ஜன்னல்கள்

அந்த லாட்டரியில், குருட்டு லாட்டரி அது, இதர சிலர் பெயர்களோடு அவள் பெயரும் பொறுக்கப்பட்டு வெளியே வந்த போது, அந்த லாட்டரியில் தான் வென்றதை பெரிய அதிர்ஷ்டமாகக் கருதினாள் அவள். அவர்கள் எல்லாரையும் விட்டுப் போகவும், அனைத்தையும் என்றென்றைக்குமாக விட்டு நீங்கவும் ஜெல் எத்தனை ஆர்வமாக இருந்தாள் என்பதை நினைத்தாலே வாஞ்ஜீ தன் இதயம் கிழிக்கப்படுவது போல உணர்கிறாள்.”நான் நட்சத்திரங்களை நோக்கிப் போகிறேன்!” என்றாள் ஜெல், ஆனால் அவள் செய்வதென்னவோ ஒரு தகரப் பெட்டியில் தன் வாழ்க்கையைக் கழிப்பதுதான், அதிலேயே வாழ்ந்து அதில் இறக்கவும் போகிறாள், ….

ஹெமிங்வேயின் ‘பாலத்தில் ஒரு கிழவன் ’

தனது சொந்த ஊரின் பெயரை தன் வாயால் சொன்னது அவருக்குள் சிறு மகிழ்ச்சியை ஏற்படுத்தியது. அந்த புன்னகைக்கும் அதுவே காரணம். “என்னிடம் சில விலங்குகள் இருந்தன. அவற்றைப் பராமரித்து வந்தேன்.” என்று விளக்கினார். என்ன சொல்ல வருகிறார் என விளங்காமல், “அப்படியோ” என்று மேலும் அவர் சொல்லப் போவதை கவனிக்கத் தொடங்கினேன். “ஆமாம். என் விலங்குகளைக் கவனித்துக்கொண்டு அங்கேயே இருந்தேன். சான் கார்லோஸ் நகரத்தை விட்டு வெளியேறிய கடைசி ஆள் நான்தான்.” அவரின் அழுக்கு படிந்த கருப்பு ஆடைகளையும் புழுதி படிந்த முகத்தையும் மூக்கு கண்ணாடியையும் மீண்டும் ஒருமுறை நோட்டம் விட்டேன். ஆடு மேய்ப்பவராகவோ பண்ணை வைத்திருந்தவர் போலவோ தெரியவில்லை. “என்ன விலங்குகள் அவை?” என கேட்டேன். “வித விதமான விலங்குகள்,” ஆற்றாமையில் தலையசைத்தார்.

கருப்புச் சுவர்கள்

லிட்டில் பட்டனுக்கு அவர் பதிலில் திருப்தி இல்லை.”ஜியோ மாமா தன் அறைக்குப் பெயிண்ட் அடிப்பதில் உங்களுக்கு கோபமா?அவர் நல்ல மனிதர். வேடிக்கையானவர். ஒருமுறை என்னை அவர் அறைக்குக் கூப்பிட்டார். மேஜையிலிருந்து சில கார்டுகளை எடுத்தார். மாலையில் வரும் செய்தித்தாளை விட அவை அளவில் பெரியதாக இருந்தன. ஒவ்வொன்றும் ஒவ்வொரு நிறம். என்னால் எல்லா நிறங்களையும் பார்க்க முடியும் என்று அவர் கார்டுகளை மாற்றி மாற்றி என் கண்ணருகே வைத்தார்.பிறகு என்னிடம் ’உனக்கு இது பிடித்திருக்கிறதா இல்லையா? இது குளிர்ச்சியாக இருக்கிறதா அல்லது உஷ்ணமாக இருக்கிறதா? ஈரமா அல்லது காய்ந்ததா? வாசனையா அல்லது நாற்றமா? இதைப் பார்த்ததும் உனக்குத் தூக்கம் வருகிறதா? அல்லது வெளியே போய் விளையாட ஆசை வருகிறதா? இதைப் பார்த்து என்ன நினைக்கிறாய்? அல்லது எதையும் நினைக்கவில்லையா? இதைப் பார்த்து பயமா அல்லது அமைதியா? இது தாகத்தை ஏற்படுத்துகிறதா இல்லையா? உனக்கு இதைப் பார்க்க வேண்டுமா, வேண்டாமா? என்று வரிசையாகக் கேட்டார் . நான் சொன்ன எல்லா பதில்களையும் எழுதிக் கொண்டார். பாருங்கள்! அவர் எவ்வளவு வேடிக்கையானவர்! நீங்கள் என்னை நம்பவில்லையென்றால் அவர் அறைக்குப் போய் நீங்களே போய்ப் பாருங்கள் ! என்று நீண்டதாக நினைத்தபடி தனக்குள் சொல்லிக் கொண்டான்.

கடவுளின் தொள்ளாயிரம் கோடி நாமங்கள்

“எனக்குத் தெரிஞ்சவரையில் தன்னியக்க வரிசைக் கணினிய ஒரு டிபெட்டிய துறவிமடத்துக்கு அனுப்பும்படி உலகத்துலேயே முதல் முறையா இப்பதான் கேட்கப்பட்டிருக்கு. மூக்க நுழைக்கிறேன்னு நெனச்சுக்காதீங்க, ஆனா உங்க மாதிரி – என்ன சொல்றது, ஆ – நிறுவனத்துக்கு இந்த மாதிரி இயந்திரம்லாம் தேவைப்படும்னு நான் கனவுல கூட நெனச்சிருக்க மாட்டேன். நீங்க இத வெச்சு என்ன செய்யப் போறீங்கங்கறத கொஞ்சம் விளக்க முடியுமா?”

பட்டாம்பூச்சிகள்

“அந்த பொண்ணு செத்து போறதுக்கு முன்னாடி, அவள பாத்த கடைசி ஆள் நீதான்…. “ ‘செத்து” என்ற வார்த்தையை மட்டும் சற்று அழுத்திக் கூறினான். “… அவ அப்பா அம்மா உன்ன பார்க்கனும்னு சொன்னாங்க.” இன்னமும் புலப்படாத ஏதோ பின்விளைவுகளைக் கொண்டு அவன் என்னை அச்சுறுத்துவது போலிருந்தது. மேலும் அவன் என்னைத் தொட்டுக் கொண்டிருக்கையில் என் மீது அவனுக்கு அதிகாரமிருப்பது போலவும் இருந்தது. அவன் பிடியை சற்று இறுக்கியபடியே “அதனால நீ அவங்கள வந்து பார்ப்பன்னு சொல்லிட்டேன். கிட்டத்தட்ட நீ அவங்களுக்கு அடுத்த வீடு மாதிரி தான ?” என்று கூறினான். நான் வேறு பக்கம் பார்த்துக் கொண்டே தலையை ஆட்டினேன் என்று நினைக்கிறேன். அவன் சிரித்தான். மாற்றவே முடியாதபடி எல்லாம் உறுதி செய்யப்பட்டுவிட்டது போலிருந்தது. இருந்தாலும் இதுவும், இந்த சந்திப்பும் கூட இந்த நாளை அர்த்தப்படுத்திக் கொள்வதற்கான ஒரு நிகழ்வு என்று எனக்குப் பட்டது. பிற்பகல் பின்னேரத்தில் குளித்துவிட்டு நேர்த்தியான உடையணிய முடிவு செய்தேன். விரயம் செய்வதற்கு இன்னமும் அதிக நேரமிருந்தது. அதுவரையிலும் திறக்கப்படாத கோலோன் பாட்டிலையும் நன்றாக சலவை செய்யப்பட்ட சட்டையொன்றையும் தேடியெடுத்தேன். குளியலறையில் தண்ணீரைத் திறந்துவிட்டுக் கொண்டு ஆடைகளைக் களைந்தேன். கண்ணாடியில் என் உடம்பையே வெறித்திருந்தேன். பார்ப்பதற்கு நான் ஒரு அசுகைக்காரன் மாதிரி தான் இருக்கிறேன் என்பது எனக்கும் தெரியும்; என் தாடையற்ற முகமே அதற்குக் காரணம்.அவர்களால் ஏன் என்று சொல்ல முடியாதென்றாலும், போலீஸ் ஸ்டேஷனில் நான் வாயைத் திற்ப்பதற்கு முன்னதாகவே அவர்கள் என்னை சந்தேகப்பட்டார்கள். ப்ரிட்ஜில் நின்று கொண்டிருந்ததையும் அங்கிருந்து கால்வாய் அருகே அவள் ஓடிக்கொண்டிருந்ததைப் பார்த்ததையும் கூறினேன்.

நூலகத்தில் ஒரு தளபதி

விசாரணைக் குழுவின் மாலை நேர அறிக்கையில் பரிசீலிக்கப்பட்ட புத்தகங்களின் எண்ணிக்கை கூடிக் கொண்டே போனது. ஆனால் இப்போது அந்த எண்ணிக்கையில் இவை நல்லவை இவை கெட்டவை என்ற பாகுபாட்டுக் கணக்குகள் இருக்கவில்லை. பெடீனாவின் முத்திரை ஒய்வெடுத்துக்கொண்டிருந்தது. சில சமயம் தன் துணையதிகாரியின் வேலையை சரி செய்யும் போது “இந்தக் கதையில் தவறேதும் இல்லை என்று எப்படி முடிவெடுத்தீர்கள்? இது படைவீரர்களை அதிகாரிகளைவிட சிறந்தவர்களாகக் காட்டுகிறது ! இந்த ஆசிரியருக்கு அதிகாரக் கட்டமைப்பின் மேல் மரியாதை இல்லை” என்று …

புடபெஸ்டை அடைதல்

அம்மாக்கள் மும்முரமாக கூந்தலை வாரிக் கொண்டு அரட்டையடித்துக் கொண்டிருந்ததால் சொர்கத்தைவிட்டு வெளியில் செல்வதற்ககு பெரிய கஷ்டம் ஒன்றும் இல்லை. அவர்கள் முன்னே வரிசையாக போகும் போது மட்டும் எங்களைப் பார்ப்பது போல் பார்த்துவிட்டு வேறு பக்கம் திரும்பிக் கொள்வார்கள். ஆண்கள் எப்போதும் போல் ஜாகரண்டா மரங்களுக்கு கீழே வட்டாட்டத்தை வைத்த கண் வாங்காமல் பார்த்துக் கொண்டிருந்த்தால் அவர்களைப் பற்றி நாங்கள் கவலைப் பட வேண்டியதில்லை.

எப்போதும் அதே பனிப் பொழிவும், எப்போதும் அதே மாமனும்

பின்னாலிருந்து பார்த்தால் பெண்களின் தலையலங்காரங்களெல்லாம் உட்கார்ந்திருக்கும் பூனைகள் போலிருந்தன. தலைமுடியை வருணிக்க நான் ஏன் பூனைகளைப் பற்றிப் பேசுகிறேன்?
ஒவ்வொன்றும் எப்போதும் வேறு ஏதாவதாக ஆகி விடுகிறது. அப்போதுதான் நீங்கள் அதைப் பார்த்தீர்கள் என்றால், ஆரம்பத்தில் அதிகம் உறுத்தாதபடி வேறொன்றாகத் தோன்றும். ஆனால் நீங்கள் அதை வருணிக்கச் சரியான சொல்லைத் தேடும்படி இருந்தால், தெளிவாகத் தெரிகிறமாதிரி வேறொன்றாக. உங்களுக்கு கச்சிதமாக வருணிக்க வேண்டி இருந்தால், அந்த வாக்கியத்தை அப்படிக் கருக்காக ஆக்குவதற்கு, அதற்குள் முற்றிலுமே வேறொன்றைத்தான் தேடிப் பிடிக்க வேண்டி இருக்கிறது.
கிராமத்தில் ஒவ்வொரு பெண்ணுக்குமே நீளமான, அடர்த்தியான பின்னல் இருந்தது. அந்தப் பின்னல் …

அச்சமற்ற, சின்ன டோஸ்டர்

டூஸ்ஸான்ட் தன் ஃப்ரிட்ஜிடம் சண்டைக்குப் போனார். அதுவோ மர்மமான முறையில் முற்றிலும் காலியாக இருந்தது, இத்தனைக்கும் அன்று காலையில் அது முழுதும் நிரம்பியதாகவே இருந்தது. சற்றுப் பொறுக்கவும், கிட்டத்தட்ட காலியாக இருந்தது: அதில் சக்தி தரும் பானப் பை ஒன்று பின்னாலே இருந்தது. முந்தின தினம், மிக்க உற்சாகத்துடன் சிரித்தபடி மெட்ரோ நடைமேடையில் வருவார் போவாருக்கெல்லாம் அந்த பானப் பையைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிடமிருந்து அவர்தான் அந்தப் பையை வாங்கி இருந்தார். அவள் எல்லாருக்கும் அந்தப் பையைக் கொடுத்திருந்தாள். “எதற்காக என்னுடைய எல்லா உணவையும் நீ தூக்கி எறிந்தாய்?” அவர் அந்த ஃப்ரிட்ஜிடம் கேட்டார்.

தேம்பும் சுனைக்குச் செல்லும் சாலை – லி யூவான்

மலைகளின் வழி தொடரும், கோபி பாலைவனத்தின் ஏறி இறங்கும் நிலப்பரப்பின் ஊடே செல்லும், குண்டும் குழியுமாய் வளைந்து நீளும் அந்தப் பாதை முழுதும்; காலங்கள்தோறும் விரியும் அந்தச் சாலை; பண்டை தாகங்களோடும் துயரங்களோடும் ஊடுருவிச் செல்லும் பாதை; காலத்தின் மந்தகதியோடும் அச்சத்தின் ஆழத்துடனும் சுயமரியாதையின் ஆழத்துடனும் செல்லும் அந்தப் பாதை, கைவிடப்பட்டது. பாலைவெளியில் அது யாருமற்று திறந்து கிடக்கிறது, முடிவற்ற பசியாலும் தாகத்தாலும் நிறைந்து கிடக்கிறது.

ராஸ்ப்பெர்ரிகள்

நான் அவரிடம் பாதசாரிகள் குறுக்கே கடக்குமிடத்தில் தெருவைக் கடந்த பறவையைப் பற்றியும், உணர்கொம்புகளோடு இருந்த சிவப்பு சிலந்தி பற்றியும் சொன்னதுதான், எனக்கு இந்த நோட்டுப்புத்தகத்தை அவர் கொடுக்கக் காரணம். சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் கிடையாது, எனச் சொல்கையில் அவர் முறுவலித்தார், நான் சொன்னேன், இதற்கு இருந்தது என்று, அது ஒரு வேளை வேறேதோ பூச்சியாக இருக்கும், என்றார் அவர், அதற்கு நான் சொன்னேன், அப்படி இல்லை, அது சிலந்திதான், அவளிடமே நான் கேட்டிருந்தேன், அவள் தன் தலையிலிருந்து வெளியே நீட்டிய கருப்பு ஊசிகள் போல இருந்த உணர்கொம்புகளை அசைத்தாள், அது அவள் ஒரு சிலந்திதான் என்பதை எனக்கு உறுதி செய்தது என்றேன்.

ஏற்றப்படாத விளக்குகள்

அப்பாவிடம் சர்ச்சுக்குப் போய்விட்டு வருவதாகத் தான் சொல்லிவிட்டு வந்தாள். என்றாலும் அந்த மாதிரி யோசனை அவளிடம் இல்லை. நிஜத்தில் அடுத்து அவள் செய்ய என்கிறதாய் எதுவும் யோசனையே அவளிடம் இல்லை. இப்படியே காலாறப் போய்க்கொண்டே அடுத்த சோலியை யோசிக்கலாம்… என்று தனக்குள்ளேயே சொல்லிக் கொண்டபடி நடந்து கொண்டிருந்தாள். எப்படியானாலும் ஒரு மாதிரி மௌன இறுக்கமான சர்ச்சில் இந்த ராத்திரிப் போதில் முடங்குவது அபத்தம். யாராவது உபதேசமாய், உத்தேசமாய், அவளது பிரச்னைக்கு சம்மந்தமே யில்லாமல் என்னமாவது பேசிக் கொண்டிருப்பான். ஒரு நெருக்கடி அவளுக்கு வந்து கொண்டிருக்கிறது…

மோசமான நிலைகள்

என் குடும்பம் அதிகாரம் உள்ள பதவிகளுக்கு ஏற்றதில்லை; வாழ்நாளில் பெரும்பகுதியை அதிகாரம் கொண்டவர்கள் மேல் கசப்போடு வாழ்ந்து விட்ட எங்களுக்கு, அப்படி ஒரு அதிகாரமுள்ள பதவிக்கு மாறுவது என்பது உளநிலையளவிலேயே செய்ய முடியாததாக இருக்கிறது. வெகு நாட்களுக்கு, மேல்மட்டத்தினர்பால் நான் கொண்டிருந்த ஆங்காரம், என் நிலையை முன்னேற்றிக் கொள்வதில் நான் காட்டிய சுணக்கம், இதெல்லாம் என் சொந்த ஒழுக்கப் பார்வையிலிருந்து கிளைத்த விடலை மார்க்சிய நிலைப்பாட்டால் நேர்கிறவை என்று நான் கருதி இருந்தேன். என்னுடைய நடு 30களில்தான், நான் என் வீட்டில் கேட்டதனைத்தையும் கிளிப்பிள்ளை போலத் திரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன்.

லெமாங்கும் தனி மொழியும்

தேங்காய்ப்பாலின் ஆடைச்சத்து கவுணியரிசியின் பசைத்தன்மையைப் பதப்படுத்துகிறது. எரிக்கப் பயன்படும் விறகுக்குக் கூட சொல்வதற்கு ஒரு சொந்தக் கதை இருக்கிறது. தீ தொடர்ந்து எரிய வேண்டும் என்றால் விறகுகளை அடுக்கும்போது குறுக்குமறுக்காக அடுக்கவேண்டும். இவ்வாறு செய்வது வெவ்வேறு விருப்பங்கள் கொண்ட ஒவ்வொரு குடும்ப உறுப்பினரையும் பலப்படுத்தும் ஓர் இணைப்பைப் போன்றது.

மஞ்சள் சூரியனில் ஒரு பாதி

குண்டு அதிர்ச்சியில் இருந்த வீரர்கள், மீட்புப் பணி மையத்தில், அழுக்கான சட்டைகளில், தெளிவில்லாமல் உளறிக் கொண்டு அலைய, குழந்தைகள் அவர்களிடமிருந்து தப்பி ஓடினார்கள். வீரர்கள் என்னைத் தொடர்ந்து வந்து, முதலில் கெஞ்சினர், பின்னர், என்னிடம் இருந்த உணவைப் பிடுங்கப் பார்த்தனர். நான் அவர்களைத் தள்ளினேன், சபித்தேன், அவர்களைப் பார்த்து துப்பினேன். ஒரு முறை, அவர்களை அத்தனை வேகமாகத் தள்ளிய போது அவர்களில் ஒருவன் கீழே விழுந்தான், நான் அவன் எழுந்தானா என்று திரும்பிக் கூடப் பார்க்கவில்லை. ந்நாம்டியைப் போன்று அவர்களும் ஒரு காலத்தில் கர்வமிக்க பியாஃபரா வீரர்களாக இருந்திருப்பார்கள் என்று என்னால் கற்பனை கூடச் செய்து பார்க்க முடியவில்லை.

மனித விஞ்ஞானத்தின் பரிணாமம்

மீ-மனிதர்களின் அறிவியலால் விளைந்த பல நன்மைகளை யாரும் மறுக்கவில்லை. ஆயினும், மனித ஆராய்ச்சியாளர்கள் மீது இந்த நிலையின் தாக்கம் வேறு விதமாக இருந்தது. தங்களால் இனி அறிவியலுக்கு எந்த புதிய கண்டுபிடிப்பையும் அளிக்க முடியாது என்று உணர்ந்த அவர்களில் சிலர் ஆராய்ச்சித் துறையை விட்டு விலகினர்.

ஹால் ஃபிரான்சிசும் தாமஸ் வுல்ஃபும்

அவன் எழுதிய கதைகள் ‘அட்லாண்டிக் மந்த்லி’ மற்றும் ‘சாட்டர்டே ஈவ்னிங் போஸ்ட்’ போன்ற சஞ்சிகைகளில் வெளியாகி இருந்தன. ஆனால் அவன் ஹாலிவுட் வந்த போது அவன் புத்தகம் எதுவும் பதிப்பித்திருக்கவில்லை. எஃகு ஆலைகளில் வேலை செய்பவர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்ட திரைப்படத்திற்கு எழுதும் வாய்ப்புக்காக ஒரு படத் தயாரிப்பாளரைத் தேடி வந்தான். ஒரு வழியாக ஒரு தயாரிப்பாளரும் கிடைத்தார். ஆனால் அவனுடைய எல்லைக்கு அப்பாற்பட்ட நியூ யார்க்கின் அறிவு ஜீவிகளைப் பற்றி எழுதச் சொன்னார்கள். இருந்தும் பன்னிரண்டு வாரங்கள் பணி செய்தான். ஒவ்வொரு வாரமும் தான் அதுவரை வாழ்நாளில் பாத்திராத அளவு பணத்தை காசோலையாகப் பெற்றுக் கொண்டான்.

மீள்சந்திப்பு

ம்மா அவரை விவாகரத்து செய்து மூன்று வருடங்களாகிறது அன்றிலிருந்து நான் அவரைப் பார்த்ததில்லை எனினும் அவரைப் பார்த்த அந்த நொடியிலேயே நான் அவர் எனது ரத்தமும் சதையும் எதிர்காலமும் துயரமும் என்பதுபோல் நெருக்கமாக உணர்ந்தேன். நான் வளர்ந்தால் நிச்சயம் அவரைப் போலத்தான் இருக்கப் போகிறேன் என்பது போலவும்..நான் நிச்சயம் என்னுடைய வாழ்க்கையை அவரது எல்லைகளுக்குள்தான் வைத்துக்கொள்ள வேண்டும்.

கண்ணெதிரே

இன்னும் மூன்று வினாடிகள் தேவைப்படுகின்றன, மீதமுள்ள பாதுகாப்பு முறை வரைவுகள் அழிக்கப்பட்டு அவனுடைய அடையாளச் சில்லுவின் உள்ளடக்கம் பிரதியெடுக்கப்படுகிறது. ஒரு மெல்லிய மணியொலிக்குப் பின் நான் தொடர்பைத் துண்டிக்கிறேன். என்னிடம் க்ளோன் கிட்டி விட்டது. லெய்லா ப்ராட்லியிடம் நான் வெறும் பொது அடையாளத்தைதான் எடுத்தேன், ஆனால் ப்ரின்ஸிடம் எடுத்தது வெறும் அடையாளம் மட்டும் அல்ல, அவன் இது வரை அடையாள சில்லுவில் சேர்த்து வைத்த அத்தனை தகவல்களும் என்னிடம் வந்திருக்கின்றன.

ஸ்விட்சர்லாந்தைப் போற்றி

அந்த பணிப்பெண் அவர் போவதை கவனித்தாள். அசிங்கமானவர், அவள் நினைத்தாள், அசிங்கமானவர் மற்றும் வெறுக்கத்தக்கவர். முந்நூறு ஃப்ராங்க்குகளாம், ஒன்றுமில்லாத ஒரு விஷயத்திற்கு. எத்தனை முறைகள் சும்மாவே அதை நான் செய்திருக்கிறேன். இங்கே ஒதுங்குவதற்கு இடம் கிடையாது. அவருக்கு கொஞ்சமாவது அறிவிருந்திருந்தால் இங்கே இடம் இல்லை என்று தெரிந்திருக்கும். நேரம் இல்லை, ஒதுங்குவதற்கு இடமும் இல்லை. முந்நூறு ஃப்ராங்குகளாம் அதை செய்வதற்கு. என்ன மாதிரியான மனிதர்கள் இந்த அமெரிக்கர்கள்.

கருங்காலி

எல்லோரும் மகிழ்ச்சியாக ஒன்று கூடி வாழ்ந்தனர். ஓருவர் அடுத்தவரிமிருந்து அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து அவருக்கு அடுத்தவர் அவருக்கு அடுத்தவரிடமிருந்து, கடைசியிலிருந்தவர் முதலிலிருந்தவரிடமிருந்துமாக திருடியதால் யாரும் தோற்கவில்லை. விற்பவரும் வாங்குபவரும் ஏமாற்றுவதென்பது வியாபாரத்தில் தவிர்க்க முடியாததாயிற்று. அரசாங்கம் குடிகளிலிருந்து திருடும் ஒரு குற்ற அமைப்பாய் செயல் பட்டது. குடி மக்களும் அரசாங்கத்தை ஏமாற்றுவதையே குறியாய் கொண்டிருந்தனர். ஏழைகள் என்றும் பணக்காரென்றும் எவரும் இல்லாததால் வாழ்க்கை அமைதியாக சென்றுகொண்டிருந்தது.

மனைவியின் கதை

அப்புறம் அவன் இங்கு வாழ வந்தான். அதைப் பற்றி என்னால் இவ்வளவுதான் சொல்லமுடியும், அது என் வாழக்கையின் சந்தோஷமான வருடம். அவன் என்னிடம் அப்பழுக்கற்ற நல்லவனாக இருந்தான். கடும் உழைப்பாளி, சோம்பல்பட்டதே இல்லை, பெரிய உடல், பார்க்கவும் நன்றாக இருந்தான். எல்லோரும் அவனை மரியாதையாகப் பார்த்தார்கள், என்னதான் அவன் இளைஞன் தானென்ற போதும். சமூகத்தின் கூட்டங்களில் அவனை அதிகமாகவும், அடிக்கடியும் பாட்டுகளை முன் நடத்திப் பாடக் கூப்பிட்டிருக்கிறார்கள். அவனுக்கு அத்தனை அழகான குரல், அவன் வலுவாக முந்தியிருந்து பாடி நடத்த, பின் தொடர்ந்து மற்றவர்கள் சேர்ந்துகொள்வார்கள், மேலும் கீழுமான குரல்களுடன். எனக்கு இப்போது உடலெல்லாம் நடுக்குகிறது, அதைப் பற்றி நினைத்தால், அதைக் கேட்ட்தை எல்லாம்

மான்பெண்

பெண்கள் தொடரந்து வர ரேயும், ஜாக்கியும் காரை விட்டு இறங்கினார்கள். அடர்த்தியான கருவாலி செடி புதர்களின் வழியே சென்று, சிறு கரையில் சறுக்கிக் கொண்டே இறங்கி ஓடையை அடைந்தார்கள். ஆண்கள் இருவரும் நீரின் விளிம்பில் நின்றார்கள் ஆனால் பெண்கள் நடன ஆடைகளுடன் தயக்கமின்றி நீரினுள் இறங்கிச் சென்றனர். குனிந்து நீரை அள்ளி முகத்தில் தெளித்துக் கொண்டு எப்போதும் போல அவர்களுடைய மொழியில் பேசிக் கொண்டனர். இளைஞர்களும் தங்களின் டென்னிஸ் காலணிகளை கழற்றிவிட்டு, ஜீன்ஸ் பாக்கெட்டில் தொப்பியை திணித்து கொண்டு அப்பெண்களை தொடர்ந்து நீரினுள் சென்றார்கள்.

காகசஸ் மலைக் கைதி – 2

ஒரு சிறிய பெண் ஓடோடி வந்தாள்: அவளுக்குப் பதின்மூன்று வயதிருக்கலாம்; மெலிந்து ஒல்லியாக, கரிய தார்த்தாரியனை ஜாடையில் ஒத்து இருந்தாள். அவள் அவனுடைய மகள் என்பது புலனாகியது. அவளுக்கும் கரிய விழிகளுடன் முகம் பார்க்க நன்றாக இருந்தது. அகலமான கைகளையுடைய நீளமான ஒரு நீல நிறச் சட்டையை இடுப்பில் கட்டும் கச்சையில்லாமல் அணிந்திருந்தாள். அவளுடைய ஆடையின் ஓரங்களிலும் முன்புறத்திலும் சிகப்பு நிறத் துணியால் தைக்கப் பட்டிருந்தது. அவள் காற்குழாயும் செருப்புகளும் அணிந்து அதன் மீது உயரமான குதிகால்களைக் கொண்ட காலணிகளையும் அணிந்திருந்தாள். அவள் கழுத்தில், வெள்ளி ருஷ்யக் காசுகளாலான ஒரு மாலை இருந்தது. அவள் தலையைத் துணியால் மூடவில்லை; அவளது கருநிறத் தலைமுடி ரிப்பனால் பின்னப்பட்டு ஜரிகைப் பின்னலாலும் வெள்ளிக் காசுகளாலும் அலங்கரிக்கப் பட்டிருந்தது.

சாண்பிள்ளை

சிறுமி என்கிற வார்த்தை, எத்தனை மாசு மருவற்ற சுத்தமான வார்த்தை என நினைத்திருந்தேன். குழந்தை என்கிறாப் போல. சுமை அறியாத வார்த்தை. இப்ப, அப்படி எல்லாம் இல்லை எனப் பட்டது.

பெண் என்றால், நான் நினைத்து வைத்திருந்தேனே, அதுமாதிரியான விஷயம் அல்லவாக்கும் அது. அது முன்தீர்மானம் கொண்டது. அந்த முன் தீர்மானம் என் தீரமானம் அல்ல. பந்தம் செய்த நிர்ப்பந்தமாக அது இருந்தது. சமுதாயத்தில் பெண் என்பதற்கு ஒரு வகைமாதிரி, அச்சு இருக்கிறது.

காகசஸ் மலைக் கைதி-1

காகசஸ் பகுதியில் போர் நடந்து கொண்டிருந்த சமயம் அது. சாலைகள் இரவில் மட்டுமின்றிப் பகலிலும் கூடப் பாதுகாப்பற்றி-ருந்தன. யாராவது ரஷ்யன் அவனது கோட்டையிலிருந்து சிறிது தூரம் நடந்தாலோ, அல்லது குதிரையில் சவாரி செய்தாலோ, தார்த்தாரியர்கள் அவனைக் கொல்லவோ அல்லது மலை மீது இழுத்துச் சென்று விடவோ செய்தார்கள். அதனால் வாரத்திற்கு இருமுறை ராணுவ வீரர் குழு ஒன்று ஒரு கோட்டையிலிருந்து புறப்பட்டு அடுத்த கோட்டை வரை அணிவகுத்துச் செல்லும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

வைரத் தீவு: ஆல்கட்ராஸ்

“ஆல்கட்ராஸ், வெள்ளை மனிதன் இட்ட பெயர். நம்முடைய மக்களுக்கும், அவர்களின் தொன்மங்களிலும் அதை ஆலிஸ்டி டி-டானின்-மிஜி [வானவில் பாறை] வைரத் தீவு என்றே அறிந்துள்ளோம். நம் மக்களின் பிரச்சனைகளுக்கு தீர்வளிக்கும் அருமருந்தை அத்தீவினில் போய் தேடுமாறு இரட்டை எலி சகோதரர்களுக்கு பழங்காலத்தில் சொல்லப்பட்டது என நமது கதைகள் கூறுகின்றன. இட்-ஆ-ஜூமா [பிட் நதி]யின் இறுதி வரை சென்று அவர்கள் தேட வேண்டியிருந்தது. அதைக் கண்டடைந்து, எடுத்து வந்தார்கள். அந்த ‘வைரம்’ எல்லா இடங்களில் வாழும் நம் மக்கள் அனைவருக்கும் நன்மை அளிக்கும் என சொல்லப்பட்டது. உப்பு நீர் நிலையின் அருகில் உள்ள தீவில் ஒரு “வைரம்” இருப்பதாக எங்களுக்கு எப்போதும் சொல்லப்பட்டது. ஒரு சிந்தனை அல்லது உண்மையே அந்த “வைரம்” என்றும் கூறப்பட்டது.

துளை வழியினூடே

அவனை ஏறெடுத்தும் பார்க்காமல் அவர்கள் கரைக்குத் திரும்பி நீந்தினர் அவன் அவர்கள் குதிக்க உபயோகித்த பாறையின் மீது ஏறி உட்கார்ந்தான், அவன் தொடைகளுக்குக் கீழ் அதன் உஷ்ணமான முரட்டுத்தனத்தை உணர்ந்தபடி. அந்தப் பையன்கள் தங்கள் ஆடைகளை சேகரித்துக் கொண்டு கடலினுள் நீட்டிக்கொண்டிருந்த இன்னொரு நிலமுனைப்பகுதிக்கு ஓடினர். அவர்கள் அவனிடமிருந்து விலகிப் போவதற்காகச் சென்று கொண்டிருந்தனர்..

.

பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா – பகுதி 2

நான் வெளியே போகுமுன் அவர் வரிசையாகப் பல கட்டளைகளை இடுவார்.

“பொடியைக் கொடுக்குமுன் நீ பணத்தை எண்ண வேண்டும்.”

“போலிஸ்காரர்களை முகம் கொடுத்துப் பார்க்கக் கூடாது.”

“நீ மீறுகிற சட்டத்தைத் தவிர பாக்கி எல்லா சட்டங்களையும் மதிக்க வேண்டும்.”

“நீ நின்று யாரோடும் பேசக் கூடாது.”

“வளர்ந்த ஆள் போல நீ நடந்து கொண்டால், அப்படியே நடத்தப்படுவாய்.”

பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா

ராணுவப் பணியிலிருந்து விடுவிப்பை, பல்கலைக் கழகத்துக்குப் போகிறவர்களுக்கோ, ஜெயிலுக்குப் போனவர்களுக்கோ மட்டுமே கொடுப்பார்கள். என் நண்பர்களில் சிலருக்கு வேண்டும் அளவு மதிப்பெண்கள் இருந்தாலும், பல்கலைக்கு நுழைவதற்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தைக் கொடுக்க அவர்களிடம் வசதி இல்லை, வேறென்ன செய்வது, அதனால் நாங்களெல்லாம் ஜெயிலுக்குப் போகத் திட்டமிட்டிருந்தொம் அதற்கு உயர்கல்வி என்று நாங்கள் பெயரிட்டோம். உயர்நிலைப் பள்ளியின் கடைசி வசந்த காலத்தில், வகுப்புகளுக்குப் போகாமல் டாவ்ரைட் தோட்டத்தில் பியர் குடித்தோம்.

என் பிறப்பின் ஆண்டுகள்

நான் பேச இயலாமல் உறைந்து போய் ஊமையாய் நின்றேன். பெட்டி கடுமையாக அழத் தொடங்கினாள். முழங்கையால் தன் முகத்தை துடைத்துக் கொண்டாள். நான் உடைந்த துகள்களை பெருக்கச் சென்றபோது, உடைந்த குரலில் என்னைப் போகச் சொன்னாள். நான் ஷெரிலைத் தேடிச் சென்றேன். அவள் வழக்கமாக ஒளிந்து கொள்ளும் தூரத்துக் கோழிப் பண்ணையில் இருந்தாள். என் மீது ஏன் பழி சுமத்தினாய் என்று கேட்டதற்கு, என்னை வன்மத்துடன் ஒரு கூர்மையான பார்வை பார்த்துவிட்டு, “ஏனென்றால் நீ வெள்ளையாக இருக்கிறாய்,” என்றாள்.

ரிச்சர்ட் நிக்சன் பிரைஷுட்ஸ் ராக்

-லிமுஸீன் டிராகன் மாளிகையில் நின்றது. ரிச்சர்ட் நிக்சன் வெளியேறினார். வீரக் குடிகளின் தொண்டர்ப் படைக் காவலர்கள் உருவமைதியுடன் நிமிர்ந்து நின்றார்கள். உள்ளே முற்றத்தின் சுவர் மீதிருந்த நான்கு உயரமான சுவரொட்டிகள் ரிச்சர்ட் நிக்ஸனின் கண்ணைப் பறித்தன.
– அது மார்க்ஸ், சுட்டிக்காட்டிக் கொண்டே அவர் கூறினார்.
– மார்க்ஸ், மார்ஷல் ஏ ஒப்பித்தார்.
-அது எங்கல்ஸ்
– எங்கல்ஸ்
– அது லெனின், அப்புறம் அது ஸ்டாலின்.
-துல்லியமாகச் சொன்னீர்கள், மார்ஷல் ஏ பதிலளித்தார்.
ரிச்சர்ட் நிக்சன் இரண்டாவது சுவரொட்டிக்குத் திரும்பிச் சென்று, கையுறை அணிந்த கையால் சுட்டிக் காட்டினார்.
– இது எங்கல்ஸா ?
– எங்கல்ஸ், மார்ஷல் ஏ கூறினார், கண்களில் கவலையும், மிகுதியான பணிவும் கலந்த பார்வையுடன்.
-அமெரிக்காவில் எங்கல்ஸின் படங்களை அதிகமாகப் பார்க்க முடியாது, ரிச்சர்ட் நிக்சன் விளக்கினார்..

ஃபின்லாண்டியா

ரயில் நின்றதும் கீழிறங்குகிறீர்கள், அல்லது கப்பல் கரை சேர்ந்ததும், இறங்குவதற்குப் போடப்பட்ட மரப்பாதை வழியே கீழிறங்குகிறீர்கள், அல்லது விமானம் கீழே இறங்கித் தரை தொடுகிறது, உங்கள் கால்கள் எங்கே நியாயமாக இருக்க வேண்டுமோ, அந்தத் தரையில் மறுபடி பதிகின்றன, ஆனால் அங்கெல்லாம் வெறுமைதான் இருக்கிறது. நீங்கள் வந்து சேர்ந்தாயிற்று, ஆனால் நீங்கள் எங்குமே சேரவில்லை. அந்த நகரத்தின் பெயர் வரைபடத்தில் இருக்கிறது. ரயில் நிலையத்தில் பெரிய எழுத்துகளில் அந்தப் பெயர் இருக்கிறது. நாம் ரொட்டி வாங்கக் கொடுக்கிற புதுக் காசுகளில் அந்த நாட்டின் பெயர் பொறித்திருக்கிறது, ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருப்பது எங்குமில்லை, மேன்மேலும் வேறு இடங்களுக்கு நீங்கள் போகப் போக உங்களுக்குப் புரிவதெல்லாம், மனிதனுக்குச் சேருவதற்கு பூமியில் ஒரு இடமும் இல்லை என்பதே.

பூனை

காலையில் எஞ்சியிருந்த நேரத்தில் செய்தித்தாள்களைப் படித்துக் கொண்டும், இசைத்தட்டுகளைக் கேட்டுக் கொண்டும், எப்போதும் போல சாதாரணமாகப் பேசிக் கொண்டுமிருந்தார்கள். அனால் எல்லா ஞாயிறுகளைப் போல் அல்லாது, சில சமயம் மட்டுமே உணரக்கூடியதாய், சொல்லாமலே அறியப்பட்ட ஒப்பந்தம் மூலமாக அழிய விடப்பட்ட ஒரு ரகசிய மின்னோட்டம் அவர்கள் இருவருக்குமிடையே ஓடியது. பூனை கட்டில் மீது இருந்து கொண்டிருந்தது. டியின் நண்பி ஞாயிறுதோறும் செய்வது போல், சூரிய ஒளி, சன்னல் வழியாக வந்து கொண்டிருக்கும் காற்றுடன் சேர்ந்து அவளைத் தொடும்படியாக தன்னை ஆடைகளால் மறைத்துக் கொள்ளாமல் படுக்கை மீது சோம்பலாக நீட்டிக் கொண்டிருந்தாள்.

மழை மேகங்களை அனுப்ப ஒரு மனிதன்

பாதிரியார் பச்சை நிற நாற்காலியில் தளர்ந்து அமர்ந்தார், ஒரு பள பளப்பான சமயப் பரப்புப் பத்திரிகையை எடுத்தார். அதில் இருந்த குஷ்டரோகிகள், மேலும் கிருஸ்தவரல்லாத மனிதர்களின் படங்களைப் பார்க்காமல் வண்ணமயமான பக்கங்களைப் புரட்டினார். “லியான், என்னால் அப்படிச் செய்ய முடியாதென்று உனக்குத் தெரியுமே. முழு கிருஸ்தவச் சவ அடக்கமும் நடந்திருக்கவேண்டும், மேலும் குறைந்தது அடக்கத்தின் போது பிரார்த்தனையாவது செய்யப்பட்டிருக்கவேண்டும்.”

ஸெலிலோவிற்கு பிறகு

வெள்ளைக்கார சின்னஞ்சிறு பெண் பிள்ளைகளுக்கு அருகில் நிற்க ஆசைப்பட்டிருக்கிறேன். அவள் என்னைக் பார்த்து பயந்தால், அவளருகில் மேலும் நெருங்கி நிற்பேன், கண்களில் கண்ணீர் பொங்கி வரும் பொழுது அவளுடைய கையை இறுக்கமாக பிடித்து சிரிப்பேன். அசல் இந்தியர்கள் அருகில் நிற்பது பயத்தை தரவல்ல அனுபவம் தானே!

தேவைகள்

இப்படி ஏதாவது சிறுமையாகச் சொல்லி வைப்பது இருபத்தி ஏழு வருடங்களாக அவரது வழக்கம். அது ஒரு குழாய் ரிப்பேர்க்காரரின் அடைப்பு நீக்கும் வளைகம்பி போல என் காதுகள் வழியே தொண்டைக்குள் இறங்கி என் இதயத்துக்குப் போகிற வழியில் பாதி தூரம் வரை போய்விடும். அப்போது அவர் போயிருப்பார், நானோ தொணடையை அடைத்து மூச்சுத் திணற வைக்கும் கருவியோடு அமர்ந்திருப்பேன்.

பூங்காக்களின் தொடர்ச்சி: ஹுலியோ கோர்தஸார்

முதலில் பெண் வந்தாள்,ஐயுற்றஞ்சி; இப்போது காதலன் உள்ளே வந்தான், ஒரு மரக்கிளையின் பின்னடிப்பால் கீறப்பட்ட முகத்துடன். மெச்சத்தக்க விதத்தில், குருதியோட்டத்தை முத்தங்களால் அவள் தடை செய்தாள். ஆனால் அவனோ அவளுடைய தைவரல்களை மறுதவித்தான்.

பேச்சொலிகள்

சரளமான பேச்சு! அந்தப் பெண் இறந்ததற்குக் காரணமே அவளால் பேச முடிந்தது, அவள் அக்குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தாள் என்பதா?அவள் கொல்லப்பட்டதற்குக் காரணம் ஒரு கணவனின் புண்ணான புத்தியில் எழுந்த கோபமா அல்லது ஒரு அன்னியனின் பொறாமையால் எழுந்த வெறியா?

சின்ன விஷயங்கள்

குழந்தை முகம் சிவக்க அலறி அழுதது. அவர்களின் சிறிய கைகலப்பில் அடுப்பிற்குப் பின்னால் தொங்கிக் கொண்டிருந்த பூச்சட்டியைக் கீழே தள்ளிவிட்டார்கள். அவன் அவளைச் சுவரோடு சேர்த்து அழுத்தி, அவள் பிடியை விடுவிக்க முயன்றான். குழந்தையை பிடித்துக்கொண்டு அவளை முழுபலத்தோடு தள்ளினான்.

நடனம் ஆடுவீர்களா?

இளைஞனும் பெண்ணும் ஒருவருடன் ஒருவர், ஒரு கரம் கோர்த்து இன்னொரு கரத்தால் அணைத்து உடல்கள் அழுந்தி உரச மெல்ல நடனம் ஆடினார்கள். இணைந்து ஆடியபடியே அந்த முற்றத்தில் இங்கும் அங்கும் நகர்ந்தார்கள். அந்த இசைத்தட்டு ஓடி முடிந்ததும், அதையே மறுபடியும் சுழல விட்டு தொடர்ந்து ஆடினார்கள்.

ஒரே தீர்வு

அவனுக்கே சொந்தமான ஒரு மாபெரும் கனவை அவன் உருவாக்கினான். எல்லையற்ற சிக்கல்களாலான இக்கனவின் எல்லா நுணுக்கங்களும் , கடைசி புள்ளி வரையிலும் கூட திட்டமிடப்பட்டது. அதனுள் அவன் தன் வாழ்வை புதுப்பித்துக் கொள்வான்.

எங்கிருந்து அழைக்கிறேன் நான்?

கண்ணிமைக்கும் நேரத்தில் ஜேபி அவளை பின்தொடர்ந்து முன்வராந்தாவுக்குச் சென்றான். வராந்தாவின் திரைச் சீலைக் கதவை அவளுக்காக அவன் திறந்துவைத்தான். அவளுடன் படிகளில் இறங்கி அவள் தன்னுடைய டிரக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்றான். அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக இருந்தது அது. உலகத்தில் வேறு எதுவுமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. கால்களை நடுநடுங்கச் செய்யும் ஒருத்தியை அவன் சந்தித்திருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொண்டான். அவளது முத்தம் இன்னும் அவன் உதடுகளில் எரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான்.

எதையோ கனவுகிற விளையாட்டு

அந்தக் குரலிலேயே தெரிந்து போகிறது, மிகக் கவனமாக பீதியடையாமல் இருக்க முயற்சி நடப்பது. மிகவும் பயந்து போயிருக்கிற ஒரு தாய், தன்னிடம் உள்ள அத்தனை அலசலறிவையும் பயன்படுத்தி, தன் மூளையின் வேதிப்பொருட்களின் உத்வேகத்தை மீறித் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைப் பல்லாலும் நகத்தாலும், ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளாமல், புத்திசாலித்தனத்தால் எதிர் கொண்டிருக்கிறாள் என்பது. “ஏதாவது மோசமாக நடந்து விட்டதா?”

கிருஸ்த்மஸுக்குப் பிறகு மூன்றாவது நாள்

பையன் ஓவரால் அணிந்திருந்தான். அவனுடைய அப்பாவுடைய கட்டம் போட்ட மேல் அங்கி (கோட்) ஒன்றையும் போட்டிருந்தான். அவன் அப்பா வளர்ந்து அந்தக் கோட்டைப் போட முடியாமல் போன பின்பு இவனுக்கு வந்திருக்க வேண்டும், அது மட்டும் சரியாகப் பொருந்தினால் இவனுக்கு நல்ல மேல் கோட்டாக இருந்திருக்கும். அதன் கைகள் பையனுக்காக வெட்டப்பட்டிருந்தன, ஆனால் வேறேதும் செய்யப்படவில்லை.

உங்க வேலைய பார்த்துக்கிட்டுப் போங்க

விடுமுறையிலிருந்து திரும்பியபோது, கெர்க்காவுக்கு ஏதோ படுமோசமாகி விட்டிருக்கிறதென்று தெரிந்தது. ஏதோ கசமுசாவின் பொறிகள் காற்றிலெங்கும் தெறித்தன. அவனுடைய தலைமுடி கூட நெட்டுக்குத்தாக நின்றது மின்சாரம் பாய்ந்தாற்போல, அவனுடைய கைகளோ காந்தத்தால் பாதிக்கப்பட்டது போல ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டன. கெர்க்காவுக்கு தப்பாமல் ஒன்று புரிந்தது, யுர்காதான் இந்த அழுத்தத்தின் மையம். என்ன நடந்தது என்பது குறித்து அவனுக்கு எதுவும் தெரிவதற்கு முன்னரே, ஏதோ மூடநம்பிக்கையில் அவன் அதிலிருந்து பின்வாங்கினான்.

லூலூ

ஃபேய்ஃபேய் என்ற அவ்வீட்டுப் பூனையுடன் சீக்கிரமே நட்பு கொண்டது லூலூ. முதலில், ஃபேய்ஃபேய்க்கு லூலூவைக் கண்டாலே பயமாக இருந்தது. என்னைச் சீண்டாதே என்று சொல்வது போல முதுகை வளைத்து உர்ரென்று முறைத்துக் கொண்டே பின்னால் சென்றது. அக்குடும்பத்தின் அனைத்தையுமே தான் தான் பாதுகாக்க வேண்டும் என்று அதற்கு எண்ணம். அது பூனையிடம் கைகுலுக்க முன்நீட்டியதும் குழந்தைகள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். நண்பன் தான் என்று சீக்கிரமே ஃபேய்ஃபேய் புரிந்து கொண்டது. இனி சேர்ந்து இணக்கமாக இருப்போம் என்று சொல்வதைப் போல ஒன்றையொன்று முகர்ந்து கொண்டன.

சிற்றூரும் தளபதியும் – சென் ஷிஸு

அடுத்த இரண்டு நாட்களுக்கு மரத்தடியில் தளபதியைக் காணோம். ஊர்மக்கள் அவரைப் பற்றி விதவிதமாக வம்புபேச ஆரம்பித்து விட்டனர். அவருடைய ஆரோக்கியம் சரியில்லை என்றனர். அவரது நோய் முற்றியிருந்தது. மருத்துவமனையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அடுத்த நகரிலிருந்த இராணுவப் பொதுமருத்துவமனைக்குப் போக அளிக்கப்பட்ட அரசாங்க ஜீப் சவாரி மறுக்கப் பட்டிருந்தது. ஓர் இரவில், கண்ணியம் மின்னிய சில இளைஞர்கள் வந்தனர். முன்னால் இரண்டு கூலிகள் நடந்தனர். டோலியில் கிடத்தித் தூக்கிக் கொண்டு இராணுவ மருத்துவமனைக்கு விரைந்தனர்.

நகருக்குள் சென் ஹுவான்ஷெங்கின் சாகசம்

பெருமூச்செறிந்தான். சரி, வீட்டுக்குக் கிளம்பலாம் என்று எழுந்தான். கால்கள் துவண்டன. மிகவும் பலகீனமாக உணர்ந்தான். உடல்நலமில்லையா என்ன? கூட்டத்தைச் சமாளித்ததில் அவன் எதையுமே அறியவில்லை. மிகவும் சோர்வாக இருந்தது. வாய் வறண்டு காய்ச்சலடிப்பது போலிருந்தது. நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். சுட்டது. உடல் மிகக் குளிர்ந்தது. சூடாக ஒரு கோப்பை தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், கடைகள் எல்லாமே மூடியிருந்தன. ரயில் நிலையத்தில் சுடுநீர் கிடைக்கும் என்ற ஞாபகம் வந்தது. கிடுகிடுவென்று போனான்.

போர்ட்டபெல்லோ சாலை

நம் இயல்புலக அனுபவங்களில் தென்படும் அமானுடத்தின் நிழலை இருளும் மென் புன்னகையும் ஒருசேர விவரிக்கிறார் முரியல் ஸ்பார்க். அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படும் “போர்டபெல்லோ சாலை” முரியல் ஸ்பார்க்கின் விளையாட்டும் விபரீதமும் கலந்த கற்பனைக்கு ஒரு நல்ல அறிமுகமாகும்.