நதிக்கடியில் மனிதர்கள்

“கடவுள் என்னைக் காப்பாற்றினார் சகோதரர்களே! கடவுள் எப்போதும் பாவப்பட்டவர்களுடன்தான் இருப்பார். நதிக்கடியில் நிறைய புனிதர்கள் வாழ்கிறார்கள். அவர்கள் என் கஷ்டங்களைப் பார்த்து மனம் வருந்தி, எனக்கு அன்பளிப்பாக இந்த மாடுகளைக் கொடுத்தார்கள். என்னைப் பாதுகாப்பாக கரையேற்றிவிட்டதும் அவர்கள்தான். என் நினைவுக்காக என் உடையை மட்டும் அவர்கள் வைத்துக்கொண்டார்கள். கடவுள் அவர்களை ஆசிர்வதிக்கட்டும்!”

பேரிக்காய் மரத்தில் சிக்கிய மரணம்

காய்கள் பழுக்கத் தொடங்கினால் பக்கத்து வீடுகளிலிருந்து பிள்ளைகள் வருவார்கள். அவர்கள் அவளை ஏமாற்றிவிட்டு பழங்களைக் கொண்டுபோய் விடுவார்கள். கோபத்தில் கிழவிக்கு பைத்தியமே பிடித்துவிடும் போலிருக்கும்.