பிரிக்கப்படாது – அந்தக் கடிதம்

சில வருடங்கள் ஓடிற்று. ஒரு வரி செய்தியாய் அவர்களின் இருப்பு அறியவரும். எனக்கும் வயதாகி இலக்கியம் தாண்டி, குடும்பம் ஏறிய ஒரு கட்டத்தில் அழைப்பு வந்தது. அவர்களும் மும்பைக்கே குடிபெயர்ந்திருந்தார்கள். அதற்குப்பின் அன்னம்மா ஒரு சில எழுத்தாளர் பெருந்தலைகள், தலை சாய்த்தபின் கூப்பிட்டனுப்புவார். நான் போவதில்லை. ஒரு மெலோ டிராமாவிற்கு மனம் தயாராயில்லை. இலக்கிய இடத்தை மெல்ல ஆன்மீகம் பிடித்துக் கொண்டது. (நன்றி: மாயாதீத சுவாமி)

கவிதைகள்

சில நிமிடங்களின் பின்
மழை மேகம் தாள்களின் எல்லா இடத்திலும் தாவி விட்டது
வெய்யிலை எழுத கொஞ்சமும் இடமில்லை.
தாள்கள் முழுவதும் ஈரமாகின
‘வானம் கரைந்து ஊத்துண்ணுது’ என்று
கவிதையின் கடைசி வரியை வாசித்துக்கொண்டு செல்கிறான்
எனக்குள் இருந்த வாசகன்

பர்த் டே

அந்த வருடத்தில் வந்த ஓவ்வொரு பிறந்தநாளின் போதும் ஓவ்வொருவரும் செய்த புதுமைகள், புதுமைகளாகக் காட்ட முனைந்த சிறுமைகள் என எல்லாம் அன்றைய இரவு சபையில் தாமனால் விவரிக்கப்படும். அதற்கு செவி சாய்ப்பது குடும்பத்தினரின் கடமை. அவன் விழிகள் விரிய ஓவ்வொன்றையும் சொல்லுவான். அதோடு அதனைப் பற்றிய தனது அடிக்குறிப்பையும் சேர்த்துக் கொள்வான்.

இருளும் காமம், நிலங்களின் வழியே

ஓவ்வொரு நகரமும் தன்னுள் மிகப்பெரிய கதையை கொண்டுள்ளன. மனிதர்களை போலவே அவைகளது வாழ்க்கையும்(சரித்திரமும்) அளவிட முடியாத நிரந்தரமற்ற தன்மையையும், ஏதோ மாயத்தேவதைகளின், யட்சிகளின் ஆளுகைக்குட்பட்டது போலவும் வளர்ந்தும், வீழ்ந்தும் காற்றில் உரு மாறியும் உருக்கொள்கின்றன. நம்மோடு நெருங்கிய தொடர்பு கொண்ட இந்த நகரங்களின் கதைகள் வெறும் வருடக் குறிப்புகள் மட்டுமல்ல. ஆனால் எழுதப்பட்ட வரலாற்று குறிப்புகள் அப்படியான பிம்பத்தை தான் தருகின்றன.

மில் – ஒரு பார்வை

முற்போக்கு என்கிற பெயரில் எழுதப்படுகிற நாவலில் அறிவுக்கொலைகள் சர்வ சாதாரணம். மற்ற பக்கத்தின் மீதான அறிவின்மை, சகபுரிதல், ஒட்டுமொத்த புரிதலின்மை போன்றவற்றால் எழும் வெற்றிடத்தை மனித நேயக்குரல், மார்க்கீசியம் என்கிற வெறும் ஓலி அலைகளால் நிரப்புதலே முற்போக்கு இலக்கியம் என்கிற காலகட்டத்தை பின் தள்ளி எழுத்துக்கள் நகர்தல் அவசியம்.

யுவனின் பகடையாட்டம் – ஒரு பார்வை

வார்த்தைகளால் சொல்லி சொல்லி மாய்ந்து போய்விட்ட ஒரு விடயத்தை சொல்ல முயன்று தோற்று போகிற துயரம் ஒரு எழுத்தாளனுக்கு சுகமானதுதான். இயற்கையிடமும், பிரபஞ்சத்திடமும் கலை உணர முயன்று தோற்று போய்க்கொண்டேயிருக்க பிரபஞ்சம் வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் சொல்லிவிட்டோம் என்று அவன் சாயும்போது அது விரிந்து அதன் புதுப்பகுதிகளை காட்டிக்கொண்டே நீள்கிறது.

அம்மையும் அடுத்த ப்ளாட் குழந்தைகளும்

ஒரு நாள் அந்த குழந்தை இரவில் என் அம்மாவிடம் பேசவேண்டுமென்று அழுதபோது அதை எடுத்துக்கொண்டு திருமதி ஸெட்டியே வந்திருந்தாள். ஒரு அரை மணிநேரம் இருந்துவிட்டு குழந்தை போனது. இத்தனைக்கும் அம்மாவிற்கு அதனோடு பேசவே தெரியாது. அம்மை தமிழும், மலையாளமும் கலந்து பேசுவாள். அது ஏதோ இந்தியில் கனைக்கும். ஆனாலும் அவர்கள் பேசிக்கொண்டார்கள். அப்படியே அந்த சின்ன வானரம் அம்மா மடியிலேயே தூங்கிப்போயிற்று.