இன்றுவரை இடது சாரிகளில் Parti socialisteம், வலதுசாரிகளில் Les Républicains கட்சியும் (இதற்குமுன்பாக RPR என்றும் UMP என்றும் பெயர் வைத்திருந்தவர்கள்) மாறி மாறி ஆட்சியிலிருந்து வருகிறார்கள். கம்யூனிஸ்டுகள் செல்வாக்கிழந்து நாட்கள் பல ஆகின்றன. ஒரு சில நகராட்சிகளைக் கைப்பற்றுவதோடு அவர்கள் திருப்தி அடையவேண்டியிருக்கிறது. அவ்வப்போது சில ஆர்ப்பாட்டங்களை நடத்தத் தொழிற்சங்கங்கள் தற்போதைக்கு ஆறுதல் தருபவையாக உள்ளன. கடந்த காலத்தில் சோஷலிஸ்டுகளின் தலமையின் கீழ் அமைச்சராக முடிந்ததெல்லாம் இனி நாஸ்டால்ஜியாவாக அசைபோடமட்டுமே கம்யூனிஸ்டுகளுக்கு உதவும்.
Category: அரசியல்
அமெரிக்க தகவல் நிலையத்திற்கு
இந்த ஃபாஸிஸ்ட் முத்தண்ணா ‘ஜனநாயகம், தனிநபர் சுதந்திரம்’ என்று கோஷங்கள் இடுவதிலிருந்து அதன் வாய் ஓய்வதில்லை. கடந்த நாற்பது வருட கால என் பொதுவாழ்வில் என் சுதந்திரத்தையும் என் நேர்மையையும், என் வழியில் மிகுந்த ஆக்ரோஷத்துடனேயே பாதுகாத்து வந்துள்ளேன். “உன்னுடைய நேர்மையையும் , சுதந்திரத்தையும் காப்பாற்ற வேண்டினால், உன் எழுத்தோடு சம்பந்தப்படாத ஒரு வேலையை, இரவு நடன விடுதியில் பியானோ வாசிப்பது போன்ற ஒரு வேலையைச் செய்” என்று சொன்னது உங்கள் நாட்டவன் ஓர் அமெரிக்கன், வில்லியம் ஃபாக்னர். கடந்த நாற்பது வருடங்களாக இது போன்ற ஒரு காரியத்தைத்தான் நான் செய்து வந்திருக்கிறேன்.
எல்லைக் கோட்டைத் தாண்டி- இந்திய வெளியுறவு செயல்பாடு
90களில் இருந்து ஏற்பட்ட இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி. பாகிஸ்தான் தேங்கிச் செல்கையில் ஒப்பீட்டில் இந்தியாவின் பொருளாதாரம் இரண்டு மடங்கிற்கு மேலாக வளர்ந்தது. இந்தியா என்னும் சந்தையை அமெரிக்க மற்றும் பிற மேலை நாடுகளால் இழக்க இயலாது என்ற நிலை ஏற்பட்டது. இரண்டாவது, தீவிரவாதம் குறித்த அமெரிக்க, மேலை நாடுகளின் புத்தியில் ஏற்பட்ட மாற்றம். இரட்டை கோபுர தாக்குதலுக்குப் பின் சோவியத்தை வெல்ல உதவிய பாகிஸ்தான் என்ற நிலையிலிருந்து தன்னைத் தாக்கிய தீவிரவாதிகளை வளரவிட்ட பாகிஸ்தான் என்று அமெரிக்கா காண ஆரம்பித்தது. ஆஃப்கனிஸ்தானில் தீவிரவாதத்திற்கான போரை ஆரம்பித்துவிட்டு இந்தியாவில் நடைபெறும் தீவிரவாதத்தைப் பாரமுகமாக இருக்க அமெரிக்காவிற்குச் சாத்தியமில்லை. தாலிபானுக்கு எதிரான அமெரிக்கப் போரிற்கு பாகிஸ்தான் தன்னை இன்றியமையாததாக ஆக்கிக் கொண்டாலும், இந்தியாவிற்கு தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்வதை அமெரிக்கா அனுமதிக்கவில்லை. இந்த இரண்டு காரணிகள் மூலம் இந்தியா 2000களில் பாகிஸ்தான் உருவாக்கி வைத்திருந்த பல அனுகூலங்களை உடைத்து மீண்டும் சமநிலையில் தன்னை உலக அரங்கில் மாற்றிக் கொண்டது.
பிரான்சு நிஜமும் நிழலும் – 7: கனாக் (Kanak) போராளிகள்
மனிதர் சுதந்திரத்திற்குக் கேடு என்கிறபோது, இரட்சகர்களில் ஒருவராக அறிவித்து பிரான்சு தன்னை முன்னிலைப்படுத்துகிறது. அகதிகள் பிரச்சினை எனில் கண்ணீர் வடிக்கிறது, ஓடிச்சென்று உதவிக்கரம் நீட்டுகிறது. சிரியா அதிபரையோ, ரஷ்ய அதிபரையோ கண்டிக்கிறபோது உரத்து கேட்கிற குரல் வளகுடா நாடுகளில், சீனாவில் மனித உரிமைகள் நசுக்கப்படுகிறபோது, நமத்துப் போகிறது. அமெரிக்காவிற்கு விடுதலைச் சிலையை அனுப்பிவைத்த நாடு, ‘சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவத்தை’ நாட்டின் கோட்பாடாக உலகிற்கு அறிவிக்கும் நாடு என்ற பெருமைகளைக்கொண்ட பிரான்சு நாட்டின் சொந்த வரலாறு கொண்டாடக்கூடியதாக இல்லை.
பிரதமர் மோதியின் கலிஃபோர்னிய விஜயமும், டிஜிடல் இந்தியாவும்
ஞாயிறு காலை ஃபேஸ்புக் நிறுவனத்தின் தலைவர் மார்க் ஜக்கர்பெர்க் இந்தியப் பிரதமரை அவரது ஃபேஸ்புக் நிறுவனத்திற்கு அழைத்து அங்கு ….ஒரு டவுன்ஹால் நிகழ்ச்சியை ஏற்பாடு செய்திருந்தார். அந்நிகழ்ச்சியில் 1200 பேர்கள் ஆர்வத்துடன் கலந்து கொண்டிருந்தனர். ஏராளமான இளம் தொழில்நுட்ப பொறியாளர்கள் மிகுந்த உற்சாகத்துடன் பிரதமரை வரவேற்றனர். …அங்கு மோதியிடம் மார்க் பார்வையாளர்களின் கேள்விகளைக் கேட்டார். ..நாற்பதாயிரத்திற்கும் மேலான கேள்விகள் ..வந்திருந்ததாக மார்க் குறிப்பிட்டார்.
(பதிலில் மோதி), இந்தியாவில் இரண்டரை இலட்சம் பஞ்சாயத்துகள் உண்டு. அடுத்த ஐந்து வருடங்களுக்குள் அனைத்து பஞ்சாயத்துக்களையும் இழை ஒளியிய வடம் மூலமாக இணைக்க விரும்புகிறோம். ….
1.எண்ணியல் நுட்பமும் அதன் பயன்பாடுகளும் படித்தவர்களுக்கும் பணக்காரர்களுக்கும் மட்டுமே உதவி செய்யக் கூடிய பயன் படுத்தக் கூடிய ஒரு தொழில்நுட்பம் என்று பலரும் தவறாக நம்புகிறார்கள் –நான் எண்ணியல் நுட்பத்தை சாதாரண மக்களின் பயன்பாட்டுக்கான ஒரு சக்தி வாய்ந்த கருவியாக…. மக்களை வளப்படுத்த.. அவர்களின் கனவுகளுக்கும் நம்பிக்கைகளுக்கும் வாய்ப்புகளுக்குமான இடைவெளிகளைக் குறைக்கும் ஒரு வாய்ப்பாகக் கருதுகிறேன். சமூக ஊடகங்கள் மக்களின் நிதி நிலையைப் பொருட்படுத்தாமல், அவர்களின் மனித மதிப்பீடுகளை மதிக்கும் கருவிகளாக உள்ளன.
2.ஈ-கவர்னன்ஸ்: எண்ணியல் நுட்பம் என்பது ஜனநாயகத்தை வலுப்படுத்துவது. … மின் – ஆளுகை மூலமாக ஊழலில்லாத, நேரடியான, வெளிப்படையான வேகமான, பொறுப்பான பங்களிப்புள்ள எளிமையான நிர்வாகத்தை மக்களுக்கு அளிக்க முடியும்.
பெரியாரும் பாசிசத்தின் கூறுகளும்
இந்தியா ஒரு முழு ஜனநாயக நாடு ஆக வேண்டும் என்று 1928 ம் ஆண்டு வெளிவந்த மோதிலால் நேரு அறிக்கை கூறியது. நாடு முழுவதும் மக்கள் கண்ட கனவும் அதுவாகவே இருந்தது. ஆனால் பெரியாரின் நிலைப்பாடு என்ன? 19 நவம்பர் 1930 குடி அரசு இதழில் இரு கேள்விகளுக்கு பெரியார் இவ்வாறு பதில் அளிக்கிறார்: இந்தியாவிற்கு ஏன் ஜனநாயக ஆட்சி கூடாது? ஜனநாயக ஆட்சி என்றால் என்ன?
அந்த மூன்று மாதங்கள் – ஜெய்ராம் ரமேஷின் "To the Brink and Back"
ஏற்கனவே, ராஜீவ் காந்தி, வி.பி சிங் மற்றும் சந்திரசேகர் அரசுகளில் பொருளாதார ஆலோசகராகவும், திட்டக் கமிஷனின் உறுப்பினராகவும் பணியாற்றியிருந்த ஜெய்ராம் ரமேஷ், அன்று பிரதமராகப் பணியேற்ற பி.வி.நரசிம்ம ராவ் அலுவலகத்தில் ஆஃபிஸர் ஆன் ஸ்பெஷல் ட்யூட்டி என்னும் பொறுப்பில் நியமிக்கப் படுகிறார். 1991 ஜூன் மாதத்தில் பணியில் சேரும் அவர், செப்டம்பர் மாதத் துவக்கத்தில் திட்டக் கமிஷனுக்கு அனுப்பப் படுகிறார். சரியான காரணங்களின்றி. ஆனால், அந்த மூன்று மாதங்களில் இந்தியாவின் பொருளாதாரப் பாதையில் திசையே மாறுகிறது. அந்தக் காலகட்டதைப் பற்றிய இந்தப் புத்தகம் ஜெய்ராமின் பார்வையில் இருந்து எழுதப் பட்டிருக்கிறது.
மல்லிகைப் பூவின் திகட்டாத மகிமை
கோடையின் வரவேற்கத்தக்க அம்சங்களில் ஒன்று, மல்லிகைப்பூ சீசன். சாலைகளில் ஆங்காங்கே ஒரு மரப் பெட்டியைக் கவிழ்த்துப் போட்டு பூத்தொடுத்துக்கொண்டு இருக்கும் பெண்கள் சென்னையின் அடையாளங்களில் ஒன்று. வருடம் முழுவதுமே ஓரளவு கிடைக்கும் மலரென்றாலும், இந்த சீசனில் கிடைக்கும் மல்லிகையின் – அதுவும் குண்டு மல்லிகையின் – அதிலும் மதுரை மல்லியின் வாசனையே அலாதி. தெருவில் “மல்லிகைப் பூவின் திகட்டாத மகிமை”
எமர்ஜென்சியின் கருப்பு தினங்களை நினைவுகூறல்
“இந்திராகாந்தி செய்த ஒப்பந்தத்தினால் ரூ.11 கோடி நஷ்டம் ஏற்பட்டதாகக் கூறப்பட்டது வாதத்துக்காக அதை உண்மை என்றே வைத்துக்கொண்டாலும், அந்த 11 கோடியை இந்திரா தன் வீட்டுக்கா எடுத்துச் சென்று விட்டார்? தற்போதைய அரசாங்கம் எடுத்த ஒரு முடிவினால் (மதுவிலக்கு) அரசாங்கத்துக்கு பல நூறு கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளதே, அதற்காக தற்போதைய பிரதமரைக் குற்றவாளி என்று கூறலாமா?” இந்திரா காந்தி சார்பில் ஆஜரான பிராங்க் அந்தோணி இவ்வாறு கேட்டார்.
எமர்ஜென்சி நாட்குறிப்புகள் – பி.என்.டாண்டன்
பிஷன் நாராயண் டாண்டன் எமர்ஜென்சி காலத்தில் இந்திரா காந்தி அலுவலகத்தில் துணை செயலாளராகப் பணியாற்றியவர். அக்காலகட்டத்தில் பிரதமரின் செயலாளர் குழு (Prime Minister’s Secretariat (PMS)) எனும் அமைப்பாக இது இயங்கி வந்தது. அக்குழுவின் துணை செயலாளராகக் கிட்டத்தட்ட ஏழு ஆண்டுகள் அரசியல் துறையில் ஈடுபட்டு வந்தார் டாண்டன். ஆகஸ்ட் 16, 1975 முதல் ஜூலை 24, 1976 வரை கிட்டத்தட்ட அன்றாடம் நாட்குறிப்பு எழுதி வந்திருக்கிறார்.
எண்ணெய்யும் தண்ணீரும்: இயற்கைவள சாபம்
அமெரிக்காவில் எண்ணெய் /எரிவாயு எடுப்பது எல்லாம் முற்றிலும் தனியார் நிறுவனங்கள் சம்பந்தப்பட்ட தொழில். அரசாங்க நிறுவனங்கள் ஏதும் கிடையாது. எனவே, வேண்டும் என்கிறபோது வேலைக்கு ஆட்கள் எடுப்பதும், வேண்டாம் என்கிறபோது உடனே பணியாட்களின் சீட்டைக்கிழித்து வீட்டுக்கு அனுப்புவதும் ரொம்பவும் சகஜம். தனி மனிதர்களுக்கும், அவர்களை சார்ந்த குடும்பங்களுக்கும் இந்த நிரந்தரமில்லா தன்மை பெரிய தலைவேதனைதான் என்றாலும், அவர்களுக்கு இது தெரிந்த/பழகிய விஷயம்தான். வேலை போய்விட்டது என்பதில் தனிமனித அவமானம் எதுவும் கிடையாது.
எண்ணெய்யும் தண்ணீரும்: விடாக்கண்டன்களும், கொடாக்கண்டன்களும்
பக்கத்தில் உள்ள படத்தை நீங்கள் எங்காவது பார்த்திருக்கலாம். அதில் இருப்பது ஒரு இளம் பெண்ணா அல்லது ஒரு வயது முதிர்ந்த பாட்டியா என்பது நீங்கள் படத்தை எப்படி பார்க்கிறீர்கள் என்பதை பொறுத்த விஷயம். பூமியில் எவ்வளவு எண்ணெய்யும் எரிவாயுவும் ஒளிந்திருக்கின்றன என்பதும் நாம் அலசும் விதம், தொழில்நுட்ப முன்னேற்றங்கள் முதலிய விஷயங்களைப் பொறுத்து பாட்டியிலிருந்து இளம்பெண்ணாக மாறிக்கொண்டிருக்கிறது! நாம் ஐந்தாம் வகுப்பில் தெரிந்து கொண்டதுபோல், இருந்து அழிந்த உயிரியல் எச்சங்கள் பூமிக்கடியில் புதைந்து போனபின், பூமியின் உள்ளே நிலவும் வெப்பமும், அழுத்தமும் பல்வேறு ரசாயன மாற்றங்கள் வழியே அவற்றை சமைத்து கச்சா எண்ணெய்யாகவும் எரிவாயுவாகவும் மாற்ற பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஆகும் என்ற புரிதலில் மாற்றம் ஏதும் இல்லை.
ஈராக்கில் ஜனநாயகம்
“ஜனநாயகம் வரும்வரை, அதாவது அமெரிக்கா உள்ளே புகும் முன்னர், ஒரு சில உதிரிக்குழுக்கள் தவிர பலருக்கு ஷியா மற்றும் ஸுன்னி பிரிவினர் எதிரிகள் என்பதே தெரியாது. சதாமின் இரும்புப் பிடியில் ஈராக்கியர்களுக்கு மதப்பிரிவுசண்டை போடக்கூட நேரமில்லை. வேறு வார்த்தைகளில் சொல்வதானால் பிழைத்திருக்கவும், குடும்பத்தைப் பட்டினியின்றி வைத்திருக்கவுமே ஓடிக்கொண்டிருந்தபோது பிரிவினைகளை பற்றி சிந்திக்க நேரமிருக்கவில்லை. ஷியா, ஸுன்னிகள், கிறிஸ்தவர்கள், அசிரியர்கள், துர்க்மான்கள் இன்னும் சில பிரிவுகள் என எல்லோரும் ஒற்றுமையாய்த்தான் இருந்தோம். நாட்டில் வளமிருந்தும் எங்கள் கைகளில் காசில்லாமல் இருந்ததாலும், அடிப்படைவாதத்தைத்தான் குரான் சொல்லிக்கொடுக்கிறது என்பதை எங்கிருந்தோ புதிதாய் வந்தவர்கள்…
பங்களாதேஷ் பயணம் – 2
ஏப்ரலில் நான் மீண்டும் டாக்காவும் சிட்டகாங்-கும் போக தீர்மானமாயிருந்தது. தற்போது நடக்கும் வன்முறைகளால், பயணத்தைத் தள்ளிப்போட்டுவிட்டேன். சிட்டகாங் போய் அங்கிருந்து காக்ஸ் பஜார் என்ற கடற்கரை நகரில் விற்பனைத்துறையின் கூட்டம் நடத்த முடிவாயிருந்தது. உலகின் மிக நீளமான, தொடர்ந்து நீண்டிருக்கும் கடற்கரை என்று புகழ் பெற்றது காக்ஸ்பஜார் 120 கிமீ நீளத்திற்கு அழகிய மணல் பரப்பும், பொன்னான சூரியோதய, அஸ்தமன காட்சிகள், அருமையான மக்கள் என்று டாக்காவில் விளம்பரப்படுத்தியிருந்தார்கள். Beautiful Bangladesh என்ற அடைமொழியுடன் அரசு எப்படியும் அதனை தாய்லாந்தின் பட்டாயா, இலங்கையின் கால்லெ போல சுற்றுலா வரும் வெளிநாட்டவர் குவியும் இடமாக்க வேண்டுமென நினைக்கிறது.
பங்களாதேஷ் பயணம்
இந்த அனுபவங்கள், பங்களாதேஷ் குறித்தான என் முன்முடிவுகளை மாற்றியது. கற்றவர்கள், திறமையாளர்கள் என்ற ஒரு தட்டில் போட்டி கடுமையாக இருக்கிறது. ஆனால் திறமைக்கு , பாலின வேறுபாட்டைவிட, மதத்தைவிட மதிப்பிருக்கிறது. ஒருவேளை உலகளாவிய போட்டியை சந்திக்கும் நிறுவனங்கள், வெளிநாடுகளிலிருந்து வந்து பணிபுரியும் மேலாளர்கள் கொண்டு வந்த நல்ல நிர்வாகப் பழக்கங்கள் காரணமாக இவ்விளைவுகள் இருக்கலாம். இதே ஆரோக்கியமான சூழல் மத்திய ரகத் தட்டில், கீழ்த்தட்டில் இருக்குமா என்று தெரியவில்லை.
குகை ஓவியங்கள் ஜாக்கிரதை
வரலாற்றை முன்முடிவுகளுடன் அணுகும் இத்தகைய செயல்பாடுகள் இந்தியாவிலும் நடந்துள்ளன. அது ஆரிய இனக் கோட்பாடாகவோ அல்லது காம்பே வளைகுடாவில் கடலுக்கடியில் மூழ்கிக் கிடக்கும் வாழ்விடங்கள் குறித்தோ அல்லது ஹரப்ப நாகரிகத்தின் தன்மை குறித்தோ அல்லது வேதகால சரஸ்வதி நதிக்கும் வறண்டு போன காகர்-ஹாக்ரா நதிக்கும் இடையே உள்ள விளங்கமுடியா புதிர் குறித்தோ, இந்த ஆய்வுகளில் இத்தகைய செயல்பாடுகள் மிக நுட்பமாக நடந்துள்ளன. ஆரம்பகால மனித வாழ்விடங்கள் காம்பே வளைகுடாவின் மோதி தளும்பும் நீர்நிலைகளின் அடியில் உறங்கிக் கொண்டிருக்கும் சாத்தியத்தை மறுக்க முடியாது. வேதகால சரஸ்வதி நதி காகர்-ஹாக்ராவின் தொல் கிளை ஆறாக இருக்கும் சாத்தியத்தையும் மறுக்க முடியாது.
ஜப்பானில் இந்திய வணிகம்
கடந்த சில வருடங்களாக நிறைய இந்திய மென்பொருள் வல்லுனர்களை அமெரிக்காவும் ஐரோப்பாவும் தங்கள் நாடுகளில் வரவழைத்துள்ளன. இந்திய மென்பொருள் மற்றும் சேவைகள் வாங்குபவர்கள் வரிசையில் இப்போது ஜப்பான் போன்ற கிழக்கு நாடுகளும் சேர்ந்துள்ளன. ஏற்கனவே அரசு ரீதியில் இந்திய ஜப்பானிய அரசுகளுக்கிடையே நிறைய பரிமாற்றங்கள் இருக்கின்றன. ஆனால், இந்தியாவிற்கு போட்டியாக, பிலிப்பைன்ஸ் மற்றும் சீனாவிலிருந்தும்…
இணையமும், இணையத்தில் தமிழும் – ஆரம்ப நாட்கள்
இப்படி இணையத் தமிழுக்கு முக்கியப் பங்காற்றியவர்களில், மறைந்த சிங்கப்பூர் தமிழர் நா. கோவிந்தசாமி, பல வருடங்களாக ஸ்விட்சர்லாந்தின், லொஸான் (Lausanne) நகரில் பணியாற்றும் கல்யாணசுந்தரம், மலேஷியத் தமிழர் முத்து நெடுமாறன், மற்றும் தமிழக மென்பொருள் வல்லுனர்கள் பலரும் தமிழ் இணையச் சரித்திரத்தில் குறிப்பிடத்தக்கவர்கள். இவர்களில் நான் அந்த சமயம் சிங்கப்பூரில் இருந்ததால் நா. கோவிந்தசாமியுடன் நல்ல பழக்கம் இருந்தது. அவர் செய்யும் முயற்சிகளை எல்லாம் ஆர்வத்துடன் என்னுடன் பகிர்ந்து கொள்வார்
உலக வர்த்தக அமைப்பு மாநாடு
கடந்த ஜூலை 31ந் தேதி ஜெனிவாவில், உலக வர்த்தக அமைப்பின் சந்திப்பில் பேச்சு வார்த்தை முறிந்ததற்கு இந்தியா காரணமாயிற்று. இந்தியாவின் நிலையை இதர உறுப்பினர் நாடுகள் கண்டித்தாலும் உள்ளூரில் பொதுவாக வரவேற்பு இருந்தது. உறுப்பினர் நாடுகளுக்கிடையே வர்த்தகம் மேம்படும் வகையில் சுங்க வரிகளைத் தளர்த்தி நாடுகளுக்கிடையே பொருட்கள் தடையில்லாமல் இறக்குமதி ஏற்றுமதி செய்ய இந்த உடன்பாடு வகை செய்திருக்கும். ஆனால், இந்த உடன்பாட்டின் ஷரத்துகள் பெரும்பாலும் வளர்ந்த நாடுகளுக்கு சாதகமாகவே இருப்பதாக இந்தியாவும் இதர வளரும் நாடுகளும் கருதின. கடைசியில் இந்தியா ஒரு நிபந்தனை விதித்தது. இந்த உடன் பாட்டில் இந்தியா கையெழுத்திட வேண்டுமென்றால், இந்தியாவின் மற்றொரு நிலைபாட்டிற்கு இதர நாடுகள் ஒத்துழைக்க வேண்டும் என்பதுதான் அது.
செஞ்சிவப்புச் சிந்தனைகள்
“சனிக்கிழமையன்று ரொட்டி என்னுடைய ஊருக்கு ரயிலில் வருகிறதென்றால் நாங்கள் வியாழக்கிழமையே ரயில்வே ஸ்டேசன் வாசலில் கியூவில் நிற்க ஆரம்பிப்போம்…பொதுவுடமை கொடுக்கும் பரிசு அது. நீங்கள் என்ன படிக்க வேண்டும், படித்த பிறகு எங்கு வேலை செய்ய வேண்டும், எப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டும் என்பதையெல்லாம் அரசாங்கமே தீர்மானிக்கும். நீங்கள் மருத்துவத்திற்குப் படிக்கலாம். ஆனால் அரசாங்கம் உங்களை கிராமத்திற்கு அனுப்பி விவசாய வேலை பார்க்கச் சொன்னால் அதைத்தான் நீங்கள் செய்தாக வேண்டும். வேறு வழியே இல்லை…”
தூரயியங்கி – எமக்குத் தொழில் அழித்தொழிப்பது
ஆளில்லா டிரோன்களில் உயிர்ச்சேதம் கிடையவே கிடையாது. அதாவது, தாக்குபவர், தாக்கப்படுவார் என்பதற்கு இடமே கிடையாது. தரைக்கு ஐந்து மைல் மேலே நின்று கொண்டிருக்கும் டிரோன்களை கண்டுகொள்வது வெகு துர்லபம். அதே சமயம் ஒரே இடத்தில் ஸ்திரமாக இருபத்து நான்கு மணி நேரம் கூட நிற்கும் திறமை கொண்டது. மனிதரைப் போல் எட்டு மணி நேரம் தூங்க வேண்டும், காலைக்கடன் கழிக்க வேண்டும் போன்ற உடல் உபாதைகளும் பசியும் கிடையாது.
குட்டி ரேவதி சந்திப்பு – பிரிவினை கோஷங்களும் முற்போக்கு அரசியலும்
லண்டன், பெர்லின் போன்ற இடங்களில் வாழும் தமிழர்கள் இந்திய மூலப்பண்பாடு பற்றிய அவதூறு கோஷங்களை மட்டுமே எழுப்பும் இப்படிப்பட்ட கூட்டங்களினால் குழம்பிப்போகிறார்கள். ஐரோப்பிய நாகரிகத்தையும் தழுவிக்கொள்ள முடியாது எனும் நிதர்சனம் ஒரு புறம், சொந்தப் பண்பாடு பற்றி அறிவிலிக் கருத்துரைகள் மறுபுறம் என கொஞ்சம் கலை இலக்கிய ஆர்வம் இருப்பவர்களையும் இப்படிப்பட்ட கூட்டங்கள் துரத்திவிடுகின்றன.
வெளிநாட்டு நிதி மற்றும் அரசு சாரா அமைப்புகளில் இருக்கும் மஹாராஜாக்கள்
கோடிகள் ஈட்டும் இலாப-நோக்கற்ற நிறுவனங்களுக்கும் எங்கிருந்து பணம் கிடைக்கிறது என்று அறிய முடியாத என்.ஜீ.ஓக்களுக்கும் உகந்த பூமியாக இந்தியா இருக்கிறது. இந்த நிறுவனங்களுக்கு வரவாகும் தொகையில் பெருமளவு, அரசியல்வாதிகளுக்கும் அதிகாரத்துவம் கொண்டவர்களால் நடத்தப்படும் வியாபாரங்களுக்கும் செல்கிறது என்று ஊகிக்கப்படுகிறது. அதைக் குறித்த கட்டுரை
தில்லியிலிருந்து லாகூருக்கு பஸ்
தொலைக்காட்சி ஸ்தாபனங்கள் இப்படி செய்தியைத் தோண்டி வெளிக்கொண்டு வந்தால், அதன் முன்னோடியான பத்திரிகையுலகம் அந்த செய்திகளுக்குப் பின்னால் புதைந்துள்ள செய்திகளை ஆராய்ந்து போட்டி போட்டுகொண்டுவெளியிடுவதைப் பார்க்கும்போது இன்று தகவல் சாதனங்கள் சரித்திரம் எழுதுகின்றன என்றுதான்சொல்லத்தோன்றுகிறது.
கடப்பாரை வைத்தியமும் ஜெட்ரோபா விதைகளும்
ஒமை என்ற இலுப்பை சுந்தரர் தேவாரத்திலும், அகநானூறில் யானை கோடையில் பிளந்த பாலை மரக்காட்டின் செறிந்த ஒமை மரத்தின் நீர் செம்மை குறித்தும் அறிந்தவர் தானே நாம்! பாலையில் காடுகளாய் கோடையிலும் நீர் கிடைக்கும் மரவகைகளை பாதுக்காக்காது இருந்த தலைமுறையின் குற்றம் யாருடையது ?
ஒரு மாதத்திலேயே குழந்தை பிறக்க வைப்பது எப்படி?
ஆனால், ஒபாமா நலத்திட்ட வெளியீட்டில் இலக்கு தெள்ளத்தெளிவாக இருந்தது. அக்டோபர் ஒன்றாம் தேதி முதல் எல்லோரும் பயன்படுத்த ஆரம்பிக்க வேண்டும். டிசம்பர் பதினந்து முதல் இன்னும் பல வசதிகள் வேண்டும். மார்ச்சில் மொத்தமும் முடித்திருக்க வேண்டும். கால தேச வர்த்தமானப்படி சொவ்வறை செயலாளர்கள் சௌகரியத்திற்காகத் திருத்தியமைக்கக் கூடிய உரிமையில்லா கெடு வைக்கப்பட்ட திட்டம். கழுத்திற்கு மேல் கத்தி தொங்கும் கம்பி மேல் நடக்கும் திட்டம்.
இசைபட வாழ்…
செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, “நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது”. எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம்வரை நடந்து வருவோம். சரியான இடங்களில், தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை “ஹம்” செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.
ஒரு முடிவை மாற்ற எத்தனை பேர் தேவை?
பொதுவாகவே நம் அனைவருக்கும் மனச்சாய்வுகள் உண்டு என்பதையும் ஒரே பண்பாட்டைச் சேர்ந்த அறிவியலர்கள் தம் பண்பாட்டையொட்டிய மனச்சாய்வுகளைத் தாண்டி வருவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் மனச்சாய்வுகளின் இயல்பை அறிந்தவர்களும்கூட அதற்கு பலியாகின்றனர் என்பதையும் இணையத்தில் அண்மையில் வாசிக்கக் கிடைத்த சில கட்டுரைகள் சுட்டுகின்றன. மொத்தத்தில், பல பண்பாடுகள் கொண்டதாக மானுட இனம் இருப்பதே அறிவியலையும் சிறப்பிக்கிறது.
இலட்சியக் கொலைகளும், அலட்சியக் கொலைகளும்
ஒரு மைல் நீளத் தெருவில் சுமார் 100 வீடுகளிருக்கும்- பூனைகள் உலவுவதால் என்ன விளைவுகள் என்று சமீபத்தில்தான் எனக்கு உறைத்தது. பூனைகள் அமெரிக்காவில் லட்சக்கணக்கான சிறு பறவைகளைக் கொல்கின்றன என்று படித்த போதுதான் எனக்குப் பிரச்சினையின் பரிமாணம் தெரிந்தது. லெனினியம்/ஸ்டாலினியம் எத்தனை லட்சம் பேரைக் கொன்றன என்பதை மொத்தமாகத் தொகுத்துப் பார்த்தால்தானே புரிகிறது? கம்யூனிசத்தின் பலிகளை லட்சிய பலிகள் என்று சொன்னால் முதலிய அமைப்பு இந்த மாதிரியான அலட்சிய பலிகொண்டு அது சம்பந்தமான குற்ற உணர்வுக்குக்கூடத் தேவையில்லாத குழந்தைமையை பாவித்துக் கொண்டிருக்கிறது.
மதப்பிளவும் தேசப்பிரிவினையும்
சிறிய சிறிய மூட்டை முடிச்சுகளையும் கூட கீழே போட்டுவிட்டு வெறும் கூடான உடலில் உயிரை மட்டும் சுமந்து கொண்டு நடக்கிறார்கள். அதற்கடுத்து அவர் சொல்வது தான் இத்தனை ஆண்டுகள் தாண்டியும் கேட்கும் நம் நெஞ்சங்களை உலுக்குகின்றது. தாய்மார்கள் தாங்கள் நொந்து சுமந்து பெற்ற குழந்தைகளைக்கூட ஒரு கட்டத்தில் தூக்கமுடியாமல் துவண்டு, கதறி அழவும் தெம்பில்லாமல் உயிருடன் கீழே இறக்கிவிட்டுச் செல்கிறார்கள்.
நாம் நம்மைப் பலரென்றுணர்ந்த அந்த எதிர்பாரா தருணம்
, அரசு உதவி கிடைக்கும் என்ற குழந்தைத்தனமான, சோவியத்திய நம்பிக்கை ஒருவழியாக குணமாயிற்று நாங்கள் எங்களுக்கு உதவி செய்து கொள்ள முடியும் என்று திடீரென உணர்ந்தோம். இது எங்கள் தேசம், இதன் எதிர்காலம் எங்கள் கையில் உள்ளது என்று உணர்ந்தோம். இது உண்மையான அரசியல் மாற்றத்துக்கு வழி செய்யக் கூடிய புரிதலாக மாற மேலும் பல காலம் ஆகும் என்பது எங்களுக்குப் புரிகிறது. ஆனால் அதற்கான அழைப்பின் முதல் துவக்க மணி ஒலித்து விட்டது- போலோட்நயா சதுக்கத்தில் டிசம்பர் பத்தாம் தேதி ஒலித்தது அந்த அழைப்பு.
உடையும் இந்தியா? – புத்தகத்திலிருந்து ஒரு பகுதி
இந்தியாவைக் கூறுபோடுவதில் அமெரிக்காவுக்குப் பல லாபங்கள் இருக்கின்றன. மற்றொரு வலிமையான போட்டியாளர் ஏற்படுவதைத் தடுக்க முடியும். அமெரிக்க கம்பெனிகள் தங்கள் வேலைகளை இந்தியத் தொழிலாளர்களுக்கு அனுப்ப முடியும். ஒரு வலிமையான அரசு இல்லாதபட்சத்தில் அப்படி அனுப்பப்படும் தொழில்கள் முழுக்க முழுக்க அமெரிக்க லாபத்தைத் தவிர வேறெதையும் கணக்கில் எடுத்துக்கொள்ளாத முறையில் இருக்க முடியும்.
இந்தியத் துண்டாட்டம் : உட்பகைகளின் அந்நிய வேர்கள்
ஒரு நாட்டின் வரலாற்றை ஆராயத் தேவையான கோட்பாடுகளை வழங்குவதன் மூலமும், அந்த ஆய்வுகளை கட்டுப்படுத்துவதன் மூலமும், அந்த ஆய்வு முடிவுகளை தகுந்த பிரச்சார அமைப்புகள் மூலமாக உலகரங்கில் முன்வைப்பதின் மூலமுமே தனக்கான ஆதாயங்களை மேற்குலகால் இன்று பெற்றுவிட முடியும். இந்த வகையில், ஒரு நாட்டின் வரலாறும், கலாச்சாரமும், மதமும் அந்நாட்டின் நலனுக்கு எதிராக உபயோகப்படுத்தக்கூடிய ஆயுதமாக ஆகின்றன. ஆக ஒரு நாட்டைக் கட்டுப்படுத்த போர், பொருளாதாரம் ஆகிய பழைய காலனிய கருவிகளைத் தாண்டிய ஒரு கருவி தற்போது மேற்கத்திய நாடுகளின் கையில். அது, பண்பாட்டு ஆய்வுகள்.
நசுக்கப்படும் குரல்வளைகள்
என் தாத்தா பதவியிலிருந்து தூக்கியெறிப்பட்டு, அவருக்குப் பென்ஷனும் மறுக்கப்பட்டிருந்தது. அது சில அரசியல் காரணங்களுக்காக, அவர் சொன்ன கருத்துகளுக்காக. அவர் மொழியியல் துறையின் தலைசிறந்த பேராசிரியர்களில் ஒருவர். 23 மொழிகள் அவருக்குத் தெரிந்திருந்தது. கடும் உழைப்பாளி. எப்போதும் அவரை மாணவர்களும், நண்பர்களும் சூழ்ந்திருப்பார்கள். ஆனால் அவர் ஒரு ‘அரசியல் துரோகி’யாக அறிவிக்கப்பட்டபின் அவரை ஒருவர் கூட வந்துபார்க்கவில்லை. ஒருவரும் அவர் உதவிக்கு வரவில்லை. தனிமை சூழ்ந்த வருடங்களில் கொஞ்ச கொஞ்சமாக அவர் மனநிலை சிதையத் தொடங்கியது.
மீள்பதிப்பு: தொடர்ந்து சுருங்கும் இந்திய எல்லைகள்
அமரர் எஸ்.வி.ராமகிருஷ்ணன் சொல்வனம் இதழ் 6-இல் எழுதிய இக்கட்டுரையை அவர் நினைவாக மீள்பதிப்பு செய்கிறோம்: நடுநிசியில், 12 மணி அடித்து ஆங்கிலக் காலண்டர் பிரகாரம் 15ம் தேதி தொடங்கியவுடன் பிரிவினைக்கப்புறம் மீதியிருந்த நாடு (முழு இந்தியாவில் ஏறக்குறைய முக்கால் பங்கு) இந்தியன் யூனியன் என்றபெயருடன் இன்னொரு நாடாக உதயமாயிற்று. அதற்கு முன் ஜோதிட ரீதியில் நாள் நன்றாக இல்லையாம். பாகிஸ்தான் பிறந்தவேளை மரண யோகம் என்றும் சொன்னார்கள். அடுத்த அறுபத்தியிரண்டு ஆண்டுகால வரலாற்றைத் இன்று திரும்பிப் பார்த்தால் அது சரியாக இருக்கலாம் என்று தோன்றவும் செய்யலாம்.
உலைகலனாகுமா தமிழகம்? – இறுதிப் பகுதி
அரசியல் கொள்கைகள் காரணமாக தொழிற்துறை முடங்கிக் கிடந்த நிலையில் ஓரளவு படித்த வங்காளிகள் கூட வெளிநாடுகளுக்கும் வெளி மாநிலங்களுக்கும் வேலை வாய்ப்பை நாடியும் வாழ்க்கை வசதிகளை பெருக்கிக் கொள்ளவும் சென்றனர். இதர வங்கத் தொழிலாளர்கள் ஆளும் அரசின் செல்லப் பிள்ளைகளாய் உற்பத்தியைப் பெருக்காமலேயே உண்டி பெருக்கி ஒரு வகையில் வீணான வாழவு வாழ்ந்தனர்.
பாகிஸ்தானுடன் அமைதிப் பேச்சுவார்த்தை சாத்தியமா?
பாகிஸ்தான் ராணுவத்தின் இலக்கு என்ன? இலக்கற்ற இலக்கு அது. இந்தியாமீது வன்மம்; அவ்வளவுதான். ஐ.எஸ்.ஐயின் இலக்கு? இந்தியா பற்றி எரியவேண்டும். பாகிஸ்தானில் உள்ள தீவிரவாதக் குழுக்களின் நோக்கம் என்ன? இந்தியா உலகில் எந்தவிதத்திலும் முன்னேறிவிடக் கூடாது. மும்பை 26/11 போல மேலும் பல அநியாயங்களை ஜிஹாத் என்ற பெயரில் செய்யவேண்டும். இப்படி எண்ணற்ற இலக்குகள் இருக்கும்போது குரேஷி என்ன செய்வார்? எந்தப் பேச்சுவார்த்தை நடந்தாலும் அதில் எந்த முன்னேற்றமும் இல்லாதவகையில் இழுத்தடிப்பது மட்டும்தான் அவர்களது நோக்கமாக இருக்கும்.
முதலியத்தை விமர்சிக்கும் மர்ம நாவல்கள்
பல நாடுகளிலும் துப்பறியும் நாவல்கள், மர்மக் கதைகள் சமூக விமர்சனத்துக்குக் கருவியாகப் பயன்பட்டிருக்கின்றன. ஆனால் ஸ்வீடன், நார்வே, ஃபின்லாந்து போன்ற ஸ்காண்டிநேவிய நாடுகளில் சமீபகாலமாக மர்ம நாவல்கள் நிறைய வெளிவருவதோடு, அவை மொழி பெயர்க்கப்பட்டு ஆங்கில மொழி உலகில் பரவலாக விற்பதும், அவை எல்லாமே ஒரு விதமான சமூக விமர்சன நோக்கோடு வெளிவருவதும் கவனிக்கத் தக்கன.
கன்னி வெடி
மனித வெடிகுண்டு தாக்குதலில் பெண்களை உபயோகிப்பது நல்ல பலன்களை(?!) அளிப்பதாக கூறப்படுகிறது. ஒரு ஆண் மனித வெடிகுண்டு சராசரியாக 13 மனித உயிர்களை மட்டுமே கொல்கிறான். ஆனால் ஒரு பெண் மனித வெடிகுண்டு சராசரியாக 21 மனித உயிர்களை கொல்கிறாள் என்று புள்ளிவிவரம் சொல்கிறது.
மாற்றங்களை மறுதலிக்கிறதா இந்திய ராணுவம்?
கார்கில் போர் நடந்துமுடிந்து சென்ற ஜூலையோடு பத்து வருடங்கள் ஆகின்றன. இன்னொரு கார்கில் போர் ஏற்பட்டால் நம்மால் சமாளிக்க முடியுமா? கார்கில் போரில் நாமிழைத்தத் தவறிகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? இந்திய ராணுவத்திடம் நவீனத் தாக்குதல்களுக்கான தளவாடங்கள் உள்ளனவா? – அலசுகிறார் அமர்நாத் கோவிந்தராஜன்: “காஷ்மீர் போன்ற பல்லாயிரம் வீரர்கள் எல்லைப்பகுதிகளில் இருபக்கமும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றை விசாரிப்பதும் ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்பதும் எந்தவொரு ராணுவ அமைப்புக்கும் மிகவும் முக்கியமான விஷயம். ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை ஒன்றை நடத்தியிருந்தாலும் இன்றுவரை பொதுமக்களின் பார்வைக்கு அந்த விசாரணையின் முடிவு தெளிவாக எடுத்துச் செல்லப்படவில்லை.”
தொடர்ந்து சுருங்கும் இந்திய எல்லைகள்
நடுநிசியில், 12 மணி அடித்து ஆங்கிலக் காலண்டர் பிரகாரம் 15ம் தேதி தொடங்கியவுடன் பிரிவினைக்கப்புறம் மீதியிருந்த நாடு (முழு இந்தியாவில் ஏறக்குறைய முக்கால் பங்கு) இந்தியன் யூனியன் என்றபெயருடன் இன்னொரு நாடாக உதயமாயிற்று. அதற்கு முன் ஜோதிட ரீதியில் நாள் நன்றாக இல்லையாம். பாகிஸ்தான் பிறந்தவேளை மரண யோகம் என்றும் சொன்னார்கள். அடுத்த அறுபத்தியிரண்டு ஆண்டுகால வரலாற்றைத் இன்று திரும்பிப் பார்ததால் அது சரியாக இருக்கலாம் என்று தோன்றவும் செய்யலாம்.
…மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி
காகிதங்களை நீட்டிய போதெல்லாம் கையெழுத்திடுவது நடிக/நடிகைகளுக்கு அழகு. ஆனால் பிரதமருக்கு அது அழகல்ல. கடந்த சில தினங்களில் உலக நாடுகள் நீட்டிய அனைத்து காகிதங்களிலும் நமது பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். ”அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? நாட்டின் எதிர்காலத்தை எந்த அளவிற்கு அது பாதிக்கும்? இந்தியாவின் வளர்ச்சியை இது எவ்வகையில் பாதிக்கும்?”, என்ற எந்த பிரக்ஞையும் அவரை உறுத்தியதாகத் தெரியவில்லை.
சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி?
பிரிவினை மற்றும் உரிமை கோரலுக்கான பொறி எந்தப் பகுதியிலாவது தோன்றினால், அதைச் சமாளிப்பதற்கு சீனர்கள் பயன்படுத்தும் வழிமுறை ஒன்றே தான் – கோரிக்கையாளர்களைக் கடுமையாகத் தாக்கி ஒடுக்குவது, தொடர்ந்து தாக்கி ஒடுக்குவது. உறுதியுடன் தாக்கி ஒடுக்குவது. திபெத்தில் அவர்கள் செய்வதைப் போல.
கனவுகளின் நிதர்சனங்கள்
வள விநியோகம், அதிகாரப் பகிர்வு போன்றவை இந்த புதிய முயற்சிகளின் அடிநாதமாக அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலானவை, அந்நோக்கங்களின் எதிர்மறைப் புள்ளியை சென்றடைவது வரலாற்றின் ஆகப்பெரும் முரண்நகை.
வீகுர் இனப்பிரச்சனையின் ஒரு வேர்
இயல்பிலேயே தங்களுக்கென தனி அடையாளத்தையும், கலாச்சார ரீதியாக தனித்துவம் பெற்றிருந்த உய்குர்கள், எக்காலத்திலும் தங்கள் மீதான சீன அரசின் அடக்குமுறையை சிறிதும் விரும்பவில்லை. வரலாற்றில் உய்குர் மக்கள் அவர்களின் கலைதிறனுக்காக பெரிதும் புகழப்படுபவர்கள்.
வன்முறையின் வித்து – இறுதிப்பகுதி
மாஓவின் அடுத்த சுய-விளம்பரம் 1960-களில், சீனாவில் கொடிய பஞ்சம் நிலவிய காலகட்டங்களில், பெரிய அளவில் நடைபெற்றது. அந்த வருடத்தில்(1960) மட்டும் 20 மில்லியன் மக்கள் பசியால் மடிந்தனர். அதே காலகட்டத்தில், மாஓ பிறநாடுகளில் இருந்த இடது-சாரி அமைப்புகளுக்கு பணத்தை வாரி வழங்கி, வேற்று நாட்டு மக்களிடமும் தன்னுடைய தாக்கத்தை ஏற்படுத்த முயன்றார். இந்த காலகட்டம் தான் ஆராய்ச்சியாளர்களால் மிகுந்த கவனத்திற்கு உட்படுத்தப் பட வேண்டியதாக கருதுகிறேன்.
பேரரசின் தொலைந்த தொடுவானங்கள்
மத்திய அரசுடைய நிதிப்பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேகம் வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருள் என்ன தெரியுமா? கைத்துப்பாக்கிகளும், ரைஃபிள்களும்தான்.
வன்முறையின் வித்து – ஓர் உரையாடல் – பகுதி 2
தன் மூத்த மகன், கொரிய போரில் இறந்தபோது கூட மாஓ எந்த வருத்தமும் கொள்ளவில்லை. தன்னுடன் வார இறுதிகளையும், விடுமுறைகளையும் கழித்த தன் மகனின் விதைவையிடம் கூட இந்த செய்தியை இரண்டரை வருடங்களுக்கு பிறகுதான் தெரிவித்தார். கம்யூனிஸ ரகசிய நடவடிக்கைகளுக்கு பழகிபோயிருந்த அவரது மருமகளும், தன் கணவனிடமிருந்து தனக்கு எந்த கடிதமும் வராததை குறித்து எந்த கேள்வியும் எழுப்பவில்லை.
வன்முறையின் வித்து – ஓர் உரையாடல் – பகுதி 1
ஸ்டாலினின் இளமைக்காலம் குறித்தான Young Stalin எனும் புத்தகத்தை எழுதத் துவங்கியபோது, புத்தகத்தில் அவர் செய்த எந்த வித கொலைக்குற்றத்தையும் பதிவு செய்ய நேராது என்றே நினைத்தேன். ஆனால், தனது 22 வயதிலேயே, தனக்கு துரோகம் புரிந்ததாகக் கருதியோரை எல்லாம் அவர் “அகற்றினார்”.
