ரவி அல்லது கவிதைகள்

தேங்கியவைகளுக்கு
எப்பெயராவது
இருந்துவிட்டுப்
போகட்டும்
கடலாகும்
பயணத்தில்

துன்பம் போக்குவதே தூயப்பணி

பனி பொழிந்தால் மீண்டும் அடுத்த சுழற்சியில் புதிய பனி உருவாகும். சக்குரா உதிர்ந்தால் மீண்டும் அடுத்த பருவத்தில் புதிய மொட்டு உருவாகும். ஆனால் முதுமை என்பது தொடர்ச்சியாக நிகழ்வது. எனவே, உண்மையில் உதிர்ந்து கொண்டிருப்பது நாம்தான் என்கிறார் புலவர்.

அரா கவிதைகள்

கல்குவாரி சண்டையாடும் இரண்டு மீன்கள்
நிறமிகளைத் தூக்கி எறிய
அதனைப் பிடித்து தொண்டையில் தடவி
வண்ணமயமான மிடற்றொன்றை நீலமும் ஒரு நிறம்
நிறம் பூத்த கழுத்தைக் கொத்தித் தேனெடுக்க வந்த பாம்பை
நாயொன்று துரத்துகிறது

சகுனியாட்டம் 

பொருட்டாக
நினைக்காத
முட்டாள் ஒருவர் பல ஆண்டுகளுக்கு முன்பு
சொன்ன ஒரு சொல்லை எண்ணி மருகுதல்

அப்பா வீடு திரும்புகிறார்

நான் பார்க்கிறேன் அவர் நலிந்த தேநீரைப் பருகுவதை,
பழைய சப்பாத்தியை உண்பதை, புத்தகம் வாசிப்பதை.
கழிவறைக்குள் செல்கிறார்
மனிதரால் உருவாக்கப்பட்ட உலகிலிருந்து
மனிதர் விலகுவதைப் பற்றி ஆழ்ந்து சிந்திக்க.
வெளியில் வந்தவர் நடுங்குகிறார் பீங்கான் தொட்டி அருகில்,
குளிர்ந்த நீர் ஓடுகிறது அவரது பழுப்புநிறக் கைகளின் மேல்,

சுரங்கம்

எஸ்டேட் மேனேஜர் உத்தரவால்
எருதைப் பிடிக்கும் முயற்சியில்
தவறிச் சரிவில் விழுந்து
ஒரு கொம்பு முறிந்ததை
மலைக்கிராமம் அறிந்திருந்தது
முன்பு காட்டை விட்டே வெளிவாராத எருது
இப்போது தன் கூட்டத்தோடு இல்லை
இலைதழைகளில் மறைந்தும்
சேற்றில் அமிழ்ந்தும்
பிறர் அறியாமல் திரிகிறதாம்

 காலமென்ற தேரே, ஓடிடாமல் நில்லு!

தறியில் துணியை நெய்து முடித்தபின் அதைத் துவைத்து ஒரு கல்லின்மேல் காயவைப்பார்கள். நன்றாகக் காய்ந்தபின் கல்லின் மேற்பரப்புக்கு ஏற்பத் துணி சீரற்ற வடிவத்தில் மேடுபள்ளமாக இருக்கும். எனவே, கினுதா என்றொரு கருவியைப் பயன்படுத்தி அதைத் தட்டித்தட்டிச் சீராக்குவார்கள். பின்னர் அத்துணி துவைத்த மற்றும் காயவைத்த சுவடே தெரியாமல் அப்போது நெய்த புதுத்துணிபோல் காட்சியளிக்கும்

கு. அழகர்சாமி கவிதைகள்

அந்த
மாமலையை
நெருங்க நெருங்க
என் அகத்துள்
ஆழ்ந்து ஆழ்ந்து
ஓங்கும்
மெளனத்தை மறைத்தது
மால்நிற மாமலை.

உதிர்வெனும் தாழாப்பொழுது

இடையில் கிடந்த
மோதிரத்தை
காக்கை கொத்திச்சென்றதை
நாங்கள்
எச்சலனமற்றும்
வேடிக்கை
பார்த்துக் கொண்டிருந்தோம்.

சூரியக்கிண்ணம்

கைகளில் வளைந்தோடும்
என் விதியின் விரிசலில் –
சூரியக்கதிரின் கசிவு…!
அவ்வகையில் என் வீதியெல்லாம்
பிரகாசித்துக் கிடக்க,
தினமொருமுறை என்னை நானே
என் இருளுக்கு இரையாக்கி
இறந்திருக்கிறேன்…!!

ரேகா வசந்த் கவிதைகள்

தினசரி
தண்ணீர் பாய்ச்சினேன்
தவறாமல் !
ஆக்ரமித்து
வைத்தேன்
உரங்களால் !
ஆனாலும்
ஏன் இந்தக்
ரோஜாக்கன்று
வளரவே மாட்டேன் என்கிறது?

உடைகளும் சுமையடி தனிமையிலே!

ஓஷிமா மீனவர்களின் உடையை உவமையாகக் கூறுவது ஒருவகை என்றால் கடலுக்குள் எப்போதும் ஈரமாகவே இருக்கும் பாறையை உவமையாகக் கூறுவது தொடர்ச்சியாக நிற்காமல் கண்ணீர் பெருகிக்கொண்டிருக்கிறது என்று பொருள்தரும்படி இயற்றுவது அடுத்தவகை.

விஜி ராஜ்குமார் கவிதைகள்

பாதை நீண்டு நீண்டு
தொலைக்காட்சி பெட்டியில்
சென்று சேர்கிறது.
ஒருத்தி வண்ண மணிகளின் பாதை ஒன்றை கோர்த்து கோர்த்து
சேர்க்கிறாள்.
வடாம் துணியை விரித்து விரித்து வெயிலின் பாதையில் ஏறி போகிறாள்
ஒரு கிழவி.

இரு கவிதைகள் – ப்ரீத்தி வசந்த்

ஆசையாய் இன்னொன்று கேட்ட
குழந்தைக்கு பூசை கொடுக்க
வந்த தோசையம்மாவிடமிருந்து
ஜீப்ராவில் ஏறி
காட்டுப்பூக்கள் வழி
அவசரகதியில் ஹாலுக்கு
தப்பிச்சென்ற குழந்தை,
இந்தமுறை
ஒரு பெரியக்கோடு போட்டு
குச்சிக்குச்சியாய் கைக்கால்களிட்டு
தானே அம்மாவாகி
“அம்மாவுக்கு நாலு .. இப்போ என்ன பண்ணுவீங்க”

ரகசியமானது காதல்

இப்பாடலுக்கு மறுமொழியாக இப்புலவர் இயற்றியது “ஓஷிமா மீனவர்களின் உடையைவிட அதிகமாக நனையும் அளவுக்கு என் கண்ணீர் வற்றாமல் இருக்கிறது” என்பது. இப்பாடலின் இறுதி அடியில் கைப்பகுதியின் வண்ணம் மாறியிருக்கிறது என்று வருகிறது.

அருண் பாண்டியன் கவிதைகள்

எந்தத் திரைப்படங்களிலும்
காட்டப்படாத வன்முறைகள்
எந்நேரம் வேண்டுமானாலும் நடக்கும்
அப்படித்தான் ஒருநாள்
அப்பமொன்றை சப்பிக்கரைக்கும் நிமித்தத்தில் ஏதேதோ நிகழ்ந்து விட்டிருந்தது
ஒற்றைப் பள்ளிச் சிறுவனை
பத்து வாலிபர்கள் கூடித் தாக்கும் பேரவலம் அது

இரு கவிதைகள்

நினைவின் தடங்கள்
மெல்ல மெல்ல அழிய
முன்பு போல
சலசலப்பில்லை
சமுத்திரத்தில்…
இப்போதெல்லாம்
சடலத்தை துக்கமின்றி
அணுகும் மருத்துவனைப்
போல் சலனமின்றி
கடக்க முடிகிறது

அருண்பாண்டியன் கவிதைகள்

அச்சத்தில் ஆடை நனைந்து உலராமல் ஊமைவாடையடித்தால்
களைந்து நிர்வாணமாகிவிடுவோம் மரங்களோடு மரங்களாக
ஈச்சம் முட்களைப்போல்
உன் ரோமங்கள்
நீட்டிக்கொள்ளும் அளவிற்கு
என் உதடுகளை உன் கழுத்தில் பதிக்கிறேன்
அன்னம் பூவின் அடிக்கிழங்கைப்போல்
வெளுத்த உன் தேகம்

தூவானமும் வெண்வானமும்

நாணல் தண்டின் ஒரு கணுவின் வெட்டப்பட்ட சிறு பகுதியும் துளிர்த்து வளர்ந்து பரிசலுக்கு நீர்மட்டம் காட்டும் கோலைச் சூழ்ந்து மறைப்பதுபோல் ஓர் இரவு மட்டும் நிகழ்ந்த நமது சந்திப்பு குறுகியதாக இருப்பினும் அந்நினைவுகள் வளர்ந்து வாழ்வில் குறுக்கிடுகின்றன.

வருணன் கவிதைகள்

யாவரும் உறங்குவதைப் பார்த்துப் பார்த்து
சலித்துப் போயிருந்தது அவ்வீட்டின் இரவுக்கு
மழலையின் சிணுங்கலும் அழுகையும்
கேட்கத் துவங்கிய நாள்

உடைதல்

இருட்டு தைரியத்தில்
நெருங்கினோம்
மின்னலுக்கு திடுக்கிட்டு விலகினோம்
கை நழுவிய தேநீர் கோப்பை
டிட்டினாங்…கென்று
விழுந்து உடைகிறது
இனி
கோப்பை உதவாது
தேநீரும் உதவாது

தனிமைக்குப் பிரபஞ்சம் என்றும் பொருள்

குடுவைக்கு வெளியே நீந்துபவை
கடல் நட்சத்திரங்களெனக்
காலத்துக்கும் நம்பிடும்
தொட்டி மீன்
கடலையே பார்த்ததில்லை

உள்ளத்தில் உள்ளேனா?

வானத்தில் வட்டநிலா என்னை அழச்சொல்கிறது. இல்லையில்லை. அழவைப்பது என் உள்ளத்தின் நினைவுகளே. கண்ணீர் பெருக்கெடுப்பதற்கு நிலவைக் குறை கூறுவானேன்?

கோசின்ரா கவிதை

குடித்த பின்புதான்
அவருக்கு அதிகதிகமான தாகம் எடுக்கிறது
காதலியின் தந்தை கேட்கிறார்
தம்பி நீங்கள் யாரையாவது காதலிக்கிறீர்களா
கடவுள் விழுங்கிய படி பதில் சொன்னார்
இல்லையென்றார்

கு.அழகர்சாமி கவிதைகள்

யார் முந்தி
யார் பிந்தி
என்றெல்லாம் இல்லை.
பறவைகள் தமக்குள்
போட்டி போட்டுக் கொண்டா
பறக்கின்றன?

தற்செயலாய் வாழ்க்கை

இரவின் அமைதியில் எங்கோ ஒலிக்கும் ராஜா
எதிர் ஜன்னலில் கையசைக்கும் யாரோ ஓர் குழந்தை
குதித்துக் குதித்து புவியீர்ப்பு விசையை சோதித்து பார்க்கும் குழந்தைகள்
கோடையின் வருகையை அறிவிக்கும் மரத்தில் சில மாம்பூக்கள்
மதிய வேளையில் அசரீரியாய் காக்கைகள்

துயரறுத்தலே துயரமோ?

வாழ்வின் துயரங்களிலிருந்து விலகியிருக்க விரும்பினாலும் மலைக்குடிலுக்குத் தொலைவில் கேட்கிறது அடிபட்ட மானின் துயரக்குரல்.

மைக்குழற் செறிவன்ன காதல்

மே மாதங்களில் ஹொதொதொகிசு என்றொரு குயிலினம் ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலிருந்து ஜப்பானுக்கு வலசை வரும். மே மாதம் என்பது ஜப்பானில் வசந்தகாலம் முடிந்து கோடை தொடங்குவதற்குச் சற்று முன்னர் என்பதால் இக்குயிலின் முதல் கூவல் கோடையின் வரவை அறிவிப்பதற்கானது என்று ஜப்பானியர்கள் காத்திருப்பார்கள். இப்படித்தான் இப்பாடலாசிரியரும் அவ்வாண்டின் முதல் கூவலைக் கேட்டுக் குயிலைக் காண ஆவலோடு ஓடிவந்து பார்த்திருக்கிறார்.

ஊடக வெளிச்சம்

அட்சய திருதியை தங்கம் விற்பனை
25,000 கிலோ அறிவீரா?
இன்னும் இன்னும் இதுபோல் செய்திகள்
தன்மானத் தமிழன் அறிவு பெருக்கும்
ஆற்றல் வளர்க்கும் ஆன்ம ஒளிதரும்

நெரிசல்

ஒரு நொடிக்குள்
யுகத்தை அடைத்து வைத்து-
ஒன்றுமில்லையில்
முடிவிலியை
அடைத்து வைத்து-
புறப்படும் புள்ளியில்
இலக்கினை
அடைத்து வைத்து-
ஒரே
நெரிசல்!

குமரேசன் கிருஷ்ணன் கவிதைகள்

வாடாதே கொடியே
வாடாதேயெனத்
தினமுரைத்தேன்
சில நாட்களில்
வீட்டிற்கு
எங்கள் பாப்பா வந்தாள்
அவள் அருகில் சென்று
என் விரல் கொடுத்தேன்

அருண் பாண்டியன் கவிதைகள்

முந்தி பிறந்தவள்
முதுநூல் தரித்தவள்
முள் மரத்தில் கூர் பிடுங்கி
மூக்கு குத்திக் கொண்டவள்
காய்ந்த களிமண் வெடிப்புகளை அள்ளி
முகத்தில் பூசிய கரிசல் நிலத்தின் சொந்தக்காரி
கற்களால் பாதம் தைத்து
பூண்டுச் செடிகளால்
பாவாடை புனைந்தவள்

கலியபெருமாள் கலித்தேவன் கவிதைகள்

அலைக்கழிக்கப்பட்டவனின் துயரம்
மருந்தடைக்கப்பட்ட வெடிகுண்டென
கையில்.
வீசி எறியுமுன்னே அதியற்புத புன்னகையோடு மனக் காட்சி
இன்னாரு வாய்ப்பு

அரா கவிதைகள் 

வலப்பக்க தோள்பட்டை மச்சம்
இடப்பக்க தோள்பட்டை மச்சத்தோடு மடங்கி
உறவாடும் முன்பே
சதையின் புள்ளிகள் பிய்த்தெறியப்பட்டன
தரைத்தளத்திற்கும் கீழிறங்கி
அடக்கமாகச் செல்லும் பெட்டி
தன் விளக்குகளையெல்லாம்
வண்ணம் பிடுங்கி ஆட்டத்துடன் ஒளிர்கிறது

வேணு வேட்ராயன் கவிதை

உயிர்களில் உன்னதம்
மலர் என்றேன்.
உனைநான்
சொல்லாமல் நீங்கினேன்.

நாஞ்சில் நாடன் கவிதைகள்

பத்தொன்பதாவது பிரபஞ்ச மூத்தமொழிச் சம்மேளனம்
செவ்வாய்க் கோளில் நடத்தத் திட்டம்
அரசியல்வாதிகள் அவரடியார்கள்
தம்மின அறிஞர் துதிப் பேராசிரியர்
கூத்தாட்டு மன்றம் பிரசங்கியர்
பாதுகை சுமக்கும் பாவலர் பங்கேற்பர்
கலந்து கொண்டு கட்டுரை படிப்போர்
ஆய்வுச் சுருக்கம் அறுபத்தேழு சொற்களில்
அனுப்பி வைக்கவும்

இடம்பெயரும் புள்ளினங்காள்!

புதினத்தின் நாயகன் கென்ஜி, சுமா என்னும் ஊரில் தங்கியிருக்கும்போது கடற்பறவைகள் இரைதேடிக் கிளம்பும் ஒலியைக்கேட்டுத் துயிலெழுவார். இப்பாடலும் புதினமும் சமகாலத்தவை. 12ம் நூற்றாண்டின் முற்பகுதியில் இயற்றப்பட்ட பல இலக்கியங்களில் கென்ஜியின் கதையில் வரும் நிகழ்வுகள் தொடர்புபடுத்தப்பட்டு இருக்கின்றன

நா. சந்திரசேகரன் கவிதை

அலைகளின் இடைவெளியில்
விரைந்து வளைபுகும் சிறுநண்டுகள்.
அப்போதுதான் உணர்ந்தேன்
அலை கொணரும் வரிகள்
வேறு வேறென!
ஆமென்று ஆர்ப்பரித்து
ஆடை நனைத்துச் சென்றது ஓரலை

துள்ளிவரும் வெள்ளலையே!

நதியின் ஓட்டத்தில் எதிர்ப்படும் பாறை நதியின் பாதையை இரண்டாகப் பிரித்தாலும் பாறையைத் தாண்டியபின் ஒன்றாகக் கூடுவதைப்போல் இப்போது பிரிவை எதிர்கொள்ளும் நாமும் பின்னர் ஒன்று சேர்வோம்.

சாய்ந்து அழ ஒரு தோள்

குழந்தைப் பருவத்தில் இருந்த
என் அன்னையை இன்னொரு உலகில் சந்தித்தேன்.
கை கோர்த்து கடற்கரையில் நடந்தோம்.
உலகில் அவள் நேசித்த
அத்தனை விசயங்களையும் ஆர்வத்துடன் பேசினாள்.
ஆயிரம் அங்கதங்கள்

ச. சக்தி அழகு – கவிதைகள்

அரசமர நிழல்
தனிமையில்
விளையாடிக் கொண்டிருக்கும்
குழந்தையின் நிழல்
ஆசைகளற்ற ஒரு புத்தனின் சாயல்

ஆர். வத்ஸலா கவிதைகள்

என்ன சாக்கு சொல்வது
எண்ணெய்க் குப்பியுடன்
எனக்கு அம்மாவாகி
எதிரில் நிற்கும்
எனது ஐம்பது வயது ‌மகளிடம்

தமிழ்மணி கவிதைகள்

பட்டினியான நாட்களை அடிக்கடி
கடந்து விரைபவன் அவன்
அன்றைக்குத்தான் புதிதாக பசியை உணர்ந்த ஒருவர் கைகளை நீட்டினார்
தற்போதைக்கு பசியாற்றும் தேநீரை
வாங்கிக்கொண்டு வந்தவனைப் பார்த்து
உன்னைப் போன்ற நல்லவர்கள் இருப்பதால் தான் தம்பி
இந்த உலகம்
அழகாய் இருக்கிறது என்றார்

சுஜய் ரகு கவிதைகள்

கதவைத் திறந்த போது
அரூபம் நின்று
புரட்டுவதைப்போல
திறந்தும் மூடியுமிருந்தது
மேசை மீதிருந்த
புத்தகத் தாள்கள்

பாரிய காதல்

மகிழ்ந்த பொழுதின்
நினைவுகளின்
சாரம் தின்று
உடற்க்கூட்டில்
உயிரென ஒன்று
வாழ்ந்து.
ஒவ்வொரு முறை
வீடு மாற்றும்போதும்
ஒடித்து
உருவாக்கிய
ஒற்றைச்
செம்பருத்தி செடி
உருமாற்றிவிட்டது

சோழன் கவிதைகள்

காரிகை
வேழாழி மணலில்
தன் பாதங்களை எடுத்து
தொட்டு தொட்டு
அலைகளிடம் சென்றாள்
கருமை நிறம் கொண்ட
மணிகள் நனைந்தன

கேட்டதும் கிடைத்ததும்

இப்பாடலின் ஆசிரியர் முன்பு தனது காதலியின் வெறுப்பைக் குறைக்கப் போதிசத்துவரிடம் வேண்டியிருக்கிறார். ஆனால் அது குறையாமல் வளர்ந்துகொண்டே வருவதைக்கண்டு அடுத்தமுறை இக்கோயிலுக்கு வந்தபோது இப்பாடலை இயற்றினார். வளர்ந்துகொண்டே வரும் காதலியின் கோபத்தை அதிகரித்துவரும் மலைக்காற்றுடன் ஒப்பிட்டுள்ளார்.