என் பிறப்பின் ஆண்டுகள்

நான் பேச இயலாமல் உறைந்து போய் ஊமையாய் நின்றேன். பெட்டி கடுமையாக அழத் தொடங்கினாள். முழங்கையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். நான் உடைந்த துகள்களை பெருக்கச் சென்றபோது, உடைந்த குரலில் என்னைப் போகச் சொன்னாள். நான் ஷெரிலைத் தேடிச் சென்றேன். அவள் வழக்கமாக ஒளிந்து கொள்ளும் தூரத்துக் கோழிப் பண்ணையில் இருந்தாள். என் மீது ஏன் பழி சுமத்தினாய் என்று கேட்டதற்கு, என்னை வன்மத்துடன் ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு, “ஏனென்றால் நீ வெள்ளையாக இருக்கிறாய்,” என்றாள்.

தணிக்கையாளர்கள்

நாட்கள் செல்லச் செல்ல அவன் அந்தப் பணியை மிகவும் விருப்பத்துடன் செய்தான். அவன் இங்கு வந்த காரணமே தற்போது அவனுக்கு முற்றிலும் மறந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கடிதங்களின் பலவரிகளை அழிக்க வேண்டியிருந்தது. பல கடிதங்களை குப்பைக்கூடையிலும் சேர்த்தான். அரசாங்கத்திற்கு ”எதிரான” மக்களின் சூக்குமுமான வாசகங்களை கண்டு பயந்த நாட்களும் உண்டு. தற்போதெல்லாம் அவனால் “விலைவாசி உயர்ந்துவிட்டது”, “வானம் மந்தமாக உள்ளது” போன்ற வரிகளில் கூட அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் புதைந்திருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது.