்னை நோக்கி மூச்சிரைக்க
ஓடி வந்து உரைத்தது-
”வா, உன்னை நான் அழைத்துச் செல்கிறேன் வீட்டுக்கு ”

இரா.கவியரசு-கவிதைகள்

நள்ளிரவில்
மலர்களாக விழித்திருக்கும் மரம்
சிணுங்கினால் கூட போதும்
முழுமையாகத் தொலைந்து விடலாம்
சிறிது தலைகாட்டி வரலாம் வா !

இரா. மதிபாலா – கவிதைகள்

என் கால்கள்
புகழின் கைகளில் இருந்தன
கண்கள் வெளிக் கிளம்பிப் போய் மின்வெளியில் இடப்பட்ட
பாராட்டுப் புழுக்கைகளை எண்ணிக் கொண்டிருந்தன.

காலத்தின் கடைசிச் சொட்டு & அப்பாவின் முகம்

ஆயிரம் நிறங்களில் மிதந்தன
ஓசைகள் சருகுகளின் மீது
பெய்யும் மழை போல
மிக நுண்ணியதாய்

கவிதைகள்- கு.அழகர்சாமி

ஒன்று பலவாய், பல ஒன்றாய், உருவருவாய்
ஒன்றில்லா ஒன்றாய், ஓயா இயக்கமாய்
ஆணிப்பொன் அம்பலத்தாடு ஆனந்தக்கூத்தா!

காதறுந்த கதை & சுயம்வரம்

பொய்த்த கனவுகளை
நினைத்து வருந்தும் ஒரு நேரம்
எல்லோர்க்கும் வரும்.
அப்போது மேலே பார்த்தால்
வெர்டிகோ வரும்.

வெயில் நிழல் மணல் இலை & ஒளியுடன் பேசுதல்

பஞ்சுமிட்டாயின்
நுண்ணிய இளஞ்சிவப்பில்
ததும்பி அலையும் ஒளி
இருளை அணைத்துக் கொண்டு
தன் கதையைச்
சொல்லத் தொடங்குகையில்

மொழிபெயர்ப்பு கவிதை – குண்டர் க்ராஸ்

சிறு பிராயத்தில்
திரும்பிய பக்கங்களிலெல்லாம்
‘கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்’
என்ற அறிவிப்பில் உறைந்துபோனேன்

மேப்பிள் மரத்திற்கு ஆயிரமாயிரம் கைகள்

கழுத்தை சுற்றி
படமெடுத்து நிற்கும்
நாகத்துடன்
நீலநிறத்தில்
தியானிக்கும்
பரமேஸ்வரனின் படம்
படபடக்கும்
கிராமத்து சலூன் நாற்காலியின்
நினைவு

மலையின் நினைவுகளில்

எதையும் தேடாதிருக்க, தவம்
தேடி வந்த காற் தடங்கள் புதைந்திருக்கின்றன
கற்பாறைகளுக்குள்.
அவர்கள் விட்டுப் போன மூச்சு
விட்டுப் போகாமல் கலந்து வீசும் மென்காற்றில்
பேரமைதியின் சுகந்தம் மணக்கிறது.
காட்டு முல்லைகளும் கசக்கிய எலுமிச்சைப் புற்களும் மணக்கின்றன.

கவிதைகள்- இன்பா அ.

பதில் பாராட்டை எதிர்பார்த்தே
ஒவ்வொரு வாழ்த்தும்
கடந்து போகிறது
 
எல்லாவற்றையும் உதறிவிட்டால்
பிரியத்தின் ஈரம்
காய்ந்துவிடக் கூடும்

மினியாப்பொலிஸில் திருப்பள்ளியெழுச்சி

முற்றத்து மணியசைத்து
விளையாட
அழைத்து நிற்கும் காற்று
பொறுமையிழந்து
அனுமதியில்லாமல்
அறைக்குள் நுழைகிறது.

கவிதைகள் – பானுமதி ந. , அனுக்ரஹா ச.

யாரும் உடன் இருக்கையில்
அது பேசுகிறது தன் மொழியில்
யாருமற்ற போது அதன்
இரைச்சல் பேரலைகள் போல்
அதன் கூக்குரல் விழுங்கும்
உலகனைத்தையும்;பின்னரும்
பசிக்கும் அதற்கு. நீ வந்து
அருகில் அமர அது அடங்கிவிடும்.

கவிதைகள்

பாதங்களைத் தவிர வீட்டுடன் அதிகமாகப் பேச
வேறு யார் இருக்கிறார்கள்.
வெகுநாளைக்குப் பிறகு
தூசியைத் துடைக்க வருகிறவன்
கதவுகளைத் திறக்கும் போது
பாதங்களை மட்டுமே பார்க்கிறது வீடு.

எனக்கு நினைவுள்ளது

அவனுக்கு தாங்கள் எங்கு
தலைப்பட்டிருக்கிறோம் என்று
ஒன்றும் தெரிந்திருக்கவில்லை.
குழுத் தலைவன் கட்டுக்குள் வைத்திருந்தான்

திலகம்- கவிதை

அதில் மீதமாக அதிக இனிப்பில்லை
மனிதர்களின் அருகே வசிக்க விரும்புகிறேன்
தன் தவறுகளுக்காகச் சிரிக்கத் தெரிந்த,
யதார்த்தமான, உண்மையான
தன் வெற்றிப் பெருமிதத்தில் மிதக்காதவரிடையே
தன் செயல்களுக்குப் பொறுப்பேற்வரிடையே
வாழ நினைக்கிறேன்

கவிதைகள்

வாள் கொண்டு அறுக்கும் போதும்
எரி கொண்டு தசையை தீய்க்கும்போதும்
வலி காட்டாது தாங்கியதால்
சற்றே சலுகையுடன்
புன்னகை கூட காட்டுகின்றன.

சுபத்ரா-கவிதைகள்

திடீரென உங்கள் பாய்மரப் படகை
செலுத்திக் கொண்டிருக்கும்
ஒரு ஜாக் ஸ்பேரோ மீது
நீங்கள் மையல் கொள்கிறீர்கள்
அப்போது உங்கள் உடலெங்கும்
ஒரு சிலந்தியின் கால்கள் ஊர்கின்றன

உச்சத்தில் விழித்தெழும் நீங்கள்
புனர்வாச வலையில் சிக்கியதை உணரும் போது
மீண்டும் ஒரு தந்தி அச்சிடப்படுகிறது.

லாவண்யா- கவிதைகள்

வட்டம் போட கவராயமில்லை
துளைக்க ஓர் தமரூசியில்லை
அளவு பார்க்க ஒரு நாடா இல்லை
தன் சுற்றளவுக்குச் சரியளவாய்
மூங்கிலில் ஓட்டை போடுகிறது குளவி.
இப்படிப்பட்ட உலகில் நானுமிருக்கிறேன்.
நினைத்தால் தலைகுனிவாயிருக்கிறது.

வான்மதி செந்தில்வாணன் – கவிதைகள்

வீட்டிற்குப் போனதும் முதல்வேளையாக
கதவடைத்துக்கொண்டு
சத்தமாகச் சிரிக்கவேண்டுமென எண்ணமிட்டவாறே
பேருந்து விட்டிறங்கினேன்.
எதையும் தாங்கவியலாத
இம் மூத்திர வாழ்வுபோல் ,
வீடடையும் முன்பே அடக்கமாட்டாமல்
அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு
பலமாகக் கனைத்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.

பொன். தனசேகரன் – கவிதைகள்

நேற்று இருந்த நேரம்
நேற்றே செலவழிந்தது
இன்றும் அப்படித்தான்.
நாளும் பொழுதும்
கைச்செலவு போக
எதுவும் மிச்சமில்லை.
நேரத்துக்கும் அகோர பசி.
என் எதிரே
எனக்குக்
கொஞ்சம்கூட
மிச்சம் வைக்காமல்
சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
சாப்பிட்டு முடிந்ததும்
நேரம் இருந்தது.

நான் இல்லை.

தனிக் கவிதைகள்- பூராம், கு.அழகர்சாமி, நித்யா எஸ்.

என்று இன்னொரு முறை பொற்குதிரை ஏறி வரும் கள்ளழகர்
தந்தையின் தோளேறிக் கண்டேன் நான் இன்றளவும்
தீராத அந்த ஏக்கம்
தீர?

நீளாவுடன் நீளும் பயணம்

மேக் மல்ஹாரில் அஸ்வினி பீடே பாடும் ஜமக ஜுகி ஆயீ, பதரியா காலீ (ஒளிர்ந்தபடி தாழ்ந்து வந்தன கரிய மேகங்கள்) பாடல் ஞாபகம் வந்தது. முதலில் ஜமக ஜுகி ஆயீ என்று பாடிவிட்டு ஆயீ என்ற சொல்லை விஸ்தரித்துவிட்டு ஹோ என்று அதிசயத்தைச் சொல்வதுபோல் ஓசையை எழுப்புவார். பிறகு பதரியா காலீ என்று மேகங்களை இசையால் வரைந்து கொண்டே போவார். ஒளிரும் கரிய மேகங்களை நாம் உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஜூலா (ஊஞ்சல்) என்று இடைவெட்டுவார். ஊஞ்சலா? எங்கிருந்து வந்தது ஊஞ்சல் என்று நினைக்கும்போதே ஜூலா ஜூலே நந்தகிஷோர் என்று கிருஷ்ணன் ஊஞ்சலாடுவதை

ஒரு வார்த்தை.. நம் மொழியில்..

உங்களுக்கும் எங்களுக்கும்தொடர்ந்து நடக்கிறதுபேச்சு வார்த்தைஎங்கள் பக்கத்திலிருந்துகோரிக்கைகளாகவும்உங்கள் பக்கத்திலிருந்துஅறிக்கைகளாகவும்.நாம் ஒரே மொழியைதாம்உபயோகிப்பதாக நினைக்கிறோம்.ஆனால் உங்கள் வாக்கியங்கள்ஒன்றன் மேல் ஒன்றாக மடிந்துகாரண காரியங்களாகத் திரிந்துஎங்கள் புரிதலுக்கு அப்பாலானதாகவேஎன்றைக்கும் இருக்கிறது.இன்றைய கணமும்உண்ணும் உணவும்கேள்விக்குறிகளாக நிற்கையில்எங்கோ நிகழ்ந்த நிலநடுக்கமும்பேரழிவைக் கொடுத்த நிலச்சரிவும்எம் சிந்தைக்கு எட்டாமல்கடந்து செல்கிறோம்இரக்கமற்றவர்களாய். உங்களுக்கு உதிக்கும் பகலவனேஎங்களுக்கும் உதிக்கிறான்ஆனால் ஒளிக்காகஏங்கி நிற்கிறோம்.கரும்பு “ஒரு வார்த்தை.. நம் மொழியில்..”

வேம்பில் ஒரு செண்பகம்

பூப்பெய்திய பருவம் முதல் கசப்புக்குள்ளே சில இனிய உணர்வுகளின் ஊடுறுவல்கள் இளமையின் நியதிகளான வாழ்வியல் காற்றின் வேகங்களை திசைகள் நிர்ணயித்துக்கொண்டிருக்கிறது வயதின் மூப்பில் உலர்ந்துகொண்டிருக்கும் இளமையின் சுவைகள் ஆறிப்போன உணவாகி வெறுமையாக செரித்துவிடுகிறது முதிர் பருவத்தை நோக்கி கசந்துகொண்டிருக்கும் சுவர்களில் ஒட்டிக்கொண்டிருக்கிறது இளமையின் நிறுவிட இயலாத சுவடுகள் மட்டும் “வேம்பில் ஒரு செண்பகம்”