திருவள்ளுவர் காலம் வரையிலும் சமூகத்தில் பெருவழக்காக, அரசியல் வகையில் அங்கீகரிக்கப்பட்டனவாக பரத்தையர் தொழில், கள் வணிகம், சூதாடல், மருந்து போன்றவை இருந்து வந்ததை சங்க இலக்கியங்கள் வாயிலாக நாம் அறிகிறோம். இவற்றை ஊக்குவிப்பது, கட்டுப்படுத்துவது அல்லது தடை செய்வதென்பது அரச அதிகாரம் சார்ந்தது.
Category: இதழ்
யூரோப்பியக் கவிதைகள்
சுவர்க்கத்தில் இருந்து கீழ்வரும் முதல் கை அவள் கை
அவள் உனக்கு மேல் வட்டமிடுகிறாள். அது வரப்போகும் வாழ்வின்
முன்னுணர்வு, தரை இறங்க தயாராகும் ஒரு பறவை.
சிறை எண் – 1
போலிஸ்காரர்கள் உணவகத்தில் தன்னைக் கைது செய்தபோது அவர்கள் பணத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்கு தெரியும் என்றும், அதனால் பணத்தைச் சுருட்டி ஆசன வாயில் வைத்துக் கொண்டதாகவும் ஈபோவில் சொன்னான்.“ஜெனரல் அபாச்சாவுக்கு நான் பணத்தை மறைத்து வைத்த சாமர்த்தியம் பிடித்திருந்தது. புது சிறைவாசிகளை அரைமணி நேரம் தோப்புகரணம் போடச் சொனான். என்னைப் பத்து நிமிடத்தில் விட்டுவிட்டான்”
போரும், புகைப்படமும்
வியட்நாம் போரின்போது தீப்புண் காயம்பட்டு அழுதுகொண்டே நிர்வாணமாக ஓடிவந்த சிறுமிக்கு அப்புகைப்படக்காரர் ஓடிச் சென்று வேறெதாவது முதலுதவி தந்திருக்கலாம். ஆனால் உலகையே அதிரவைத்துப் போர்மீது கசப்புணர்வை ஏற்படுத்திய அந்தப் புகைப்படம் நமக்குக் கிடைத்திருக்காது. அதைப்போலவே கேபாவின் புகைப்படமும் சரியானதொரு பிரச்சாரத்தையே முன்வைத்தது. போரில் ஏற்படும் மனித இழப்பைக் குறித்ததொரு அதிர்ச்சியையும், தேசியவாதிகளின் வன்முறையைக் குறித்தொரு விழிப்புணர்வையும் தந்தது.
மரணமில்லாத மனிதன் மகிழ்ச்சியாக இருப்பானா?
மனித உடலுக்குத் தேவையான ஸ்பேர் பார்ட்களை வளர்த்து அறுவடை செய்யப் பண்ணைகள் இருக்கும். இவை முக்கியமாக மூன்றாம் உலக நாடுகளிலிருந்து இயங்கும். நாமக்கல்லில் ஒரு கிட்னி பண்ணை, நாகப்பட்டினத்தில் இதயப் பண்ணை. இப்போதே மனிதக் கருக்களிலிருந்து ஸ்டெம் செல்களைத் தயாரிக்க சீனா போன்ற நாடுகளில் சந்துக்கு சந்து ஆராய்ச்சி சாலைகள் உள்ளன. அவர்களிடம் ஃப்ரிஜ்ஜில் ஆயிரக் கணக்கில் உறைய வைத்த மனிதக் கருக்கள் இருப்பதால், முதலீடு செய்ய அமெரிக்க சேட்டுகள் பண மூட்டையுடன் அலைகிறார்கள்.
சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள் (பகுதி 2)
திராவிட மொழி – குறிப்பாகக் கன்னடமும் தமிழும் ஹரப்பன் மொழியாக இருந்திருக்க வாய்ப்பு உண்டு. இவ்வாறு கருதுதற்கு ஏதுவாக இருப்பனவற்றுள் ஒன்று, எட்டு என்ற எண் ஹரப்பன் நாகரிகத்தில் அடிப்படை எண்ணாக இருப்பதும் ‘எண்’ என்ற தமிழ் – கன்னடச் சொல், எட்டு எட்டாக எண்ணும் முறையே தொடக்கத்தில் நிலவிய முறை என்பதை உணர்த்துவதும் ஆகும். மற்றொன்று தானியங்களுள் ஒரு வகையின் பெயரும், திங்களைக் (சந்திரனையும், மாதத்தையும்) குறிக்கும் பெயரும் (நெல், நிலா என்பன) தொடர்புடைய பெயர்களாக இருப்பது.
மகரந்தம்
சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி. இந்த இதழில் இடம்பெறும் பகுதிகள்: காலியாகும் குடியிருப்புகள், கணையமும் ஷவர் குளியலும், இருவர், விலங்குகளின் கணிதத் திறன்
நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள் – 2
துப்பாக்கிகளும் வெடிமருந்துகளும் அறிமுகம் ஆகுமுன் மவுரி நீண்ட தடிகளையும் குறுந்தடிகளையும்(Clubs) போராயுதங்களாகப் பயன்படுத்தினான். மரத்தாலும் பச்சைக் கற்களாலும் (Jade) ஆன இந்த ஆயுதங்கள் ஆபத்தில்லாதவை போலத் தோன்றினாலும், மவுரியின் கைகளில் பயங்கரமாகச் செயல்பட்டன. வில், அம்பு மவுரி அறியாதவை. வில்லம்புகளுக்கு உரிய மூலப்பொருள்க்ள் இங்குக் கிடைப்பனவாக இருந்தும் இந்தப் போர்க்கருவியைப் பற்றி மவுரி அறியாது இருந்தது கவனிக்கத் தக்கது.
தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்
ஆய்வாளர்கள் எஸ். இராமச்சந்திரன் மற்றும் அ. கணேசன் ஆகியோர் இணைந்து எழுதியுள்ள “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற தலைப்பிலான புத்தகம் தென்னிந்தியச் சமூக வரலாற்று ஆய்வு நிறுவனத்தினால் இந்த ஆண்டின் இறுதியில் வெளியிடப்படுகிறது. 19ஆம் நூற்றாண்டில், தென் தமிழகத்தில் நடந்த குறிப்பிடத்தக்க சமூக வரலாற்று நிகழ்வான தோள் சீலைக் கலகம் பற்றிய பல அரிய உண்மைகளை வெளிக்கொணரும் இப்புத்தகத்தின் அறிமுக அத்தியாயத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது. “தோள் சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள், தெரியாத உண்மைகள்” என்ற இந்த ஆய்வு நூல் கி.பி. 19ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்து இடைப்பகுதி வரை திருவிதாங்கோடு சமஸ்தானத்தில் நாயர் சமூகத்தவருக்கும் நாடார் சமூகத்தவருக்கும் இடையில் நிகழ்ந்த கலவரம் தொடர்பானதாகும்.
நவீன ஓவியங்களில் பழைய குறியீடுகள்
நவீன ஓவியங்கள் கூறும் விஷயத்தைப் புரிந்து கொள்வதே தனிக்கலை. ஓவியத்தின் வரலாறு நாம் பேசும் மொழியைவிட பழமையானது. கணக்கில்லா மாற்றங்களை தன்னுள் அடக்கிய ஆழமான ஆற்றின் குறியீடாக இதைப் புரிந்து கொள்ளலாம். ஆனாலும் நவீன ஓவியங்களை அனுபவிக்க நம் அழகியல் நோக்கில் பல மாற்றங்களைக் கொண்டுவருவது அவசியம்.ஒரு ஓவியத்தின் வண்ணம், வடிவம், அலங்காரம் என நமக்குத் தெரிந்த பலவகையான விவரங்களை நம்மால் ரசிக்க முடியும்.
பல்ஸாக்கும் சீனத் தையற்காரிச் சிறுபெண்ணும்- தாய்-சீஜி
தாய்-சீஜிக்கு இரு வடிவங்களுண்டு. அவரொரு தேர்ந்த திரைப்பட தயாரிப்பாளர் என்பது முதலாவது, வெற்றிகரமான எழுத்தாளர் என்பது இரண்டாவது. முதலாவது துறையில் அவர் வாங்கிக் கட்டிக்கொண்டது ஏராளம், குறிப்பாக சீன அரசிடமிருந்து. ‘எனது மனத்துயரம் சீனா’ (Chine ma douleur) என்ற திரைப்படத்திற்காக சீன அரசாங்கம் அவரை நாடு கடத்தியது. அப்படத்தில் வரும் இளைஞன் செய்த குற்றம் அரசால் தடை செய்யப்பட்டிருந்த இசைத் தட்டொன்றை தனது வீட்டில் வைத்திருந்ததும், அதைப் போட்டுக் கேட்டதும்.
அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்
ஒரு நாள் அந்த குழந்தை இரவில் என் அம்மாவிடம் பேசவேண்டுமென்று அழுதபோது அதை எடுத்துக்கொண்டு திருமதி ஸெட்டியே வந்திருந்தாள். ஒரு அரை மணிநேரம் இருந்துவிட்டு குழந்தை போனது. இத்தனைக்கும் அம்மாவிற்கு அதனோடு பேசவே தெரியாது. அம்மை தமிழும், மலையாளமும் கலந்து பேசுவாள். அது ஏதோ இந்தியில் கனைக்கும். ஆனாலும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்படியே அந்த சின்ன வானரம் அம்மா மடியிலேயே தூங்கிப்போயிற்று.
கேள்விகள்
..எப்ப கல்யாணம்?
எங்க கல்யாணம் நடந்துச்சு?
காதல் திருமணமா?
ஏன்டா பத்திரிக்கை அனுப்பல?
பொண்ணு எந்த ஊரு?…
வாசகர் எதிர்வினை
இன்றைய சலிப்பின் காரணம், எதையெல்லாம் படிக்கிறோமோ அவற்றிலெல்லாம் நம் பங்கு இருப்பதாய் எண்ணுகிற ஒரு மாயையே. அது தான் எல்லாவற்றையம் மேய்ந்து பார்க்கச்சொல்கிறது.
கடைசி வெற்றி
கடந்த ஏப்ரல் மாதம் மறைந்த சிறந்த இங்கிலாந்து எழுத்தாளரான J.G.பல்லார்ட் எழுதிய கடைசிச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு இது: ”…அவளுடைய இந்த அவமதிப்பால் கோவப்பட்டு, வேகமாக சுவற்றைத் தள்ளினேன். அதுவோ லேசில் பிடி கொடுக்கவில்லை. ஆனால் கைகளை விலக்கிய பின்னரே கவனித்தேன். சுவற்றின் மேல்பரப்பில் உதிர்ந்த சுண்ணாம்புத் துகள்களுக்கு மத்தியில் மெலிதான ஒரு விரிசல்! ஆர்வமாக மீண்டும் தள்ளினேன். விரிசல் பிளவாக அகண்டது. நத்தை வேகத்தில் நகரத் தொடங்கிய பிளவு, பின் புலி போல மேல் நோக்கி பாய்ந்தது. மூன்று அடிகள் நீண்டு, அலங்காரப் பூச்சுகளை எல்லாம் தாண்டி, முதல் மாடியில் உள்ள தடுப்புக் கம்பியை நெருங்கியது.”
நிறம்
பேச்சுவாக்கில் அவனுடைய அண்ணன் நான் என்று சொன்னதை அவர் நம்பவுமில்லை.மேற்கொண்டு என்னிடம் பேசுவதை விரும்பவுமில்லை.உலகநாயகன் கலரில் இருக்கும் அவன் எங்கே,தேமுதிக தலைவர் கலரில் இருக்கும் நான் எங்கே.என்னைப் போல ஓர் அண்டப் புளுகன் இந்த உலகத்திலேயே இருக்க முடியாது என்பதை அவர் வாயைத் திறந்து சொல்லவில்லையென்றாலும் அவர் என்னை பார்த்த ஓர் அற்பப்பார்வையே எனக்கு உணர்த்தியது.
அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – பகுதி 2
அந்த அறிவுப்பசியே மனிதனுக்கு எந்த வகையிலான தடையையும் தகர்த்தெறிவதற்கான உந்துதலைத் தர முடியும். இல்லையென்றால் கும்பகோணத்தில் ஏதோ ஒரு மூலையிலிருந்த ராமானுஜன் ஹார்டிக்குக் கடிதம் எழுதியிருக்க முடியாது. சைவ உணவை மட்டுமே சாப்பிடும் இளைஞன் உடலை வாட்டும் குளிரைப் பொறுத்து உடல் நிலை தேயும் காலத்திலும் கணிதத்தைப் பற்றியே சிந்தித்தது எதிர்காலத்தில் பெரும் பணமோ புகழோ பெறப்போகிறோம் என்று நினைத்தல்ல.
விடுப்பு
அவளது மாமியார் ஏற்கனவே தனது கூச்சலால் அண்டைவீட்டார் பலரை கூட்டியிருந்தாள். ராதா அசையாமல் இருந்தாள். அவள் தண்ணீரை உற்றுப் பார்த்தபடி அமைதியாக இருந்தாள்.
புன்தி, பொஜுரி, காலிஷா, கஜோலி ஆகிய வகை மீன்குட்டிக் கூட்டமொன்று அவளது பாதங்களை மொய்த்தன. ‘ஓ, தயவு செய்து தூரப் போங்கள், இன்று நான் உங்கள் யாருக்கும் உணவு கொண்டு வரவில்லை.’ ஆனாலும் அவளின் பாதத்தை சுற்றி மகிழ்ச்சியாய் அவை பல்டியடித்துக் கொண்டிருந்தன. தங்களுக்கு அருகில் ராதா இருப்பது அவைகளுக்கு மகிழ்ச்சியாக இருந்தது. அவைகள் அதைவிட வேறெதுவும் கேட்கவில்லை.
வேலையற்றவனின் பகல்
அப்பாவின் பிணத்தை எரிக்கக் கொண்டுபோன போதும் இப்படித்தான் மழை பெய்துகொண்டிருந்தது. அவன் முற்றத்தில் இறங்கி சேற்றில் விளையாடிக் கொண்டிருந்தான். அம்மா அழுதழுது சடலம் கொண்டு செல்லப்படுவதைப் பார்த்துக்கொண்டே இருந்தாளே ஒழிய, முன்பு போல ‘மழையில் நனையாதே’ எனச் சொல்லி அவனை அதட்டவில்லை. அவனும் அந் நாளுக்குப் பிறகு மழையில் விளையாட இறங்கவில்லை. ஏனோ தடுக்க யாருமற்ற விளையாட்டு அவனைச் சலிக்கச் செய்திருக்க வேண்டும்.
முறுகல் தோசை மனிதன்
நான்தான் நடுத்தர வயதின் மண்ணாங்கட்டி ஆகிக் கொண்டிருக்கிறேன் என்பதல்ல. என் நண்பர்கள் பலரும் – அதில் பலர் அக்மார்க் அறிவு ஜீவிகள் என்றே சொல்லத் தக்கவர்கள் – தங்களுக்கும் இதே பிரச்னை இருப்பதாகத் தெரிவிக்கிறார்கள். ஸ்காட் கார்ப் போன்ற வலைப் பூவினரும் இதையேதான் சொல்கிறார்கள். ‘நெட் வந்த பிறகு என் படிக்கும் பழக்கம் மாறிவிட்டது. அதுகூடப் பரவாயில்லை; ஆனால் என் சிந்திக்கும் விதமே மாறிவிட்டதே!’ என்று அங்கலாய்க்கிறார்கள். ‘இனிமேல் என்னால் ஒரு டால்ஸ்டாய் நாவலைப் படிக்க முடியாது. ஒரு ப்ளாக்கூட நாலைந்து பாராவுக்கு மேல் இருந்தால் வயிறு நிரம்பிவிடுகிறது. மேலோட்டமாக சாம்பிள் பார்த்துவிட்டு அடுத்த சுட்டிக்குப் போய்விடுகிறேன்’.
சிந்துவெளி: அண்மைக் கால முயற்சிகள்
இந்த ஆண்டின் தொடக்கத்தில் மறைந்த அறிஞர் கமில் சுவலபில் (Kamil V. Zvelebil) செக்கொஸ்லொவாக்யா நாட்டில் பிறந்தவர். ப்ரேக் நகரின் சார்ல்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்தியவியலை முக்கியப் பாடமாகப் பயின்று முனைவர் பட்டம் பெற்றவர். பின்னர், அதே பல்கலைக்கழகத்தில் தமிழ் மற்றும் திராவிட மொழியியல் சொல்லித்தரும் இணைப் பேராசிரியராகப் பணியாற்றி வந்தார்.
மொழியியல் மற்றும் இலக்கியம் பற்றி இவர் எழுதியுள்ள நூல்கள், ஆய்வுக் கட்டுரைகள், விமர்சனங்கள், மொழிபெயர்ப்புகள் ஆகியவற்றின் எண்ணிக்கை 500க்கும் அதிகமாகும்.
சிந்துவெளி எழுத்துகள் பற்றி, 1983ஆம் ஆண்டு ஜப்பானில் நடைபெற்ற ஆய்வரங்கம் ஒன்றில் கமில் சுவலபில் வாசித்தளித்த கட்டுரையின் தமிழாக்கத்தை வெளியிடுவதில் சொல்வனம் மகிழ்ச்சியடைகிறது.
வாசகர் எதிர்வினை
சாம்.ஜி.நேதனின் கட்டுரைகளை நான் விரும்பிப் படிக்கிறேன். சென்ற இதழில் அவர் கட்டுரை இடம் பெறாமல் போனது ஏமாற்றமளித்தது. தொடர்ந்து நல்ல படைப்புகளை, முக்கியமாக அறிவியல், இசை குறித்த கட்டுரைகளை வெளியிட்டு வாருங்கள்.
மகரந்தம்
மனத்தளர்ச்சி பரிணாமவியலோடு இணைந்த வாழ்வியலா? பாலில் தண்ணீர் கலக்கும் பால்காரர்கள் குறித்த நகைச்சுவைத் துணுக்குகள் பல வருடங்களாக நம் பத்திரிகைகளில் பவனி வருபவை. ஆனால் பிரபஞ்ச உயிரினங்களிலேயே மனிதர்கள் மட்டும்தான் பாலின் தேவையைக் கடந்து முழு வளர்ச்சியடைந்த பின்னரும் தொடர்ந்து பால் அருந்துபவர்கள், அதுவும் பிற உயிரினங்களிடமிருந்து! பிற உயிரினங்கள் குழந்தைப் பிராயத்தைக் கடந்த பின்னர் பாலைச் செரிக்கும் சக்தியை இழந்து விடுகின்றன. ஏன், வெகு சமீபம் வரை மனிதனாலும் வளர்ச்சியடைந்தபின் பாலைச் செரிக்க முடியாமல்தான் இருந்தது. பிறகு எப்படி வந்தது இந்த பால் குடிக்கும் பழக்கம்? ஏகபோகத்தைக் (monopoly) கடுமையாக எதிர்க்கும் இந்திய இடதுசாரிகள் சீனாவின் ஏகாதிபத்தியம் குறித்து என்னவிதமான எதிர்வினை புரிவார்கள்?
நியூஸிலாந்து – மவுரிகள் என்னும் முன்னோடிகள்
சிலசமயங்களில், கப்பல்கரையில் நின்றுகொண்டிருக்கும்போது, காட்டிலும் கரையிலும் வேட்டையாடிக் கொண்டிருந்த மாலும்கள் மவுரிப் பெண்களோடு தற்காலிகக் குடும்பம் நடத்துவதும் உண்டு. இத்தகைய உறவுகளால் கலப்பினக் குழந்தைகள் பிறந்தன. கப்பல் கரைகளை விட்டுத் தத்தம் நாட்டுக்குத் திரும்பியபோது, குழந்தைகளின் தந்தையரும் போய்விட்டனர். குழந்தைகள் மவுரித் தாய்மார்களிடம் மவுரிகளாகவே வளர்ந்தனர். மவுரிகளின் சமூக அமைப்பும் (Tribal Organaisation) மவுரிப் பெண்ணுக்கு இருந்த சில உரிமைகளும் கலப்பினக் குழந்தைகள் தந்தையின்றியும் வாழ வசதி அளித்தன.
மாய உறுப்புகள் நிறுவிய ஞான தரிசனம்
எதனை இந்த உலகத்தின் துயர் துடைக்காத தத்துவம் என்கிற மாதிரியாக ரூபர்ட் ஷெல்ட்ரேக்கும் எந்த தத்துவ சிந்தனையின் வெற்றியால் இந்தியாவில் அறிவியல் தேக்கநிலையை அடைந்தது என அவுட்லுக் கட்டுரையாளரும் கருதினார்களோ அதே தத்துவசிந்தனை துயர் துடைக்கும் செயல்முறையை உருவாக்கியதை நாம் காண்கிறோம். இந்திய தத்துவத்தின் ஒரு பெரிய கண்டடைதலே மாயை என்பது. இது உலகமே பொய் என்பதாக கடந்த இருநூறு ஆண்டுகளின் பொதுபுத்தியில் பதியவைக்கப்பட்டது. ஆனால் மாயை என்பது எப்படி நாம் புலன்களால் அடையும் ஒவ்வொன்றும் கட்டமைக்கப்படுகிறது என்பதை சுட்டுவது. அதனை தத்துவத்திலும் வாழ்க்கை முறையிலும் ஒரு கூறாக மாற்றியதன் மூலம் இந்திய ஞான மரபு ஒரு வலிமையான பண்பாட்டை உருவாக்கியது.
இசையும், கணிதமும் இணையும் புள்ளி – அக்ஷரம்
நம் இந்திய மரபிசையின் தாளங்கள் பல நுட்பங்களை உள்ளடக்கியது. இந்திய இசையை முதன் முதலில் கேட்க நேரிடும் எந்த ரசிகரையும் ஒரு கணம் திகைக்க வைக்கும் தன்மையுடயவை இவை. கடினமான கணித நுட்பங்களின் ஆச்சரியங்களை உள்ளடக்கிய தாளக்கணக்குகளை நாம் வெகு எளிதாகக் கடந்து வந்திருக்கிறோம். ஐந்து வெவ்வேறு தாள நடைகளை ஒன்றன் பின் ஒன்றாகக் கூர்ந்து கவனிக்கும் எவரையும் அது நம் மரபிசை சேகரித்து வைத்திருக்கும் பல நூற்றாண்டு கால இசை அறிவைக் குறித்ததொரு மன எழுச்சிக்கு ஆட்படுத்தி விடும்.
ஆகஸ்ட் மாதப் பேய்கள்
அந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.
நடந்துகொண்டே நாவலைச் சொல்பவன்
புத்தகம் படிக்கிறபோது ஒவ்வொரு பக்கமாகக் கிழித்துப் போட்டுக்கொண்டே வருவான். புதிதாகப் பார்ப்பவர்கள் அவனுக்கு மனச்சிதைவு நோய் என்று நினைப்பார்கள். ஆனால் அப்படியில்லை. கிழித்துப் போட்ட பக்கங்கள் எல்லாம் அவன் மனதில் அச்சாகிவிட்டது என்று அர்த்தம். எத்தனை வருடங்களுக்குப் பிறகு கேட்டாலும் ஒரு வரி தவறாமல் சொல்வான். அதற்காகப் புத்தகத்தைக் கிழித்துப் போட வேண்டுமா? என்று யாரும் அவனை இதுவரை கேட்டதில்லை.
நாகரிக விருந்துகளில்…
நீ கையாலேயே சாப்பிடு
உனக்கு முள்கரண்டி சரிவராது
என்று
மகன் வந்துபோட்ட மிளகாய்த்துண்டு
விக்கலை நிறுத்தப் போதுமானதாக
இருக்கிறது
நதிக்கடியில் மனிதர்கள்
“கடவுள் என்னைக் காப்பாற்றினார் சகோதரர்களே! கடவுள் எப்போதும் பாவப்பட்டவர்களுடன்தான் இருப்பார். நதிக்கடியில் நிறைய புனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் என் கஷ்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, எனக்கு அன்பளிப்பாக இந்த மாடுகளைக் கொடுத்தார்கள். என்னைப் பாதுகாப்பாக கரையேற்றிவிட்டதும் அவர்கள்தான். என் நினைவுக்காக என் உடையை மட்டும் அவர்கள் வைத்துக்கொண்டார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்!”
உயிரிழை
“நாலே நாலு டிக்கட் கொடுத்துவிட்டு ஹவுஸ் ஃபுல்லாடா நாயே” கதவைத் திறடா” “அந்த ரெண்டு நாயிங்களுக்கு மட்டும் எப்படிடா டிக்கட் கொடுத்தே.” “டேய் நாயிங்களா. வெளிலே வாங்கடா பார்க்கலாம்” என்று பலவாறு கூச்சல்கள் கேட்டன. அவனுக்கு பயம் தாங்க முடியவில்லை. கதவு பெயர்ந்துவிடும் போல் இருந்தது. வெளியிலிருந்து ஒரு குரல் ஒரு ஜாதிப் பெயரைச் சொல்லி கூடவே நாயிங்களா வெளியே வாங்கடா என்று இரண்டு மூன்று ஆபாச சொற்றோடர்களைக் கத்தியது. இன்னும் பல பேர் அதில் சேர்ந்து கொண்டார்கள்.
மகரந்தம்
மேற்குலகில், ஆண்களின் இருப்பையும்/அவசியத்தையும் கேள்விக்குள்ளாக்கும் பெண்ணியத்தின் “நான்காவது அலை” தொடங்கிவிட்டது. இந்தியா போன்ற வளரும் நாடுகளில் பெண்ணியம் குறிப்பிடப்படும்படியான வெற்றியை அடைந்ததுள்ளது. பெண்கள் மிகவும் அவதியுறும் ஈரான் போன்ற நாடுகளில் பெண்ணியத்தின் வெற்றி வெகு தொலைவில் இருந்தாலும், அதன் தேவை மிக அதிகம்.
ஹாரிசன் பெர்ஜரான்
2081-ஆம் ஆண்டு. எல்லோரும் ஒருவழியாக முழுமுற்றான சமத்துவத்தை அடைந்து இருந்தனர். கடவுளின் முன்போ, சட்டத்தின் முன்போ மட்டுமே கட்டுப்பட்ட சமத்துவம் இல்லை அது. எல்லா நிலைகளிலும் அனைவரையும் முழுமையாக ஒருமைப்படுத்திய அதிசயம் அது. யாரும் யாரை விடவும் புத்திசாலியாக இல்லை, அழகாகவும் இல்லை. அவ்வளவு ஏன், எந்த ஒருவரும் மற்றவரை விட அதிக வலிமையும், சுறுசுறுப்பும் கூட கொண்டு இருக்கவில்லை.
மனிதன் 2.0 எப்படி இருப்பான்?
ஆன்லைன் வாசகர்கள் ட்விட்டர் பற்றி அறியாமல் இருக்க முடியாது. ‘என்னுடைய பூனை பிங்க்கி காலையிலிருந்து பர்ர்..ர் என்று சப்தம் எழுப்புகிறது’ என்பது போன்ற மானாவாரியான செய்திகளுக்கிடையே சில சமயம் முத்து ரத்தினங்களும் சிக்குவதுண்டு. திடீரென்று ட்விட்டருக்கு ஞானம் பிறந்து, நீங்கள் என்ன மாதிரியான செய்திகளைப் படிக்கிறீர்கள் என்பதைப் புரிந்துகொண்டு, மலச்சிக்கல் பூனைகளையெல்லாம் வடிகட்டிவிட்டுக் கொடுத்தால்? அப்போது தகவல் ஓவர்லோடினால் வரும் நிரந்தரமான அரைப் பிரஞ்ஞை நிலையிலிருந்து மீண்டு, கௌதம புத்தர் போன்று எல்லாம் அறிந்த ஓர் உணர்வு நிலையை எட்டுவோம்.
முகம் சொல்லும் கதை
உலகின் சிறந்த புகைப்படங்களை அறிமுகப்படுத்தும் புதிய தொடர் இது: ஷரபத் குலா ஸ்டீவ் மக்கரியைச் சந்தித்தபோது அவர் தன்னுடைய விருப்பமாகச் சொன்ன ஒரே ஒரு விஷயம், தனக்குக் கிடைக்காமல் போன கல்வி தன் மூன்று பெண் குழந்தைகளுக்காவது கிடைக்க வேண்டும் என்பதுதான். சோவியத் யூனியனின் தாக்குதல்களில் தன் குடும்பத்தை இழந்த குலா, இப்போது பெண்களின் சுதந்திரத்தையும், தேவைகளையும் காலடியில் நசுக்கி வரும் தாலிபான் ஆட்சியில் பழமைவாதிகளின் மத்தியில் வாழ்ந்து வருகிறார். உலகெங்கும் அறியப்படும் இந்தப் பிரபலமான முகம் இப்போது ஆப்கானிஸ்தானின் ஏதோ ஒரு மூலையில் பர்தாவுக்குப் பின் மறைந்திருக்கிறது.
பின்தொடருதல் – 1
இரவுடை தரித்த குண்டு பெண்ணொருத்தி
குப்பையைக் கொட்ட தெருவிற்குள் இறங்கினாள்
வலது காது, முதுகு கால்கள் வால் என கருமை
அடர்ந்த வெள்ளைக் கொழுகொழு நாயொன்று
பின்னாலேயே குடுகுடுவென நிற்காமல் ஓடி வந்தது
வாசகர் எதிர்வினை
இளங்கோ கிருஷ்ணனின் கவிதைகள் நேரடி வாசிப்பில் சிறிய புன்னகையையும், தொடர்ந்த யோசிப்பில் வாழ்க்கையின் பெரிய குரூரத்தையும் ஒரு சேர முன்வைத்தன. சொல்வனம் இதழில் திரு.விக்கி எழுதிய இளையராஜாவைக் குறித்த கட்டுரை மிகவும் அருமையாக இருந்தது. சாம்.ஜி.நேதன், ராமன்ராஜா இருவரும் ஆழமான கருத்துகளை மிகவும் எளிமையான நடையில் எழுதி வருகிறார்கள்.
எல்லை மீறும் கம்பிகள் – ராகசாகா
அறிவியலிலும் சரி, கலை வடிவங்களிலும் சரி திறந்த மனநிலையே பல புதிய சாத்தியங்களுக்கு இட்டுச் செல்லும். இந்தத் தொகுப்பைக் கேட்கும் அனைவரையும், சங்கம இசை வடிவம் மற்றும் ஒலிகள், அடுத்த கட்ட ரசிகனாக மாற்றும் என்பதில் சந்தேகமேயில்லை. ராகசாகா கர்நாடக சங்கீதத்தை மட்டுமல்லாது ரசிகனின் ரசனையையும் மேம்படுத்தி இசைத் தேடல்களுக்குத் திறவுகோலாக இருக்கும் என நம்பலாம்
கோலுக்கு கை கொடுப்போம்
தஞ்சாவூரில் ’மகரநோன்புச்சாவடி’ (மானம்புச்சாவடி) எனும் ஓர் இடம் உள்ளது. அங்கே தஞ்சை மன்னர்கள் காலத்தில் கோலாட்டமும், பின்னல் கோலாட்டக் கச்சேரிகளும் நடைபெற்றனவாம். இன்றைக்கும் ஒரு சில கிராமங்களில் விடியற்காலை சூரிய உதயத்திற்கு முன்னால் கோயில்களில் பெண்கள் கூட்டமாகக் குழுமித் ‘திருப்பாவை’ போன்ற பாடல்களைப் பாடித் தோழிகளை அழைத்துக் கோலாட்டம் போடுகின்ற மரபைப் பார்க்கலாம்.
மாற்றங்களை மறுதலிக்கிறதா இந்திய ராணுவம்?
கார்கில் போர் நடந்துமுடிந்து சென்ற ஜூலையோடு பத்து வருடங்கள் ஆகின்றன. இன்னொரு கார்கில் போர் ஏற்பட்டால் நம்மால் சமாளிக்க முடியுமா? கார்கில் போரில் நாமிழைத்தத் தவறிகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டோமா? இந்திய ராணுவத்திடம் நவீனத் தாக்குதல்களுக்கான தளவாடங்கள் உள்ளனவா? – அலசுகிறார் அமர்நாத் கோவிந்தராஜன்: “காஷ்மீர் போன்ற பல்லாயிரம் வீரர்கள் எல்லைப்பகுதிகளில் இருபக்கமும் நிறுத்தப்பட்டுள்ள நிலையில் இதுபோன்ற தவறுகள் நடக்க வாய்ப்புகள் இருந்தாலும் அவற்றை விசாரிப்பதும் ஏற்பட்ட தவறுகளில் இருந்து பாடம் கற்பதும் எந்தவொரு ராணுவ அமைப்புக்கும் மிகவும் முக்கியமான விஷயம். ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் விசாரணை ஒன்றை நடத்தியிருந்தாலும் இன்றுவரை பொதுமக்களின் பார்வைக்கு அந்த விசாரணையின் முடிவு தெளிவாக எடுத்துச் செல்லப்படவில்லை.”
தொடர்ந்து சுருங்கும் இந்திய எல்லைகள்
நடுநிசியில், 12 மணி அடித்து ஆங்கிலக் காலண்டர் பிரகாரம் 15ம் தேதி தொடங்கியவுடன் பிரிவினைக்கப்புறம் மீதியிருந்த நாடு (முழு இந்தியாவில் ஏறக்குறைய முக்கால் பங்கு) இந்தியன் யூனியன் என்றபெயருடன் இன்னொரு நாடாக உதயமாயிற்று. அதற்கு முன் ஜோதிட ரீதியில் நாள் நன்றாக இல்லையாம். பாகிஸ்தான் பிறந்தவேளை மரண யோகம் என்றும் சொன்னார்கள். அடுத்த அறுபத்தியிரண்டு ஆண்டுகால வரலாற்றைத் இன்று திரும்பிப் பார்ததால் அது சரியாக இருக்கலாம் என்று தோன்றவும் செய்யலாம்.
வியத்தலும் உண்டே: அ.முத்துலிங்கத்துடன் ஒரு தினம்
முத்துலிங்கத்துடன் எனக்குப் பிரச்சினை ஏற்பட்டது. அவர் எழுதிய கதைகள் புரிந்தன. ‘பூமிக்கு பாதி வயது’ என்று எழுதிய ‘உண்மை (மட்டுமே) கலந்த நாட்குறிப்புகள்’ சம்பவங்களில் உள்ளடி, காட்டமான கருத்து என்று எதுவும் கிடைக்கவில்லை.
குளிரூட்டப்பட்ட அறையில் நிலவும் தன்மைக்கும் மின்விசிறி மட்டும் இயங்கும் இடத்துக்கும் உள்ள வித்தியாசம் போல் இருந்தது. மின்விசிறி சத்தம் போடும்; வேகமாக சுழலும்; பக்கங்களைப் பறக்கடிக்கும்; காற்றடித்து மேலே பலமாக உரசும்; எனினும் வெப்பத்தைக் குறைக்காமல் வெறும் ஓசையாக மட்டுமே வியர்க்கும். ஏர் கண்டிஷனரோ அமைதியாக இயங்கி சாந்தமாக்கி, சமநிலைக்குக் கொணர்ந்து வெளி வெயில் நிலையை மறக்கடித்து, புதுச்சூழலுக்கு இட்டுச் செல்லும். முத்துலிங்கம் எழுத்து ஏசி எழுத்து.
பசியும் பரிவும்
இளங்கோ கிருஷ்ணன் முக்கியமான இளங்கவிஞர்களில் ஒருவர். இவர் கவிதைகளில் காணப்படும் வசீகரமான சொற்செட்டும் ஒரு கதைத்துணுக்குபோல அமைந்துவிடுகிற வடிவமைப்பும் வாசகர்களை உடனடியாகக் கவனிக்கத் துண்டும் கூறுகள். கவிதையின் பொருள் எழுத்துத்தளத்திலிருந்து மிக இயல்பாக வாழ்க்கைத்தளத்தை நோக்கி நகர்பவையாக உள்ளன. ஐம்பதுக்கும் மேற்பட்ட கவிதைகள் கொண்ட “காயசண்டிகை” தொகுப்பில் நல்ல கவிதைகள் பல உள்ளன.
மகரந்தம்
சில ஆங்கில வலைத்தளங்களின் முக்கியமான, சுவாரசியமான, பல்துறை சார்ந்த படைப்புகளின் தொகுப்பு இப்பகுதி.
பஞ்சம்
அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் தோட்டத்தை சுற்றிப் போடப் பட்டிருக்கும் மூங்கில் வேலி தங்கம் போல் பிரகாசிக்கும். இந்த வேலிக்கு ஐம்பது கஜம் தொலைவில் ரயில் போகும். இந்த முறை கூட நந்தினியின் நீண்ட தலைமுடி அவள் பின்னால் காற்றாடி போல் படர்ந்திருந்தது. இரவில் படுக்கையில் அவள் கட்டிக் கொள்ளும் பழைய சேலை சுருக்கங்கள் ஏதுமற்ற அவளது உடலில் ஒழுங்கற்று சுற்றப் பட்டிருந்தது. அந்த ரயில் கடக்கும் போது அவளைக் காணாத ஜோடிக் கண்களே இருக்காது எனலாம்.
வாசகர் எதிர்வினை
நமது பாரம்பரியம், நமது சொத்து என எண்ணாத மக்களிடம் இருக்கும் ஒரு கலை புரவலரின்றி அழியும். அதன் நீட்சியே இன்று நாம் காணும் மல்லர்கள். சென்ற இதழில் வெளியான சீனாவின் தலைவலி இந்தியாவின் நிவாரணி என்ற திரு வைத்தியநாதனின் கட்டுரை நிதர்சனங்களை முன்வைக்கிறது. நம்மால் ஆகாத காரியத்தை சீனா செய்வதன்மூலம் நமக்குக் கிடைக்கப்போகும் பலன்களை பட்டியலிடுகிறார்.
கிரகர் சோம்சா எனும் கரப்பான்பூச்சி
கவை நிறைய அம்பிருந்தும்
ஏதொன்றையும் பிரயோகிக்க மனம் கூசும் வேடனொருவன்
அம்பினும் கூரிய பசி பாய்ந்து உழன்ற போது…
…மன்னவன் கோல்நோக்கி வாழும் குடி
காகிதங்களை நீட்டிய போதெல்லாம் கையெழுத்திடுவது நடிக/நடிகைகளுக்கு அழகு. ஆனால் பிரதமருக்கு அது அழகல்ல. கடந்த சில தினங்களில் உலக நாடுகள் நீட்டிய அனைத்து காகிதங்களிலும் நமது பிரதமர் கையெழுத்திட்டுள்ளார். ”அதில் என்ன எழுதப்பட்டிருக்கிறது? நாட்டின் எதிர்காலத்தை எந்த அளவிற்கு அது பாதிக்கும்? இந்தியாவின் வளர்ச்சியை இது எவ்வகையில் பாதிக்கும்?”, என்ற எந்த பிரக்ஞையும் அவரை உறுத்தியதாகத் தெரியவில்லை.
விழித்திருக்கும் தூக்கம்
சிறு கதவுகளில்
சிறு வாழ்க்கைகள்,
சுவரில் அகப்பட்டச்
சித்திரங்களாய்.
மண் உண்ணும் செம்மலும் மாண்புடைத்தே
”அசுத்தம் ஏன் நல்லது” புத்தகத்தை எழுதிய டாக்டர் மேரி ரூபுஷ், நாம் குப்பை மேட்டிலேயே குடியிருக்க வேண்டும் என்று ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், அவர் பாக்டீரியாக்கள் நமக்கு வெளியேயும், உள்ளேயும், நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் பரவியிருப்பதைச் சரியாகவே சுட்டிக்காட்டுகிறார். பெரும்பாலான நுண்ணுயிர்கள் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லை என்பதோடு, ஜீரண மண்டலம் போன்றவற்றில் குடியிருக்கும் நுண்ணுயிர்கள் நம் ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்துப் பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன.
