இமயத்துக்கு அருகேவரை ஒரு இனிய பயணம்

வழியெல்லாம் பெருமலைகள் ஆபத்தான பள்ளத்தாக்குகள் என்பதால் வெயிற்காலங்களில் வரும் சுற்றுலாப்பயணிகளிடமிருந்து தப்பித்து நிற்கின்றது முன்சியாரி. ஊரை நெருங்கும்போதே தெரிந்துவிடுகிறது, இது உத்தராகண்டிலிருந்தும் தனித்து நிற்கும் பிரதேசம் என்று.

சொல்லப்படாத வம்சக் கதைகளின் முன்னோடி

’குண்டாற்றுக்கு அந்தப் பக்கம் நீ ஜமீந்தார் என்றால், இந்த பக்கம் நான் – உனக்கெதுக்கு தாரை தப்பட்டை’ என்று மேலக்கோட்டை கவுடர் ஜமீனை கேட்கும் அங்கப்பதேவரை, அங்கப்பர் என்று எழுதியிருந்தால் அல்லது முத்தையாத்தேவர் என்கிற ராஜாவை ’தாயோளி’ என்று திட்டி செருப்பால் அடிவாங்கிய தாசில்தார் நடராஜ ஐயரை நடராஜன் என்றூ எழுதியிருந்தாலோ அல்லது சோழமூக்கன் வழிவந்து பல தலைமுறைகளாக பிள்ளைமாராக வாழ்ந்த மேகநாதம்பிள்ளையின் அக்குடும்ப ரகசியம் உடைந்து போனபின்பு அக்குடும்பத்தில் கட்டிக் கொடுத்து வாழ்த்த பெண்கள் திருப்பி அழைத்துக் கொள்ளப் படுவதை, முத்தையா தேவரை கட்டிக் கொண்ட ஜெயலட்சுமி தனது குடும்பத்துடனான உறவுகளை அறுத்துக் கொள்வதை, ஜெயலட்சுமியின் அத்தை ராஜாவை (முத்தையாதேவரை) த் திட்டும்போது…