பீட்டரின் அப்பா யார் என்று தெரியாது. ஆனால் லூர்தின் கணவனைத்தான் அப்பன் என்று பீட்டர் சொன்னான். லூர்தின் கணவன் மாற்றாந்தந்தை என்றும் கிடையாது. அவன் ஊர்மேய்பவனும் கிடையாது. லாரியில் கிளீனர் வேலை. முன்பு லாரி டிரைவராக இருந்தவன். கிளீனர் வேலை என்பது கொஞ்சம் தொந்தரவு இல்லாத வேலை அவனுக்கு. லாரி ஓட்டும் டென்ஷ்ன் இல்லை. டிரைவர் தூங்காமல் இருக்க பேச வயசானவனாய் அருகே கிளீனர் வேலை ஸ்தானம்.
Category: இதழ்
வீட்டுக்கு வடக்காய் பனிக்குவியல்கள்
இரவெல்லாம் கடல் எழுந்து விழுகிறது, நிலவு
இணைவற்ற சுவர்க்கங்களின் ஊடாய் தனியாக செல்லும்.
ஷூவின் பெருவிரல் பகுதி தூசில்
மையங்கொண்டு சுழலும் …
மாற்றலும், வீடு பேறும்
என் மாமனார் கட்டிய வீடு ஸ்ரீரங்கத்தில் இருக்கிறது. அதில் அவரது பெயர்ப் பலகையோ அல்லது வீட்டினுள் அவரது புகைப் படமோ இராது. அவரது மகள், மருமகன்(நான்), பேத்தியின் புகைப்படங்களே சுவர்களில் இருக்கும். வீட்டின் கீழ்ப்பகுதியில் குடியிருப்பவர் பொறுப்பில்தான் காம்பவுண்ட் சாவி, தண்ணீர் மோட்டார் ஸ்விட்ச் எல்லாம் இருக்கும். அவர் மரணத்தின் போது பத்து வருடங்களுக்கு முன் அங்கு குடியிருந்தவர் வந்து, சொந்தத் தகப்பனைப் பறிகொடுத்த பிள்ளை போல, கதறி அழுத போது நாங்கள் எல்லோரும் கலங்கிப் போனோம்.
மருந்து இருந்தால் சொல்லுங்கள்!
விஞ்ஞானிகள் ஓய்வாக இருக்கும்போது ஒரு கையால் தாடியையும் மறு கையால் மனச்சாட்சியையும் கோதிக்கொண்டு யோசிக்க வேண்டும். புகையிலை, ஆஸ்பெஸ்டாஸ் போன்றவைகளால் கான்சர் வருகிறது என்ற உண்மை விஞ்ஞானிகளுக்கு விரைவிலேயே தெரிந்துவிட்டது. ஆனால் அது பரவலாக வெளியே வருவதற்குப் பல பத்தாண்டுகள் ஆயிற்றே, ஏன் ? அரசல் புரசலாக உண்மையைப் பேச முயன்றவர்களையும் ‘பூ பூ !!’ என்று கத்தி வாயடைத்து உட்கார்த்தி வைத்துவிட்டார்களே, அதுதான் ஏன் ? காரணம், இவற்றைத் தயாரிக்கும் மெகா கம்பெனிகள். அவற்றின் கிகா வருமானம் !
தொல்காப்பியத்தில் இடைச்செருகல்களா?
தொல்காப்பிய உரையாசிரியர்கள், தங்களின் உரைகளில் வர்ணாஸ்ரமக் கோட்பாட்டைப் புகுத்திவிட்டார்கள் என்றால் தொல்காப்பியத்தில் அக்கருத்துகள் இல்லை என்று பொருள். ஆனால், தொல்காப்பியப் பதிப்புகள் அனைத்திலுமே அக்கருத்துகள் காணக் கிடைக்கின்றன.
பொட்டுக்கட்டப்பட்ட தேவதாசியாக மறுக்கும் ஒரு தலித் பெண்
பொட்டுக் கட்டுதல், தலித் என்று சொன்ன மாத்திரத்திலேயே அச் சொற்கள்
நம்மில் எழுப்பும் பிம்பம், பின் ஒரு செடல் அச்சமூகத்தின் கட்டுப்பாட்டை எதிர்த்து தானே தன் வாழ்க்கையை அமைத்துக் கொள்வாள் என்னும் சாத்தியங்கள் பற்றியெல்லாம் நமக்கு முன் தீர்மானமான சித்திரங்கள் உண்டு. அதை உடைக்கிறது இமையத்தின் செடல் நாவல். அதை இமையம் குரல் எழுப்பாமல், நாடகமாக்காமல், அடங்கிய குரலில், ஆவணப் படுத்தப்பட்ட ஒரு சமூக நிகழ்வு
என்று சொல்லத்தக்க நம்பகத் தன்மை கொண்ட, ஒரு கலைஞனுக்கே சாத்தியமாகும் ஒதுங்கி நின்று சொல்லும் குரல் இது. தலித் அரசியலும் சொல்ல விரும்பாத, சொல்வதைத் தவிர்க்கும் குரல் இது.
நம்பி தெரு, நம்பிக்கை விநாயகர்
நம்பி தெருவில் அந்த பிரசித்தி பெற்ற பிள்ளையார் கோயிலுக்குப் பக்கத்தில் சென்றபோது பல கேஸ் சிலிண்டர்கள் அடுக்கப்பட்டு பிள்ளையார் ஒளிந்துக்கொண்டு இருந்தார். கோயில் பக்கத்தில் ஒரு பழைய கட்டிடம் மூடியிருந்தது, பக்கத்தில் இருந்தவரிடம் அது என்ன என்று கேட்டேன் “அது ஏதோ பழைய மண்டபம், இப்ப அது உரம் வைக்கற கோடவுனாக இருக்கிறது” என்றார். அந்த கோடவுன் மீது ஏதோ 3வது வட்ட தலைவர் பெயர் எழுதியிருந்தது.
பேராசிரியர்.ரிஸ்க்(Risk)
நம் பிரக்ஞையின் எச்சரிக்கை உணர்விற்கும் அபாயத்தைத் தீண்டிப் பார்க்கும் ஆவலுக்குமிடையே ஆடும் ஊசலாட்டத்தைச் சொல்லில் வடிப்பது கடினம்தான். ஆனால் அதீத எச்சரிக்கை உணர்வு ஒரு கட்டத்தில் நமக்கு மிகப்பெரிய ஆபத்தைக் கொண்டுவந்து சேர்க்கும் என்கிறார் இந்தப் பேராசிரியர். இவர் பெயர், பேராசிரியர்.ரிஸ்க்(Risk)
மூன்று கனவுகள்
”வெளிய நல்ல மழைப்பா. குளிர் வெடவெடங்குது…” வழக்கம்போல ஒராள் பருவநிலை பத்திப்பேச மற்றவர்கள் கண் தன்னைப்போல ஜன்னல்பக்கம். கிரனோவ் தலையை நிமிர்த்தியபோது கழுத்துச் சுருக்கத்தில் நரம்பு விண்ணென்று புடைத்தது நீலமாய். அப்படியே தலையணையில் பின் சரிந்தார். மருந்தை சொட்டு எண்ணி தம்ளரில் விட்டபோது அவள் உதடுகளை சேஷ்டை செய்தாள். அடர்த்தியான கருங் கூந்தலில் மழை முத்துக்கள். கண்ணின் கீழே நீலமாய் என்ன அழகான நிழல்கள்!
பண்பாட்டைப் பேசுதல் – ஒரு பார்வை
கோயில் பற்றி பேசுவது எப்போதும் சுவாரசியமான விஷயம். கோயில், வெறும் வழிபாட்டுத் தலம் அல்ல. ஒரு சமூகத்தின் அரசியல்,நிர்வாகம், வரலாறு, கலை, பண்பாடு ஆகியவற்றை சுமந்து நிற்கும் காலப் பெட்டகம். கோயிலும், கோயிலைச் சுற்றிய மாட வீதிகளும் அதன் கட்டமைப்புகளும் சமூகத்தில் ஆன்மீகத்திற்கு இருந்த உன்னத நிலையை பளிச்சென்று சொல்லிவிடுகின்றன. இந்து சமூகத்தை வேரோடு அழிப்பதற்கான செயல்திட்டம், அதிகார பீடங்களாக இருக்கும் கோயில்களை அழிப்பதில் இருந்தே ஆரம்பிக்கப்படவேண்டும் என்பது கைபர் கணவாயில் உள்நுழைவதிலேயே முடிவு செய்யப்பட்டுவிடுகிறது.
மண்விழுதில் நுண்ணுயிரிகள்
ஆனால் ஒரு தாவரத்துடன் எந்த இனவகையிலும் பொருந்தாத ஒரு பூஞ்சையை, ஒரு கிருமியை அதன் பாரம்பர்ய குணக்கூறை மலடாக்கிவிட்டு அதைச் செலுத்துவது மரபியல் ஒழுக்கமா? இப்படி ஒரு ஒழுக்கங்கெட்ட விதைதான் மரபணு மாற்ற விதை. தமிழ்நாட்டில் கோவை வேளாண்மைப் பல்கலைக்கழகப் பேராசிரியர், மாலிக்யுலர் பயாலஜி கற்றவர் – பிட்டி கத்தரிக்காய் விஷமில்லை என்று கூறியதற்கு சந்திராயன் மயில்சாமி அண்ணாத்துறை ஒத்து ஊதியுள்ளார். மயில் சாமிக்குச் சந்திரனைப் பற்றித் தெரிந்த அளவு, பூமியைப் பற்றி எதுவும் தெரியாது என்று புரிகிறது. பூமியைப் பற்றி அவர் ஏன் கவலைப்பட வேண்டும்? சந்திரனில் தங்க இடம் ஒதுக்கிவிட்டாரோ!
திராவிட-ஹரப்பன் தொடர்பு? ஆய்வுமுறைச் சிக்கல்கள்
சிந்து நாகரிகம் மீதான திராவிடர்களின் உரிமை குறித்த கருத்துக்கள், ஆரிய படையெடுப்புக் கோட்பாடு குறித்த காலனிய ஆராய்ச்சிகளின் எஞ்சிய மிச்சங்களே. ஆரிய படையெடுப்பு குறித்த ஆராய்ச்சிகளின் தொடர்ச்சியாக விளங்குவதால் இன்று வரை இவை உயிர்ப்புடன் உள்ளது. ஒரு சில சித்தாந்தங்களின் துணையுடன் இந்த ஆராய்ச்சிகள் அசைக்க முடியாத தூணைப் போல் நிறுவப்பட்டுள்ளது. “ஆரிய இனம்” அல்லது “திராவிட இனம்” என்ற ஒன்று எப்போதும் இருந்ததில்லை. எப்போதும், அந்த கருத்துருக்களுக்கு அறிவியல் ரீதியான விளக்கங்கள் அளிக்க முயலும் யாரும், அத்தகைய ஒன்று என்றுமே இருந்ததில்லை என்பதை வெகு விரைவில் கண்டுகொள்கிறார்கள்.
டிஜிட்டல் இசைப் புரட்சியின் தாக்கம்
புதிய இசையமைப்பாளர் விஜய் ஆண்டனி சமீபத்தில் ஒரு பேட்டியில் தான் ஒரு ஒலி பொறியாளராக இருந்ததை பெருமையாக சொல்லிக் கொண்டார். இன்று ஒலிச் சேர்க்கை மற்றும் மின்னணு ஒலி பற்றிய அறிவு, இசை அறிவுக்கேற்ற அளவு முக்கியமாகிவிட்டது. ஒரு இசையமைப்பாளர் இசை அறிவைப்பற்றி கவலைப்படும் முன் மின்னணு ஒலி அறிவுத் திறனாலேயே அளவிடப்படுகிறார். ரஹ்மான் போன்ற இசையமைப்பாளர்கள் பாதி ஒலி பொறியாளர்களாகவும் பணி செய்யும் திறனே இதற்கு காரணம்.
கார்ட்டூன் – இதழ் 15
கந்தர்வ கானம் – G.N.B நூற்றாண்டு மலர்
2009-ஆம் வருடம் ஜி.என்.பாலசுப்ரமணியத்தின் நூற்றாண்டு. அதை முன்னிட்டு ஒரு ‘கந்தர்வ கானம்’ என்றொரு சிறப்பிதழ் ஜனவரி முதல் வாரத்தில் வெளிவருகிறது. இசை ஆர்வலர், எழுத்தாளர் லலிதா ராமும், ஸ்ருதி இதழின் எடிட்டர் V.ராம்நாராயணன் இருவரும் இணைந்து இப்புத்தகத்தைத் தொகுத்திருக்கிறார்கள். இப்புத்தகத்தில் இதுவரை ஜி.என்.பி எழுதி வெளிவராத மூன்று கட்டுரைகளும், அவர் ஒரு ரசிகருக்காகப் பாடிய இறுதிக்கச்சேரியின் குறுந்தகடும் இடம்பெறுகின்றன.
செய்தி
“மிஸ்டர் ஐயர், மிஸ்டர் பிள்ளை. இதில் ஏதோ செய்தி இருக்கிறது. எதோ போதம் கேட்கிறது. எனக்கு ஒரு செய்தி; எந்த உலகத்திலிருந்தோ வந்த ஒரு செய்தி கேட்கிறது, அந்தப் போதத்தில்தான் திளைத்துக்கொண்டிருக்கிறேன். இன்னும் எனக்கு வேகம் அடங்கவில்லை. செய்திதான் அது. எனக்காக அனுப்பிய செய்தி. உலகத்துக்கே ஒரு செய்தி. உங்கள் சங்கீதத்தின் செய்தி அது!”
கல்யாணி
வயலின் கச்சேரி செய்றது அவ்வளவு சுலபம் இல்லை. வாய்ப்பாட்டுனா பரவாயில்லை வயலினில் எல்லாம் ஜனங்களுக்குத் தெரிஞ்ச பாட்டா வாசிக்கணும். தெரியாத பாட்டு வாசிச்சா கேண்டீன் பக்கம் காப்பி சாப்பிடவோ, அல்லது சபா வாசல்ல கொடுக்கற மாம்பலம் டைம்ஸ், சென்னை டைம்ஸ் படிக்க ஆரம்பிச்சுடுவா. ஒரு மணி நேரத்துல ராகம் தானம் பல்லவி எல்லாம் நோ சான்ஸ். டைம் கொடுத்தாலும் எனக்கு வாசிக்கத் தெரியாது.
ஒட்டகம் கேட்ட இசை
வேலைக்குச் சேர்ந்து நாலைந்துமாத சம்பளங்களுக்குப் பிறகு, ஒரு சின்ன கைக்கடக்கமான வானொலிப்பெட்டியை வாங்கினேன். பின்னிரவு நேரங்களில் இலங்கை, சென்னை நிலையங்களிலிருந்து ஒளிபரப்பாகும் பாடல்களால் என் நெஞ்சை நிரப்பிக்கொள்ள அது எனக்கு உற்ற துணையாக இருந்தது. என் தலையணைக்குப் பக்கத்தில் ஒரு சின்ன பூனைக்குட்டிபோல அதுவும் படுத்திருக்கும். ஒவ்வொரு பாடலையும் கேட்கும்போதெல்லாம் உருகிக் கரைந்துபோவதுபோல இருக்கும். காற்றிலே ஒரு மெல்லிய ஆடை நழுவிப் பறந்து வந்து நமக்குத் தெரியாமலேயே நம்மீது படிந்து மூடியதுபோல ஆறுதலாக இருக்கும்.
’How to name it’ – இருபதாண்டுகளாகத் தொடரும் மெளனப்புரட்சி
அசோகமித்திரனின் ‘காலக்கண்ணாடி’ கட்டுரைத் தொகுப்பில் இருக்கும் ஒரு கட்டுரை ஓரளவு இந்நிகழ்வை நமக்காகப் பாதுகாத்திருக்கிறது. அழைப்பு விடுத்திருந்த கர்நாடக இசைக் கலைஞர்கள் யாருமே அந்த வெளியீட்டுக்கு வரவில்லை என மேடையில் வருத்தத்துடன் இளையராஜா தெரிவித்ததாக இந்தக் கட்டுரையில் உள்ளது. இந்தத் தொகுப்பில் உள்ள அனைத்துப் பாடல்களும் கர்நாடக சங்கீத ராகங்களை அடிப்படையாக கொண்டவை என்றாலும், கர்நாடக இசைக் கலைஞர்கள் இதைக் கண்டுகொள்ளவேயில்லை என்பதையும் இளையராஜா பின்னர் கூறியுள்ளார்.
பட்டம்மாள் – ஒரு சமூக நிகழ்வு
பட்டம்மாளின் முயற்சிக்குத் தன் பரிபூரண ஆதரவு உண்டு என்பதைத் தெரிவிக்கும் வகையில் கிருஷ்ணசாமி தீட்சிதரே பட்டம்மாளின் கச்சேரிகளுக்குத் தம்பூராவும் மீட்டினார்! பட்டம்மாள் இறுதிவரை ஒரு பெரும் தேசியவாதியாகவே இருந்தார். 1947-இல் சுதந்திரதினத்தன்று ஆல் இந்தியா ரேடியோவில் அவர் பாரதியாரின் தேசபக்திப்பாடல்களைப் பாடினார். அதற்காக அவருக்குத் தரப்பட்ட சம்பளத்தை வலுக்கட்டாயமாக வாங்க மறுத்து விட்டார். அப்பாடல்களைப் பாடியதைத் தன் தேசக்கடமையாகக் கருதினார் பட்டம்மாள். ஆணாதிக்க சமூகத்திலிருந்து மீண்டெழுந்த பட்டம்மாள் தன் குடும்பத்திலேயே இசைக்கு ஒரு பெரிய குருவாக விளங்கினார். தன் சகோதரர்கள் டி.கே.நாகராஜன், டி.கே.ஜெயராமன் இருவரையும் தேர்ந்த இசைக் கலைஞர்களாக்கினார். பட்டம்மாளின் குரல் நமக்குக் கேட்கக் கிடக்காத ராஜம்மாளின் குரல்; சமையலறைக்குள்ளேயே சிறு முனகலாகவும், ஆலாபனையாகவும் முடங்கிப்போன பெண்களின் குரல்; சமூக மாற்றத்தை முன்வைத்ததொரு தலைமுறையின் எளிய மனிதர்களின் குரல்.
குறைந்த வயது – முதிர்ந்த பாட்டு
கே.வி.நாராயணசாமி நினைவாக நடந்த அந்தக் கச்சேரியில் விரிவாக காபி ராகத்தைப் பாடி, “இந்த சௌக்ய” பாடினார். அன்றிலிருந்து, வாய்ப்பு கிடைக்கும் போதெல்லாம் கேட்டு வருகிறேன். பாட்டில் வயதுக்கு மீறிய முதிர்ச்சி. நல்ல அழுத்தம். கனமான சாரீரம் இருந்தும், குரலின் ஆற்றல்களைக் காட்டுவதில் கவனம் செலுத்துவதை விட, பாவப் பூர்வமாய் பாடுவதில் கவனம் செலுத்துகிறார். சொல்வனத்துக்காக இவரோடு நடத்திய உரையாடல் இது.
வயலின் 35 லட்சம் டாலர், வசூல் 32 டாலர்!
பயிற்சிதான் ஒருவரை சிறந்த இசைக் கலைஞராக ஆக்குகிறது. எவ்வளவு பயிற்சி செய்ய வேண்டும் என்பதையும் குத்து மதிப்பாகக் கணக்கு போட்டுச் சொல்ல முடியும் : ஒருவர் தன் வாழ்க்கையில் பத்தாயிரம் மணி நேரம் கடுமையாகப் பயிற்சி செய்தால் ஏறக் குறைய மாஸ்ட்ரோ ஆகிவிடலாம். அரியக்குடி, குன்னக்குடி போன்றவர்கள் முதல் ஏ.ஆர்.ரஹ்மான் வரை யாரை வேண்டுமானாலும் கேளுங்கள்;
தனிப்பாடல்
வண்ணங்கள் அவன் மனதில் ஓசைகளாய் ஒலித்தன என்பதைய் அவன் கண்டான். கோடைக்காலச் சூரிய ஒளி வீறிடும் சுரம். குளிர்கால நிலவொளி மெலிவான சோகப் புலம்பலொலி. வசந்தத்தின் புதுப்பச்சை கன்னாப்பின்னா தாளங்களில் முணு முணுப்பாயிற்று (ஆனாலும் காதில் விழுந்தது.) இலைகளூடே மின்னித் தெறித்து ஓடும் செந்நரியோ அதிர்ச்சியில் திக்கித் திணறும் மூச்சொலி. அத்தனை ஒலிகளையும் அவன் தன் வாத்தியத்தில் வாசிக்கப் பழகினான்.
மகரந்தம்
மொழியறியாவிட்டாலும் தியாகராஜரின் உணர்ச்சிகளை நம்மால் உணர்ந்து கொள்ள முடிவதன் காரணம் என்ன? இசைக்கும் மானுட உணர்ச்சிகளுக்கும் ஆதாரமான தொடர்பு இருக்கக் கூடுமா? அதனால்தான் நமக்கு இசை அங்கெங்கினாதபடி காலை நம்மை எழுப்பும் அலாரக்கடிகாரம் முதல் செல்போன் ரிங்டோன், காரின் ரிவர்ஸ் கியர் என எல்லா இடத்திலும் தேவைப்படுகிறதா?
புலியும், புலிக்குட்டியும்
பிரபல வயலின் கலைஞர் எல்.சுப்பிரமணியமும் அவரது மகன் அம்பி சுப்பிரமணியமும் வழங்கும் வயலின் இசைப் பிரவாகம்.
கர்நாடக சங்கீதம் – சில Flickr தருணங்கள்
கர்நாடக சங்கீதம் பாடுவது எளிதான விஷயம் என்று யார் சொன்னது? கீழே உள்ள புகைப்படங்களைப் பாருங்கள். Flickr புகைப்படத்தளத்தை வலம் வந்தபோது கிடைத்த புகைப்படங்கள் இவை. (புகைப்படங்கள் copyright விதிமுறைகளுக்குட்பட்டவை. புகைப்படம் எடுத்தவர்களை அணுகி அனுமதி பெற்றே உபயோகிக்க வேண்டும்).
அரியக்குடி – கலைஞர்களைக் கவர்ந்த கலைஞர்
வெகுஜனங்களின் மனங்களைத் தன் இசையாற்றலால் கொள்ளை கொண்டதைப் போலவே, பிற கர்நாடக சங்கீத மேதைகளின் மனதையும் கொள்ளை கொண்டவராக இருந்தார் அரியக்குடி ராமானுஜ ஐயங்கார். ஐயங்காரைக் குறித்து வியப்போடு பேசாத இசைக்கலைஞர்களை விரல்விட்டே எண்ணிவிடலாம். பாலக்காடு மணி ஐயர், முசிறி சுப்ரமணிய ஐயர், G.N.பாலசுப்ரமணியம் இந்த மூவரும் வெவ்வேறு சமயங்களில் அரியக்குடி ராமானுஜ ஐயங்காரைக் குறித்து எழுதியவற்றை சொல்வனம் வாசகர்களுக்காகத் தொகுத்துத் தருவதில் பெரும் மகிழ்ச்சி அடைகிறோம்.
திருவையாறு – காவிரிக்கரையிலிருந்து சில இசை நினைவுகள்
திருவையாறு இசைக்கல்லூரியின் ஓய்வுபெற்ற முதல்வரான Dr.ராம.கெளசல்யா தான் இசைக்கல்லூரியில் பயின்ற அனுபவங்களையும், அக்கால இசைச்சூழலையும் சொல்வனம் வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கிறார். “எல்லா ராகமும் இப்படித்தான். ஸ்வரஸ்தானம் என்பது ஒரு அடையாளம்தான். ராகம் தேவதை. அதன் ஸ்வரூபத்தை நினைத்துப் பாடவேண்டும். எந்த ஸ்வரஸ்தானத்திற்கும் ஒரு ராகத்தில் நிரந்தரமாக இடம் கிடையாது.”
‘சத்யஜித் ராய்’ என்றொரு இசை ஆளுமை
ராயின் உரையாடல்கள் மேற்கத்திய செவ்வியல் இசையுடன் தொடர்புடையதாகவே இருக்கும். ஒரு முறை அவர், 10-ஆம் நூற்றாண்டு இந்துக் கோயிலான கொனார்க்கை, ‘இந்திய சிறபக் கலையின் B-minor’ என்றழைத்தார். சில சமயங்களில் மேற்கத்திய செவ்வியல் இசையை, தனக்கே உரித்தான வகையில் தன் திரைப்படங்களுக்கு அவர் உபயோகிப்பதுண்டு. இசைக் கருவிகளின் சேர்க்கையை குறித்து கவலை கொள்ளாத, மரபுகளை மீறிய கடுமையுடன் வெளிப்படும் அவரது இசை, மேற்கத்திய சூழலில் ”ரேயின் இசை” என்றழைக்கப்பட்டு, அவருக்கான ஒரு தனித்தன்மையை நிறுவியது.
தாமரை பூத்த தடாகம்
காருகுறிச்சி வாசிக்கும்போது அவருடைய கழுத்து படம் எடுக்கும் பாம்பினுடையதுபோல உப்பிப் பெருக்கும். ஒரு திகில் நாவல்போல அடுத்து என்ன வரப்போகிறது என்ற எதிர்பார்ப்பு இருக்கும். தவில் வாசிக்கும் தட்சிணாமூர்த்திக்குகூட அவர் என்ன வாசிப்பார் என்பது தெரியாது. என்னுடைய இசைப்பயிற்சியை வேலுச்சாமி அங்கேதான் நடத்துவான்.
சுசீலா ராமன்
சுசீலா ராமனின் இசைத்தொகுப்புகள் நியூ எஜ் கர்நாட்டிக் பிரிவில் சேராதவை. ஆனால் அந்த இசையை சிடி ப்லேயரில் இயக்கவிட்டதும், நான் வியப்பில் ஆழ்ந்துபோனேன். கர்நாடக இசை, வ்யூசன்(fusion) இசை முயற்சிகள் தவிர்த்து வேறு இசைப்பிரிவில் முன்முயற்சிகள் செய்யும் சாத்தியங்கள் அற்றது அல்லது கர்நாடக இசைக்கலைஞர்கள் சிந்தனையிலும் கர்நாடகமாக இருந்து மரபுக்குள் சிக்கி புதிய தளங்கள் நோக்கிப் பயணிக்காதவர்கள் என்று எண்ணியிருந்த எனது கருத்தை உடைத்தது அவரது இசைத்தொகுப்பு.
‘குருவே சரணம்’ – கிளாரினெட் கலைஞர் ஏ. கே. சி. நடராஜன்
அப்போது எனக்கு சுசீந்தரத்தில் வாசிக்க ஒரு வாய்ப்பு வந்திருந்தது. அங்கு நான் இருக்கும் போது ஒரு தந்தி வந்தது. அதில் டிசம்பர் 25ம் தேதி ராஜரத்தினம் பிள்ளையின் இடத்தில் அதாவது இரவு 9.30 மணிக் கச்சேரியில் மியூசிக் அகாடமியில் என்னை வாசிக்கச்சொல்லி. முக்கியமான நேரம், இரவுக் கச்சேரி, அதுவும் குருநாதர் வாசிக்கயிருந்த இடத்தில். என் மனதில் துயரமும் சந்தோஷமும் மாறி மாறி வந்தது. குரு இறந்துவிட்ட வருத்தம் ஒருபுறம் என்றால், அவரின் இடத்தில் என்னை வாசிக்கச் சொல்லும்போது கிடைக்கும் ஒரு பெருமை.
லோகநாயகி டீச்சரும், லலிதா ராகமும்
‘ஏய் . . . இந்த லலிதா, மாயாமாளவகௌளைக்கு கூடப் பொறந்த தங்கச்சில்லா!’ என்றார். உடனே வயலினை எடுத்துக் கொண்டார். மிக எளிமையாக இந்த இரண்டு ராகங்களுக்குமான வித்தியாசத்தை வாசித்துக் காட்டினார். ‘இப்பொ வெளங்குதா?’ என்றவர் என் பதிலுக்குக் காத்திராமல், ‘ஒனக்குத்தான் இன்னொரு வாத்தியார் இருக்காம்லா! அவன்ட்டதான் ஒரு வண்டிக்கு இருக்குமே.
போய் கேளு’ என்றார். அவர் சொன்ன அந்த இன்னொரு வாத்தியார் இளையராஜா.
ஆனந்த்-40 – ஒரு ரசிகானுபவம்
ஆனந்தின் சிறப்பு அவரது வேகம். அந்த வேகத்துக்குக் காரணம், அவருக்கு இருக்கும் அபாரமான உள்ளுணர்வு. ஒரு நகர்த்தலை, அதன் ஆழங்களுக்குச் செல்லாத போதும் கூட சரியானதா, இல்லையா என்று உணரச் செய்யும் உள்ளுணர்வு அபாரமானது. இந்த முறையில் விளையாடுவது, ஒரு சாதாரணனுக்கு மிகவும் அபாயகரமாக முடியக் கூடும்.
பரிணாமமும் பரோபகாரமும்!
வீட்டில் தம்பி தங்கைகளுடன் சாக்லெட்டைப் பகிர்ந்து கொள்ள முன்வராத குழந்தைகள் கூட, பள்ளிக்கூடத்தில் சடையப்ப வள்ளல் மாதிரி நடந்து கொள்வதும் கவனிக்கப்பட்டிருக்கிறது. குழந்தை வளர வளர, அதுவும் நம்மைப் போல் மாற ஆரம்பிக்கிறது; உதவி செய்யும் மனப்பான்மை குறுகத் தொடங்குகிறது.
சுந்தரம் ஐயங்காரின் கருணை
ஒரு வருடத்தில் அநேகமாக எல்லா சைக்கிள்களும் தத்தம் அடையாளங்களை இழந்து வெள்ளைச் சேலை கட்டிக் கொண்டன. வாத்தியாரின் மகன் என்பதால் ‘இந்த செறுக்கியுள்ளைய அப்படியே பொத்தாமரைக் குளத்துல கொண்டு தள்ளீறணும்ல’ என்று அவர்களுக்குள் பேசிக் கொண்டு வெளியே சொல்ல தைரியமில்லாமல் ‘ஒனக்கில்லாத சைக்கிளா, எடுத்துக்கோடே’ என்று ரத்தக் கண்களோடு அந்த மாணவர்கள் சைக்கிள் சாவியைக் கொடுத்துவிட்டு மனதுக்குள் குமுறினர்.
Y2K நெருப்பும், தொடரும் புகைமூட்டமும்
வெகுஜன மக்கள் பொதுவாக எந்த ஒரு விஷயத்தையும் எளிமைப்படுத்தி சொல்வதையே விரும்புகிறார்கள். இதன் முக்கிய விளைவு? துறைசார் அறிவு, துறை சாராதவர்களிடமிருந்து பெறப்படும் நிலை. உதாரணம் : இனம்/இந்திய வரலாறு குறித்த பாடம் எடுத்த அரசியல்வாதிகள், சினிமா உட்பட அனைத்தும் அறிந்தவனாக அறிவித்துக் கொள்ளும் கலைஞானிகள், விஞ்ஞானத்துடன் இணைத்துக் கொண்ட மதவாதிகள். இப்படி நீண்டபடியே இருக்கிறது இந்தப் பட்டியல். இதனால் சொல்பவர்களுக்கு காலப்போக்கில் ஒரு ஒளிவட்டமும், அதிகார பீடமும் நிச்சயம். கேட்பவர்களுக்கு? காதுல பூ!!
புரிந்து கொள் – 4
அண்டப் புளுகை அவிழ்த்து விடும் விளம்பரங்கள் மனிதர் அறிவை முடக்கப் பயன்படுத்தும் உத்திகளைப் போன்ற புத்தியைக் கட்டுப்படுத்தும் சக்திகளை நான் வளர்த்துக் கொண்டிருக்கிறேன். முழுக்க உடல் வழியே மட்டும் வெளிப் போகும் அலைவீச்சுகளை நான் கட்டுப் படுத்தி இருப்பதால், பிறரிடம் எதிர்பார்ப்புக்கு ஏற்றபடி கச்சிதமான மறுவினைகளை உசுப்பி எழுப்ப என்னால் இப்போது முடிகிறது. ஃபெரொமொன்களாலும்(வாசமுள்ள உடல் கசிவுகள்), தசை இறுக்கங்களாலும் என்னால் பிற மனிதரைக் கோபமூட்ட முடியும், பாலுறவுணர்வை அவரிடம் தூண்ட முடியும், பரிவுணர்வை அவரிடம் எழுப்ப முடியும். நண்பர்களாக்கவும், அவர்களை வசப்படுத்தவும் நிச்சயமாகவே முடியும்.
கார்ட்டூன் – இதழ் 14
ட்யூஷன் ஆசிரியரின் கவிதை
விடிகாலையில் பாடங்களை மீட்டும் வகுப்பு
ஒன்பது மணிக்கு குழு வகுப்பு
இரவில் விடைதிருத்தும் வேலை
சிவப்புப் பேனையிலிருந்து வழிவது
மனைவியின் முறைப்பு
இறந்த குழந்தைகள்
நீ பனிக்கட்டி மரங்களுக்குக் கீழ் நடக்கிறாய்
ஆனால் நீ பனிக்கட்டி பூக்களை விட அதிகம் ஜொலிக்கிறாய்
எனக்கு நாய்களின் குரைப்பு உன் அமைதியை விட
ஒன்றும் சத்தமாயில்லை.
மகரந்தம்
பொதுவாக நரமாமிசம் உண்ணும் காட்டுமிராண்டிகள் குறித்த ஜோக்குகளில் அவர்கள் ஆப்பிரிக்கர்களாகவே காட்டப்படுவது காலனிய பிரச்சாரத்தின் எச்சமாக பொதுபுத்தியில் இன்றும் வாழ்கிறது. ஆனால் அண்மையில் தெற்கு ஜெர்மனியில் அகழ்வாராய்ச்சியாளர்கள் கண்டடைந்த விஷயம் 7000 ஆண்டுகளுக்கு முன்னர் அங்கு வாழ்ந்த மக்கள் பெரிய அளவில் மனித மாமிசத்தை சடங்கு ரீதியாக உண்டார்கள் என்பதே.
வடூவூரார் படைப்புகள்
வடூவூராரின் நாவல்கள் மட்டுமின்றி அந்தக் காலத்திலும் பின்னர் அறுபதுகள் வரையிலும் கூட தமிழ் நாட்டில் நிலவி வந்த தேவதாசி முறையும், தாசிகளும் எழுத்தாளர்களின் நினைவுகளையும் கதைகளையும் பெரும் அளவில் ஆக்ரமித்திருக்கிறது. அந்தக் காலக் கட்டத்தில் தாசிகளின் நிலை குறித்தும், தாசிகளினால் ஏற்படும் சமுதாயக் கேடுகள், சமுதாயத்தில் அதனால் ஏற்படும் இழிவுகள், குடும்பங்களில் ஏற்படும் சீரழிவுகள் என்று தாசிகளைச் சுற்றியே அந்தக் காலத்தில் நிறைய நாவல்களும் நாடகங்களும் புனையப் பட்டுள்ளன.
அய்ன் ராண்ட் நாவல்கள் வழியாக முன்னிறுத்தப்படும் புறவயவாதம் – இறுதிப் பகுதி
யோசித்துப் பாருங்கள், உங்கள் பசிக்காகவும் உங்கள் குழந்தைகளின் நோய்க்காகவும், குடும்பத்தின் வறுமைக்காகவும் உங்களுக்கு ஒரு பணி வழங்கப்பட்டால் அது எப்படி உங்களுக்கு வழங்கப்பட்ட பணியாக இருக்க முடியும் ? அது பசிக்கும், நோய்க்கும், வறுமைக்கும் கிடைத்த வெற்றியே அன்றி மனிதனுக்கு கிடைத்த வெற்றி அன்று. இந்த பசியோ, நோயோ, வறுமையையோ நீங்கள் சாராதிருந்தால் உங்களுக்கு அந்த வேலை கிடைத்திருக்காது. உங்கள் திறமைக்கு வழங்கப்படும் பணியில் தான் உங்களால் சுய கௌரவத்தோடு தலை நிமிர்ந்து பணியாற்ற முடியும்.
யுவனின் பகடையாட்டம் – ஒரு பார்வை
வார்த்தைகளால் சொல்லி சொல்லி மாய்ந்து போய்விட்ட ஒரு விடயத்தை சொல்ல முயன்று தோற்று போகிற துயரம் ஒரு எழுத்தாளனுக்கு சுகமானதுதான். இயற்கையிடமும், பிரபஞ்சத்திடமும் கலை உணர முயன்று தோற்று போய்க்கொண்டேயிருக்க பிரபஞ்சம் வார்த்தைகளின்றி விரிந்து கொண்டேயிருக்கிறது. இவ்வளவுதான் சொல்லிவிட்டோம் என்று அவன் சாயும்போது அது விரிந்து அதன் புதுப்பகுதிகளை காட்டிக்கொண்டே நீள்கிறது.
எழுத்தோவியம்
ஆப்பிரிக்காவின் எல்லையற்ற பாலைவனங்களின் நடுவே திடீரென்று அதிசயங்கள் தோன்றுகின்றன. உள்ளே ஓடும் நதி கசிகிறது என்பார்கள். சிலர் ஆண்டவனின் அருட்கொடை என்பார்கள். விளைவு என்னவோ, நாற்புறமும் முகத்தில் அடிக்கும் வெண்மையான வெய்யலின் நடுவே ஒரு குளமும் அதனை சுற்றி மரங்களும் கொண்ட பாலைவனச் சோலை. குளம் பெரியதாகவோ அல்லது ஆழமானதாகவோ இருந்துவிட்டால் அதனை சுற்றி நகரம் உண்டாகிவிடுகிறது. நகரத்தில் மக்கள் நெருக்கமும் உண்டாகிவிடுகிறது.குளம் போதாமல் ஆகிவிடுகிறது. அடர்ந்த வீடுகளுக்கு நடுவே குறுகிய ஓடை போல தெரு ஓடுகிறது. இந்த பக்கத்து ஜன்னலிலிருந்து கையை நீட்டினால், எதிர்ப்புறத்திலுள்ள வீட்டை தொட்டுவிடலாம். மேலே நிழலாக துணிப்படுதா. அது போன்றதொரு தெருவில்தான் ஜன்னம் பிறந்தான்.
ராக்கெட் வண்டுகள்
தேன்கூட்டை உற்றுப் பார்த்தால் அதில் பல தேனீக்கள் டான்ஸ் ஆடுவதை நீங்கள் பார்த்திருப்பீர்கள். இந்த டான்ஸும் ஒரு வகை தகவல் பரிமாற்ற உத்தி. “என்ன நீ இன்னும் சாப்பிடலையா?” இன்னிக்கு காலைல குப்புசாமி வீட்டுக்குப் பக்கத்திலதான் பிரேக் ஃபாஸ்ட் சாப்பிட்டேன்” என்று வீட்டுக்குத் திரும்பிவரும் தேனீக்களூக்கு வாகிள் டான்ஸ்(Waggle Dance) மூலம் எங்கே உணவு இருக்கிறது என்று சொல்லுகிறது.
சொற்களின் நடனம்
குழந்தைகளின் உலகத்தில் தண்ணீருக்கு எப்போதும் முக்கியமான இடமுண்டு. தண்ணீரில் ஆடவிரும்பாத குழந்தையே உலகத்தில் இல்லை. குழந்தை மனத்தைத் தொட்டசைக்கிற சக்தி தண்ணீருக்கு இருக்கிறது. தண்ணீரை அள்ளிஅள்ளி நாலாபுறங்களிலும் சிந்தமுடியும் என்பதே குழந்தைக்கு பேரானந்தமாக இருக்கிறது.
உலக எய்ட்ஸ் தினம்
ஒவ்வொரு வருட டிசம்பர் ஒன்றாம் தேதி “உலக எய்ட்ஸ் தினம்”-ஆக கடைபிடிக்கப்படுகிறது. உலகமெங்குலும் இக்கொடிய நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் புகைப்பட தொகுப்பை இங்கே பார்க்கலாம்.
அனுஷ்கா ஷங்கர் – சங்கம இசை
அனுஷ்கா ஷங்கர், பிரபல சித்தார் கலைஞரான ரவிஷங்கரின் மகள். இவரது இசை ஆக்கங்கள் இவருக்கு உலகளாவிய புகழை பெற்றுத்தந்திருக்கிறது. ஒரு உலக விழவில் அவர் நிகழ்த்திய சங்கம இசை நிகழ்ச்சி
