பணங்காய்ச்சி மரம்

அப்பா நான் என்ன தவறு செய்தேன்? எனக்கு மட்டுமே ஏன் இந்த சோதனை? என் வாழ்வில் நான் அனைவருக்கும் துரோகம் இழைத்தது போல் உணர்கிறேன். நீங்கள் எனக்களித்த சொத்துக்களை பாதுகாக்காமல் கோட்டை விட்டது உங்களுக்கிழைத்த துரோகம்., ராதா கொண்டு வந்த நகைகளை அடகு வைத்து அதற்கு வட்டி கட்ட முடியாமல் தவிப்பது அவளுக்கிழைத்த துரோகம்