மண் உண்ணும் செம்மலும் மாண்புடைத்தே

”அசுத்தம் ஏன் நல்லது” புத்தகத்தை எழுதிய டாக்டர் மேரி ரூபுஷ், நாம் குப்பை மேட்டிலேயே குடியிருக்க வேண்டும் என்று ஒருபோதும் சொல்லவில்லை. ஆனால், அவர் பாக்டீரியாக்கள் நமக்கு வெளியேயும், உள்ளேயும், நம்மைச் சுற்றி எங்கு பார்த்தாலும் பரவியிருப்பதைச் சரியாகவே சுட்டிக்காட்டுகிறார். பெரும்பாலான நுண்ணுயிர்கள் எந்தப் பிரச்சினையையும் ஏற்படுத்துவதில்லை என்பதோடு, ஜீரண மண்டலம் போன்றவற்றில் குடியிருக்கும் நுண்ணுயிர்கள் நம் ஆரோக்கியத்திற்கு அவசியமான சத்துப் பொருள்களையும் உற்பத்தி செய்கின்றன.

சிதலும் எறும்பும் மூவறிவினவே

இந்தப் பரிசோதனைகள் அனல் பறக்கும் விவாதங்களைக் கிளப்பின: எறும்புகளால் காற்றில் வரும் ஓசைகளைக் கேட்க முடியுமா? அல்லது பியானோவைப் போன்ற திடப் பொருள்களின் வழியாக உருவாக்கப்படும் அதிர்வுகளை மட்டுமே அவற்றால் உணரமுடியுமா? அவை தங்களுக்குள் ‘பேச’, ஒலிகளை மேற்கண்ட எந்த வழியிலேனும் எந்த அளவுக்கு உபயோகிக்கின்றன? இவை பற்றிய உண்மைகளை நாம் இன்னமும் கண்டுபிடித்துக்கொண்டே இருக்கிறோம்.

ஆட்டுவித்தால் ஆரொருவர் ஆடாதாரே

கண்ணுக்குத் தெரியாத ஏஜெண்டுகளால் நாம் கட்டுப்படுத்தப்படுகிறோம் என்ற நம்பிக்கை நம்மை ஆவிகளின் உலகுக்கு அப்பாலும் இட்டுச் செல்கிறது. உயிர்களை மேலிருந்து கீழாக (ஒரு படியமைப்பில்) படைத்த ஒரு ’புத்திசாலித்தனமான வடிவமைப்பாளன்’கூட நம் கண்ணுக்குப் புலப்படாத ஒரு ஏஜெண்டே.

கல்லா நீள்மொழிக் கதநாய்

ஒருவர் செய்வதைப் பார்த்து அதேபோலச் செய்யமுயலும் திறனுள்ள சில மிருகங்களுக்குப் பேசும் சக்தி உண்டு என்று தாங்கள் நிரூபித்திருப்பதாக விஞ்ஞானிகளிலேயே ஒரு பிரிவினர் அறிவிக்கக்கூடும். அப்படி நடந்தால், அது பற்றி நாம் வியப்படையக்கூடாது என்றும் அவர் எச்சரித்தார்.