அசோகமித்தி​ரனின் “கிணறு” சிறுகதையை முன்வைத்து

தாகூரின் “பசித்த கற்கள்” அசோகமித்திரனின் “கிணறு” சிறுகதையிலிருந்து ஒரு விதத்தில் வித்தியாசமானது.யதார்த்தத்தில் அழுத்தமாக காலூன்றியிருக்கும் அசோகமித்திரனின் மற்ற கதைகள் போன்றே“கிணறும்” யதார்த்தத்தில் நிலை கொண்டது. கதை உள்ளே கதை என்ற உத்தியில் அமைந்திருக்கும்“பசித்த கற்கள்” மாற்று மெய்ம்மை பாவனையுடன் கற்பனாவாதத்தின் கொண்டாட்டமாக எழுதப்பட்டிருக்கும்

கூறுகிறேன்… முடிந்தால் கேளுங்கள் – 4

மணியனின் பயணக் கட்டுரைகளையோ, வேறு எழுத்துகளையோ நான் படித்ததில்லை. ஆனால் அவர் ‘எங்கே என்ன சாப்பிடக் கிடைக்கும்’ என்று எழுதியிருந்தால் அதில் என்ன தவறு என்பது எனக்கு உண்மையாகவே தெரியவில்லை. பலர் பயணக் கட்டுரை எழுதுபவர்களை ‘நல்ல வேளை, சாப்பாடு பற்றி எழுதிவிடுவீர்களோ’ என்று பயந்தேன் என்று புகழ்வதை அடிக்கடி கண்டிருக்கிறேன். சாப்பாடு என்ன மேலை நாட்டினரைப் போல நமக்கு கைகளால் தீண்டத் தகாததா? அதிலும் இட்லி.

கடல் தின்ற காலம்…

நேரம் ஆக ஆக, கடல் செய்த காரியத்தின் வீரியம் தெரியத் தெரிய ஒரு பெருந்துக்கத்தின் கனம் செய்திகளின் வழியே உள்ளேறத் துவங்கியது. தம்மால் இயன்ற உதவியை செய்யும் பொருட்டு நூற்றுக்கணக்கானோர் பல்வேறு நகரங்களில் இருந்து வடதமிழக கடல் பகுதிகள் நோக்கித் திரள, அத்தகைய குழுக்கள் ஒன்றில் இணையும் பொருட்டு நான் கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்த பொழுது…

ஓர் ஆல விருக்ஷம் பரப்பிய விழுதுகள்

1913-ம் ஆண்டு தமிழ் நாட்டின் ஒரு பிராமணக் குடும்பத்தில் ஒன்பது பேரில் ஒருவராகப் பிறந்த ஒரு பெண்ணின் வாழ்க்கை எப்படி இருந்திருக்கும்? ஆனால், இப்போது அவரைப் பற்றி எண்ணும் போது, தெரிந்த ஒரு சில தகவல்களோடு தெரியாதவற்றையும் சேர்த்துப் பார்க்கும் போது தெரிகிறது, அவர் தன்னை மீறி, தன் சூழலை மீறி, தன் காலத்திய வாழ்க்கைக் கட்டுப்பாடுகளோடு வாழ்ந்தே அவற்றை மீறி தன்னை விகசித்துக்கொண்டு தன் இரண்டு தலைமுறை சந்ததிகளுக்கும் வாழ்ந்து காட்டிய ஆதர்சமாக இருந்தவர்.

சங்கீத் சாம்ராட் மன்னா டே

பர்ஸாத் கி ராத் என்ற இசைக்கு முக்கியத்துவம் கொடுத்து 1960-ல் வெளிவந்த படத்தின் இசையமைப்பாளர் ரோஷன் பாடல்கள்- சாஹிர். பரத்பூஷண் – மதுபாலா ஜோடி. அதில் வரும் ஒரு கவாலிப் பாடல் mother of all qawalis  என்ற மகத்துவம் பெற்றது. ‘நா தோ காரவான் கி தலாஷ் ஹை’ தொடர்ந்து ‘ஹே இஷ்க் இஷ்க்’ என்று காதலின் பெருமையை உயர்த்தும் பாடலைப் பாடியவர்கள் ரஃபி, மன்னா டே, ஆஷா போன்ஸ்லே, பாடிஷ் (batish – qawali specialist) சுதா மல்ஹோத்ரா குழுவினர்.கண்டிப்பாக பாடலைக் கேட்டுப் பாருங்கள்.

ஸச்சின் எனும் ஆச்சரியம்

பித்துப் பிடித்த ரசிகர்கள் உலோகத் தடுப்புக் கதவுகளை உலுக்குவதை, இங்கிலாந்தின் MCC கிரிக்கெட்டின் கிளப் உறுப்பினர்களுக்கான (egg and bacon )டை கட்டிய எண்பது வயதுக்காரர்கள் பயபக்தியுடன் எழுந்து நிற்பதை , பிள்ளைகளை தலைக்குமேல் உயர்த்திக் காட்டும் தந்தைகளை, பெண்கள் கிறீச்சிடுவதை, ராஸ்தாஃபாரிய தாடி வைத்த சுருங்கிய வயதான மனிதர்கள் அவரது ஒவ்வொரு அசைவையும் கவனிப்பதை, நாட்டின் அதிபர்கள் கைதட்டி வரவேற்பதை. கிரிக்கெட்டின் பிரபலங்கள் ஒரு விருந்தை எதிர்நோக்கி இருப்பதைக் காண்பீர்கள். அந்தக் கணத்தின் பாவத்தை ஒரு கவியைத் தவிர யாரால் கைப்பற்ற இயலும்?…’

பயின்ற பாடங்கள் – சுந்தரராமன், சித்தர்

சரியான தடம் புரியாமல் தத்தளித்து வந்த சூழ்நிலையில் அதிர்ஷ்டவசமாக ஒரு நாள் சன் டி.வி. “வணக்கம் தமிழகம்” நிகழ்ச்சியில் எனது பேட்டியைக் கண்டு கவனமாகக் கேட்டார். இயற்கை விவசாயத்தின் தேவையையும் எப்படி கொண்டு செல்ல வேண்டுமென்றும் சற்று விவரமாகப் பேசினேன். ஒரு மணி நேர நிகழ்ச்சி என்பதால் நிறைய பேசும் வாய்ப்பு இருந்தது. பேட்டி முடிந்த மறுகணமே என்னைத் தேடி வந்து சந்திக்க ஆர்வமாக இருந்தார்.

ஆறு பேர் ருசிக்கிறார்கள் – ஆடு

விதூஷகன் : தமிழில் ஆடு என்றால் ஆடுவாயா? ஆட்டை வளர்த்து வெட்டுவாயா? ஆடு, புலி, ஆட்டம் வியூகம் வகுப்பாயா? ஆட்டை போடுவாயா?

கூறுகிறேன்…. முடிந்தால் கேளுங்கள் – 2

எது என்னைத் தீவிர இலக்கியத்திடம் இட்டுச் சென்றது? உயர் சங்கீதம் கேட்க தனியான செவி வேண்டும். இது வெறும் பயிற்சியால் மட்டும் வருவதில்லை. எனக்கு எல்லா ராகமும் சிந்து பைரவியாகத் தெரிகிறது என்றால் என் செவிமனம் அவ்வளவுதான் என்று பொருள். ஓவியத்துக்கு தனிக் கண்கள் வேண்டும். அதே போல் ஓர் உயர் எழுத்தை எழுத்தாளன் எழுத அவனுக்கு எத்தகைய உளம் வேண்டுமோ அதற்கு சற்றும் குறையாத தீவிரமும், வளமும் உள்ள உளம் வாசகனுக்கும் வேண்டும். அது இருந்தால் சென்னையோ, நாகர்கோவிலோ, கம்மவான் பேட்டையோ, ஆரணியோ, டில்லியோ, சிங்கப்பூரோ எங்கிருந்தும் வாசகன் தான் தேடுவதைக் கண்டடைவான். வாசகன் தயாரானதும், அவன் எங்கிருந்தாலும் எழுத்தாளன் தென்படுவான்.

நாக்கு

வள்ளிநாயகம் சொல்வது திருநவேலிக்கும் மட்டும் பொருந்தாதுதான். சுவையான உணவைத் தேடி அலைகிற மனதுடைய மனிதர்கள் எல்லா ஊர்களிலும்தான் இருக்கிறார்கள். வீட்டில் என்னதான் ருசியாகச் சமைத்தாலும் வெளியிடங்களில் சாப்பிட மனம் கிடந்து அலைந்து கொண்டேதான் இருக்கிறது.

“விசேஷ வீட்டுச் சாப்பாடு சாப்பிட்டு எவ்வளவு நாளாச்சுங்கெ! ஆடிமாசத்துல மூர்த்தம்தான் வைக்க மாட்டானுவொ. ஒரு சடங்கு வீடு வரப்பிடாதாய்யா!”

சென்னையில் நடக்கும் விசேஷ வீடுகளில் போடப்படும் சாப்பாட்டைப் பற்றி ஒன்றும் சொல்வதற்கில்லை. இப்போது உள்ள நடைமுறையில் போடப்படும் சாப்பாட்டில் வகைகள் என்னவோ விதவிதமாகத்தான் உள்ளன. கைகளில் பிளாஸ்டிக் க்ளவுஸும், தலைக்கு குளியல் கவரும் போட்டு, சீருடையில் கேட்டரிங் ஊழியர்கள் பரிமாறும் சாப்பாட்டில் சுவை இல்லாமலில்லை. ஆனாலும் திருநவேலி விசேஷ வீடுகளில் கைநனைத்த எந்த ஒரு மனிதனையும் பெருநகர நவீனப் பந்திகள் திருப்திப்படுத்தி விடமுடியாது.

ஸியாட்டிலில் சில நாட்கள்

ஸியாட்டில் இருக்கும் வாஷிங்டன் மாநிலம் 4000 வருடங்களுக்கு முன்பே அமெரிக்காவின் பழங்குடி இந்தியர்கள் வாழ்ந்த இடம். அதனால் இன்னும் பல ஊர்களின் பெயர்கள். ஸமாமிஷ், இஸ்ஸாகுவா, ஏனும் க்ளா, ஸ்னோக்வால்மீ, புய்யால்லுப், ட்யூலலிப் என்பதுபோல் அவர்களின் மொழியிலேயே இருக்கும். ஸ்னோக்வால்மீ என்ற இடத்தில் நீர்வீழ்ச்சியைப் பார்த்துவிட்டுத் திரும்புகையில் ஒரு ஹோட்டலுக்குள். போனால் நம்ம தமிழ் மாமாவும் மாமியும் அவியல், தோசை, தயிர்சாதம் என்று மெனு கொடுக்கிறார்கள்.

ஆறு பேர் ருசிக்கிறார்கள் – காஃபி

காப்பி என்றாலே என் நினைவில் வருவது சிறுவயதில் என் பாட்டி வீட்டில் பார்த்ததுதான். பீபெரிக்கொட்டையை வாங்கி வைத்துக்கொண்டு, வாரம் ஒரு முறை காப்பிக்கொட்டையை வறுத்து ஒரு காற்றுப்புகாத டப்பாவில் நிரப்பி வைத்துக்கொள்வாள். மதியம் சரியாய் 2 30 மணிக்கு அதில் ஒரு கையளவு எடுத்து ஒரு காப்பிக்கொட்டை அறைக்கும் யந்திரத்தில் போட்டுப் சக்கரம் போன்ற ஒரு கைப்பிடியை சுற்றி அதைப் பொடி செய்வாள். நாங்கள் அதைச் செய்யப் போட்டி போடுவோம்.

மாடியில் ஒரு உணவுத் தோட்டம்

அடுத்த கட்டமாக பூந்தொட்டிகளுடன் சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிர் எழுப்பும் யோசனை வந்தது. சிமெண்டு சாக்கு உயரத்தைக் குறைத்து – அதாவது, உட்புறமாக மடித்து பாதி சாக்காக மாற்றி, உள்ளே நிறைய காய்ந்த சருகுகளை அடைத்துவிட்டு அடிப்பாகத்தைச் சற்று கிழித்துவிட்டு போதிய மண் நிரப்பி இரண்டு செங்கல் வைத்து அதன்மீது வைத்தேன். நீர் வடியும். தளத்திற்கும் பாதிப்பு வராது. அவ்வாறு சிமெண்டு சாக்கில் மண் நிரப்பி பயிரிடும்போது மரப்பயிர்களைத் தேர்ந்தெடுத்தேன்.

ஷேமஸ் ஹீனி (Seamus Heaney:1939-2013) – மண் கரைசலின் வாசம்

அயர்லாந்து நாட்டுக் கவிஞர் ஷேமஸ் ஹீனி தனது சிறுவயது அனுபவங்களைப் பற்றி சொல்லும்போது, ` இக்காலகட்டத்து நவீன உலகுக்கு என்னுடைய சிறு ஊரின் அனுபவங்கள் பழசானவை, தேவையற்றவை என நினைத்திருந்தேன். நான் எழுதத்தொடங்கியபோது சிற்றூர்களின் அனுபவ அறிவு கவிதை உலகுக்குள் நுழையத் தொடங்கிய காலம். டெட் ஹ்யூஸ், ராபர்ட் ஃப்ராஸ்ட் ஆகியோரின் கவிதைகளிலிருந்து இந்த நம்பிக்கையை நான் பெற்றிருந்தேன். அந்த அனுபவங்கள் அளவிடமுடியாத சொத்து என்பதை பின்னர் உணர்ந்தேன், ` என்கிறார்.

கனவுகள் மீதூரும் பாதை

நாடகம் நடந்துகொண்டிருக்க என் மனம் மீண்டும் மீண்டும் அரங்கின் வடிவை வியந்தபடி இருந்தது. சுற்றிலும் பிரம்மாண்ட சுவர்கள் கிடையாது, தடுப்புகளும், விளம்பர பட்டிகளும், ஒலிப்பெருக்கிகளும் இல்லை. மலை உச்சியிலிருந்து கடலைப் பார்ப்பது போல நாங்கள் எல்லாரும் உட்கார்ந்திருக்கிறோம். மலையைச் சற்றே கவிழ்த்தால் போதும் நாங்கள் உருண்டு கடலில் கலந்துவிடுவோம். அப்படி வழித்தெடுக்கப்பட்ட இடத்தில் அரைவட்ட வடிவில் ஒரு அரங்கை அமைக்க ரொவீனாவுக்கு எப்படி எண்ணம் வந்தது?

கணக்கும் க.நா.சுவும்: ஓர் இலக்கியச் சந்திப்பு

அந்த காலத்தில் ஏதோ காரணத்தினால், கணிதத்தை விருப்பப் பாடமாக எடுப்பவர்கள் மிகவும் புத்திசாலிகள் என்ற தவறான எண்ணம் எனக்கு இருந்தது. கணிதம் நன்றாக வந்தால்தான் பெரிய புத்திசாலி என்று நினைத்துக் கொண்டிருந்தேன். அது எவ்வளவு முட்டாள்தனமான எண்ணம் என்பதை பிறகு தான் தெரிந்து கொண்டேன்.

பல்லுயிர்ப் பெருக்கம் (நிலைக்கும் வேளாண்மையின் அறிமுகம்)

மனதிற்கு நிறைவு தரும் பணி என்றாலும் இதன் முக்கியத்துவம் உரிய மதிப்பைப் பெறவில்லை. தமிழ்நாட்டில் உள்ள விளைபொருள் அங்காடிகளுக்குச் சென்று விலைவாசி நிலவரம், வரத்து, வழங்கல் போன்ற புள்ளிவிவரங்களுடன் அறிக்கை வழங்கி பயிர் நிலவரம் மற்றும் உற்பத்தி மதிப்பீடு செய்வதுதான் பணி. அலுப்பு சலிப்பு இல்லாமல் 33 ஆண்டுகள் ஒரே மாதிரியான வேலையிலிருந்து மாறும் திருப்பமாக அவ்வப்போது எழுதும் பணி தோல்விகளுக்கு மருந்தாக அமைந்தது.

ஸ்ரீரங்கம் களை

பிரதானக் கூடத்தின் கூரையில், எடுத்துக்கட்டி எனப்படும், நான்கு சுவர்களிலும் பெரிய சாளரங்களுடனான சதுரமான சிறு கோபுர வடிவம் கொண்ட வீடுகள் ஸ்ரீரங்கம் பிரதான சித்திரை, உத்திரை வீதிகளில் இயல்பு. எடுத்துக்கட்டி வழியே பக்கவாட்டில் சூரிய ஒளி வீட்டினுள் மிதமாய் விழுந்து ஒளியூட்டும். வாசல் ஒரு வீதியிலும், கொல்லை பின் வீதியிலும் முடியும் இவ்வகை வீடுகள் இயற்கையான காற்றுப்போக்கும் குளிர்ந்த நிலையிலும் இருப்பவை. வசித்துப்பார்த்தவர்களுக்குத் தெரியும் அருமை.

தீக்குள் விரலை வைத்தால்

“பூவே செம்பூவே”…வயலினில் வழிந்த துயரத்தின் சாயல் கிடாரில் தேங்கி அதை கப்பாஸ் ஒற்றி எடுத்துக் கொண்டிருக்கும் முதல் சரணம் முடிகின்ற நேரம்…சட்டென்று அவர் எழுந்து தெருவின் குறுக்கே கடந்து எதிர்புறத்தை அடைந்தார். ஓவியம் இருந்த இடத்தில், அதன் கோடுகளை அவர் அறிந்த விதத்தில், விரல்களை நகர்த்தினார். கோடுகளின் பாதையில் விரல்கள். விரல்களின் போகும் பாதையெங்கும் நினைவின் பரல்கள் சிதறியிருக்கக் கூடும். அந்த சிதறல் நிகழ்ந்த நொடிகளைத்தான் இந்தப் பாடலின் ஒலியில் கடந்து கொண்டிருந்தாரோ அவர்? கோடுகளின் பாதையில் சென்ற விரல்கள் தாள‌ முடியாத நினைவின் வலியில் துடித்தனவோ?

தாத்தாவுக்குக் கடிதம்

மின்னஞ்சல், செல்பேசி, வீட்டுக்கு வீடு தொலைப்பேசி என்று எதுவும் இல்லாத அந்தக் காலத்தில் செகந்திராபாத்தில் இருக்கும் என் தாத்தாவுக்கு மாதம் ஒருமுறை ‘இன்லாண்ட்’ கடிதம் எழுதுவேன். இன்லாண்டில் நிறைய சௌகரியங்கள்; ஸ்டாம்ப் ஒட்ட வேண்டாம்; எழுத நிறைய இடம் இருக்கும்; முக்கியமாக தாத்தாவைத் தவிர வேறு யார் கையில் கிடைத்தாலும் போஸ்ட் கார்ட் மாதிரி பிரிக்காமலே படிக்க முடியாது.

காமசூத்திர ஓய்விடம்

நான் சொல்லப்போவது ஒரு உண்மைச் சம்பவம். வகுப்பு முடிந்து பல்கலையிலிருந்து அறைக்கு திரும்பிய ஒரு கோடை காலத்தின் மாலை ஒன்றில் என் அறையின் கதவின் முன் உறையுடன் கூடிய ஒரு இசை குறுவட்டு வைக்கப்பட்டிருந்தது. அதை முன்வைத்துத்தான் இந்த கட்டுரை. இதைப்பற்றி இவ்வளவு நீளமான கட்டுரை எழுதுவேன் என்றும் அப்போது நான் சற்றும் எதிர்பார்த்திருக்கவில்லை.

பாடல்களில் அவர் தாலாட்டு

முதன்முதலாய் மிஸ்டர் சம்பத் படத்தில் இவர் பாடகராக அறிமுகமான சமயத்தில் இவர் குரலைக் கேட்ட ஜெமினி அதிபர் எஸ் எஸ் வாசன் அப்போது ஜெமினியின் இசைத்துறையின் தலைவராய் இருந்த ஏமனி சங்கர சாஸ்திரியிடம் சொன்னாராம்.”நீங்கள் கூட்டி வந்திருக்கும் பையன் நன்றாக பாடுகிறார். இவர் வெறுமே ஹம்மிங் செய்தால்கூட போதும், கல்லும் கண்ணீர்விடும்’ என்று. இரவின் அமைதியில் ‘மனிதன் என்பவன் தெய்வமாகலாம்’ பாடலைக் கேட்கையில் தியானம் செய்தது போல் ஒரு அமைதி கிடைக்கும்.

ஒரு புதுவகை அறிவியல்

கணிதத்தின் இந்த 300 வருட பெரும் வெற்றியை கடவுள் கணக்கு வாத்தியாராகத்தான் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கொண்டாடினர். இப்போது காலம் மாறிவிட்டது. அவர் ஏன் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருக்கக்கூடாது?

விருந்தோம்பல்

பேராசிரியர் சாப்பிட்டு விட்டு வந்து, தாம்பூலம் தரிக்க ஏற்பாடு செய்தார். தான் எழுதிய புத்தகங்களை எடுத்து வந்து கையெழுத்திட்டு எங்களுக்குக் கொடுத்தார். எனக்குக் கொடுக்கும் போது மட்டும், அவரது முகத்தில் அப்படி ஒரு மகிழ்ச்சி. காரணம், ஏற்கனவே எனது ’தாயார் சன்னதி’ புத்தகத்தை அவருக்கு நான் கொடுத்திருந்தேன். பழிக்குப் பழி வாங்கிவிட்ட திருப்தி, பேராசிரியரின் முகத்தில் தெரிந்தது. ‘இனி நீங்க தப்பிக்க முடியாது’ என்றார். ‘ஏன்? அதான் குடுத்துட்டீங்களே! எப்படியும் வீட்டுக்கு எடுத்துட்டுப் போயிருவேன். நம்புங்க’ என்றேன். ‘அதெல்லாம் அவ்வளவு லேசுல தட்டிக்களிச்சுர முடியாது. ரெண்டு நாளைக்கு ஒருக்க ஃபோன் பண்ணி அந்தந்த புஸ்தகத்துல இருந்து கேள்வி கேப்பேன்’ என்றார்

திருநவேலியும், திருநெல்வேலியும்…

முன்பெல்லாம் தெரிந்த ‘திருநவேலி முகங்கள்’ ஒன்றிரண்டாவது கண்ணுக்குத் தென்படும். இப்போது சமீபகாலமாக அப்படி நடப்பதில்லை. அடுத்தடுத்த தலைமுறையினரின் முகங்கள் நான் அறியாத காரணமா, இல்லை எனக்குத் தெரிந்த, ஆனால் நான் பழகியேயிராத முந்தைய பழைய மனிதர்கள் இப்போதெல்லாம் பயணம் செய்வதில்லையா, அறியேன். திருநவேலி ரயில்வே ஸ்டேஷனில் போய் இறங்கியபோது, ரயிலுக்குள் இருந்த திருநவேலியைப் பார்க்க முடியவில்லை.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாதார நிகழ்வு – பகுதி 6

செல்லப்பா எழுத்துக்கு வகுத்துள்ள எல்லைக்கோட்டுக்குள் நான் எழுத ஆரம்பித்த எந்த கட்டுரையும், எல்லாக் கலைகளையும், இலக்கியத்தை பாதிக்கும் அறிவுத்துறைகளையும் உள்ளடக்கிய ஒரு பார்வை, எதையும் தனித்துப் பார்க்க இயலாது என்ற பார்வை, ஒன்றின் வறட்சியோ, வளமோ தனித்து எந்தத் துறையிலும் வரம்பு கட்டிக்கொண்டு இருப்பது சாத்தியமில்லை என்பது போன்ற அணுகுமுறை எல்லாமே எழுத்து பத்திரிகைக்கு அப்பாற்பட்டது. ஆனால் அதை செல்லப்பா வரவேற்றார்.

இசைபட வாழ்…

செந்தில் குமார் என்னிடம் பேசிய முதல் வரி, “நான் சொல்வதை மட்டும்தான் எழுதவேண்டும்.எனக்கு உதவுகிறேன் என்று நீங்களாக எதுவும் எழுதுவது எனக்கு பிடிக்காது”. எனக்கு அவரை உடனே பிடிக்கத் துவங்கியது. இவரின் ஒன்பது தேர்வுகளை இரண்டாண்டுகள் நான் எழுதினேன். தேர்வு முடிந்து, அந்த வேப்பமரம் நிறைந்த, வேப்பம்பழங்கள் இறைந்த பள்ளியின் சாலை வழியே நாங்கள் பசுமலை பேருந்து நிறுத்தம்வரை நடந்து வருவோம். சரியான இடங்களில், தேவைக்கு ஏற்றவாறு வளைந்து, மேடுபள்ளங்களில் சரியாக கால் வைக்கும் அவரின் புலன்களின் நுண்ணறிவு என்னை வியக்க வைக்கும். இவர், பெரும்பாலும் ஏதேனும் ஒரு பாடலை “ஹம்” செய்வார். அதில் பெரும்பான்மை இளையராஜாவுடையதாக இருக்கும்.

க.நா.சு.வும் சி.ஐ.ஏ.வும்

(க.நா.சு.)உலக இலக்கியவாதிகளை தமிழ்நாட்டில் உலவவிட்டவர். நாங்கள் அவருடைய உலக இலக்கிய வரிசை நூல்களைத் தேடித்தேடிப் போட்டிபோட்டுக் கொண்டு படித்தோம். (உபயம் – கோணங்கி). மிகப் பரந்த வாசிப்பும், மிகச் சிறந்த ரசனையும் கொண்ட, இலக்கியத்துக்காகவே வாழ்ந்து தீர்த்த க.நா.சு.வை இங்ஙனம் செய்யும்படி எது இயக்கியது? கடைசி காலம் வரை அவருடைய ஒரே துணையான அந்த டைப்ரைட்டர் அவரிடம் என்ன சொல்லியிருக்கும்? தன்னை விளம்பரப்படுத்தும் கலைநுட்பம் மலிந்த இன்றைய இலக்கிய உலகில் அவருடைய படைப்புகளின் மதிப்பீடு என்ன? காற்றில் அலையும் கேள்விகள்!

தேவதேவனுக்காக இளையராஜாவுடன்

கார் நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்துக்குள் நுழையும்போதே, பெரும் கூட்டம் வாசலில் காத்து நிற்பதைப் பார்க்க முடிந்தது. இளையராஜாவால் கீழே இறங்கவே முடியவில்லை. மொய்த்துக் கொண்டார்கள். ஒரே சத்தம். ஒரு சில அழுகையொலிகளும் கேட்டன. ஒருசில நொடிகளிலேயே கூட்டத்துக்குள் நான் தொலைந்துப் போக இருந்தேன். நல்ல வேளையாக முகம் தெரியாத அரங்கசாமியின் நண்பர்கள் வந்து என்னை மீட்டு அழைத்துச் சென்றனர்.

துயர்களில் இருந்து மீட்பு – மிஹாய் சீக்சென்ட்மிஹாயி

இது ஒரு செயலை முழு கவனத்துடன் வேறு சிந்தனைகளே இல்லாது செய்யும் போது உருவாகக் கூடிய ஒரு ஆனந்த நிலை. ஒவ்வொருவருமே இந்த நிலையை ஏதாவது ஒரு தருணத்தில் உணர்ந்திருப்போம். ஒரு வேலையில் மூழ்கி இருக்கும்போது நேரம் போவதே தெரியாமல் இருப்பது, மற்றும் அந்த வேலையை முடிக்கும்போது வரும் உற்சாகம் போன்றவை. கலைஞர்கள், ஓவியர்கள்,அறுவை சிகிச்சை நிபுணர்கள், மலையேறிகள்,விளையாட்டு வீரர்கள் போன்றவர்கள் இந்த நிலையை அதிகமும் அடைகின்றனர் என்கிறார் மிஹாய்.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத வாமனாவதாரம் – பகுதி 5

இந்த சூழல் மாற்றமெல்லாம் 12 ஆண்டுகள் விடாப்பிடியாக சில நூறு பிரதிகளுக்குள் சுருங்கி விட்ட ஒரு எளிமையிலும் எளிய முன்னுதாரணம் ஏதுமற்ற ஒரு பத்திரிகையின் விளைச்சல்கள். அது கொணர்ந்த மாற்றங்கள். இன்று மரபுக் கவிதை சென்ற இடம் தெரியவில்லை. இன்று மரபுக் கவிதையை கருணாநிதியும் மறந்தாயிற்று. வைரமுத்து, அப்துல் ரஹ்மான், கனிமொழி எல்லாருமே மறந்தாயிற்று.

எக்ஸிஸ்டென்சலிசமும் எமனின் அழைப்பும்

எழுத்தாளன் என்பவன் களவும் கற்று மறக்க வேண்டும். வாழ்வின் அத்தனை சூழ்நிலைகளையும் அனுபவித்து உணர வேண்டும் என்று ஆசைப்பட்டோம். பாரதி தொடங்கி ஜி.நாகராஜன் வரை எல்லா ஆளுமைகளின் வாழ்வனுபவங்களும் எங்களுக்கு பொறாமையூட்டின. அது மட்டுமல்ல அப்போது எதை எழுதினாலும் இது உங்கள் வாழ்க்கையில் நடந்திருக்கிறதா நீங்கள் அனுபவித்திருக்கிறீர்களா? என்றெல்லாம் கேள்விக்கணைகளை எதிர் கொள்ள வேண்டியதிருந்தது.

சச்சினுடன் வளர்ந்தோம்

ஸிட்னியில் டெண்டுல்கர் ப்ரெட் லீயை இரக்கமில்லாமல் வருத்திக்கொண்டிருக்கிறார். ஒரு மேலே பறக்கும் கவர் டிரைவ். பின் பந்து வீச்சாளரைத் தாண்டி புல்லட் போல் செல்லும் அடி. லீ ஒரு தெய்வீகமான புன்னகையை உதிர்க்கிறார். டெண்டுல்கர் அசைவில்லாமல் நிற்கிறார். ஜென் துறவி போல, கடந்ததும் வருவதும் பற்றிய சிந்தனையற்று, அந்தக் கணத்தில் அமிழ்ந்து போய்.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 4

ராஜராஜ சோழன் விருது ஒரு லக்ஷமோ என்னவோ பெறுமான விருது அதை 20 பேருக்கு ஆளுக்கு ஐயாயிரமாக சமமாக பங்கிட்டுக் கொடுப்பது என்று தஞ்சை பல்கலைக்கழக விருது வழங்குவோர் தீர்மானித்துள்ளது கேட்ட செல்லப்பா, “இதென்ன புது வழக்கம். யாருக்காவது ஒருத்தருக்குக் கொடுங்கள். இல்லையெனில் எனக்கு வேண்டாம் இந்த பரிசு” என்று உதறியவர்.

2012 டிசெம்பர் சங்கீத விழா: ஒரு நூற்றாண்டு நினைவு விழா அனுபவம்

மறைந்த விழா நாயகரின் சிறப்பு குணம் ஒன்று உண்டு. உடன்வாசிப்பவர்களை எப்போதும் உற்சாகப்படுத்துபவர் என்பதை விழாவில் பேசியவர் குறிப்பிட்டுச் சொன்னதை முற்பகுதியில் விவரித்தோம். நம் பாடகரும் அதற்கு பேர் போனவர்தான். சமயத்தில் பாடுவது பத்து நிமிஷம் உற்சாகப்படுத்துவது கால் மணி நேரம் என்று கூட அவர் கச்சேரிகளில் நடந்துவிடுவதுண்டு. நேற்றைக்குப் பாவம் உடன் வாசித்தவருக்கு அவ்வளவு அதிர்ஷ்டம் இல்லை. தன்னிச்சையாய் வராத பாராட்டு சமயத்தில் ஃபுல்டாஸான யார்க்கராகிவிடுவதுண்டு. பாடகர் பாடிய ஸ்வரத்தை உடனே கிரகித்துக் கொள்ள முடியாமல் திணறி எடுப்பை குத்துமதிப்பாய் அணுகி சற்றே தப்பி சாஹித்யத்தை அவர் எடுக்கும் போது துல்லியமாய் எழுந்தது பாடகரின் ‘பலே’.

சி.சு.செல்லப்பா – தமிழகம் உணராத ஒரு வாமனாவதார நிகழ்வு – பகுதி 3

செல்லப்பாவுக்கு எழுத்து தன் மணிக்கொடி சகாக்களால் எல்லாம் கைவிடப்பட்ட பிறகு அவருக்கு ஆதரவாகவும், தனக்கு உத்வேகம் தருபவராகவும் பார்த்தது பிச்சமூர்த்தியைத் தான். பிச்சமூர்த்தியின் கவித்வத்தைப் பற்றி அவர் பங்களிப்பைப் பற்றி மறைமுகமாக மறுத்துப் பேசிய புனைபெயர் கட்டுரைகளும் எழுத்துவில் வந்தன. அதில் ஒருவர் எழுத்து மூலமாகவே விமர்சகராகவும் கவிஞராகவும் தெரிய வந்த நகுலனும். இது மாதிரி திரை மறைவு வேலைகளை, தான் தெரிய வந்த தொடக்க காலத்திலிருந்தே ஒரு விஷமச் சிரிப்புடன் செய்தவர் நகுலன்.

கலாமோகினியின் கடைக்கண்பார்வை

சிலசமயம் வண்ணதாசனின் கலைக்கமுடியாத ஒப்பனைகளைப் படித்து விட்டு அதன் அதிர்வுகளிலிருந்து மீளுமுன்னே கதை எழுதிப் பார்ப்பதுண்டு. அப்படியே வண்ணதாசன் கதை மாதிரியே இருக்கும். வண்ணநிலவனின் எஸ்தர் படித்து விட்டு அதன் உணர்ச்சி வேகம் அடங்குமுன்னே கதை எழுதுவோம். அப்படியே வண்ணநிலவன் கதை மாதிரியே இருக்கும்.

நாகரஹாவு

அந்த இருபது நிமிடங்களில் பக்கத்து வீட்டில் வேலை நின்று போய் அத்தனை ஆட்களும் இங்கே வேடிக்கை பார்க்க வந்துவிட்டனர். ரோட்டில் போவோரும் இந்தக் கூட்டத்துடன் சேர்ந்துகொள்ள வாசல் முழுவதும் ஒரே கூட்டம். ‘நாகப்பாம்பு இல்லை, சாதா எலி தின்னும் பாம்புதான்’ என்கிறான் ஒருவன். அது படம் எடுத்ததைப் பார்த்த இருவரும் ஐந்து விரல்களையும் அகல் விரித்து அதன் படம் எப்படி இருந்தது என்று விவரித்துக்கொண்டிருந்தார்கள். மறுபடியும் படம் எடுக்குமா என்று ஆசையாய் சிலர் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.

சென்னைக்கு வந்தேன்

சென்னைக்கு வந்ததனால் என் இலக்கிய சேவை சிறப்புற்றது என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் சென்னை வருகிற அனுபவத்தினால்தான் என் சாத்தனூர் அனுபவங்கள் ஆழ்ந்தன, இலக்கியத் தரம் பெற்றன என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்குத்தான் சென்னை எனக்கு உதவியிருக்கிறது. சென்னையை விட்டுப் பலகாலம் வெளியே வாழ்ந்ததால் சாத்தனூர்த் தரத்தில் நான் சென்னை பற்றி இலக்கியம் செய்ய முடியுமோ என்னவோ – இப்போது சொல்லத் தெரியவில்லை.

செம்மை (Perfection) பற்றி மேலும் சில வார்த்தைகள்

புத்தம் புதியதாய்த் தோன்றினால்தான் சிருஷ்டி. சிருஷ்டி என்றால் அது முன்னர் இல்லாதது. புதியது. புதியது என்கையில் நிச்சயமாக அது பழையது இல்லை என்றாகிறது. அதே யுகயுகாந்திரமாய் உதிக்கும் சூரியன்தான். இன்று புதிதாய் உதிக்கிறது. அதே 20,30, 60,80, 90, 100 வயது உடல்தான். இன்று புதிதாய்க் கண் விழிக்கிறது. இக்கணம். அதில் இடமும் காலமும் எனவே நானும் இல்லை. அதுவே செம்மை. அதை வாழவொட்டாமல் மனம் தடுக்கிறது.

தீனித் தின்னிகள்

தினகர் முதலில் காரத்தை சாப்பிடுவான். மிகவும் பொறுமையாக அதை முடித்துவிட்டு, பிறகுதான் ஸ்வீட்டுக்கு வருவான். அதையும் கடகடவென்று சாப்பிடமாட்டான். முனையிலிருந்து சிறிது, சிறிதாக கடித்து சாப்பிடுவான். இதற்கெல்லாம் அவன் கிட்டத்தட்ட இருபது நிமிஷம் எடுத்துக்கொள்வான். இவ்வளவையும் பார்த்துக்கொண்டிருக்கும் என்னிடம், கடைசி பிட்டை ‘‘இந்தா…’’ என்று நீட்டுவான். நான் ஆசையாக கையை நீட்டும்போது, டபக்கென்று அப்படியே அவன் வாயில் போட்டுக்கொண்டு சிரிப்பானே ஒரு அயோக்கியச் சிரிப்பு…

ஹு இஸ் கம்பர் ?

இன்னும் பத்து வருடங்கள் கழித்து பிறக்கப் போகிற எனது பேத்தி, ‘வாட் இஸ் தமிழ் கிராண்ட்பா?’ என்று கேட்டால் நான் வியப்பு அடைய மாட்டேன். அது எமது ஊழ் வினை. உறுத்து வந்து ஊட்டுகிறது என்ற சிலப்பதிகார வரிகளால் ஆறுதல் கொள்வேன்.

கடன்பட்டார் நெஞ்சம்

ஒரு முறை மிகவும் நெருக்கடியான ஒரு சமயத்தில், நான் ஐநூறு ரூபாய்க்கு புத்தகங்கள் வாங்கிக்கொண்டு வந்து நிற்க.. என் மனைவி ஒரு வார்த்தைக் கூட கூறாமல், என்னைக் கண் கலங்க பார்த்த பார்வை, இன்னும் எனக்கு குற்ற உணர்வை ஏற்படுத்துகிறது.

பிரிட்டன் – 2012

அத்தனை ஆரவாரமான, இசைக்கும் விளக்குகளுக்கும் நடுவினிலே சன்னமாய் அவரிடம் போய் “ஸார், ரிசஷன், ரிசஷன்னு சொல்றாங்களே அது பத்தி என்ன நினைக்கிறீர்கள்?” என்று கேட்க ஆசை. எதற்கு வம்பு. பிரிட்டிஷ் துப்பறியும் புத்தங்களின்படி அங்கும் பக்கத்திலிருக்கும் கிரின், ஜேம்ஸ், ஹைட் பார்க்குகள் முழுக்கவும் MI5/6 துறை அதிகாரிகள் இருப்பார்கள். அந்த பார்க்குகளிலும் லண்டன் ட்யூப்புகளிலும் ரகசிய, சங்கேத வார்த்தைகளை, பெட்டிகளை மாற்றிக் கொண்டிருப்பார்கள். நாம் ஏன் அவர்களுக்கு வேலை வைக்க வேண்டும்…

வார்த்தையும், செம்மையும்

படைப்பாளி! அப்பாடி எவ்வளவு பெரிய வார்த்தை. நாம் அதிக பட்சம் துணையிருக்கலாம், கவனத்தைக் குவிக்கலாம், ஒளி பாய்ச்சலாம் அவ்வளவுதான். ஒரு விவசாயி எழுதுகிறவர்களை விட சிறந்த படைப்பாளி. அவன் கூட படைப்பாளி இல்லை. ஒரு படைப்பை ஃபெசிலிடேட் செய்கிறவன். படைப்பு எழ, நிகழ உறுதுணையாய் உதவுகிறவன். படைப்பாளி என்ன, எழுத்தாளன் என்பதே பெரிய வார்த்தை. எழுத்தை உபயோகிப்பவர் அல்லது பயன்பாட்டாளர்தான் பலரும்.

ஜிப் லாக்கில் அரை நாள்

மண்புழுவை தெய்வம் போல மதிக்கவேண்டும் என்பது தெரியவில்லை. அதை உபாதை செய்யக் கூடாது என்று பெரியவர்கள் அடித்துச் சொல்லிக் கொடுப்பார்கள். எந்தப் பூச்சியையும் கொல்லக் கூடாது என்பதும் வீட்டில் சொல்லித் தருவார்கள். பல்லிகள் வீடெங்கும் உலா வரும். சமையல் உள்ளில் மட்டும் அவற்றை உலாவ விடுவதில்லை. சாமி உள் எனப்படும் பூஜை உள்ளில் பல்லிகளுக்கு பூரண சுதந்திரம். அங்கு கரப்புகள் அவ்வப்போது நடமாடும் என்பதால் இருக்கலாம். நம் ஊர் சாமிகளுக்கும் கரப்புகளுக்கும் ஏதோ கரிசனம் கலந்த உறவு.

பழக்கம்

நம்முடைய மூளை/ மனம் இரண்டு நிலைகளில் இயங்குகிறது. ஒன்று பிரக்ஞைப் பூர்வமானது (conscious) மற்றொன்று ஆழ்மனம் (sub-conscious) சார்ந்தது. பிரக்ஞைப் பூர்வ மனதால் ஒரு சமயத்தில் ஒரே ஒரு வேலையை மட்டுமே செய்ய முடியும். ஆனால் அதே நேரத்தில் இயங்கிக் கொண்டிருக்கும் ஆழ்மனதின் கட்டுப்பாட்டில் பல வேலைகள் நடந்து கொண்டிருக்கும்.

கருப்பு நகரம்

மூலக்கடை ஜங்ஷனில் வழக்கமாக நடுரோட்டில் நிற்கும் பழக்கடைகளும், பூக்கடைகளும் ஓடாத வண்டிகள் தந்த இடத்தையும் சேர்த்து முழுரோட்டையும் ஆக்ரமித்துக் கிடந்தன. ”எங்கள் ஆண்டவனைக் கேள்வி கேட்ட மால்கம் ஸ்பீடே! மன்னிப்பு கேள்” என்ற அந்த பச்சைநிறத் தமிழ் பேனரை சச்சின் படிப்பாரா இல்லை மால்கம் ஸ்பீட் படிப்பாரா என்றெல்லாம் யோசிக்க விழையவில்லை ”பெட்ரோல் பெட்ரோல்” என்று மனனம் செய்து கொண்டிருந்த என் மனம். கிட்டத்தட்ட ஒண்ணரை கிலோமீட்டர் உருட்டலுக்குப் பின் மூலக்கடை பஸ் டிப்போ வரை சென்று சேர்ந்ததில் கயிறு பிடித்து இழுத்து மூடிக் கிடந்த பெட்ரோல் பங்கை தரிசனம் செய்ய நேர்ந்தது.

குருவி பிடித்த காலம்

ஒரு வயதுக்குப் பிறகு குருவி பிடிக்கும் பழக்கம் நின்று விட்டது. சொல்லப் போனால் நாங்கள் எல்லோருமே குருவிகளின் பாதுகாவலனாக மாறத் தொடங்கினோம். அடுத்தத் தலைமுறையைச் சேர்ந்தவர்கள் குருவி பிடிக்க முனைந்த போது, பறவையிலாளர் சலீம் அலி ரேஞ்சுக்கு அவர்களுக்கு அறிவுரை வழங்கினோம். சிறுவயதில் சலீம் அலியும் குருவிகளைப் பிடித்து வறுத்துத் தின்றதாக தன்னுடைய சுயசரிதையில் (The fall of a Sparrow) எழுதியிருக்கிறார்.

ஆற்றேன் அடியேன்

தமிழின் தொன்மையை நினைக்கும்போது பிரமிப்பாக இருக்கும். அதே சமயம் ஒருவித சோகமும் வந்து கப்பிக்கொள்ளும். இதை தவிர்க்க முடியாமல் இருக்கிறது. 2012ம் ஆண்டு தொடக்கத்தில் விக்கிப்பீடியாவில் பல மொழிகளில் மொத்தமாக எத்தனை கட்டுரைகள் ஏறியிருக்கின்றன என்று தேடிப் பார்த்தேன். ஒரு கோடிக்கும் குறைவானவர்கள் பேசும் ஹீப்ரு மொழியில் 129,000 கட்டுரைகள் ஏறிவிட்டன. ஏழு கோடி மக்கள் பேசும் தமிழில் ஆக 43,000 கட்டுரைகள்தான். உலகத்தில் ஆக மூன்று லட்சம் பேர் மட்டும் பேசும் ஐஸ்லாண்டிக் மொழியில்கூட 36,000 கட்டுரைகள் எழுதப்பட்டுவிட்டன. […] நான் பிறந்தபோது உலகத்தின் சனத்தொகை 2.3 பில்லியன். இன்று அது 7.0 பில்லியன், மூன்று மடங்காக வளர்ந்திருக்கிறது. ஆனால் பூமியின் அளவு அதேதான். இந்த இடைப்பட்ட காலத்தில் தமிழின் வளர்ச்சி எப்படி இருக்கிறது. மூன்று மடங்கு வளர்ந்திருக்கிறது என்று சொல்லமுடியுமா? 2009ம் ஆண்டு யூன் மாதம் 16ம் தேதியை எல்லோரும் கொண்டாடினார்கள். என்ன விசயம் என்று கேட்டபோது ஆங்கில வார்த்தைகளின் எண்ணிக்கை அன்று ஒரு மில்லியனை தொட்டுவிட்டது என்றார்கள். யாரோ கணக்கு வைத்துக்கொண்டிருக்கிறார்கள். தமிழில் எத்தனை வார்த்தைகள் உள்ளன என்று யாராவது கணக்கு வைத்திருக்கிறார்களா?