சுபத்ரா-கவிதைகள்

திடீரென உங்கள் பாய்மரப் படகை
செலுத்திக் கொண்டிருக்கும்
ஒரு ஜாக் ஸ்பேரோ மீது
நீங்கள் மையல் கொள்கிறீர்கள்
அப்போது உங்கள் உடலெங்கும்
ஒரு சிலந்தியின் கால்கள் ஊர்கின்றன

உச்சத்தில் விழித்தெழும் நீங்கள்
புனர்வாச வலையில் சிக்கியதை உணரும் போது
மீண்டும் ஒரு தந்தி அச்சிடப்படுகிறது.

சுபத்ரா; கமலதேவி; வே.நி.சூர்யா கவிதைகள்

இருபத்தோராம் நூற்றாண்டின்
தர்மத்தின் முன் நம்மால் என்ன செய்யமுடியும்?
தன் உணவு
தன் உடைமை தவிர
எஞ்சியவை சுமை.

ஆச்சி – சுபத்ரா ரவிச்சந்திரன் கவிதை

நான் சிரித்துவிட்டதை என் தம்பி பார்த்தான்
அம்மாவைச் சுற்றியமர்ந்து ஒப்பாரி வைத்தனர் ஊர்மக்கள்
ஆச்சிக்காகத் திடுமென முளைத்த