கண் மங்கலாக தெரிவது போல் இருந்தது அவனுக்கு. மரப்பலகையின் மேல் அடித்த தகரம் மறைந்து முழு கதவும் கெட்டி இரும்பால் ஆனது போல் தோன்றியது. கதவின் பளபளப்பு அதிகரித்துக்கொண்டே செல்வது போலவும், எல்லோரையும் பார்த்து ஏளனமாக சிரிப்பது போலவும் தோன்றியது, கூர்மையான மெல்லிய ஒளியை எதிரே நிற்பவர்கள் மீது பாய்ச்சி கொல்லத் துடிப்பது போலவும், மங்கலாக அதன் மேற்புறம் தெரியும் அனைவரையும் அது விழுங்கிவிடுப் போகிறது என்றும் தோன்றியது.
Author: க சரத்குமார்
அரவு உறை புற்று
ஏனென்று தெரியாமல் உடலெல்லாம் எரிவது போல் இருந்தது. அது அப்பாவின் மீது வந்த எரிச்சல் இல்லை என்று உள்மனது சொன்னது. உடலின் மீது ரத்தம் வழிய கீறிக் கொள்ள வேண்டும் போல் இருந்தது. எவ்வளவோ சிந்தித்தும் என்னுள் அப்பவின் கையை பற்றிக் கீழிறக்கும் எண்ணம் எப்படி உருவாகி செயலாகியது என்பதை அறிந்து கொள்ள முடியவில்லை.
