கடல் தின்ற காலம்…

நேரம் ஆக ஆக, கடல் செய்த காரியத்தின் வீரியம் தெரியத் தெரிய ஒரு பெருந்துக்கத்தின் கனம் செய்திகளின் வழியே உள்ளேறத் துவங்கியது. தம்மால் இயன்ற உதவியை செய்யும் பொருட்டு நூற்றுக்கணக்கானோர் பல்வேறு நகரங்களில் இருந்து வடதமிழக கடல் பகுதிகள் நோக்கித் திரள, அத்தகைய குழுக்கள் ஒன்றில் இணையும் பொருட்டு நான் கடலூர் செல்லும் பேருந்தில் அமர்ந்த பொழுது…