செந்தாமரைப் புரட்சி

பிரிட்டிஷ் அரசாங்காத்திற்கு எதிராக 1857-ல் நடைபெற்ற முதல் சுதந்திரப் போராட்டம் குறித்த நூல் “Operation Red Lotus”. இந்தப் போரில் ஈடுபட்ட வீரர்கள் ஒரு சிவப்பு தாமரையுடன் இந்தப் போரில் பங்கேற்றனர். அதனால் தான் புத்தகத்திற்கு இந்தப் பெயர். இந்தப் புத்தகத்தின் ஆசிரிய பராக் டோபே, இந்தப் போரில் முக்கிய பங்காற்றிய தாத்தியா டோபே-வின்(Tatya Tope) வம்சாவளியில் பிறந்தவர். தன் குடும்பத் தலைவரான் பிரபாகர் தாபேரிடமிருந்து பெறப்பட்ட பல்வேறு தகவல்கள் மற்றும் இதுவரை வெளியாகாத மற்றும் மறக்கப்பட்ட பல்வேறு ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டும் இந்த நூலை எழுதியுள்ளார்.