ஏ பெண்ணே

This entry is part 1 of 10 in the series ஏ பெண்ணே

என் வீட்டு வாயிற் கதவின் சங்கிலிகள் திறந்து விட்டன. கதவைத் தட்டும் சத்தம் கேட்ப தற்கு முன்பாகவே நான் வெளியே சென்றிருக்க வேண்டும்! ஆனால், நான்தான் பிடிவாதமாக நின்று கொண்டிருக்கிறேன் பெண்ணே! வியாதி வெக்கை தான் மனிதனின் மிகப்பெரிய எதிரிகள்! உடலையும் மனதையும், குயவன் சக்கரத்தை சுழற்றி மண்பானையை வனைந்து எடுப்பதைப்போல சுழற்றி விடும். உடலுக்கும் மனதுக்கும் இடையேயான உறவை சுக்குநூறாக உடைத்து போடும். ஏன், உடலுக்கே உரித்தான இயற்கையான மணத்தைக் கூட அவை விட்டு வைப்பதில்லை. மருந்துகள் ரத்தத்தில் கலக்கும்போது, உடல் காய்ந்த சருகைப் போல இளைத்து விடுகிறது. என் தலைக்குள் என்ன நடந்துகொண்டிருக்கிறதென்று எனக்கே தெரியவில்லை.

ஏ பெண்ணே – அத்தியாயம் இரண்டு

This entry is part 2 of 10 in the series ஏ பெண்ணே

உன்னுடைய தாத்தா, மகனை மௌனமாக இருக்கும்படி ஜாடை காட்டிவிட்டு, என்னைப் பார்த்து சிரித்தவாறு, ‘என் மகளை எண்ணி நான் மிகவும் பெருமிதப்படுகிறேன். தொடர்ந்து குதிரை சவாரி செய்திருக்கிறாள். குதிரையை அடக்கத் தெரியும். அதனால்தான் தன் மீதும் நம்பிக்கை வைத்திருக்கிறாள்’ என்றார். உன் தாத்தா பாட்டி இருவரும் சிரித்துக் கொண்டிருந்தார்கள். ஆனால் உன் அப்பாவோ பயணம் முழுவதும் இறுக்கமாகவே இருந்தார். சாதாரணமாகச்சொன்ன ஒரு விஷயம், எங்கள் இருவருக்கும் இடைவே, கற்பாறையை போல, வெகுநேரம் நின்றிருந்தது. நடுநடுவே, உன் அப்பா, மிகவும் தீவிரமான குரலில் ‘தன்னை பலப்படுத்தி மெருகேற்றிக்கொள்ள இன்னும் நிறைய கற்றுக்கொள்ள வேண்டும். வெறும் குதிரை சவாரி மட்டும் தெரிந்திருந்தால் போதாது’ என்றார். பெண்ணே, ஆணுக்கு எப்போதும் ஆதிக்கம் செய்ய வேண்டும். அவனுடைய இடம் எப்போதும் மேலே, கீழே அல்ல. மறுபிறவி என்ற ஒன்று இருக்குமானால், அடுத்த பிறவியில் நான் ஆணாகப் பிறந்து பார்க்க ஆசைப்படுகிறேன். ஆண், போர் வீரனைப் போல தன் மனைவியையும் குடும்பத்தையும் எப்படி அடக்கி ஆள்கிறான் என்று தெரிந்து கொள்ள ஆசைப்படுகிறேன். இது சிரிப்பதற்கல்ல, மிகவும் ஆழமான விஷயம் பெண்ணே. ஒவ்வொரு பெண்ணும் இதை அறிவாள்.

ஏ பெண்ணே – அத்தியாயம் 3

This entry is part 3 of 10 in the series ஏ பெண்ணே

நீ சொல்வது சரிதான். ஆனால், நான் என்ன செய்யட்டும், நீயே சொல்லேன். கீழே விழுந்தாகிவிட்டது வியாதி வெக்கைகள் எல்லாம் எதிரிகள் தானே! ஐயா அம்மா என்று முனகுவதை யோ அல்லது அரற்றுவதையோ தவிர, இப்போது வேறு என்ன செய்துவிட முடியும்? காயப்பட்டுக் கிடக்கிறது இந்த உடல். இப்போது கட்டிலைச் சுற்றி கலகலவென வளையோசையோ அல்லது பிறந்த குழந்தையின் அழுகைச்சத்தமோவா கேட்கும்.. இங்கு டாக்டர்கள் செலவழித்த நேரத்தில், ஒரு குழந்தை பிறந்து, அது எழுந்தே நின்று விட்டிருக்கக்கூடும். வெறும் எண்ணங்களில் குழந்தையை உருவாக்க முடியாது பெண்ணே. குழந்தையை உருவாக்க உழைப்பு தேவை. தாயின் ரத்தமும் சதையும் சேர்ந்துதான் ஒரு குழந்தை உருவாகிறது.

ஏ பெண்ணே – அத்தியாயம் நான்கு

This entry is part 4 of 10 in the series ஏ பெண்ணே

என்னை ஏன் முட்டாளாக்கப் பார்க்கிறாய் பெண்ணே. காலையில் என் தலையணையின் கீழே பெப்பர்மிண்ட்களும் சாக்லேட்டுகளும் வைக்கப்பட்டிருந்தன. அவன் தான் இப்படியெல்லாம் யோசிப்பான். நோய்வாய்ப்படாத காலத்திலும் கூட, எனக்காக குளிர்சாதனப்பெட்டியில் சாக்லேட்டுகளை வைத்து விட்டுப் போவான். அவனை ஊரை விட்டு வெளியே அனுப்புவதால் உனக்கென்ன லாபம்? பெண்ணே, உன் சகோதரன் வெகுளி. தூய்மையான மனம் படைத்தவன். அவனை வீட்டை விட்டுப் போக விடாமல் செய்திருப்பார்கள். அவன் வெறுத்துப் போயிருப்பான். சல்லடையில் சலித்து கற்களைப் பொறுக்கி எறிவது போல, அவன் மனைவி வீட்டிலிருந்து கொண்டே, அவனைப் பற்றி குற்றங்குறை கூறிக் கொண்டிருந்திருப்பாள்

ஏ பெண்ணே – 5

This entry is part 5 of 10 in the series ஏ பெண்ணே

உன்னைப் போன்ற தற்சார்புடைய பெண்ணின் குரல் எதிரொலிக்க, பரந்த ஆகாசமும் விரிந்த பூமியும் தேவை. சிறிய, மதிப்பேதுமற்ற விஷயங்களைப் பொருட்படுத்தாதே. மனதைச் சங்கிலியிட்டு ஒடுக்கிக் கொள்பவர்களின் ஆகாயம்,  அவர்கள் வரைக்குமே விரிகிறது. அவர்களுடைய ஓட்டமும் அவர்களது வீடு வரைக்குந்தான். வீட்டுக் கணப்பருகிலேயே, சுடச்சுட,  ரொட்டிகளைச் சுட்டு மலைபோல அடுக்குவதிலும், வீட்டை ஒட்டியே சிலந்தி வலை பின்னுவதிலுமேயே, அவர்களது வாழ்க்கை கழிந்து விடுகிறது. கேட்டுக் கொண்டு இருக்கிறாயா, அந்த மாதிரியான வாழ்க்கையிலும் பெரிதாக ஒன்றுமில்லை.

ஏ பெண்ணே – 6

This entry is part 6 of 10 in the series ஏ பெண்ணே

நீ நிதானமாகவே திரும்பி வா. வீட்டைப் பற்றிய கவலையை விடு. நான் இங்கேயே தான் இருப்பேன். எங்கும் போக மாட்டேன். முடி வெட்டிக் கொள்ள போவதாக இருந்தால்,  எனக்கும் முடி வெட்டிவிடச்சொல். என் முடி கனமாக இருப்பதால்,  மிகவும் கஷ்டமாக இருக்கிறது. முடிவெட்டிக் கொண்டால் கொஞ்சம் நிம்மதியாக இருக்கும். இனி இந்த முடியை பராமரிப்பது கடினம்.

ஏ பெண்ணே – 7

This entry is part 7 of 10 in the series ஏ பெண்ணே

எனினும், ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையே ஒரு அழுத்தமான கோடு கிழிக்கப்பட்டிருந்தது. கடைசி நாட்களில்,  உன் தாத்தா நோய்வாய்ப்பட்டிருந்த போது, நானும் என் சகோதரிகளும், மாறி மாறிச் சென்று, அவரோடு தங்கி யிருந்தோம். ஆனால் அவர் எப்போதும் குரல் கொடுத்து அழைத்ததென்னவோ தன் மகனைத் தான். எனக்கு மிகவும் வருத்தமாக இருந்தது. மகன் மீது மட்டும் ஏன் இத்தனை கண்மூடித்தனமான  பாசம்!

ஏ பெண்ணே – 8

This entry is part 8 of 10 in the series ஏ பெண்ணே

மகள்,  தன்னை வெகுவாக கட்டுப்படுத்திக் கொள்ள முயற்சி செய்த போதிலும்,  அம்மாவின் நெற்றியில் மென்மையாக முத்தமிடுகிறாள். எவ்வளவோ வருடங்களாக இந்த பூமியில் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். ஆனால்,  சமீப காலமாகத்தான்,  இவ்வளவு நாட்கள் வாழ்ந்ததற்கு,  ஏதாவது உருப்படியாக செய்திருக்கலாமே என்கிற எண்ணம் அடிக்கடி வருகிறது. இவ்வளவு பெரிய உலகத்தையேனும் சுற்றிப் பார்த்திருக்கலாம். ஆனால் குடும்பக் கவலைகளிலும் பொறுப்புகளிலும் உழன்றே,  வாழ்க்கை முடிந்து விட்டது.

ஏ பெண்ணே 9

This entry is part 9 of 10 in the series ஏ பெண்ணே

போதும். என்னை ரொம்பவும் புகழ்ந்து ஆகாசத்தில் ஏற்றி விடாதே பெண்ணே! நான் நிச்சயம் உங்களுக்கெல்லாம் அம்மா தான்,  அதே சமயம் நான் உங்களிடமிருந்து வேறுபட்டவளும் கூட. நான் நானாக இருக்கிறேன். நான் நீயல்ல,  நீயும் நானல்ல.அம்மா, தயவுசெய்து நான் சொல்வதைக் கொஞ்சம் கேளுங்களேன்!

ஏ பெண்ணே 10

This entry is part 10 of 10 in the series ஏ பெண்ணே

அம்மா வாய் திறக்காமல் மௌனமாக படுத்திருக்கிறார். பேச்சின்மை அம்மாவின் மீது கவிழ்ந்திருக்கிறது. கையில் அணிந்திருந்த  வளையல்களை கழற்றி தலையணை அடியில் வைத்து விடுகிறார். போர்த்தியிருந்த போர்வையை பந்தாக சுழற்றி தரையில் வீசி எறிகிறார். தலைக்கு கீழ் இருந்த தலையணையை எடுத்து ஒரு மூலையில் வைத்து விடுகிறார். குஷனை அறையின் வாயிலருகே தூக்கி எறிகிறார். கீழே விரிக்கப்பட்டிருக்கும் படுக்கை விரிப்பை இழுக்க முயற்சித்து,  தலையை இடமும் வலமும் சுழற்றுகிறார்.