பரதேவதையின் நிஜ ரூப தரிசனம்

தலைப்பைப் பார்த்தவுடன் இது அம்பாளைப்பற்றிய கட்டுரை என நினைக்கலாம். ஆனால் இது அம்பாளை போற்றும் ஒரு ஸ்துதியைப் பற்றிய கட்டுரை.  அம்பாளை துதிக்க பல வழிகள் உண்டு. ஸ்தோத்திரங்கள் சொல்லி வழிபடலாம். ஒரு கோவிலில் அவளை ஆவாஹனம் செய்து துதிக்கலாம். மனதில் அவளை த்யானம் செய்யலாம். இவற்றையெல்லாம் விட “பரதேவதையின் நிஜ ரூப தரிசனம்”

நீர் தான் ரசிக சிகாமணி!

பொதுவாக சிட்டை ஸ்வரங்கள் அனுபல்லவிக்கு பிறகும், சரணத்திற்கு பிறகும் பாடப்படும். ஆனால் இந்த கீர்த்தனத்தில் சரணத்திற்கு பிறகே பாட வேண்டும் என்று சுப்பராம தீக்ஷிதர் தன்னுடைய புத்தகத்தில் கொடுத்துள்ளார். இந்த சிட்டை ஸ்வரத்திற்கும் மற்ற கீர்த்தனங்களில் அமைக்கப்பட்டிருக்கும் சிட்டைஸ்வரத்திற்கும் மிகுந்த வித்யாசம் உண்டு.