மறுபடி

பள்ளிக்கூடத்திலிருந்து ஸ்டெல்லாவுக்கு காலையில் ஒரு கடிதம் வந்தது. கவுன்ஸிலரை சந்திக்க வரவேண்டும் என்று கோடிட்டிருந்தது. ஆஸ்திரேலியாவின் பள்ளிக்கூடங்களில் ஒரு மாதிரியான அந்நியத்தனத்தை உணர்ந்திருந்தாள் ஸ்டெல்லா. அவள் காலத்து இந்திய பள்ளிக்கூடங்கள் போல ஒட்டடையே அடிக்காத, குப்பை எங்கும் வெளியில் கிடக்க, அழுக்கும் அசிங்கமுமாய் இருக்கவில்லை. அதனால்தானோ என்னவோ ஒரு அன்னியத்தன்மை வந்ததாக ஸ்டெல்லா உணர்ந்திருந்தாள்.

குற்றம்

இறந்த காட்டுப்பன்றிகளின் கொழுப்பில் நானும் நிலாவும் உயிர்வாழ்ந்தோம். பிறகு பாம்புகளை வேட்டையாடி உண்டோம். அந்த கோடைக்காலத்தின் முடிவில் நிலா ஒரு நல்ல வேட்டைக்காரியாக ஆகியிருந்தாள். நிரந்தரமாக இடுப்பில் தொங்கும் கத்தியும் கையில் இருக்கும் ஈட்டியுமாக காணாமல் போன வன தேவதை போல உருமாறியிருந்தாள். அவளது நிறம் வெயிலில் அலைந்து கருத்திருந்தது.

மணம்

பீட்டரின் அப்பா யார் என்று தெரியாது. ஆனால் லூர்தின் கணவனைத்தான் அப்பன் என்று பீட்டர் சொன்னான். லூர்தின் கணவன் மாற்றாந்தந்தை என்றும் கிடையாது. அவன் ஊர்மேய்பவனும் கிடையாது. லாரியில் கிளீனர் வேலை. முன்பு லாரி டிரைவராக இருந்தவன். கிளீனர் வேலை என்பது கொஞ்சம் தொந்தரவு இல்லாத வேலை அவனுக்கு. லாரி ஓட்டும் டென்ஷ்ன் இல்லை. டிரைவர் தூங்காமல் இருக்க பேச வயசானவனாய் அருகே கிளீனர் வேலை ஸ்தானம்.

எழுத்தோவியம்

ஆப்பிரிக்காவின் எல்லையற்ற பாலைவனங்களின் நடுவே திடீரென்று அதிசயங்கள் தோன்றுகின்றன. உள்ளே ஓடும் நதி கசிகிறது என்பார்கள். சிலர் ஆண்டவனின் அருட்கொடை என்பார்கள். விளைவு என்னவோ, நாற்புறமும் முகத்தில் அடிக்கும் வெண்மையான வெய்யலின் நடுவே ஒரு குளமும் அதனை சுற்றி மரங்களும் கொண்ட பாலைவனச் சோலை. குளம் பெரியதாகவோ அல்லது ஆழமானதாகவோ இருந்துவிட்டால் அதனை சுற்றி நகரம் உண்டாகிவிடுகிறது. நகரத்தில் மக்கள் நெருக்கமும் உண்டாகிவிடுகிறது.குளம் போதாமல் ஆகிவிடுகிறது. அடர்ந்த வீடுகளுக்கு நடுவே குறுகிய ஓடை போல தெரு ஓடுகிறது. இந்த பக்கத்து ஜன்னலிலிருந்து கையை நீட்டினால், எதிர்ப்புறத்திலுள்ள வீட்டை தொட்டுவிடலாம். மேலே நிழலாக துணிப்படுதா. அது போன்றதொரு தெருவில்தான் ஜன்னம் பிறந்தான்.

ஆடு

மணியக்காரனின் வீட்டின் முன்னால் ஆடுகள் கட்டிப்போடப்பட்டிருந்தன. இந்த ஆடுகளை யார் அறுத்துத்தருவார்? எல்லோரும் மரசெருப்பே போட முடியுமா? யாருக்கும் தோல் செருப்பு வேண்டாமா? தோல் எடுத்து தந்தால் கீழ் சாதியா? மாமிசம் சாப்பிடுபவனெல்லாம் கீழ் சாதியா என்று அவள் மனத்தில் ஓடிக்கொண்டே இருந்தது. திடீரென்று திரும்பி நெடுமாறன் என்ன சாப்பிடுறான். வெறும் பருப்புசாதம் சாப்பிட்டுட்டு சண்டை போடப்போவானா என்று கிழத்தி நாகம்மையை கேட்டாள்.

வீகுர் இனப்பிரச்சனையின் ஒரு வேர்

இயல்பிலேயே தங்களுக்கென தனி அடையாளத்தையும், கலாச்சார ரீதியாக தனித்துவம் பெற்றிருந்த உய்குர்கள், எக்காலத்திலும் தங்கள் மீதான சீன அரசின் அடக்குமுறையை சிறிதும் விரும்பவில்லை. வரலாற்றில் உய்குர் மக்கள் அவர்களின் கலைதிறனுக்காக பெரிதும் புகழப்படுபவர்கள்.