2025 நோபல் பொருளாதார அறிவியல் பரிசு

நம் வளர்ச்சியின் ரகசியம் 2025 ஆண்டுக்கான பொருளாதார அறிவியல் துறைக்கான நோபல் பரிசு புதிய கண்டுபிடிப்புகள் எப்படி நாடுகளின் வளர்ச்சியைத் தாங்குகிறது என்பதை கணித மாதிரிகளால் விளக்கியவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.. இவை வெறும் கோட்பாடுகள் அல்ல – நமது அன்றாட வாழ்க்கை, வேலைவாய்ப்புகள், சுகாதாரம் எல்லாவற்றையும் பாதிக்கும் உண்மையான மாற்றங்கள்! “2025 நோபல் பொருளாதார அறிவியல் பரிசு”

தந்தையைப் போல் தனயன் – இசைப் பாரம்பரியம் பற்றி

ஸ்வாமிகளுக்கு அவர் தந்தையே ஸ்ரீ ராம நாமத்தை உபதேசம் செய்திருக்கவும் வாய்ப்பு உள்ளதென்பதை மறுக்க முடியாது.  ஸ்ரீ ராம ப்ரஹ்மம் ஸ்வாமிகளின் சிறு வயதிலிருந்தே அவருக்கு ராம நாமத்தின் ருசியை உணர வைத்து விட்டார் என்பது நமக்கு நன்றாக புலனாகிறது. ஸ்வாமிகள் இந்த உண்மையை தன்னுடைய முதல் கீர்த்தனத்திலேயே சூசகமாகவும் தெரிவித்துள்ளார். 

பணங்காய்ச்சி மரம்

அப்பா நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு மட்டுமே ஏன் இந்த சோதனை? என் வாழ்வில் நான் அனைவருக்கும் துரோகம் இழைத்தது போல் உணர்கிறேன். நீங்கள் எனக்களித்த சொத்துக்களை பாதுகாக்காமல் கோட்டை விட்டது உங்களுக்கிழைத்த துரோகம்., ராதா கொண்டு வந்த நகைகளை அடகு வைத்து அதற்கு வட்டி கட்ட முடியாமல் தவிப்பது அவளுக்கிழைத்த துரோகம்

ஸ்ரீ ஹர்ஷ கவியின் நைஷத நூலில் தத்துவங்கள்

முதல்வர், ஒரு பொருளின் நிழலே இருட்டு என்பதையே ஆக்ஷேபித்தார்.  ஏனெனில் நிழல் அசையும்.  இந்த அசைவு நிழலின் தன் முயற்சியால் அல்ல. எந்த பொருளின் நிழலோ அது அசைந்தால் இதுவும் அசையும்.  தவிர நிழல் உள்ள இடத்தில் குளுமை போன்ற மூல உருவத்துக்கு இல்லாத குணங்களும் இருக்கும்.  அடுத்து ஸ்ரீதர் என்பவரும் இருட்டு என்பது ஒரு பொருளல்ல என்றார்.  ஆனால் இதற்கு ஒரு தனித்வமான வண்ணம்-கருமை உள்ளது.  இது பொருளல்ல என்றால் இது சாத்யமில்லை.  அதே சமயம் பொருளுமல்ல. இதை பரமாணுக்களால் உருவாக்க முடியாது.

கண்ணாடி ஷோகேஸ் – காற்றில் உருகும் கனவுகள்

ஒருகாலத்தில், பாலு காவேரி என்ற பெண்ணை காதலித்தான். அது இரண்டு குடும்பங்களுக்கும் இடையே புயலை கிளப்பியது; சண்டைகள், வாக்குவாதங்கள், உறவுகள் முறிந்தன. அந்தச் சமயத்தில், நடுவில் நின்று சமாதானம் செய்து, அவர்களது திருமணத்தை நடத்தி வைத்தவர் சுந்தரம் தான். அந்தக் காலத்தில்– அவர் ஒரு வார்த்தை சொன்னால் போதும்; “சுந்தரம் சொன்னார்” என்பதே முடிவாக இருந்தது.

1901-2025 நோபல் பரிசுகள் பற்றிய பிரதிபலிப்புகள்

அவர் இறந்த ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு, 1901ஆம் ஆண்டு முதன் முதலாக இந்த பரிசுகள், அறிவியல், கலாச்சாரம் மற்றும் உலக அமைதியின் உயர்ந்த அங்கீகாரமாக மாறின. இயற்பியலுக்காக Wilhelm Conrad Röntgen, வேதியலுக்காக Jacobus H. van‘t Hoff, மருத்துவத்துக்காக Emil von Behring, இலக்கியத்துக்காக Sully Prudhomme மற்றும் அமைதிக்காக சர்வதேச redcross அமைப்பின் நிறுவனர் Henry Dunant மற்றும் அமைதி இயக்க தலைவர் Frédéric Passy ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இவர்கள் சமூக தாக்கத்துடன் கூடிய புதுமைகளை கௌரவிப்பதற்கான முன்மாதிரியை உருவாக்கினர்.

சுழல்

களவு போன வண்டியை சரியாய்  இன்சூர் செய்து வைத்திருந்தோமே என்று  அந்தக் காகிதங்களை எடுத்துக்கொண்டு நியூ இந்தியா இன்சூரன்ஸ் அலுவலகம் போனேன். அது நகரின் பிரதான லாரன்ஸ் சாலையில் இருந்தது. அங்கு ஒரு அம்மா நடுத்தர வயது இருக்கும்.  அவர்கள்தான் டூ வீலர் இன்சூரன்ஸ் கிளையிமுக்கு பொறுப்பாக இருந்தார்கள். அவர்கள் கொடுத்த ஃபாரத்தை யெல்லாம் ஃபில் அப் செய்து கொடுத்தேன். ஆர் சி புக் செராக்ஸ்   இன்சூரன்ஸ் ஒரிஜினல் எல்லாம் சமர்ப்பித்தேன்.

பின் நவீனத்துவம் – ஜப்பானியக் கழிவறைத் தொழில்நுட்பத்தின் மீதான ஒரு ஆய்வு

தொழில்நுட்பத்தில் மாத்திரம் வாழ்வின் உன்னதம் இல்லை என்பதை ஜப்பானியர்கள் மெல்ல உணர்ந்து வருகின்றார்கள். வேலை, வேலை என்று காலங்கழித்த முந்தைய தலைமுறைக்கும் வெள்ளி, வெளிர்மஞ்சள், கருநீலம் எனத் தலைமுடியை வண்ணமயமாக்கி வாழ்வின் மறுபக்கத்தை ஆராயும் இன்றைய தலைமுறைக்கும் இடையே பெரிய இடைவெளி இருப்பது மறுக்கமுடியாத உண்மை. பொதுவில் பரபரப்பான வாழ்வை விட்டோடும், கலைகலையும் – வாழ்வையும் நேசிக்கும் பாங்கு அண்மையில் இவர்களிடம் தலைப்பட ஆரம்பித்திருக்கிறது.

கத்தி வீரன் கதை

ஓர் நாக்கு பூச்சியை போல இருந்த என்னை கண்டு அப்பா ஏன் ஓடினார் என்பது யாருக்கும் இன்னமும் புரியாத புதிர். இதெல்லாம் நான் ஏதோ மற்றவர்கள் என்னிடம் சொல்லி நான் உங்களிடம் சொல்கிறேன் என்று நினைக்காதீர்கள். எனக்கு சிறு வயதில் ஞாபக சக்தி மிகவும் அதிகம். இப்போதுதான் பொண்டாட்டியின் பிறந்த நாள் மறந்து தொலைக்கிறது. இந்த சிறு வயது சம்பவம் எல்லாம் அப்படியே தொல்லைக்காட்சியில் ரிப்பீட்டில் பார்த்தது போல இன்னும் நினைவிருக்கிறது.

கரிசல் பூமியின் இசைத் தெய்வம் – விளாத்திகுளம் சுவாமிகள்

நாதஸ்வர சக்கரவர்த்தி திருவாவடுதுறை ராஜரத்தினம் பிள்ளைக்கு சுவாமிகள் மீது மிகுந்த மரியாதை உண்டு.கடம்பூரில் ஆண்டுதோறும் நடக்கும் பத்திரகாளி அம்மன் திருவிழாவில் நாதஸ்வர சக்கரவர்த்தியின் கச்சேரி கண்டிப்பாக இருக்கும். விழா கமிட்டியாளர்கள் எப்படியாவது விளாத்திகுளம் சுவாமிகளையும் அழைத்து வந்து விடுவார்கள்.சுவாமிகள் எதிரில் அமர்ந்தால் பிள்ளையின் வாசிப்பு தனி தினுசாக இருக்குமாம். திருவாவடுதுறை என்னும் பூட்டைத் திறக்க விளாத்திக்குளம் என்கிற சாவி தேவைப்படுகிறது! எனக் கி.ரா.சுவைப்படச்  சொல்கிறார்.

மலரிடுதல்

ஒரு வாழ்க்கை முடிந்துவிட்டது என எனக்கு அன்று புரியவில்லை. எல்லோரும் நினைப்பொழிவார்கள் என்பதும் எனக்குப் புரியவில்லை. மெல்லிய அவ்வப்போது வந்துபோகும் நியாபகமாகத்தான் என்னில் எஞ்சப்போகிறாள் என்பதையும் அன்று நான் அறியவில்லை. இவ்வளவு கறாரான ஒரு நிகழ்வாக மரணம் இருக்க வேண்டுமா என இப்போது நினைத்துக்கொள்கிறேன்.

கவிதையில் வரலாற்றுணர்வு

பழைய மரபும், புதிய படைப்பும் ஒன்றின் மீது மற்றது ஏற்படுத்தும் தாக்கத்தைத் தமிழில் கம்பரைக் கொண்டு விளக்குகிறார் பேராசிரியர். ‘கம்பரைப் படிந்தோமானால் அவருக்கு முன்பு சென்ற அத்தனைக் கவிஞர்களின் படைப்புகளையும் அறியும் பேறு நமக்குக் கிடைத்ததாகும்’ என்று சொல்லும் பேராசிரியர், சங்கக் கவிதை, ஆழ்வார் பாசுரம், சீவக சிந்தாமணிக் காப்பியம் முதலான முன்மரபுகள் எல்லாம்

இறுதியே இயைவது ஆனால்

சங்க இலக்கியத்தின் பெண் சொல்கிறாள்… வாயால் நல்லதென்று சொல்கின்றேன், ஆனால் உடம்பு நல்லதில்லேன்னு காட்டுகிறது…. குடாகேசன்  கண்கள் விரிய, குரல் துள்ள விளக்கினான்.  இயற்பியல் உனக்கு அப்படித்தான்… படிக்கிறேன்னு சொல்கின்றாய், ஆனால் உன் சோர்வான முகமும், தளர்ந்த தோள்களும் கஷ்டமா இருக்கிறது என சொல்லுது  இல்லையா?,  குடாகேசன் கேட்டான்.

கோயன் சகோதரர்கள் திரைக்கதை எழுத்தாளர்களாக: தனித்துவமான உலகங்களின் சிற்பிகள்

இந்த உள்ளுணர்வு சார்ந்த செயல்முறை, பிரதான திரைப்படத் தயாரிப்பில் ஆதிக்கம் செலுத்தும் வழக்கமான மூன்று-அங்க கட்டமைப்பிலிருந்து அவர்களை அடிக்கடி விலகிச் செல்ல வைக்கிறது. இவர்களுடைய திரைப்படங்கள் பெரும்பாலும் தொடர்ச்சியானதாகவும், சில சமயங்களில் இலக்கில்லாமல் அலைந்து திரிவது போலவும் அல்லது வட்ட வடிவமான கதையோட்டத்தையும் கொண்டிருக்கும். உதாரணமாக, ‘தி பிக் லெபோவ்ஸ்கி’ (The Big Lebowski) திரைப்படம், ஒரு சாதாரண ஆள்மாறாட்டத்திலிருந்தும், கறை படிந்த தரைவிரிப்பிலிருந்தும் தொடங்குகிறது.

கண்ணன் காட்டிய வழி

“உன் உயிர் நண்பன், மதனி அவனை சொந்தச் சகோதரனாகத்தான் கருதுகிறாள். நம் மகள் கிருஷ்ணை என்னை விட, ஏன் உன்னை விடவும் கூட அவனைத்தான் தந்தை ஸ்தானத்தில் வைத்திருக்கிறாள். அவன் எப்படி நமக்கு துரோகம் செய்யத் துணிந்தான்? அவன் என்ன அவமானம் ஏற்பட்டாலும் சரி என்று பீஷ்மரின் கீழ் போரிட்டிருக்க வேண்டும். முதல் நாள் போரில் அவன் பாண்டவர்களில் ஒருவரைக்  கொன்றிருந்தால் போர் அத்தோடு முடிந்திருக்கும். நாம் இன்றும் நூற்றுவராக இருந்திருப்போம்”

தெரிவுகள் அதிகம், முடிவு ஒன்று

This entry is part 11 of 12 in the series சமூக உணர்ச்சி

சின்ன முடிவுகள் முதல் வாழ்க்கையையே புரட்டிப்போடும் முடிவுகள் வரை. இன்று என்ன காபி குடிப்பது என்பது முதல் காலை உணவு என்ன உண்பது வரை. நாம் சிறுவர்களாக இருந்தபோது இந்தக் குழப்பம் இருந்திருக்கவில்லை. அம்மா செய்வதுதான் காலை உணவு. இப்போது அப்படி இல்லை. பல இல்லங்களில் பலவகை சீரியல்களும் பிரெட் டோஸ்டா இல்லை பழரசமா என பிள்ளைகளைக் கேட்பதில் குழப்பம் ஆரம்பிக்கிறது. பழரசத்தில் ஆயிரம் வகை இருக்கும். இது ஒரு வகை பொருளாதார மேம்பாட்டைக் காட்டினாலும் முடிவெடுக்க குழந்தைகளைத் திணறடிக்கச் செய்கின்றன. நான் சொல்வது சற்றே பொருளாதாரத்தில் மேல்தட்டு குடும்பங்களை.

றெக்கை– அத்தியாயம் 6

This entry is part 6 of 14 in the series றெக்கை

வாய் வார்த்தைச் சண்டை இன்னும் தீவிரமான அடுத்த நிலைக்குக் கடந்தது. அழுகிய வாடை வரும் அந்தரங்க உறுப்புகளும் எப்படி எல்லாம் இருட்டிலும் ஆளொழிந்த பகலில் யார் யாரோடு எங்கே கள்ளக் கலவி செய்தார்கள் என்ற ஊகத்தின் அடிப்படையில் கூட்டிச் சேர்த்த பட்டியல் வெளியிடலுமாக கேட்க ரசமான நிகழ்ச்சி அங்கே அரங்கேற்றமாகிக் கொண்டிருந்தது. 

ஃபுகு – மரணத்தின் சுவை

ஃபுகு உணவு மிக அதிக விலைகொண்டதாக இருக்கக் காரணம் அதைத் தயாரிக்கும் வழிமுறைகளும்  அதன் பிரத்யேக சுவையும்தான். ஒரு கிலோ ஃபுகு 7-லிருந்து 10 அமெரிக்க டாலர் வரை விலை கொண்டிருக்கிறது. ஃபுகு அப்படியே பச்சையாகவும், சமைத்தும், ஆவியில் வேகவைத்தும், வாட்டியும், புகைத்தும், வறுக்கப்பட்டும், பொறிக்கப்பட்டும் உண்ணப்படுகிறது. ஃபுகுவின் சதை மட்டுமல்லால் அதன் துடுப்புகளும்  வாலும் விரும்பி உண்ணப்படுகிறது.

சோ(வ்)லுக்குக் குட்பை

This entry is part 5 of 5 in the series தென்கொரியப் பயணம்

சியோலின் நவீன வாழ்க்கை முறை, ஷாப்பிங் மோகம், அழகு கலாச்சாரம், உணவு என அனைத்தும் ஒன்றிணைந்த இடம் மியோங்டாங். மாலையில் உணவுச் சந்தையாக அவதாரமெடுக்கிறது. ஆக, கூட்டத்திற்குப் பஞ்சமில்லை. இது ஒரு சந்தைத் தெரு மட்டுமல்ல, கொரியாவிற்குச் செல்லும் ஒவ்வொரு பயணியும் ஒரு முறையாவது அனுபவிக்க வேண்டிய இடமும் கூட!

பாபிநேனி சிவசங்கர்

உண்மையில் பெண்களிடம் வன்முறை நிகழும் போது புனிதத்தை இழப்பது பெண் மட்டும் தானா என்ற கேளிவிக்கான பதிலே இந்தக் கதை. ஒரு பெண்ணுக்கு மானபங்கம் நடந்தால், இல்லை, இல்லை, ‘மானபங்கம்’ என்ற சொல் சரியானதல்ல. மனிதனுக்கு ‘அபிமானம்’ இருக்கிறதே தவிர ‘மானம்’ எங்கே இருக்கிறது? ஒருவேளை இருந்தால் அது பெண்ணோடு கூட ஆணுக்கும் ஏன் இல்லை? இந்தக் கேள்விகள் கதாநாயகன் நரேந்திரனின் சொற்களில் வரவில்ல. ‘பாபிநேனி’ சிவசங்கரின் விமரிசனபூர்வமான விளக்கத்தில் உள்ளன

முடிசூட்டப்படாத ஆட்சியாளர்

அவரது வாழ்நாளிலே அவர் நிம்மதியாக இருந்த காலம் குறைவே. தந்தையிடம் வந்து சேர்ந்ததில் துவங்கி, இரத்த சொந்தங்களிடையே நடைபெற்ற கோர குருஷேத்திர யுத்தம் வரை அவர் பார்த்தது துரோகங்களும், பகையுமே. இருந்தும், அவை எதுவும் அவரை பாதிக்கவில்லை.

மொழி பெயர்ப்புக் கவிதைகள்- கு அழகர்சாமி

தொலைந்த உன் நினைவுகளை
கண்டுபிடித்த இரவு
அவற்றைக் கூட்டிச் சேர்க்கிறது உள்ளே-
வறண்ட குறுங்காட்டின் மீது
வசந்தம் கரவாய்க்
கீழிறங்கியது போல்,

🕊️ 2025 நோபல் அமைதி பரிசு — கேள்வி & பதில் தொகுப்பு (FAQ)

மரியா கொரினா மச்சாடோ யார்? அவருக்கு ஏன் நோபல் அமைதி பரிசு வழங்கப்பட்டது?
தகவல்: வெனிசுலாவில் ஆட்சிக்கு எதிராக ஜனநாயகப் போராட்டத்தை நடத்தும் முக்கிய தலைவி.
கிண்டல்: மேற்குலகத்திற்கு பிடிக்காத ஆட்சிக்கு எதிராக நின்றதால் பதக்கம் கிடைத்தது.