ஈரம்

”காத்தால சமையல் உள்ள போய் லைட்டப்  போடும் போதே, கால்ல ஏதோ விறுவிறுன்னு ஊறின மாதிரி இருந்தது.  பாத்தா, மேடையில, தண்ணிப் பாத்திரத்தை சுத்தி, பழைய சாதம் வெச்ச பாத்திரத்தை சுத்தின்னு, ஏகப்பட்ட எறும்புக மொச்சுண்டு  இருந்தது, பகீல்னுது. இருந்த எறும்புப் பொடியத் தூவிட்டு, எங்கிருந்து வந்துருக்குன்னு பாக்கப் போனா,  இதோ இங்கேருந்துதான்,” என்று புழக்கடையில் கிணறு இருந்த இடத்தைக் காட்டினார். அங்கேதான், அந்த இடத்துக்கு அருகில்தான், அவர்கள் நின்று  கொண்டிருந்தார்கள்.மெதுவாக நானும் சேர்ந்து கொண்டு குனிந்து பார்த்தேன். அந்த இடத்தில், கிணற்றை மூடிய இடத்தில், ஒரு சின்ன பிளவு இருந்தது

பின்னிரவின் நிலா

ஹென்னூர் மெயின் ரோட்டோரமாக உடைந்துகிடந்த பாதசாரிகளின் நடைபாதையில் கால் தடுமாறி நடந்தார் அவர். செருப்புத் தைக்கிறவனும், பிளாஸ்டிக் சாமான் விற்பவனும் அங்கும் இங்குமாகக் கடைபோட்டிருக்க, பெட்டிக்கடை ஒன்று நடைபாதையில் துருத்திக்கொண்டு நின்றது. கொஞ்சதூரம் நடந்து வலதுபுறமாகத் திரும்பி வினாயகர் கோவில் முன் வந்து, வாசலில் இருந்தே ஒரு கும்பிடு போட்டார். பக்கத்து சந்தில் நுழைந்து இடதுபுறம் திரும்ப, வரிசையாக இருந்த கட்டிடங்கள் ஒன்றில் இண்டியாபோஸ்ட்டின் சிவப்பு மஞ்சள் லோகோவுடன் போர்டு தொங்கிக்கொண்டிருந்தது. உள்ளே இருந்த தபால்பெட்டியில் கடிதத்தைப்போட்டுவிட்டு வெளியே வந்தார்.

விடை

ஓர் இடைச்சிறுவன் கலனில் நீர் கொண்டு வந்தான். அவனிடம் அமெரிக்கர் ஹாய் என்றார். அவன் ஹாய் வில்லியம் என்றான். நான் பாதிக் கலனை காலி செய்தேன். வில்லியம் மூன்று மிடறு அருந்தி விட்டு அச்சிறுவனிடம் நன்றி தெரிவித்து கலனை திருப்பித் தந்தார்.
‘’எப்போது வீடு திரும்புவதாய் உத்தேசம்? கையில் உள்ள பணம் தீர்ந்த பின்பா?
அக்கேள்வியின் நேரடித் தன்மை என்னைச் சீண்டியது. இவர் தன் எல்லையைத் தாண்டுகிறார்.
‘’உங்கள் கணிப்பு என்ன? நான் வீட்டாரை பயமுறுத்தவே வெளியேறியிருக்கிறேன் என்றா? நான் வீடு திரும்ப மாட்டேன்.’’
‘’சித்தார்த்! நீ புத்திசாலி. என் கணிப்பு நிறைவேறினால் மகிழ்வேன். நிறைவேறவில்லை எனில் பெரிதும் மகிழ்வேன்’’

அது

தேவகி, சண்முகசுந்தரத்திடம் நக்கலாக ஏதோ சொல்ல அந்த சனியன் எப்டியோ செத்து ஒழியிட்டும்… வுடு.. சண்முகசுந்தரம் தீர்ப்பெழுத.. அவனுக்கு மரணத்தண்டனை என தீர்ப்பெழுதும்போது இத்தனை சத்தமில்லை.. கமுக்கமாக.. காதோடு காதாக.. நீலத் திமிங்கிலத்தை போல ரகசியமாக.. எல்லாரும்.. எல்லோரும் எதிரிகள்தான்.. நான்.. நான் மட்டுமே நிஜம்.. அவனும் நிஜம்.. எங்களோட அன்பு நிஜம். என்னைச் சிறை வைத்து விட்டு அவனைக் கழுத்தறுத்துக் கொன்ற இவர்கள்தான் பொய். இவர்களை விட்டு விலக வேண்டும். விலகி எங்கோ செல்ல வேண்டும். ஏறி… மேலேறி.. மூன்று தளங்களைக் கடந்து மொட்டை மாடிக்கு வந்தும்… பத்தாது.. பத்தாது.. இன்னும் இன்னும் உயரம் என்றது அது தன் பெரிய வாயை அசைத்து.. அங்கிருக்கும் தண்ணீர் தொட்டியின் விளிம்பு.. விளிம்பு வரை.. அதற்கு மேல் வேண்டாமாம்.. விழக்கூடாதாம்.. ஆமா.. விழக்கூடாது.. எதிரிகளைக் கொல்ல வேண்டும்.. இப்போது எல்லாருமே நீலத் திமிங்கிலத்துக்குள்.. ஒளிந்து கொண்டு… என்னை.. அவனை.. வலுக்கட்டாயமாக கடவுளே.. கடவுளே..

திரும்புதல்

“இன்னக்கி கீர்த்தி கேக்கறா, பாரதி ஏன் அப்படி செஞ்சார்ன்னு?”
“என்னத்த கண்டுட்டாளாம் அந்த விசாலாட்சி?”
“வீட்டப்பாத்துக்காம பாட்டு எழுதிக்கிட்டு இருந்திருக்காரு. வேலக்கிபோவாமங்கறா,” என்று சொல்லிவிட்டு, “ஆமா…விசாலாட்சி தான்,”என்று கண்களை விரித்து ஜெஸி சிரித்தார்.
“ம். அவகிட்ட என்ன சொன்னீங்க?”, என்று காலை மாற்றி கம்பியில் நீட்டினேன். ….
“இல்லம்மா ….அவரு பத்திரிக்கையில வேல செஞ்சாருன்னு சொன்னேன்.அதுக்கு அவ,போங்க டீச்சர்.. அவருக்கு எத்தன மொழி தெரியும்!அரசாங்க வேலையில எவ்வளவு சம்பளம்! அவருக்கு பிடிச்ச பாட்ட எழுதறேன்னு யாரு பேச்சயும் கேக்கலயாம். சினிமாபடத்தில பாத்தேன்.அந்தம்மா அழுதுகிட்டே இருக்காங்க,”ங்கறா

சகுந்தலாவுடன் ஒரு மதியப்பொழுது

வனஜ்யோதனா காட்டுச் செடிகள்; ஹரினா –அந்த மான், என் தோழிகள் அனசூயா, பிரியம்வதா ; இவர்களோடு நாட்கள் கடந்தன. கௌதமியின் தாய் போன்ற கவனிப்பு; தந்தையான கன்வரிஷியின் அன்பு. எல்லாம் துஷ்யந்தன் வரும்வரை
அவன் வந்தான்.
ஊடுருவ முடியாத தன்மைக்கு ஆளானேன். இருவந்திகை,என் தோழிகள் தாய் போலான கௌவுதமி, தந்தை ஸ்தான கன்வரிஷி எல்லோரும் மின்னொளியாக மறைந்து விட்டனர்.அது மட்டுமில்லை. நானும்கூட காற்றில் மறைந்து போனேன் தோழி !உன்னால் அதை நம்ப முடிகிறதா?காதலுணர்வை எடுத்துச் சொல்லும் தைரியம் எனக்கில்லை. அது பொதுவான உணர்வில்லை, எல்லா விளக்கமும் அதை பலம் குறைந்ததாக்கி விடும்.

துவக்கம்

‘’ஆள்றவன் நினைச்சா சட்டம் அப்படியே மாறி நிக்கும் தம்பி. ஆனா மனுஷனுக்கு மனுஷன் பேசின பேச்சுக்கும் கொடுத்த வாக்குக்கும் அர்த்தம் இல்லன்னா நம்ம வாழ்க்கை மனுஷ வாழ்க்கையாவே இருக்காது. தேர்தல் வரும் போது ரெண்டு கிலோமீட்டர் போய் ஓட்டுப் போடறோம். கொள்ளிடக் கரையில நடந்து தான் பிள்ளைங்க ஸ்கூலுக்கு போவுது. ஆனா இந்த பிரதேசத்துல நம்ம வாழ்க்கைதான் நல்லா இருக்கு. பட்டா நிலத்துல பண்ணையம் பாக்கறவங்களை விட நாமதான் நல்லா இருக்கோம். நமக்குள்ள ஒற்றுமை இருக்கு. அதுதான் நம்மளோட பலம். அதை எக்காரணம் கொண்டும் இழந்திரக் கூடாது.’’

டார்ச்லைட் வெளிச்சத்தில் சிறுகதை வாசித்தல்

குழுமத்தில் சில சிறுகதைகள் பற்றி கதைத்துக் கொண்டிருந்தோம். அப்போது பேசப்பட்ட சிறுகதை குறித்து நண்பர் ஒருவர், “இந்தக் கதையின் மையம் எதுவென்று வைத்துக் கொள்வது?” என்று கேட்டார். “பெண்கள் வைத்துக் கொள்ள வேண்டுவது கிடைப்பதேயில்லை,” அல்லது, “வைத்துக் கொள்ள வேண்டிய அளவு கிடைப்பதில்லை,” அல்லது, “வைத்துக் கொள்வது விரும்பிய வகையில் வாய்ப்பதில்லை,” என்ற ஒன்றை, அல்லது இது எல்லாவற்றையும் சொல்ல வரும் கதை அது, என்று எனக்கு நானே சொல்லிக் கொண்டேன். அப்போது, சிறுகதைகள் குறித்து யோசிப்பதில் நிறைவு காண்பது விட்டுப்போய் பல காலம் ஆகிவிட்டதையும் உணர்ந்தேன்.

படம்

கிடைத்ததெல்லாம் பல வருடங்களுக்கு முன் எடுத்தவை. நண்பர்களுடன் கூட்டமாக நெருக்கியடித்துக்கொண்டு நிற்கும் சில படங்கள். யாரோ ஒரு நண்பர் ஊர் மாற்றிச் செல்லும்போது அவருக்கான பிரிவு உபச்சார விருந்தில் எடுத்த படமாக இருக்கவேண்டும். அநேகமாக அந்த படத்திலிருந்த நண்பர்கள் அனைவருமே பாஸ்டனை விட்டு சென்றுவிட்தால் யாருடைய பிரிவின்போது எடுத்தது என்பதுகூட உடனே நினைவுக்கு வரவில்லை. காமிராவுக்கு முதுகை காட்டிக்கொண்டு குழந்தைகள் மற்றும் நாய்க்குட்டியுடன் விளையாடும் படங்கள். தனியாக இருக்கும் படம் என்று தெரிவு செய்யும்படி ஒன்று கூட இல்லை. எப்போதும் மற்றவர்களை படம் எடுத்துக்கொண்டிருப்பவனுக்கு ஏற்படும் சிக்கல், அவனை யாருமே படம் எடுப்பதே இல்லை என்பதுதான். கிடைத்த ஒரே தனிப்படமும் முள்தாடியுடனும் குவியமில்லாமலும்.

ராதேயன்

அவனைத் தன் இல்லவாயிலில் கண்டும் ராதை அசையாமல் அவனையே கண்டு நின்றாள். தன் செந்நிறப் பருத்தியாடையை வலது கையால் போர்த்தியவாறு கூனிட்ட முதுகை நிலையில் சாய்த்திருந்தாள்.  ‘வயோதிகத்தால் பழுத்த கண்களின் பிழையா?’ என்றும் மறுகணம் எண்ணினாள். தனியாள் ரதத்திலிருந்து இறங்கி,  குதிரையின் கழுத்தைத் தடவிவிட்டு அது தலையை இருபுறமும் அசைக்க,  புன்னகைத்தபடி நிமிர்ந்து சுற்றும் ஒருநோக்கை வீசி நின்றான். அவன் வரவுக்கென இத்தனை நாள் காத்திருந்ததா இந்தவாயில்? என்று அந்தகணம் அவளுக்குத் தோன்றியது. கருமையான விரல்கள் கொண்ட நீண்டபாதங்கள். அவன் அடியெடுத்து வைக்கையில்  கணுக்கால்களின் பொன்காப்புகளுக்கு …

ஆறாம் திணை

கூட்டம் நெரிபடுகிற நியூயார்க் நகர சப் வே நிலையங்கள் வாழ்க! ஓடிக் கொண்டே சட்டையைக் கழற்றி டீ ஷர்ட்டுக்குள்ளே திணித்துக் கொண்டான். அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் தென்படுவதற்குள் ஒளிய வேண்டும், எங்கே? எங்கே? பதறியபடி இடப் புற கடைகளை நோட்டம் விட்டுக் கொண்டே ஓடினான். மூன்றாவது, நான்காவது கடைகளுக்கு நடுவே இருந்த இருட்டான ஒரு அடி இடைவெளியை மறைத்த மரப் பலகையைத் தொட்டான். ஸ்பிரிங்க் வைத்தது போல  வழுக்கிக் கொண்டு திறந்தது. இவன் உள்ளே நுழைந்து இடைவெளி தெரியாமல் மூடிக் கொண்டான்.பலகையில் இருந்த சின்ன ஒட்டை வழியாக அவர்கள் எலிவேட்டரின் மேல் பகுதியில் நின்று கொண்டு சுற்றும், முற்றும் தேடுவதைக் கவனித்தான். பயமாக இருந்தது,

மையம்

கடல், நீரையள்ளி தெளித்ததில் தரையோடு படிந்துக் கிடந்த மணல் காலடிகளை உள்வாங்கி தடமாக பதித்திருந்தது. ஃபாதர் தாமஸ்ஃபிலிப்புக்கு வளமையான பெரிய கால்கள் வேறு. அச்செடுத்தது போல இங்குமங்குமாக படிந்துக் கிடந்தன. இருள் விலகாத, பகல் பிரியாத நேரமது. இளங்காலை நேரத்துக் கடல் முதிய தாயைப் போல ஆதுரமாக அணைத்துக் கொள்ளும். அதன் அலைகள் பொக்கை வாயில் வழியும் கனிந்த சிரிப்பை போல கடலெங்கும் ததும்பி கிடக்கும். இந்த அனுபவத்துக்காகவே அவ்வப்போது அவர் இங்கு வருவதுண்டு. கடலும் அலைகளும் அதன் இறைச்சலும் வெற்றுக் காட்சிகளாக இன்று அவர் கண்களை நிறைத்துக் கொண்டிருந்தன. கடலையொட்டி அமைந்த புனித தேவாலயத்திற்கும் தாமஸ்ஃபிலிப்புக்கும் கிட்டத்தட்ட முப்பதாண்டுப் பழக்கம். அது அவரின் வயதில் நான்கில் மூன“று பகுதி. இத்தனை ஆண்டுகளும் பூசை..

நிஜமாக ஒரு உலகம்

’எதுக்கு இந்த மாபெரும் அறிவு, அங்குமிங்கும் ஓடல், ஓயாத தேடல். விடுறா.. பொல்லாத வாழ்க்கை. சாகாவரமா வாங்கிண்டு வந்துருக்கோம்? இன்னிக்கோ நாளைக்கோன்னு இடர்ற கேசு.. இதுக்குப்போயி எத்தனைப் ப்ரயாசை, எத்தனை அலட்டல்!’  எங்கோ பார்த்துக்கொண்டுத் தனக்குத்தானே முணுமுணுத்துக் கொண்டான் விவேக்.  அவனையே பார்த்துக்கொண்டிருந்த கார்த்திக், கிளாசில் மேல்முட்டும் நுரையை லேசாக ஊதி ஒதுக்கிவிட்டு, சூடான ஃபில்டர் காஃபியில் எழும் வாசனையில் கொஞ்சம் லயித்தான்.

லீலாவதி

‘’சுபாஷ்! லோகத்துல மனுஷாள் என்ன பழகியிருக்காளோ அதத்தான் திரும்ப திரும்பத் திரும்ப செய்யறாள். சமூகமும் அப்படித்தான் பழகியிருக்கு. ஆனா லௌகிகத்துல எந்த விஷயமும் மாறாம இருக்க முடியாது. அது எப்படி மாறுதுங்கறத்த கவனிக்கறது அரசாங்கத்தோட வேலைல ஒண்ணு. நீ சின்னப் பையன். இப்பதான் வேலைக்குச் சேந்திருக்க. எல்லாத்தயும் வெறுமனே பாரு. வெறுமனே பாக்க மட்டும் செய். உன் அபிப்ராயம் சேர்த்துக்காம பாரு. பார்த்துப் பார்த்து நீ நிறைய விஷயம் தெரிஞ்சுப்ப.’’

மாலையே அவர்கள் வீடு வேறொரு கோலம் கொள்ளும். ராமநாதனின் அம்மா வீணை வாசிப்பார்கள்.

சமர்த்த குப்பை மடல் வடிகட்டி

ஜோ அசௌகரியமாக உணர்வானோ? உறுதிப்படுத்த முடியவில்லை. மனித உணர்வுகளைப் புரிந்து கொள்வது மிகக் கடினம். “Mr.கோவால்ஸ்கி, ஒரு இருக்கையில் அமருங்கள்,” என்றார் பில் மோரிசன். அவர்தான் தலைமைப் பாதுகாப்பு அதிகாரி. அவருடைய மின்னஞ்சல்கள் சுவாரசியமாக இருப்பதில்லை. எல்லாம் அலுவலக விசயங்கள், அன்றாட அறிக்கைகள் மட்டுமே. ஜோ இருக்கையில் அமர்ந்தான். சூட் அணிந்தோரிடையே ஜீன்ஸ் -டி -சர்ட் அணிந்த ஒருவனாக வித்தியாசப்பட்டுத் தெரிந்தான்.
மனித வளத் தலைமை அதிகாரி, எமிலி, “நன்று. இந்த விஷயம் பற்றி நீங்கள் என்ன தெரிந்து கொண்டிருக்கிறீர்கள்?” என்று ஜோ வைக் கேட்டாள்.
எமிலி கேலுக்கு மிகவும் பிடித்தமானவர். விதம் விதமான பற்பல மின்னஞ்சல்கள் எழுதுபவர். குறிப்பாக பூனைகளின் நிழற்படங்களை…

எஞ்சும் சொற்கள்

இடைநாழியில் தூரத்தில் இருந்தே மாவட்ட ஆட்சியரின் அறையும் அதையடுத்த ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறையும் சாத்தியிருப்பதை உறுதி செய்து கொண்ட பின் ஆசுவாசம் கொண்டவளாய் நடையில் துள்ளல் தெரிய ஆதிதிராவிட நலத்துறை அலுவலரின் அறைக்கு எதிரே இருந்த சிறிய அறையில் போய் அமர்ந்தாள். … நாங்கள் இருப்பதை அப்போதுதான் கவனித்தவளாய் மொத்தமாக ஒரு சிரிப்பினை அனைவரையும் நோக்கி வீசிவிட்டு “உள்ள வந்து உக்காந்து இருக்கலாமே” என்றவாறே எங்களை வரவேற்றாள். ஒரு அரசு அலுவலக அறையில் அதிலும் சிறிய அறையில் யாரும் அழைக்காத போது சென்று அமரும் அளவிற்கு எங்களில் யாருக்குமே வயதாகி இருக்கவில்லை. என்னுடன் அதுவரை பேசிக்கொண்டிருந்த பையன் “தேங்க்ஸ்க்கா” என்று அவளைப் பார்த்து சிரித்தபடி உள்ளே ஓடினான்.

தெய்வமரம்

பெரிய சாலையில் மாலைஒளி படும்படி அமர்த்தலாக அமைந்திருந்தது “மங்களவிலாஸ்” வீடு. மழைக்கும் வெய்யிலுக்கும் சோர்ந்து காரைகள் பெயர்ந்த பழையபாணி வீடு. அந்த இடம் வந்ததும் தன்னையறியாமல் தலைதூக்கிப் பார்த்துவிடுவது சிவமணியனின் வழக்கம். ஏதோ ஒரு பய உணர்ச்சியோடுதான் அந்த வீட்டிற்குள் நுழைவான் சிவமணியன். அந்த வீடு தரும் அமைதியின்மையை அவனால் புரிந்து கொள்ள முடிந்ததில்லை. முத்தையாவிற்குப் பரம்பரையாக வந்திருக்கும் சொந்த வீடு அது. முத்தையா சாந்தியைத் திருமணம் செய்து கொண்டு வந்தபின்னே வீட்டிற்கு வண்ணப்பூச்சு அடிக்கப்பட்டது. அதற்குமுன் இதைவிட மோசமாக இருந்தது. காம்பவுண்ட் சுவரைத் தாண்டி நீண்ட வாசற்படியில் சரியாகக் கண் தெரியாத முத்தையாவின் அம்மா எப்போதும் அமர்ந்திருப்பாள். உள்ளே வருபவர்களை நோக்கி அவள் எதையோ சொல்கிறாள் எனத் தோன்றும். மாறாத கண்களுடன் வெற்றிலை பாக்கு மெல்வதை உள்ளே வருபவர்கள் தாமதமாகப் புரிந்துக் கொள்வார்கள். இன்று அந்த இடத்தில் முத்தையா அமர்ந்திருந்தார்.

மாரி மைனி

‘யய்யா மதியா?ன்னு அதே கேள்விய திருப்பி கேட்டுச்சு. ‘ஆமா நான் மதிதான் பேசுதேன், நீங்க யாரு?’ன்னு கேட்டேன். ‘நான்தான்ய்யா மைனி பேசுதேன், சாந்தி மைனி.. மறந்திட்டியா?’ன்னு அந்த கொரல கேட்டதும் தண்ணிக்குள்ள குதிச்சதும் வருமில்லையா அப்படியொரு அமைதி எனக்குள்ள வந்துச்சு. காது ரெண்டையும் பொத்திக்கிட்டா எப்படியிருக்கும் அப்படி இருந்துச்சு ‘ எப்படி இருக்கீங்க மைனி’ உங்கள் எப்படி மைனி நான் மறப்பேன்’ன்னு சொன்னேன். என்ன பேசுவதென்றே தெரியவில்லை. ’நல்லா இருக்கேன் மதி.. அத்த எப்படி இருக்கு.. பாஸ்கர் எப்படி இருக்கான், செல்விக்கு எத்தனை பிள்ளையளு?’ என்று மைனியின் கொரல் என் காதெல்லாம் நிரம்பிப்போச்சு. ‘எல்லாரும் நல்லா இருக்காங்க மைனி?, நீங்க குமாரண்ணன், பிள்ளையளு எல்லாம் எப்படி இருக்கிய?ன்னு நான் கேட்டாளும் எனக்கு மைனியத் தாண்டி யாரப் பத்தியும் விசாரிக்கனுமுன்னு தோணலை.

வசந்த மண்டபம்

ஒரு குட்டி முதலாளி போன்ற வாழ்க்கை. சித்தூருக்கு முன்னால் இரண்டு கிலோமீட்டரில் கிராமம். மெயின் ரோட்டை ஒட்டி ஒரு ஏக்கர் நிலம். அதில் தான் லாரி புக்கிங் ஆஃபிஸ் இருந்தது. வழக்கமான புக்கிங் ஆஃபிஸ்களைப் போலத்தான் தூசி படிந்து பழைய பொருட்களுடன் ஒழுங்கு இல்லாமல் கிரமம் இல்லாமல் கிடந்தது. வசிக்கும் இடத்திலும் பணி புரியும் இடத்திலும் தேவையில்லாததை நீக்க வேண்டும் என்பது முதல் விதி. அதுவே பாதி சிக்கலைத் தீர்க்கும். வாழ்க்கையில் தேவையில்லாததைத் தான் சேர்த்துக் கொள்கிறோம். தேவையில்லாததைச் சேர்த்துக் கொள்வதைத் தான் வாழ்க்கை என நம்பிக் கொண்டிருக்கிறோம். புற ஒழுங்கு கொண்டுவரப்படும் போது பணி ஒழுங்கு நிகழ்கிறது. நான் அப்போது வயதில் சிறியவன். கடுமையான உடல் உழைப்புப் பணிகளுக்கு அப்போதுதான் பழகியிருந்தேன். தொழிலாளர்களால் என்னை ஏற்க முடியாது. என்னுடைய எல்லைகளை அவர்களுக்கே உரிய விதத்தில் சுட்டிக் காட்டுவார்கள். பேச்சில் லேசான அவமரியாதை இருக்கும்.

புதையல்

வகுப்பறையின் முதல் பெஞ்சின் கீழ்கம்பியில் அரையடி உயரத்தில் இடதுகாலை தூக்கிவைத்து, வலதுகாலை கீழேஊன்றி நிமிர்ந்து நின்று, “சின்னஞ்சிறுகிளியே கண்ணம்மா..”, என்று தன்சங்குக்குரலில் முதல்வகுப்பில் கோபிகாமேடம் கவிதை வாசித்துமுடித்து, “பாரதி வரிசையா சொல்றத பாத்தீங்கன்னா… ஒருகுழந்தை படுத்திருந்து , எழுந்து, நடந்து ,ஓடி வந்து முத்தம் கொடுத்து, பின்னாடி மெல்ல சிணுங்க, அதை சமாதனப்படுத்தி அதுவெளிப்படுத்துகிற அன்பில் தெய்வத்தை உணரமுடியும். அதுக்குபிறகு கவிதைமறக்காது. அதுவும் உங்களுக்கு பழக்கமான குழந்தை மனதில வந்திடுச்சுன்னா கவிதை அவ்வளவுதான்”, என்றார்.

அன்றே ஏனோ வகுப்பில் அனைவருக்குமே அவர்மீது பிடிப்பு உண்டாகிவிட்டது. மூன்றாமாண்டு தொடக்கவிழாவில்,“நீ பெத்த பிள்ளைய இன்னொருத்திக்குன்னு ஊர் சொல்ல குடுப்பியா?உன் கவிதையே நீயே வாசி”…

மூன்றாவது சிலுவை

“கரைய பாத்தியாடே ! பசுங்கொப்பையெல்லாம் வாரிக்கிட்டு வரதப் பாரு. இனிமே கூடத்தாமிடே செய்யும். நீ ஒன்னும் பயப்படாண்டா கேட்டியா. யான் இடுப்புல ஒத்த கயித்த மட்டும் கட்டிகிடுதேன் இந்தா இந்த முனயை அந்த வேம்பில கட்டிட்டு கயித்த நீயும் பிடிச்சுக்டே- ஒரு வேளை வாரிட்டுன்னா!”.
ம் அப்புறம் இதுகள ஒவ்வொன்னா அக்கரைக்குக் கடத்திடுதேன். பெறவு இடுப்புக் கயித்த எதுக்க இருக்கப் பின்ன மூட்டுல கட்டிருவேன். மெதுவா அத பிடிச்சிக்கிட்டு நீயும் வந்திரு என்னா ?” என்று சொல்லி சிரித்தவரை மரிராசு மருண்டு போய்ப் பார்த்துக் கொண்டிருந்தான்.

புலன் விசாரணை

இன்று புரட்டாசியின் மழை அதிகாலை. மெல்லிய குளிர் மாறி விடியவிடிய புழுக்கம் ஏறிவருகிறது. மென்குளிர் காற்று. வாசலில் மண்ணோடு குழைந்த நீரின் மணம் உணர்ந்து புன்னகைத்தேன்.கோலம் வரையும்வரை வேறுமணத்தை எதிர்பார்த்து ஏமாந்தேன். வெந்நீரா?தண் நீரா? என்று மனம் சோழி போட்டு பார்த்துக் கொண்டிருந்தது. நீராவி வெண்புகையாக எழுந்து மேற்கே கொல்லிமலைக் குன்றுகளை பார்வையிலிருந்து மறைத்துக் கொண்டிருந்தது. கிழக்கே பச்சைமலைக்குன்றுகளுக்கு மேல ஒளியெழ இன்னும் நேரமிருக்கிறது.

இருளில் அமைதியிலிருக்கிறது

பெருவெளிக் காற்று

யசோதரா, அவளுக்கு என்ன குறை? அழகு இல்லையா? அறிவு இல்லையா? நளின நாசூக்கு இல்லையா… எல்லாமே இருந்தன. எல்லாமே முழுமையாக இருந்தன. அவனை அவள் எத்தனை நேசித்தாள், அதிலும் குறை சொல்ல என்று ஒன்றுமில்லை. அவன் இரவுகளை அவள் அலங்கரித்தாள். அந்த இருளிலும் அவளது அருகாமை, பெண்வாசனை எத்தனை இதம். எல்லாவற்றையும் மூடி மறைத்தது இருள். வாசனையை மூட முடியுமா? யசோதராவின் வாசனையை அந்த இருளிலும் அவன் அறிவான். எந்த இருளிலும் அறிவான். அவள் அருகே இல்லாவிட்டாலும் கூட அறிவான் நன்றாக. செயற்கையை விட இயற்கையை நேசிக்கிறவன் அவன். வணங்குகிறவன் அவன்… தலையணை மேலே விரிந்து பரந்து கிடந்த கூந்தல். அவள் தலை நிறைய சூடியிருந்த மல்லிகை மலர்கள், இருளில் நட்சத்திரங்களாய்க் கண்டன. மலர்களை விலக்கி கூந்தலை முகர்ந்தான் அவன். பெண்களின் கூந்தலுக்கு இயற்கையிலேயே மணம் உண்டோ? பெண்ணே, மொத்த பெண் அம்சமுமே, ஆணுக்கு மணம் தான்.

பெண் தெய்வம்

சுலோச்சனாவை காணாமல் நடேச ஐயரும், அவரது மனைவியும் ஊர் முழுக்க தேடத்தொடங்கினர். ஊரில் இருந்தது ஒரே ஐயர் குடும்பம் என்பதால் இருந்த இரு நூறு முன்னூறு குடும்பங்களுக்கும் நடேச ஐயரைப் பற்றியும் அவரது மனைவியைப் பற்றியும் புத்தி சுவாதீனம் அற்ற அவரது ஒரே மகளைப் பற்றியும் நன்றாகவே தெரியும். நடேச ஐயர்தான் சுற்றுவட்ட கிராமங்களில் உள்ள அனைத்து கோவில்களுக்கும் பூஜைகள் செய்துவந்தார். அப்படி ஒன்றும் நிறைய கிராமங்கள் இருக்கவில்லை. பத்து கிலோமீட்டர் சுற்றளவில் இருந்தவை மொத்தம் மூன்றுதான் . ஆனால் கோவில்களின் எண்ணிக்கையோ அதைவிட பத்துமடங்கு. ஐம்பது வயது வரை எல்லா கோவில்களுக்கும் ஒரு நாள் விட்டு ஒரு நாளோ அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையோ, அவர் வசதிக்கு…

அற்றைத் திங்கள் அவ்வெண்ணிலவில் ….

“இப்ப ஏதேதோ காரணங்களினால அந்த ஊர் பேரைச் சொல்றதுக்கே தயங்கறா மாதிரி ஆயிடிச்சு பாருங்க! அந்த கோவில் அழகு ஒண்ணு போதுமே! என்னோட ஒண்ணு விட்ட சித்தி ஒத்தங்க அந்தஊர்ல இருந்தாங்க! அவங்க பேரு பொன்னம்மா.பாக்க தங்கம் மாதிரி ஜொலிப்பா! நல்ல சேப்பு! அதான் அந்த பேரு வச்சாங்க போலிருக்கு!அவங்க கல்யாணத்துக்கு நான் போயிருந்தேன்.எனக்கு அப்போ ஆறு , ஏழு வயசிருக்கும்…..என் பக்கத்துல இருந்த ஒரு பாட்டி, இன்னொரு மாமிகிட்ட சொல்லிண்டு இருந்தா ‘இதென்னடி இது அட்சதையும் எள்ளையும் கலந்தாப்பல இருக்கே’ன்னா

ஒருவன் மனதில் ஒன்பதடா…

“அப்பொழுதுதான் பிறந்தேன். எப்படியும் சில முடிச்சுகளை அவிழ்க்க முடிந்தது. நான் தேடும் நபர் அப்பொழுது எம்.ஜி ஸ்போர்ட்ஸ் கார் வைத்திருந்தார். அதே காலக்கட்டத்தில் அவருக்கு திருமணமும் நடந்திருக்கிறது. அடிக்கவேண்டிய இலக்கு வெகு தூரத்தில் உள்ளது என்பது எனக்கு தெரியும். ஆனால் இது ஓரளவு கை கொடுக்கும் என்று சொல்லலாம்”. 

அவனது அசௌகரியம் இப்பொழுது நடுக்கமாக மாறி இருக்கையின் நுனிக்கு அவனைக் கொண்டுவந்தது. பாம்பினால் மனோவசியம் செய்யப்பட்ட முயல்குட்டி போல், தப்பிக்க வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் நகர முடியாமல் தவித்தான்.

சருகுகள்

’அன்றே நான் இறந்திருக்க வேண்டும். அந்த நாளைக் கடந்திருக்கக் கூடாது. கடந்தேன். ஏன்? ஏன் கடந்தேன்?’ குழம்பினான் அவன். அலைக்கழிக்கும் விதி அவ்வளவு எளிதாக விட்டுவிடுமா? இன்னும் அடிபட்டு, மிதிபட்டுத் துடிக்கவேண்டாமா? செய்வதறியாது திணறவேண்டாமா? நாலுபேர் வாயில் பட்டுத் தெறிக்கவேண்டாமா? பைத்தியம் பிடித்து அலையவேண்டாமா? உடனே சொகுசாக செத்துப்போய்விட்டால் எப்படி? 

சங்கு சுட்டாலும்

“இந்த எறும்புகளுக்கு வானம் தெரிய நியாயமில்ல சீனியர். வானத்தை இதுக்கு புரிய வச்சி என்ன பண்ணப்போறீங்க? இல்ல வாழ்நாள்பூராச் சொன்னாலும்  புரியுமா?” என்றாள்.

“ஓடிக்கிட்டே இருக்கும். சேத்துக்கிட்டே இருக்கும்..மழைகாலத்துக்காக..,”என்று சிரித்தான்.

“மழைகாலத்துக்கு நாமளும்தான் சேக்கணும்.  ஆனா இப்ப இருக்கறதெல்லாம் சந்தை எறும்புகள் சீனியர்,” என்று சிரித்தாள்.

“தன் புத்துக்குள்ள உலகத்தை வைக்கப் புதுஉத்தி பாக்குது. தானில்லாத மழைக் காலத்துக்கும் சேக்க கூட்டமாப் போகுது,” என்றான்.

“அதனாலென்ன?” என்றாள்.

ஊற்றுகள்

அதிகாலைப்பறவைகளின் உவகைமொழிகளை மூழ்கடித்தபடி கணபதிபாளையத்தை எழுப்பிக்கொண்டு போர் -வண்டி முடக்கு வேம்பைக் கடந்து நின்றது.பறவைகள் எழுந்து வயல்காட்டுப்பாதையில் பறந்தன.அப்போதுதான் அசந்து படுத்த நாய்கள் சுழன்றெழுந்து குரைத்து, பின் நிதானம் கொண்டு சுற்றிவந்தன.மாசி மாதக் கிழக்கு கொள்ளைச்சிவப்பாக விடிந்தது. சில வெள்ளைநிறக் கூரைவீடுகளும், முற்றம் வைத்த மஞ்சள் ஓட்டுவீடுகளும், மில்லெனியத்திற்குப் பின், திண்ணைகள் இல்லாது கட்டிய பச்சை,ரோஸ், ஊதா நிறச் சிறு மாடிவீடுகளுமாகத் தெரு வளைந்து நெளிந்திருந்தது. இரும்புக் குழாய்களை இறக்கிப் போட்டுவிட்டு சந்தின் முனையில் பெருஞ்சத்தத்துடன் துளைக்கத் துவங்கினர்.வெயிலேறத் தொடங்கியதும் வயல் வேலையில்லாததால் ஆடுமாட்டிற்கு தண்ணீர்காட்டி, தீனி பிடுங்கிப் போட்டுவிட்டு,

மறைந்து கொண்டிருக்கிறாய், நீ…

தமிழில்: எம். நரேந்திரன் இன்று காலை படியிறங்கி கீழே வந்தபோது குக்கீ மாயமாக மறைந்து விட்டதை உணர்ந்தேன். அடுத்து என்ன செய்யவேண்டும் என்பது எனக்கு நன்றாகவே தெரியும். அவசரக்கால அதிகாரப்பூர்வ விதிகளின்படி கண்ணுக்கு தெரியாமல் மறைந்து போனவைகளுக்கான பிரத்தியேக துறைக்கு போன் செய்ய வேண்டும். பதிவு செய்யப்பட குரலைப் “மறைந்து கொண்டிருக்கிறாய், நீ…”

திகிரி

சிதறால் மலைக்கு மேலே வருடக் கணக்கில் ஒரு மனிதரைக் கூட காணாது சமணத்
துறவிகள் இருந்திருக்கிறார்கள். மருத்துவமனையிலிருந்து வந்தபிறகு எனக்கு
அங்கே ஒரு இரவாவது தங்கவேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டு ஒருநாள்
தனியாகத் தங்கினேன். யாரிடமும் எங்கே போகிறேன் என்று சொல்லவில்லை. வழக்கமான சுற்றுலாப் பயணிகள் மாலைஅடர்ந்ததும் கீழிறங்கிப் போவதை
பார்த்தேன். குரல்கள் ஒவ்வொரு படியாகபுறாக்களை போலத் தத்தி தத்தி
இறங்கின. பின்னர் எதிர்பாரா ஒருகணம் காற்றால்உந்தப்பட்டு பறந்து உங்கள்
அருகே மீண்டும் வந்து உங்களைத் திடுக்கிடச் செய்தன.

ஊசல்

வெண்அங்கியை இடதுகையில் மடித்துத் தொங்கவிட்டு, குறிப்பேடுகளைக் கையில் பிடித்துப் படிகளில் இறங்குகையில் வலது கையை அமுதாவின் தோளில் போட்டபடி, “ நீ ஏன் ஆர்ட்ஸ் சப்ஜெக்ட்ஸை எடுக்கல?”என்றாள் மோனா.

“ஆர்ட்ஸூன்னா வீட்டில இருந்து கரஸ்பாண்டென்ஸ் மூலமா படிச்சாப் போதுன்னாங்க. அதான் இந்தக் கிணத்தில வந்து விழுந்துட்டேன்.”

“என்னது கிணறா?!”

“பின்ன…ஏற்கனவே ரெண்டு மாப்பிள்ளைகளைப் பத்தி பேச்சு வருது. புதைகுழியில விழறதுக்குக் கிணறு பரவாயில்ல, நாமளா நீச்சலடிச்சுக் கரையேறிக்கலாம்,” என்று சிரித்தாள்.

கடந்து போனவர்கள்

அவனை நாங்கள் சந்தித்த அந்த அற்புதமான கோடை காலம், ஊஞ்சலின் கீரீச்சிடலாய், முற்றத்தில் வரைந்த கரிக் கோட்டு கிரிக்கெட் ஸ்டம்ப்பாய்,, நாடகத்தில் முதுகில் தொங்க விட்டுக் கொண்ட பழைய வேட்டியாய், ஆற்றங்கரையில் விளையாடிய எறி பந்தாய், கொல்லைக் கிணற்றின் பொந்திலிருந்து பறக்கும் , நீல வண்ண மீன் கொத்தியின் லாகவமான பறத்தலாய், உச்சி வெயில் வேளையின் கழுகின் கத்தலாய் விரிந்து பெருகியது.

யுடோபியா

வாசலிலேயே மெர்சி மிஸ் காத்திருந்தார். வண்டியை நிறுத்தி விட்டு இறங்கி நடந்து கேட்டைத் திறக்கும் வரை அவர் முகம் பார்க்காமல் தவிர்த்தேன். நல்ல மாதிரி தான். இருந்தாலும் இதோடு எத்தனை முறைகள். வழக்கமான சங்கடப் பார்வையோடு வழக்கமாய்ச் சொல்வது போல் “சாரி மிஸ் “ என்றேன். “இட்ஸ் ஓகே. ஆப்டர் ஆல் என் பொண்ணு மாதிரி தானே” என்றார். இன்றைக்கு இதைச் சொல்கிறார். பெரும்பாலான நாட்களில் ஏதும் சொல்லாமல் புன்னகைத்து விட்டுக் கிளம்பி விடுவார். அவர் கண்களை சிரமப்பட்டு நேராய்ப் பார்த்தேன். நிச்சயம் அதில் ஒரு சோர்வும் சலிப்பும் இருந்ததாய்த் தோன்றியது. இருந்தும் வேறு வழியில்லை.

திமிங்கிலம்

உலகம் தழுவிய பேரழிவு எனும் பெரும் சோகத்தில் அவர்களுக்கென சிறு பங்கை ஒதுக்கிவிட்டு அவரவர் பணிகளுக்கு திரும்பியிருந்த போது, ஒருவாரம் கழித்து சிறு மிதவையை பற்றிக்கொண்டு உயிருடன் கரையடைந்தான். அப்போது திமிங்கிலம் என தலைப்பிட்டு பிரபல ப்ராக்ருதிஸ்தான் பத்திரிக்கை அவன் பிழைத்த நம்பவியலாத கதையை செய்தியாக்கியது. அந்தச் செய்தி கட்டுரை இப்படி துவங்கியது “திமிங்கிலம் பிரம்மாண்டமானது, அதனாலேயே தப்பவியலாதது, தின்று கொழித்து வளர்வது எனினும் இன்றியமையாதது”. இந்தக் கனவு அல்லது உருவெளித்தோற்றம் அவனுக்கு நன்கு பரிச்சயம் தான். எத்தனையோ வருடங்களாக மீள மீள உறக்கம் உண்ணும் அதே கனவு. இந்த கனவின் செல்திசையை, அதன் ஒவ்வொரு நுணுக்கங்களையும் அவன் நன்கறிவான். மரித்துப்போய் கல்லறைகளில் அறிதுயிலில் கிடக்கும் மூதாதைகளின் மட்கும் உடல்களை…

திருத்தத் துறை

என் அமர்வுக்கான அறைக்கதவை நாங்கள் நெருங்கும்போது நடைப் பகுதியின் மறு கோடியில் நிகழும் தள்ளுமுள்ளு என் கவனத்தை ஈர்க்கிறது. அங்கே மிகையுணர்ச்சியுடன் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண் மனநோயாளி பாதுகாக்கப்பட்ட அறையில் இருந்து வெளியேற்றப் படுவது தெரிகிறது. எனக்கு பயத்தில் இதயம் தொண்டைக்கு வந்து விடுகிறது.

“தொடர் குற்றவாளி; பல்வேறு அதிக பட்ச தண்டனைகள்“ – என் அறைக்கதவைத் திறந்து கொண்டிருக்கும் நர்ஸ் குறிப்புரைக்கிறாள்.

“வலிக்குமா?” – நான் கேட்கிறேன்.

செங்காந்தளின் ஒற்றை இதழ்

திண்ணையின் கீழே காலைப்போட்டு ஆட்களைப் பார்த்து அமர்ந்தாள் அம்மாயி.

“ஏவீட்டாளுக்கு நீர்மால எடுக்கப் போனது யாரு?”

“தீப்பந்தம் பிடிச்சக் கை எங்க?”

“பாடைத்தூக்கினத் தோளு எது?”

“கொல்லிவச்ச மகராசன் எவன்?”

மீண்டும் அவர்கள் மனசுகூட்டி வாதம் துவங்குமுன் அம்மாயி,

“இது எம்மனசுக்கு மட்டும் உண்டான ஒண்ணு. கழுத்துல மாட்டிருக்கணுமா?கழட்டி எறியணுமாங்கறது…” என்றபடி எழுந்தவள் தாழ்வாரக் கூரையிடித்துத் தள்ளாடினாள்.

இனிக்கும் முத்தம்

குனிந்து தரையைப் பார்த்தபடி உதட்டைப்பிதுக்கிக் கொண்டிருந்தவளை சிஸ்டர் திரும்பிப் பார்த்து புன்னகைத்தபடி மலரைப் பறித்து கூடையில் போட்டார். கொசுக்கள் எழுந்து பறந்து சூழ்ந்து வந்தன.

“காலையில அம்மாவோட சண்டைப் பிடிச்சியா?”

“இல்ல,”என்று பளிங்குக் கண்களைச் சிமிட்டினாள்.

“பின்ன ஏன் விளையாடப்பிடிக்கல?”

“வீட்டுக்குப் போனதும் பால் குடிச்சிட்டு தாத்தாவீட்டுக்கு போவேன்…இன்னிக்கு போகமுடியாது…அதனாலதான்….”என்று குனிந்தவளின் கைக்கூடையில்வெண்ணிற அடுக்குமல்லி விழுந்தது.

“ஊருக்குபோனா வரப்போறாங்க….”

“இனிமே வரவேமாட்டாராம்…”

லோக மாயை!

எலிவேடரிலிருந்து வெளியில் வரும் பொழுது பார்த்தாள், அந்த ரஷ்ய மூதாட்டி, கட்டிடத்தின் முன் கதவைத் திறந்து கொண்டு வெளியே போய்க் கொண்டிருந்தாள்.மேகா ஓட்டமும் நடையுமாக முன் கதவை அடைந்தாள்.

மிகச் சரியாக அதே நேரத்தில் கீழ் தளத்தைச் சேர்ந்த ஏதொ வீட்டிலிருந்து ஒரு இளம் தாய், தன் இரண்டு வயது குழந்தையுடனும், அதன் மூன்று சக்கர வண்டியுடனும்,அந்த கனமான கதவுடன் போராடிக் கொண்டிருந்தாள். இவள் கதவைப் பிடித்துக் கொண்டாள், பார்வை வெளியை விட்டு அகலவில்லை. அம்மா சைகிளுடன் வெளியே போனாள், நன்றியுடனும்,புன்னகையுடனும். அந்த குழந்தை உள்ளேயே நின்று கொண்டு வெளியே போக மறுத்தது. அம்மா,அதை வெளியே வரச் சொல்லி மென்மையாக சொல்லிக் கொண்டிருந்தாள். அந்த மூதாட்டி, கட்டிட முகப்பிற்கும், நுழைவாயிலுக்கும் இடையில் இருக்கும் இருபது அடி தூரத்தில் பாதியை கடந்து விட்டிருந்தாள்.

பேருரை (A Lecture Tour)

அரங்கு நிறைந்தது. காட்சி ஆரம்பமானது. இயக்குனர் அனைவரையும் வியக்கவைத்தான். அவனது மாயவித்தைகளை எல்லோரும் விரும்பினர். மூக்கிலிருந்து நீண்ட கைக்குட்டை ஒன்றை உருவி எடுத்தான், அரங்கின் பின்னால் இருந்த ஒரு பாட்டியின் பையிலிருந்து கிளாவர் ராஜாவை உருவி எடுத்தான். மேசை ஒன்றை கைதொடாமலேயே மேடையில் நடக்கச் செய்தான். இறுதியாக மேடையின் கீழே இருந்த இரகசிய வாயில் வழியே மறைந்துபோனான். கூட்டம் கூச்சலிட்டது. இடிமுழக்கமென கைதட்டியது. இப்போது மிருகங்களைக் காண்பிக்க‌வேண்டும். அவனே ஒவ்வொன்றாகக் கொண்டுவந்தான். நான் மேடையில் அவற்றை அறிமுகம் செய்ய வேண்டும். இயக்குனரின் அளவுக்கு என்னால் வெற்றி பெற முடியாது என்று உடனடியாகத் தோன்றியது. கூட்டத்தில் ஓரிரு சிந்தனையாளரேனும் என் அறிமுகத்தை பாராட்டக் கூடும். எனவே நான் கவலை கொள்வதில் அரத்தமில்லை

ஒளிக்கடமை

நசீம் தான் என்னை அறைக்கு கொண்டு வந்து விட்டார். நீண்ட அரை மணி நேரப் பயணம். அவர் காலமான அவருடைய மூத்த மகள் பற்றி அப்பொழுது தான் பேச ஆரம்பித்தார்.

“நாங்கள் முதலில் டௌன் டவுன் அருகில் தான் இருந்தோம். ஆனால் என் மூத்த மகளுக்காக நாங்கள் நகர எல்லைக்கு மாற வேண்டியிருந்தது மற்றவர்களுக்கு தொங்கரவு இல்லாமல் இருக்க”

“அவளுக்கு கண் சரியாக தெரியாது, காதும் அப்படியே. எங்களை அவள் முழுமையாக பார்த்திருக்கிறாளா என்று தெரியாது. தீவிரமான கோபத்தில் இருந்த அவளை ஆசுவாசப் படுத்த அவளுக்கு மிகப்பெரிய ஒளிப் பிம்பகளையும் இரைச்சலான ஒலியையும் சேர்ப்பிக்க வேண்டி இருந்தது. 35mm திரை, மிக அதிக வோல்ட்ஸ்சில் அதிரும் போஸ் ஸ்பீக்கர்கள் மற்றவர்களை பாதிக்கு மில்லயா”

ஆடிப்பாவை

“மூளை வெறும் உயிர்க் கருவி மட்டும் தானா?”
‘வேறு என்னவாக இருக்க முடியும்?’
“மனம், விழிப்புணர்வு, ஆழ்நிலை, ஆத்மா இவையெல்லாமே மூளையில் தான் இருக்கிறதா?’

‘புல் ஷிட். ஆத்மா என்றெல்லாம் கிடையாது.மனம் என்பது மூளை கொள்ளும் எண்ணங்கள்.விழித்திருக்கையில் நீர் உணர்வுடன் இருக்கிறீர். உறங்குகையில் உமது மூளை பல பகுதிகளுக்கு ஓய்வு கொடுத்துவிட்டு சிறு எச்சரிக்கையுடன் உம்மைக் காக்கிறது. அதை நீர் ஆழ்நிலை என்று சொல்கிறீர்.’

சுழலில் மிதக்கும் பூ

தேர்வன்று ராமர் மிகவும்பதட்டமாக இருந்தான். இவள், “எனக்கும்தான் மறந்துட்டு எல்லாம். சும்மா குழம்பாத,” என்று கருப்புக்கயிறைக் கையில் கட்டினாள். பக்கத்திலிருந்தவன், “நீ இந்தமாதிரி ஏதாவது ஆரம்பிச்சா கைநிறைய காசு பாக்கலாம்…அவன் பண்ணினதுக்கு இன்னும் இருக்கு,” என்றான்.

அவனிடம்,“கூட்டமான பஸ்சுக்கு காத்துக்கிட்டுருக்கவன் தானே நீ..” என்றாள். “வெள்ளப்பூனைக்குட்டி மாறி இருந்துக்கிட்டு புலின்னு நெனப்பு,” என்றவுடன் “பூனக்கி புலியத் தெரியுமோ இல்லையோ பால் எதுன்னு நல்லா தெரியும்,” என்றவுடன் வேறுபக்கம் திரும்பிக்கொண்டான் அவன்.

உடன்வரும் நிழல்

ஒப்புதல் வாக்குமூலம் கொடுப்பது ஒரு வகை. உங்களை நம்பகமானவராக நினைத்து என்னுடைய அத்யந்த ரகசியங்களை தனிமையில் சொல்வது என்பது விசுவாசம் கலந்த துறவுநிலை. இந்த இரண்டு நிலைகளும் வெவ்வேறாகத் தோன்றினாலும் சொல்லும் விதத்திலும் நிபந்தனையற்ற விதிகளில்லா திறந்தவெளிகளை உருவாக்கிக் கொடுப்பதிலும் நேரெதிர் நிலைப்பாடுகளை உருவாக்குபவை. முத்துலிங்கத்தின் ‘அமெரிக்காகாரி’ கதை இதில் இரண்டாம் வகையைச் சேர்ந்த வகை. உங்களிடம் நம்பிக்கை வைத்து சினேக மனோபாவத்தோடு விஷயத்தைச் சொல்கிறார்.

பார்வை

சுஜாதா இந்த முறை சற்று எரிச்சலாகி விட்டாள். “இருக்குற வேலையை விட்டுட்டு உங்க கேபினுக்கு வந்து ஜோக் பண்ற நிலைமையில நான் இல்லை திவாகர். ஐ யம் ப்ரெட்டி சீரியஸ்.”
“நானும் சீரியசாத்தான் கேக்குறேன். அரை நாள்ல முடிக்க வேண்டிய வேலைய இரண்டு நாள் எடுத்து முடிச்சீங்க. இன்னைக்கு முடிக்க வேண்டிய வேலை இதுவரைக்கும் பெண்டிங்லதான் இருக்கு. இதப்பத்தி இதுவரைக்கும் நான் ஏதும் சொன்னேனாங்க? ஏற்கனவே ஒருத்தர் கல்யாணம்ன்னு லீவ்ல போயிருக்கார். அவருக்கு பதிலா நான், அவர் வேலையைப் பாத்துக்கிட்டிருக்கேன். நீங்க நாளைக்கு லீவு சொல்றீங்க. என் பொஸிசன்ல இருந்து நீங்க கொஞ்சம் யோசிங்க மேடம்” கடைசியாக மேடம் என்ற வார்த்தையில் கொடுக்கப்பட்ட அழுத்தம் சுஜாதாவை உறுத்தியது.

ஸ்பென்சர்

வேளாங்கண்ணிக்கு நடந்து வரேண்ணு வேண்டிக்க. சித்தூர்ல நாட்டு வைத்தியம் பாக்குறாங்க சாரப்பாம்பு எண்ணெய உருவி விட்டா நடந்திடுவான், பெங்களூர்ல காந்த சிகிச்சை தராங்க, மேக்னட் வச்சி ரெண்டு காலும் நடக்காத ஒரு அம்மாவுக்கு சரியாயிடுச்சி. மருதூர்ல இருக்குற சாமியாரு… நாகூர் தர்காவுல சரியாயிடும்.,கேரளாவுல மண்ணுல நாள் பூரா ஒக்கார வச்சி எண்ணத்தடவி சரி பண்ணிடறாங்க. எழுப்புதல் கூட்டங்கள். சுகமளிக்கும் பிரார்த்தனைகள். அக்குபஞ்சர்ல ஊசி குத்துனா சரியாயிடும். சித்த மருத்துவம், ஆயுர்வேதம், சோசியங்கள், ஆருடங்கள், கணிகாரர்கள்,.,தேவ ஊழியர்கள். ,இயற்கை மருத்துவர்கள், பழம் மட்டுமே சாப்பிடக் குடுங்க. எத்தனை எத்தனை ஆலோசனைகள்… பரிகாரங்கள்.. வழிகாட்டுதல்கள்… எல்லா இடங்களுக்கும் அவனைச் சுமந்து அலைந்தார்கள்.எதற்கும் இளகாத கரும்பாறையல்லவா வாழ்வு

சக்யை

அவனுடன் குதிரையில் இரண்டாம் மதிலைக் கடந்து வெளியேறிக் கொண்டிருந்தாள். குளம்படிகளின் ஓசை முரசொலியாய் அதிர்ந்தது. நிமிர்கையில் பிணந்திண்ணிகள் கார்த்திகைக் கோபுரமதிலில் சிறகு குறுக்கி அமர்ந்திருந்தன. காற்றில் நிணவீச்சம் ஏறியிருந்தது.

மூன்றாம் மதிலின் தவிட்டறையையடுத்த, கழுத்து மணியோசையும், மூச்சுச் செருமலுமில்லா தொழுவைக் கடக்கையில் மூச்சையிழுத்துப் பிடித்துக் கொண்டாள்.

புத்தகப்பை

சின்னையாத் தோப்பு வழியாகச் செல்வது சற்று கடினமான வேலை. பள்ளியின் கழிவறை சுவரில் ஏறி அந்தப் பக்கமாகக் குதித்தால் சின்னையாத் தோப்பு. அதை தாண்டினால் வரும் மாந்தோப்புக்குள் காவக்காரன் கண்ணில் அகப்படாமல் சென்றால் செந்துறை விளக்கை அடைந்துவிடலாம். அதற்கு முன்னர் ஆசிரியர் கண்ணில் மாட்டாமல் சுவர் ஏற வேண்டும். என் மனம் சின்னையாத் தோப்பு வழியை தேர்ந்தெடுத்தால் அன்று நான் படிப்பாளியாக மாறி விடுவேன். ‘பள்ளி முடிந்ததும் மரத்தடியில் அமர்ந்து படிப்பது போல சிறிது நேரம் பாவ்லா செய்ய வேண்டும். பின்னர் ஆசிரியர்கள் அனைவரும் சென்றவுடன், மாணவர்கள் யாரும் விளையாடிக் கொண்டிருந்தால் அவர்கள் கண்ணிலும் சிக்காமல் புத்தகப்பையுடன் கழிவறை நோக்கி செல்ல வேண்டும். ஒண்ணுக்கு இருக்கும் பகுதியில் யாரும் இல்லையென்றால் சிறிது கூட யோசிக்காமல் சட்டென ஏறி குதித்துவிட வேண்டும்

பரண்

வளர்ந்து விட்டாள். வீட்டில் தங்கி கல்லூரியில் இலக்கியம் படித்து கொண்டிருக்கிறாள். இரட்டை சடையில் ஒன்றை, ஆள் காட்டி விரலில் சுற்றிக் கொண்டு, பதினெண் வயதுக்குரிய சதை பூரிப்போடு, காலை இளவொளியில் அழகாக இருந்தாள். அப்பாவை போல் மாநிறம். வலது கண்ணோரத்தில் அந்த சிறு வடுவை தடவிக் கொண்டு பேசுவாள். இளைஞர்கள் கிறங்கக் கூடும், ஆனால் சிறு வயதில் என்னை வெகு நாள் மிகவும் வதைத்த வடு. அவளுடன் பேசும் பொழுது, அவளை நேருக்கு நேர் பார்க்காமல், ஓரக் கண்ணால் பார்த்து பேச செய்ததே இந்த வடுதான். “நான் மத்தியானத்துக்கு மேல ஃப்ரண்ட்ஸெ பாக்க போகணும். இப்பவே இந்த வேலைய முடிக்கலாம். அந்த போளி, சித்தி எனக்கு மட்டும் தான் செஞ்சு வச்சுட்டு போயிருக்கா… யாராவது கைய வச்சீங்க…” அண்ணா வீட்டுக்கு வந்தாலும் அதிகம் இருப்பதில்லை. வெளியிலயே தான் இருப்பான். வீட்டில் இருந்தாலும் ஒன்றிரண்டு சொற்றொடர்கள் மற்றும் சித்தியின் போளி மட்டும்தான். காலையில் இருந்து, விடாமல் மழை. அதனால் அதிசயமாக வீட்டில் இருக்கின்றான்.