ஒரு கணத் தோற்றம்

எத்தனை கட்டுப்படுத்தினாலும் மனம் இனம் புரியாத எதிர்பார்ப்பில் தவித்தது..அந்த சில நிமிட சந்திப்புக்காய் மனதின் ஓரத்தில் ஒரு விதமான எதிர்பார்ப்பும் ஏக்கமும் படர்ந்தாற் போல் உணர்ந்தது கண்டு எனக்கே கொஞ்சம் விசித்திரமாய் இருந்தது. இன்றோடு இங்கு வந்து இரண்டு மாதமாகிறது.. இந்த நாட்களில் எண்ணிச் சில முறையே வீட்டிற்கு ரங்கு வந்திருக்கிறான்.ஆனால் வந்து சென்ற பிறகும் அவன் அன்பின், அக்கறையின் இருப்பு வீடெங்கும் நிறைந்திருக்கும். நானாக அவனை அழைப்பதில்லை. இன்று லேசான காய்ச்சலில் உடம்பும் மனமும் கொஞ்சம் பலவீனமானது போல இருந்ததால் …