திருத்தத் துறை

என் அமர்வுக்கான அறைக்கதவை நாங்கள் நெருங்கும்போது நடைப் பகுதியின் மறு கோடியில் நிகழும் தள்ளுமுள்ளு என் கவனத்தை ஈர்க்கிறது. அங்கே மிகையுணர்ச்சியுடன் கூக்குரலிட்டுக்கொண்டிருக்கும் ஒரு பெண் மனநோயாளி பாதுகாக்கப்பட்ட அறையில் இருந்து வெளியேற்றப் படுவது தெரிகிறது. எனக்கு பயத்தில் இதயம் தொண்டைக்கு வந்து விடுகிறது.

“தொடர் குற்றவாளி; பல்வேறு அதிக பட்ச தண்டனைகள்“ – என் அறைக்கதவைத் திறந்து கொண்டிருக்கும் நர்ஸ் குறிப்புரைக்கிறாள்.

“வலிக்குமா?” – நான் கேட்கிறேன்.