அவனுக்கே சொந்தமான ஒரு மாபெரும் கனவை அவன் உருவாக்கினான். எல்லையற்ற சிக்கல்களாலான இக்கனவின் எல்லா நுணுக்கங்களும் , கடைசி புள்ளி வரையிலும் கூட திட்டமிடப்பட்டது. அதனுள் அவன் தன் வாழ்வை புதுப்பித்துக் கொள்வான்.
Category: உலகச் சிறுகதை
எங்கிருந்து அழைக்கிறேன் நான்?
கண்ணிமைக்கும் நேரத்தில் ஜேபி அவளை பின்தொடர்ந்து முன்வராந்தாவுக்குச் சென்றான். வராந்தாவின் திரைச் சீலைக் கதவை அவளுக்காக அவன் திறந்துவைத்தான். அவளுடன் படிகளில் இறங்கி அவள் தன்னுடைய டிரக்கை நிறுத்தியிருந்த இடத்துக்குச் சென்றான். அவனுடைய கட்டுப்பாட்டில் இல்லாத ஒன்றாக இருந்தது அது. உலகத்தில் வேறு எதுவுமே ஒரு பொருட்டாகத் தெரியவில்லை. கால்களை நடுநடுங்கச் செய்யும் ஒருத்தியை அவன் சந்தித்திருக்கிறான் என்பதை அவன் அறிந்துகொண்டான். அவளது முத்தம் இன்னும் அவன் உதடுகளில் எரிந்துகொண்டிருப்பதை உணர்ந்தான்.
எதையோ கனவுகிற விளையாட்டு
அந்தக் குரலிலேயே தெரிந்து போகிறது, மிகக் கவனமாக பீதியடையாமல் இருக்க முயற்சி நடப்பது. மிகவும் பயந்து போயிருக்கிற ஒரு தாய், தன்னிடம் உள்ள அத்தனை அலசலறிவையும் பயன்படுத்தி, தன் மூளையின் வேதிப்பொருட்களின் உத்வேகத்தை மீறித் தன் கட்டுக்குள் வைத்துக் கொண்டு, தன் குழந்தைக்கு ஏற்பட்டுள்ள அபாயத்தைப் பல்லாலும் நகத்தாலும், ஆக்ரோஷத்துடன் எதிர்கொள்ளாமல், புத்திசாலித்தனத்தால் எதிர் கொண்டிருக்கிறாள் என்பது. “ஏதாவது மோசமாக நடந்து விட்டதா?”
கிருஸ்த்மஸுக்குப் பிறகு மூன்றாவது நாள்
பையன் ஓவரால் அணிந்திருந்தான். அவனுடைய அப்பாவுடைய கட்டம் போட்ட மேல் அங்கி (கோட்) ஒன்றையும் போட்டிருந்தான். அவன் அப்பா வளர்ந்து அந்தக் கோட்டைப் போட முடியாமல் போன பின்பு இவனுக்கு வந்திருக்க வேண்டும், அது மட்டும் சரியாகப் பொருந்தினால் இவனுக்கு நல்ல மேல் கோட்டாக இருந்திருக்கும். அதன் கைகள் பையனுக்காக வெட்டப்பட்டிருந்தன, ஆனால் வேறேதும் செய்யப்படவில்லை.
உங்க வேலைய பார்த்துக்கிட்டுப் போங்க
விடுமுறையிலிருந்து திரும்பியபோது, கெர்க்காவுக்கு ஏதோ படுமோசமாகி விட்டிருக்கிறதென்று தெரிந்தது. ஏதோ கசமுசாவின் பொறிகள் காற்றிலெங்கும் தெறித்தன. அவனுடைய தலைமுடி கூட நெட்டுக்குத்தாக நின்றது மின்சாரம் பாய்ந்தாற்போல, அவனுடைய கைகளோ காந்தத்தால் பாதிக்கப்பட்டது போல ஒன்றோடொன்று ஒட்டிக் கொண்டன. கெர்க்காவுக்கு தப்பாமல் ஒன்று புரிந்தது, யுர்காதான் இந்த அழுத்தத்தின் மையம். என்ன நடந்தது என்பது குறித்து அவனுக்கு எதுவும் தெரிவதற்கு முன்னரே, ஏதோ மூடநம்பிக்கையில் அவன் அதிலிருந்து பின்வாங்கினான்.
லூலூ
ஃபேய்ஃபேய் என்ற அவ்வீட்டுப் பூனையுடன் சீக்கிரமே நட்பு கொண்டது லூலூ. முதலில், ஃபேய்ஃபேய்க்கு லூலூவைக் கண்டாலே பயமாக இருந்தது. என்னைச் சீண்டாதே என்று சொல்வது போல முதுகை வளைத்து உர்ரென்று முறைத்துக் கொண்டே பின்னால் சென்றது. அக்குடும்பத்தின் அனைத்தையுமே தான் தான் பாதுகாக்க வேண்டும் என்று அதற்கு எண்ணம். அது பூனையிடம் கைகுலுக்க முன்நீட்டியதும் குழந்தைகள் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர். நண்பன் தான் என்று சீக்கிரமே ஃபேய்ஃபேய் புரிந்து கொண்டது. இனி சேர்ந்து இணக்கமாக இருப்போம் என்று சொல்வதைப் போல ஒன்றையொன்று முகர்ந்து கொண்டன.
சிற்றூரும் தளபதியும் – சென் ஷிஸு
அடுத்த இரண்டு நாட்களுக்கு மரத்தடியில் தளபதியைக் காணோம். ஊர்மக்கள் அவரைப் பற்றி விதவிதமாக வம்புபேச ஆரம்பித்து விட்டனர். அவருடைய ஆரோக்கியம் சரியில்லை என்றனர். அவரது நோய் முற்றியிருந்தது. மருத்துவமனையில் நடந்த சம்பவத்திற்குப் பிறகு, அடுத்த நகரிலிருந்த இராணுவப் பொதுமருத்துவமனைக்குப் போக அளிக்கப்பட்ட அரசாங்க ஜீப் சவாரி மறுக்கப் பட்டிருந்தது. ஓர் இரவில், கண்ணியம் மின்னிய சில இளைஞர்கள் வந்தனர். முன்னால் இரண்டு கூலிகள் நடந்தனர். டோலியில் கிடத்தித் தூக்கிக் கொண்டு இராணுவ மருத்துவமனைக்கு விரைந்தனர்.
நகருக்குள் சென் ஹுவான்ஷெங்கின் சாகசம்
பெருமூச்செறிந்தான். சரி, வீட்டுக்குக் கிளம்பலாம் என்று எழுந்தான். கால்கள் துவண்டன. மிகவும் பலகீனமாக உணர்ந்தான். உடல்நலமில்லையா என்ன? கூட்டத்தைச் சமாளித்ததில் அவன் எதையுமே அறியவில்லை. மிகவும் சோர்வாக இருந்தது. வாய் வறண்டு காய்ச்சலடிப்பது போலிருந்தது. நெற்றியைத் தொட்டுப் பார்த்தான். சுட்டது. உடல் மிகக் குளிர்ந்தது. சூடாக ஒரு கோப்பை தேநீர் குடிக்க வேண்டும் போலிருந்தது. ஆனால், கடைகள் எல்லாமே மூடியிருந்தன. ரயில் நிலையத்தில் சுடுநீர் கிடைக்கும் என்ற ஞாபகம் வந்தது. கிடுகிடுவென்று போனான்.
போர்ட்டபெல்லோ சாலை
நம் இயல்புலக அனுபவங்களில் தென்படும் அமானுடத்தின் நிழலை இருளும் மென் புன்னகையும் ஒருசேர விவரிக்கிறார் முரியல் ஸ்பார்க். அவரது சிறந்த சிறுகதைகளில் ஒன்றாகக் கருதப்படும் “போர்டபெல்லோ சாலை” முரியல் ஸ்பார்க்கின் விளையாட்டும் விபரீதமும் கலந்த கற்பனைக்கு ஒரு நல்ல அறிமுகமாகும்.
பகையைத் தேடி
நாட்கள் மெதுவாக நகரத் தொடங்கின. வனப்பாக உடல் மாறுவதற்கு பதிலாக, நான் குண்டாகத் தொடங்கினேன். என் மனநிலையைப் பற்றியும் யோசித்துப் பார்த்தால், அந்த ஒரு வருடம் கழித்து என் சுற்றுலாவின் முடிவில் எனக்கு ஒரு வயது கூடியிருந்தது அவ்வளவே! வேறு எந்த மாற்றமும் இல்லை. நான் ராணுவத்திலிருந்து வெளியேறப்போகிறேன். ஆனால் சேர்வதற்கு முன்பு எப்படியிருந்தேனோ, அப்படியேதான் வெளியே போகப்போகிறேன். என்னுடைய அதே சிறிய தடுக்கறைக்கு, என்னுடைய எக்ஸெல் கோப்புகளுக்குத் திரும்பிச் செல்லப்போகிறேன்.
பேராலயம்
கருவிழிகள் ரெம்ப வெள்ளையா இருக்கும், கட்டுப்படுத்த முடியாததப்போலவும், நிறுத்த முடியாததப்போலவும் தன்னிச்சையா சுத்திகிட்டிருப்பதப் போலிருக்கும். அறுவருப்பா! அவனப் பார்த்துகிட்டேயிருந்தப்ப, அவனுடைய இடது கருவிழி அவன் மூக்க நோக்கி நகர்ந்துச்சு, இன்னொண்ணு அப்படியே நின்ன இடத்திலேயே நிக்க முயற்சி செய்துச்சு, முயற்சி மட்டும்தான், ஏண்ணா அதுவும் தெரியாம, முடியாம அலைஞ்சுகிட்டிருந்துச்சு.
புரட்சியில் நீ இணையும் நாள் இதுதானா?
காவல் துறையினர், தன்னைப் பார்க்கக்கூடிய அளவில், அண்மையில் இருக்கின்றனர் என்பதைக் கண்டுகொண்ட லிஸ், கொஞ்சம் தாராளமாகவே நீலிக்கண்ணீர் வடித்தாள். அவர்கள் கிரெக்கிடம் அச்சிட்ட தாள் ஒன்றினை அளித்து, அவனிடமிருந்த பற்றுச்சீட்டின் எஞ்சிய பகுதியில் முத்திரை பதித்துவிட்டு, அவளை கண்ணியமாக நடத்தி, வீட்டிற்கு உடனே இட்டுச்செல்லுமாறு கூறினர்.
அடக்கப் பிரசங்கம்
புகைப்படங்கள் அனைத்திலும், அப்பா ஒரு சைகையின் மத்தியில் உறைந்து நின்றார் புகைப்படங்கள் அனைத்திலும் அப்பா தான் அடுத்து என்ன செய்ய என்பது தெரியாதவர் போலிருந்தார். ஆனால் அப்பாவுக்கு எப்போதும் என்ன செய்ய வேண்டும் என்று தெரிந்திருந்தது. அதனால்தான் இந்தப் படங்கள் அனைத்தும் பொய்யாக இருந்தன. அத்தனை பொய்ப் படங்களாலும், அத்தனை பொய் முகங்களாலும் அறை சில்லிட்டிருந்தது.
தணிக்கையாளர்கள்
நாட்கள் செல்லச் செல்ல அவன் அந்தப் பணியை மிகவும் விருப்பத்துடன் செய்தான். அவன் இங்கு வந்த காரணமே தற்போது அவனுக்கு முற்றிலும் மறந்துவிட்டிருந்தது. ஒவ்வொரு நாளும் பல்வேறு கடிதங்களின் பலவரிகளை அழிக்க வேண்டியிருந்தது. பல கடிதங்களை குப்பைக்கூடையிலும் சேர்த்தான். அரசாங்கத்திற்கு ”எதிரான” மக்களின் சூக்குமுமான வாசகங்களை கண்டு பயந்த நாட்களும் உண்டு. தற்போதெல்லாம் அவனால் “விலைவாசி உயர்ந்துவிட்டது”, “வானம் மந்தமாக உள்ளது” போன்ற வரிகளில் கூட அரசாங்கத்திற்கு எதிரான செய்திகள் புதைந்திருப்பதை கண்டுபிடிக்க முடிந்தது.
இடைமட்ட மேலாளுகைக்கு நிலையான வியூகங்கள்
அந்த அறையைவிட்டு வெளியேறியபோது ஒரு கைப்பிடி அந்த அகன்ற இலைகளைப் பிடுங்கிக்கொண்டு என் அலுவலகத்திற்கு மீண்டும் வந்தேன். என் நாவால் இலையின் தடித்த பகுதியிலிருந்து ஒரு நரம்பைக் கண்டுபிடித்தேன். அவ்வளவு மோசமில்லை. பசுஞ்சுவையோடிருந்தது. அது உலரும்வரை நன்றாக உறிஞ்சியெடுத்துவிட்டு சக்கையைக் குப்பைக்கூடையில் எறிந்தேன்.
தலை வெட்டப்பட்ட கோழி
அந்தச் சிறுமிக்கு இப்போது விரல் நுனியை ஊன்றி தன் உடலை மேலே எழுப்ப வசதியான ஒரு இடம் கிடைத்தது. அந்த இடத்தில் தன் விரல் நுனியை நன்கு அழுத்திக்கொண்டாள். தன் உடலை மேலே உயர்த்த முயன்றாள். ஆனால் அவள் காலை யாரோ மிக இறுக்கமாக பிடித்திருப்பதை உணர்ந்தாள். கீழே பார்த்தாள். அந்த எட்டு கண்களும் அவளுக்கு பெரும் அச்சத்தை அளித்தன.
பாலையும், சில பாம்புகளும் – இறுதிப் பகுதி
கிட்டத்தட்ட இரண்டாய் துண்டிக்கப்பட்டு, தன் உள்ளுறுப்புக்கள் உடலின் வெளியே வழிந்தபடி, பாதி மல்லாந்து க்ராஸ் கிடந்தான், நடுங்கியபடி அவள் பார்க்கையில் அவன் ஒருமுறை துடித்து, நாக்கை ஒருமுறை வெளியே சொடுக்கி, உள்ளே இழுத்தான், ஸ்னேக் ஏதோ ஒரு ஒலியை எழுப்பினாள், அடித்தொண்டையிலிருந்து வந்தது அழுகை என்று சொல்ல முடியாத அளவு சிறு ஒலி.
பாலையும், சில பாம்புகளும் – பகுதி 2
அந்த இளைஞன் பிடிக்கவே முயன்றான், ஆனால் அவன் தயங்கிய நேரம் சற்று அதிகமாய் விட்டிருந்தது. மிஸ்ட் உடம்பை நெளித்தாள், தாவி அடித்தாள், அவளது வால் அவன் முகத்தில் அறைந்தது. ஆச்சரியமும் நோவும் கலந்து, அவன் தள்ளாடிப் பின்னேறினான். ஸ்னேக் மிஸ்டின் தாடைகளை இறுக்கிப் பிடித்துக்கொண்டே அவளது மிச்ச உடலையும் பிடிக்கத் தத்தளித்தாள். மிஸ்ட் இரையைச் சுற்றி இறுக்கி நொறுக்கும் வகைப் பாம்பல்ல என்றாலும், அவள் சீராகவும், வலுவாயும், துரிதமாகவும் இயங்குவாள். உடலை அஙகும் இஙகும் அடித்து, தன் மூச்சைத் திணறலுடன், ஸ்ஸ்ஸ் என்று நீண்ட சீறலாய் விட்டாள்.
ஒரு வாடிய கிளை
ஏதோ கெட்டது நடக்கப் போகிறது என்ற இனம்புரியாத அச்சம் என் நெஞ்சில் பரவியது. இருந்தாலும் அதை வெளிக்காட்டிக்கொள்ளாமல், ஏதோ நான் எதிர்பார்த்தபடிதான் அங்கே எல்லாம் நடந்துகொண்டிருப்பதைப் போல, அவர்களோடு இயல்பாக அரட்டையடிக்கத் தொடங்கினேன். மாஸ்கோ வழியாக எப்போதாவது வண்டியை ஓட்டிச் சென்றிருக்கிறார்களா, அவர்களுக்குக் குடும்பம் இருக்கிறதா என்றெல்லாம் கேட்டேன். என் எட்டு வயது மகனைப் பற்றி அவர்களிடம் கூறினேன். (அவன் அப்போது சிறுவர்களுக்கான சானடோரியத்தில் இருந்தான்.)
பாலையும், சில பாம்புகளும்
மிஸ்டை தன் மடியில் இருத்திக்கொண்டு சமாதானம் செய்தாள். ஸ்னேக்கின் மெல்லிய இடுப்பைச் சுற்றிகொண்டு அவளின் கதகதப்பை உணர்ந்து கொண்டிருந்தாள் அந்த நாகப்பாம்பு. பசி வழக்கத்துக்கும் மேலாய் அந்த நாகத்தை பதற்றமாக்கியது. அவளுக்குப் பசி, ஸ்னேக்கிற்கும்தான். அந்த கறுத்த மணல் பாலைவனத்தினுள் வரும்போது அவர்களுக்கு போதுமான அளவு நீர் கிடைத்திருந்த்து ஆனால் உணவுக்காக ஸ்னேக் வைத்த பொறிகள் வெற்றி பெறவில்லை.
லாட்டரி
மிசர்ஸ் ஹட்சின்சன் கூட்டத்தினூடே பார்க்க முனைந்தவளாய் தன் கழுத்தை நீட்டி தன் கணவனும் குழந்தைகளும் முன்புறத்தில் நின்றுக் கொண்டிருப்பதைத் தேடிக் கண்டுபிடித்து விட்டாள். தான் விடைபெறுவதைக் குறிக்கும் வகையில் மிசர்ஸ் டெலாக்ரோவின் கரத்தில் தட்டிவிட்டு கூட்டத்தின் உட்புகுந்து தனக்கு வழி செய்து கொள்ளத் துவங்கினாள். சிரித்த முகத்துடன் அவளுக்கு வழி விட்டுப் பிரிந்தனர் அங்கு கூடியிருந்தவர்கள்
எலெக்ட்ரிக் எறும்பு – இறுதிப் பகுதி
நியூயார்க் மாநகர் இரவில் ஒளித் தெப்பமாய் மின்னியது, கலங்கள் சுற்றி எங்கும் திரிந்தன, அதிர்ந்தன, ராத்திரி வானிலும், பகல்களிலும், வெள்ளங்களூடேயும், கடும் வறட்சியூடேயும் பரபரத்தன. வெண்ணெய் உருகி திரவமாக அவனுடைய நாவில் பரவியது, அதே நேரம் மோசமான நாற்றங்கள், சுவைகள் அவனைத் தாக்கின: கசப்பான விஷங்களும், எலுமிச்சைப் புளிப்பும், கோடைப் புற்களின் நுனிகளும் இருப்பதை உணர்ந்தான்.
கல்மேடு
சிறிய உருவம் கொண்ட முதியவரான உள்ளூர்ப் பாதிரியார் மலைகளின் மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது வேடிக்கையான யோசனையாக இருந்ததால், அங்கு நீண்ட சிரிப்பலை எழுந்தது. தந்தை இஜியஸ் அனாவசிய கர்வம் இல்லாதவர்தான். ஆனாலும், சிரிப்பலையால் சற்றே மனம் புண்பட்டாரோ என்னவோ, கடைசியில், விறைப்பாகப் பேச ஆரம்பித்தார், “ஐயா, அவர்களுக்கு அவர்களுடைய கடவுளர்கள் உண்டு.”
ரோந்து
அவன் ஒவ்வொரு ரவையாக வெளியே எடுத்து உள்ளங்கையில் வைப்பான். பிறகு நாயின் நெற்றிப்பொட்டுக்குக் குறிவைப்பான். காலி துப்பாக்கியின் குதிரையை க்ளிக்… ரெண்டடி தூரம். அதன் கண்ணுக்கு இடையேயான குறி. சின்னச் சத்தம், பாதிவழியிலேயே அது தேய்ந்து அடங்கிவிட்டது. வழக்கமில்லாத வழக்கமாய் நாய் மூத்திரம் பெய்துவிட்டது. மற்ற சமயங்களில் அதன் இதயத்தில் அவன் முட்டிவிட்டாப் போல அது நடுங்கும்.
நாசகார வலை
அன்று இரவு வீடு திரும்பியதும் கம்ப்யூட்டரை ஆன் செய்தேன். பிரபல இணையதளம் ஒன்றில் அவள் செய்திருந்த விளம்பரத்தைக் கண்டதும் எனக்கு மூச்சே நின்றுவிடும் போலிருந்தது. ”ஆரோக்கியமான இளம் பெண்ணின் உடல் உறுப்பு(கள்) விற்பனைக்குத் தயார். கார் வாங்க இருப்பதால், காரை ஓட்டுவதற்கு இடைஞ்சல் இல்லாத வகையில் எந்த ஓர் உறுப்பும் விற்கப்படும். தொடர்பு கொள்ளுங்கள், பேசுவோம்..”
தனிமை
தங்கள் அடுக்கக கட்டட வாயிலை அடைகிறார்கள். உள்வராந்தா இருட்டிக் கிடந்தது. திடுதிப்பென்று, சொல்லப்போனால் யோசனையே இல்லாமல் அவன் தன் கையில் இருந்து கத்தியை வெளியெடுத்தான். அந்தச் சந்தில் தட்டுப்பட்டானே அவன்… ஒருவேளை எங்களைக் கொல்ல முயற்சி செய்திருந்தால்?… என யோசித்தான். கத்தியை நீட்டிக்கொண்டான். ஒரு சுத்து சுத்தி மனைவியைத் தாக்கினான். ரெண்டு முறை, ஒரு டஜன் முறைகள், பைத்தாரத்தனமாய்க் குத்தினான். ஒரு அலறல். மனைவியின் உடல் சரிந்தது.
நன்றி அம்மணி
பையனின் முகத்தில் இருந்து வியர்வை கொப்பளித்தது. அவன் நெளிந்தான். திருமதி ஜோன்ஸ் நின்றாள். அவனை முன்பக்கமாக சுண்டியிழுத்தாள். அவன் கழுத்தில் இறுகப் பிடிபோட்டாள். அப்படியே தெருவில் நெட்டித்தள்ளிப் போனாள். தன்வீடு வந்ததும், அவனை அப்படியே உள்ளிழுத்தாள்.
எலெக்ட்ரீஷியன் நவாப்தீன்
உடைந்த ரேடியோக்களை வாங்கி அவற்றை சரிசெய்து மீண்டும் விற்றான். கடிகாரங்களை ரிப்பேர் செய்யும் தொழிலைச் செய்யக் கூட அவன் தயங்கவில்லை. ஆனால் அத்தொழில் அவன் செய்த தொழில்களிலேயே மிகப்பெரிய தோல்வியைக் கண்டது. வாழ்த்துகளைக் காட்டிலும், வசவுகளையே அதிக அளவில் பெற்றுத்தந்தது. ஏனென்றால் அவன் சரி செய்த கடிகாரங்கள் அதன்பின் எப்போதுமே சரியான மணியைக் காட்டியதில்லை.
எல்லாக் கோடையும் ஒரே நாளில்
ஏழு வருடமாக மழை பெய்கிறது; ஆயிரமாயிரம் நாட்களையும் கூட்டிக் குவித்தால் எல்லாம் மழை, ஒரே நீர்த்தாளம், பீறிக் கொண்டு ஓடும் நீரொலி, அவ்வப்போது இனிமையாக மணிமணியாகச் சிதறும், சில நாள் புயலாக மழை பெய்து பெரும் சுவர்களைப் போல எழுந்து அலைகள் அந்தத் தீவுகளை அறையும். ஆயிரம் காடுகள் மழையில் அழிக்கப்பட்டு, ஆயிரம் காடுகள் மறுபடி எழுந்து மறுபடி அழிந்திருக்கின்றன.
குவாலிடி வீதி
அத்திருமண நாள் விசேஷ நாளாக எஞ்சோவுக்குப் படவில்லை. உற்சாகம் தருவதாக இல்லை. மகளின் முகத்திலும் மகிழ்ச்சியைக் காணோம். இன்னும் கொஞ்சம் அழகாக அலங்காரம் பண்ணிக்கொண்டு பளிச் என்று உடுத்திக் கொள்ளேன் என்று மகளிடம் சொல்லிப்பார்த்தாள். அவள் காது கொடுப்பதாக இல்லை.
பிற மனிதர்கள்
பைசாசம் அவன் உயிரை அக்கக்காகப் பிரித்து எடுத்தது. கணம் கணமாக, படுமோசமான ஒவ்வொரு சம்பவத்தையும். இதெல்லாம் ஒரு நூறு வருடம் நீடித்தாற்போலிருந்தது, இல்லை இல்லை, ஆயிரம் வருடங்கள் போல நீண்டது- அவர்களுக்கென்ன அந்த சாம்பல் நிற அறையில், கால நெருக்கடி என்று ஏதும்தான் இல்லையே, எல்லா நேரமும் இருந்ததே. இறுதியில் அவனுக்குப் புரிந்தது, அந்தப் பைசாசம் சொன்னது சரிதான். உடலால் சித்திரவதைப்பட்டது எவ்வளவோ அன்பாக இருந்தது.
புரிந்து கொள் – 6
என் பெயரை ரெய்னால்ட்ஸ் சொல்லிக் கொண்டிருக்கையிலேயே நான் இத்தனை மாறுதல்களையும் செய்து தயார் நிலையில் இருந்தேன். அவனுடைய அடுத்த வாக்கியம் என் அழிப்புக்கான கட்டளையாகத்தான் இருக்க வேண்டும். இப்போது என் புலன்களின் உள்ளெடுப்பு நூற்றி இருபது மில்லி-வினாடித் தயக்கத்துடன் நேர்கிறது. நான் மனித புத்தி பற்றிய என் முந்தைய ஆராய்வை மறுபடி சோதிக்கிறேன், அவன் சாதித்தது சரியாக இருக்குமா என்று தெளிவாகச் சோதிக்கிறேன்.
மாதிரிக் கணிப்பில் பிழையின் எல்லை
“நீ ஒரு பொழுதும் விஞ்ஞான வாழ்க்கையை வாழ விரும்பவில்லை என்பது எனக்குத் தெரியும். நான் விரும்பியதை நீ வெறுத்தாய். உனக்கு எப்போதும் குழந்தைகள் வேண்டும். இதெல்லாம்… வேண்டும்.” அவள் குப்பைக்கூளமாக இருந்த முன்புறத்தை சுட்டினாள். டேவிட் சென்று பதினெட்டு மாதங்கள் ஆகிவிட்டன. பணம் அனுப்புகிறான். போதவில்லை.
புரிந்து கொள் – 5
என் வேகத்துக்கு ஈடு கொடுக்கும் ஒருவனுடன் கலந்து பேசுவதும், எனக்குத் தோன்றாத ஒரு புதுக் கருத்தை அவனிடம் பெறுவதும், எனக்குக் கேட்காத சுஸ்வரங்களைக் கேட்கக் கூடியவனைக் காண்பதும் எத்தனை இன்பம் கொடுக்கக் கூடிய அனுபவங்கள்! அவனுமே இதைத் தான் விரும்புகிறான். இந்த அறையை விட்டு இருவரில் ஒருவன்தான் உயிரோடு வெளியே போகப் போகிறோம் என்பது எங்கள் இருவருக்குமே மிகக் கஷ்டமாகத்தான் இருக்கிறது.
மனிதர் உபயோகம்
மறுநாள் உலகின் பல பகுதிகளிலிருந்தும் கானமைட்டுகள் முன்வைத்த புதிய எரிசக்தி குறித்த ஆய்வு அறிக்கைகள் மளமளவென்று குவிந்தன. அத்தனை முடிவுகளும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தின. மிகமிக மலிவானதொரு விலைக்கு வழங்கப்படும் உலோகத்தாலான சிறு பெட்டிகள் ஓர் அணுமின்கலத்தைக் காட்டிலும் கூடுதலான மின்சக்தியை ஓய்வில்லாமல் வழங்கும் என்பதை நம்புவதா கூடாதா என்பதில் எனக்குங்கூட சிக்கலிருந்தது. விலை மிகவும் குறைவென்பதால் ஆளுக்கொன்று வைத்துக்கொள்ளலாம் என்பதுபோல உலகம் முழுக்கப் பேச்சு. பதினேழு நாடுகள் பெட்டிகளை உற்பத்திசெய்யும் தொழிற்சாலைகளைக் கட்டத் தொடங்கிவிட்டதாகப் பிற்பகல் செய்தி.
மூன்று கனவுகள்
”வெளிய நல்ல மழைப்பா. குளிர் வெடவெடங்குது…” வழக்கம்போல ஒராள் பருவநிலை பத்திப்பேச மற்றவர்கள் கண் தன்னைப்போல ஜன்னல்பக்கம். கிரனோவ் தலையை நிமிர்த்தியபோது கழுத்துச் சுருக்கத்தில் நரம்பு விண்ணென்று புடைத்தது நீலமாய். அப்படியே தலையணையில் பின் சரிந்தார். மருந்தை சொட்டு எண்ணி தம்ளரில் விட்டபோது அவள் உதடுகளை சேஷ்டை செய்தாள். அடர்த்தியான கருங் கூந்தலில் மழை முத்துக்கள். கண்ணின் கீழே நீலமாய் என்ன அழகான நிழல்கள்!
தனிப்பாடல்
வண்ணங்கள் அவன் மனதில் ஓசைகளாய் ஒலித்தன என்பதைய் அவன் கண்டான். கோடைக்காலச் சூரிய ஒளி வீறிடும் சுரம். குளிர்கால நிலவொளி மெலிவான சோகப் புலம்பலொலி. வசந்தத்தின் புதுப்பச்சை கன்னாப்பின்னா தாளங்களில் முணு முணுப்பாயிற்று (ஆனாலும் காதில் விழுந்தது.) இலைகளூடே மின்னித் தெறித்து ஓடும் செந்நரியோ அதிர்ச்சியில் திக்கித் திணறும் மூச்சொலி. அத்தனை ஒலிகளையும் அவன் தன் வாத்தியத்தில் வாசிக்கப் பழகினான்.
புரிந்து கொள் – 4
அண்டப் புளுகை அவிழ்த்து விடும் விளம்பரங்கள் மனிதர் அறிவை முடக்கப் பயன்படுத்தும் உத்திகளைப் போன்ற புத்தியைக் கட்டுப்படுத்தும் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க உடல் வழியே மட்டும் வெளிப் போகும் அலைவீச்சுகளை நான் கட்டுப் படுத்தி இருப்பதால், பிறரிடம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கச்சிதமான மறுவினைகளை உசுப்பி எழுப்ப என்னால் இப்போது முடிகிறது. ஃபெரொமொன்களாலும்(வாசமுள்ள உடல் கசிவுகள்), தசை இறுக்கங்களாலும் என்னால் பிற மனிதரைக் கோபமூட்ட முடியும், பாலுறவுணர்வை அவரிடம் தூண்ட முடியும், பரிவுணர்வை அவரிடம் எழுப்ப முடியும். நண்பர்களாக்கவும், அவர்களை வசப்படுத்தவும் நிச்சயமாகவே முடியும்.
யானை வேட்டை
நிராயுதபாணியான உள்ளூர் வாசிகளுக்கு முன் நான் ஒரு வெள்ளைக்காரனாய், கையில் துப்பக்கியை வைத்துக் கொண்டு இங்கே நிற்கிறேன். பார்ப்பவர்க்கு நான் ஒரு கதாநாயகன். உண்மையில் நான் ஒரு முட்டாள் பொம்மை. என்னை ஆட்டுவிக்கும் கயிறு பின்னால் நிற்கும் மஞ்சள் முக பொம்மலாட்டக்கார்களிடம் உள்ளது! ஒரு வெள்ளைக்காரன் சர்வாதிகாரியாகும் போது அவன் பறிப்பது மற்றவர்களின் சுதந்திரத்தை அல்ல; தன் சுதந்திரத்தை என்று அப்போது அறிந்து கொண்டேன்.
புரிந்து கொள் – 3
ஒரு பயங்கரக் கும்பல் வாஷிங்டன் மாநகரத்து மெட்ரோ ரயில் அமைப்பை வெடி குண்டு வைத்துத் தாக்க்த் திட்டமிட்டிருந்தது சி ஐ ஏ இயக்குநருக்குத் தெரிந்திருந்தது. இருந்தும் அவர் அந்த வெடிகுண்டுத் தாக்குதலை நடக்க விட்டார். அதைச் சாக்காக வைத்து, மிகக் கடுமையான எதிர் நடவடிக்கைகளை அக்கும்பலின் மீது செலுத்த நாடாளுமன்றத்தின் அனுமதியைப் பெறுவது அவர் திட்டம். இறந்த பல பயணிகளில் ஒரு நாடாளுமன்ற உறுப்பினரின் மகன் இருந்தான்.
சிவப்பு மை
”திரு வூ? நம்ம எல்லாரும் ஹாயா உட்கார்ந்துகிட்டு அழகழகான பாறைகளையும் மேகக் கூட்டங்களையும் விதவிதமா வரைஞ்சுகிட்டு தாலாட்டிக்கிட்டு, அக்கடான்னு கெடந்தமானா, இந்த ராஜ்ஜியம் என்ன கதியாவும்?”
புரிந்து கொள் – 2
என்னை சிஐஏ மேன்மேலும் சோதனைகள் நடத்துவதற்குப் பயன்படுத்த விரும்பலாம், மற்ற நோயாளிகளையும் அவர்கள் எப்படி செயல்படுகிறார்கள் என்பதைப் பொறுத்து இப்படியே பயன்படுத்த விரும்பும். அதற்குப் பிறகு வெளியாட்களில் தானாக முன்வருபவ்ர்கள் சிலரை சிஐஏ பொறுக்கி எடுத்து, அவர்கள் மூளைகளுக்குப் பிராணவாயு கிட்டாமல் அடைத்து வைத்து சேதமாக்கி, பின் மீட்டு எடுக்க ஹார்மோன் கே சிகிச்சை அளிக்கும். எனக்கு சிஐஏ உடைய சொத்துப் போலாக விருப்பமில்லை.
புரிந்து கொள்
மோசமான கனாக்கள் வருவது நின்ற பின் நான் கொஞ்சம் ஓய்வெடுக்க முடிந்தது. முதல் மாறுதல் நான் கவனித்தது, நான் படிக்கிற வேகமும், படித்ததைப் புரிந்து கொள்கிற வேகமும் மிகவும் கூடியிருந்தன. சீக்கிரம் ஏதோ ஒரு நாளைக்குப் படிக்க வேண்டும் என்று அலமாரியில் நாட்களாய் தொடாமல் வைத்திருந்த புத்தகங்களை எல்லாம், படிக்கக் கடினமாய் மிக டெக்னிகலாக இருந்த புத்தகத்தை எல்லாம் படித்து முடித்திருந்தேன்.
சிறை எண் – 1
போலிஸ்காரர்கள் உணவகத்தில் தன்னைக் கைது செய்தபோது அவர்கள் பணத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்கு தெரியும் என்றும், அதனால் பணத்தைச் சுருட்டி ஆசன வாயில் வைத்துக் கொண்டதாகவும் ஈபோவில் சொன்னான்.“ஜெனரல் அபாச்சாவுக்கு நான் பணத்தை மறைத்து வைத்த சாமர்த்தியம் பிடித்திருந்தது. புது சிறைவாசிகளை அரைமணி நேரம் தோப்புகரணம் போடச் சொனான். என்னைப் பத்து நிமிடத்தில் விட்டுவிட்டான்”
கடைசி வெற்றி
கடந்த ஏப்ரல் மாதம் மறைந்த சிறந்த இங்கிலாந்து எழுத்தாளரான J.G.பல்லார்ட் எழுதிய கடைசிச் சிறுகதையின் மொழிபெயர்ப்பு இது: ”…அவளுடைய இந்த அவமதிப்பால் கோவப்பட்டு, வேகமாக சுவற்றைத் தள்ளினேன். அதுவோ லேசில் பிடி கொடுக்கவில்லை. ஆனால் கைகளை விலக்கிய பின்னரே கவனித்தேன். சுவற்றின் மேல்பரப்பில் உதிர்ந்த சுண்ணாம்புத் துகள்களுக்கு மத்தியில் மெலிதான ஒரு விரிசல்! ஆர்வமாக மீண்டும் தள்ளினேன். விரிசல் பிளவாக அகண்டது. நத்தை வேகத்தில் நகரத் தொடங்கிய பிளவு, பின் புலி போல மேல் நோக்கி பாய்ந்தது. மூன்று அடிகள் நீண்டு, அலங்காரப் பூச்சுகளை எல்லாம் தாண்டி, முதல் மாடியில் உள்ள தடுப்புக் கம்பியை நெருங்கியது.”
ஆகஸ்ட் மாதப் பேய்கள்
அந்த மாளிகைக்கு ஒரு வயதான பாட்டி சரியான வழியைக் காட்டினாள். மாளிகையில் அன்று இரவைக் கழிக்கும் எண்ணமுண்டா என அந்தப் பாட்டி கேட்டாள். அங்கே மதிய உணவுக்கு மட்டும் செல்வதே எங்கள் நோக்கமெனக் கூறி பாட்டிக்கு விடைகொடுத்தோம். `அப்படியென்றால் சரி. ஏனென்றால் அது ஒரு பேய் வீடு` என பயங்காட்டினாள் பாட்டி.
ஹாரிசன் பெர்ஜரான்
2081-ஆம் ஆண்டு. எல்லோரும் ஒருவழியாக முழுமுற்றான சமத்துவத்தை அடைந்து இருந்தனர். கடவுளின் முன்போ, சட்டத்தின் முன்போ மட்டுமே கட்டுப்பட்ட சமத்துவம் இல்லை அது. எல்லா நிலைகளிலும் அனைவரையும் முழுமையாக ஒருமைப்படுத்திய அதிசயம் அது. யாரும் யாரை விடவும் புத்திசாலியாக இல்லை, அழகாகவும் இல்லை. அவ்வளவு ஏன், எந்த ஒருவரும் மற்றவரை விட அதிக வலிமையும், சுறுசுறுப்பும் கூட கொண்டு இருக்கவில்லை.
