மனிதனுக்கு ஒரு தெய்வம் திருப்தி அளிப்பதில்லை. பல தெய்வங்கள் தேவையாக இருக்கின்றன. ஒவ்வொரு வினாடிக்கு ஒரு தெய்வம் தேவையாக இருக்கிறது என்று சொல்வதும் மிகை ஆகாது.இந்த வினாடியின் ஒரே தெய்வம் அடுத்த வினாடி பொய்த்துவிடுகிறது. பொய்த்தேவாக ஆகிவிடுகிறது.
Author: knsubramaniam
உலக இலக்கியம்
உலக இலக்கியம் என்பது ஒரு இயக்கமாக உருவெடுக்க வேண்டும். அதற்கான வழிவகைகள் என்னவென்று சிந்திப்பது இலக்கிய வட்டத்தின் கடமையாகும். உலகத்தின் எந்த மொழியில் எந்தப் பகுதியில் மிகத் தரமானது, உயர்ந்தது, சிரேஷ்டமானது வந்திருந்தாலும் அது உடனடியாகத் தமிழில் மட்டுமல்ல, தமிழ் போன்ற எல்லா மொழிகளிலுமே வருவதற்கான வழி வகைகள் வகுத்துக் கொள்ள வேண்டும்.
விமரிசனத்தின் நோக்கம்
இலக்கிய விமரிசனத்துக்கான அடிப்படையைத் தருவது நூல்களை அனுபவித்து அனுபவித்துப் பண்பட்ட உள்ளமும் அறிவும்தான். பல்லாயிரக்கணக்கான நூல்களிலே ஒரு பத்திருபது முப்பது நல்ல நூல்களை தேர்ந்தெடுத்து அனுபவிக்க விமர்சனம் உதவவேண்டும். விமரிசகன் ஆழ்ந்தும் படித்திருக்கவேண்டும்.- பரந்தும் படித்திருக்க வேண்டும்.
சென்னைக்கு வந்தேன்
சென்னைக்கு வந்ததனால் என் இலக்கிய சேவை சிறப்புற்றது என்று நான் சொல்லத் தயாராக இல்லை. ஆனால் சென்னை வருகிற அனுபவத்தினால்தான் என் சாத்தனூர் அனுபவங்கள் ஆழ்ந்தன, இலக்கியத் தரம் பெற்றன என்று சொல்லவேண்டும். அந்த அளவுக்குத்தான் சென்னை எனக்கு உதவியிருக்கிறது. சென்னையை விட்டுப் பலகாலம் வெளியே வாழ்ந்ததால் சாத்தனூர்த் தரத்தில் நான் சென்னை பற்றி இலக்கியம் செய்ய முடியுமோ என்னவோ – இப்போது சொல்லத் தெரியவில்லை.
இலக்கிய விமர்சனம்
கம்பனையும் சங்க இலக்கியங்களையும் பற்றி பற்றி இலக்கியங்கள் வளர்ந்திருக்கின்றனவே தவிர, இலக்கிய விமர்சனம் தோன்றிவிடவில்லை.பாரதியாரைக் கூட தர விமர்சனம் செய்ய இதுவரை யாரும் முன்வரவில்லை என்பது தமிழில் இலக்கிய விமர்சனத்தின் இன்றைய நிலையை நமக்கு நன்கு அறிவுறுத்துகிறது.
மூன்று சிறுகதாசிரியர்கள்
மூன்று கதாசிரியர்களில் லா.ச.ராமாமிருதம் தமிழ்ச் சிறுகதையின் முதல் அலையிலேயே மணிக்கொடிக் காலத்திலேயே தோன்றியவர் — அன்று முதல் இன்று வரை சிறுகதைத் துறையில் உழைத்துப் பாராட்டக்கூடிய அளவுக்கு வெற்றி பெற்றிருக்கிறார். சற்றேறக்குறைய இதே காலக்கட்டத்தைச் சேர்ந்தவர்தான் தி.ஜானகிராமனும். 1950க்கு பின் தோன்றிய நல்ல சிறுகதை ஆசிரியர்கள் இருவரில் ஒருவர் சுந்தர ராமசாமி.
பாரதியார் – இன்றைய எழுத்தாளர்களின் முன்னோடி
பொதுவாக க.நா.சு பாரதியைக் குறித்துப் பேசியதோ, எழுதியதோ இல்லை என்றொரு கருத்து நிலவுகிறது. க.நா.சு கட்டுரைகள் என்ற தொகுப்பில் பாரதியைக் குறித்தும், அவர் நவீனத் தமிழிலக்கியத்துக்கு எப்படி ஒரு முன்னோடியாக இருக்கிறார் என்பது குறித்தும் இரண்டு கட்டுரைகள் இடம்பெற்றிருக்கின்றன. அதில் ஒன்று இக்கட்டுரை. இது அவர் ஒரு கூட்டத்தில் பாரதியின் முக்கியத்துவம் குறித்து ஆற்றிய உரை.