அவர், எல்லா தலைப்புகளிலும். எந்த நேரமும், எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசுவார். சமூகவியல் கருத்தரங்கமா? அவருடைய உயர்ந்த சமூகப் பார்வை இருக்கும். உளவியல் கருத்தரங்கமா? உங்கள் மனதை புட்டு புட்டு வைப்பார். இயற்பியல் கருத்தரங்கமா? அவருக்கு தெரியாத குவாண்டம் பிஸிக்ஸா? எல்லாம் கூகுள் அப்பாவின் உதவிகள். சரியா தவறா – கிடையாது. சும்மா, அடித்து விளையாடுவார்.
Category: இதழ்-313
மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து
ஜெருஸோப்பா சின்ன ராஜ்ஜியம் தான். ஆனா பாருங்கோ இங்கே ஜெருஸோப்பாவில் ஒரு மாதிரி, ஹொன்னாவர்லே இன்னொரு மாதிரி பொதுஜன அபிப்ராயம் இருக்கறதா தெரியறது. ஹொன்னாவர்லே இங்கே கலவரம் வராதுன்னு சொல்றா. நன்னா சகல விதத்திலேயும் முன்னேறி காசு பணம் ஆட்ட பாட்டம்னு எல்லாம் நிறைஞ்சிருக்கு ஹொன்னாவர்.
வேட்டை நாய்
முதுகிலும், கைகளிலும் பட்டிருந்த காயங்களின் வலிக்கடுமை பிரெலைப் பாதித்துக் கொண்டிருந்தது. அவர்கள் அவனை வலுவாகத் தாக்கி அடித்துப் போட்டுவிட்டுப் போயிருந்தார்கள். அவனோ ஒரு முட்டாளைப்போல் இங்கே நின்று கொண்டு தன் பிரச்சினைகளுக்கு மிக எளிதான ஒரு பதிலை யோசித்துக் கொண்டிருக்கிறான். தனது அம்மாவும் தங்கையும் வாத்துகளை விட முக்கியமில்லாதவர்களாக மாறிவிட்டிருக்கிறார்களா என்ன?
மனித இனப் பரவல் விளைவித்த மரபணு மாற்றங்களும் தோல் நிறத்தின் பரிணாம வளர்ச்சியும்
மனித இனக்குழு தன் தாய்நிலத்திலிருந்து புலம் பெயர்ந்து மற்றொரு புதிய நிலப் பகுதியில் குடியேறிய பிறகு, அப்பகுதியில் நிலவும் இயற்கைச் சூழலுக்கு ஏற்பத் தங்களைத் தகவமைத்துக் கொண்டு வாழத் தொடங்குவர். சுற்றுச்சூழலுக்கு ஏற்பத் தகவமைத்துக்கொண்டு வாழ்வது அடிப்படை பரிணாமவியல் கொள்கை. இதுவே மக்களின் தோற்றம், நிறம், உடலமைப்பு ஆகியவற்றில் காணப்படும் மாறுபாடுகளுக்குக் காரணம். உலகின் பல்வேறு பகுதிகளில் வாழும் மக்களின் தோலின் நிறம் மாறுபடக் காரணம் அவர்கள் வாழும் பகுதியின் புற ஊதாக் கதிர்களின் அளவின் தாக்கத்தை எதிர்கொள்ள அவர்களின் தோலின் நிறமிகளில் ஏற்படும் மாறுபாடு என்ற ஒரு தகவமைப்பு என்பது நினா ஜப்லோன்ஸ்கி தரும் விளக்கம்
நான்கு நாட்கள் கொண்டாட்டம்
சரசுவின் வேலை மேய்ப்பதும் தோய்ப்பதும். மாடு ஆடு கோழி தாரா வாத்துகள் எனப் பலவற்றைப் பராமரிக்கின்றாள். அத்தோடு உடுப்புகள் தோய்க்கின்றாள். சிலவேளைகளில் தோட்டத்திற்குள் களையும் புடுங்குவாள். இவையெல்லாவற்றையும் விட, கமலத்தின் முழுத்தொட்டாட்டு வேலைகளையும் அவளே செய்வாள்.
சரோஜா ராமமூர்த்தியின் ‘வடு’ சிறுகதை
கதையில் வரும் கணவனும் absolution பெறத் தான் முயற்சிக்கின்றானோ? பெண்களுக்கான வெளி மறுக்கப்படுவதற்கு தான் காரணம் அல்ல, அதற்கு தான் குற்றவாளி அல்ல என்பதை நிறுவ தான் அவன் முயல்கிறானா? எனில் அவன் போலியா? இன்று அவனைப்பற்றிய விமர்சனம் எப்படியிருக்கக் கூடும்? மனைவிக்கு சுதந்திரம் கொடுக்க வேண்டும் என்று அவன் சொல்வதிலுள்ள agency, பெண்ணிற்கு கிடையாதா, அவளுடைய ஒப்புதல்/consent பற்றி சிந்திக்காதவன் என்று இன்றைய கலாச்சார சூழலில்/ zeitgeistல் புழக்கத்தில் உள்ள சொற்களை அவன் மீது சுமத்தலாம்.
தெய்வநல்லூர் கதைகள் – 16
தோட்டத்துக்கு நடுவில் சிறிய அளவில் வளர்க்கப்பட்ட காய்கறி பாத்திகளிலிருந்து கொடிக்கால் கத்திரிக்காய் எனப்படும் வெள்ளைக் கத்திரிக்காய், சிவப்பு வெண்டைக்காய், பச்சை மிளகாய், ஈத்தக்குச்சியின் கையை விட பருமனாக இருக்கும் மலை முருங்கை, தோட்டத்துக்கு வெளியே மலைச்சரிவில் நிற்கும் புளியமரத்திலிருந்த பாதி பழுத்த புளிக்காய்கள் ஆகியவை சேகரிக்கப்பட்டன. சுனா கானா எங்களுக்கெலாம் பணிப் பகிர்வு செய்து கொடுத்தார்.
காவலும் தாண்டுவது காதல்
இசே கோயிலினுள் கடுங்காவல் வைக்கப்பட்ட காதலி மசாகோவுக்கு வெளியிலிருந்து இப்பாடலைத் தூதாக அனுப்புகிறார். எப்படி அனுப்பினார் என்ற விவரங்கள் தெரியவில்லை. கடைசியாக ஒருமுறை பார்க்க இயலாவிட்டால் நான் இறந்து விடுவேன் என்று இளவரசிக்கு உணர்த்தும் இப்பாடல் இடையில் வேறொருவர் கையில் கிடைத்துவிட்டால் என்ன செய்வது?
அயல் சுவை
உள்ளபடியே இருக்கும் வேறுபாடுகளை விவரிக்கும்போதும்,அந்த விவரணையால், அவர்கள் வேறு என்ற உணர்வு வலுக்கிறது. பழகிப்போன பண்பாட்டில் வாழ்க்கை முறை விவரிக்கப்படுவதில்லை. பொதுப் புரிதல்கள் இல்லாத இடத்தில் வாழ்க்கை விவரணைகள் தேவைப்படுகின்றன. அவை நம்மைப் போன்றவர்கள் இவர்கள் என்ற உணர்வை அளிக்கும் போதே இவர்கள் வேறு என்ற உணர்வையும் அளிக்கிறது.
நிகழ்தகவு, காலம் மற்றும் கருந்துளையின் வெப்பம்
கற்பனையோ இல்லையோ, காலம் கடப்பதையோ ஓடுவதையோ ஒழுகிச் செல்வதையோ எப்படி விளக்குவது? காலம் கடப்பதை நாம் நன்றாகவே அறிகிறோம். நமது சிந்தனைகளும் பேச்சும் காலத்தில் தான் இருக்கின்றன. மொழியின் அடிப்படை கட்டமைப்பே காலத்தைச் சார்ந்தது – ஒரு பொருள் இருக்கிறது – இருந்தது – இருக்கலாம் . பொருட்களோ வண்ணங்களோ, ஏன் வெளியோ இல்லாமல் கற்பனை செய்ய முடியும் பிரபஞ்சத்தினை காலம் இல்லாமல் கற்பனை செய்வது மிகவும் கடினமானது.
கு.அழகர்சாமி கவிதைகள்
கண்ணிமைக்காமல்-
கண்டு கொண்டே இருக்கிறேன்
இன்னும் பறந்து போகாது
கொத்திக் கொண்டே இருப்பதை-
கொட்பின்றி ஒல்லுதல் நட்பாம்
கிட்டத்தட்ட இருபது வருடங்களுக்குப் பிறகு பார்க்கப் போகும் கல்பனாவின் முகத்தையும் உருவத்தையும் தன் நினைவில் நிறுத்த முயர்ச்சித்தாள். தன் வகுப்பறையிலேயே உயரமான, தடிமன் ஆன பெண் கல்பனா. மிகவும் கலகலப்பானவள். கூட்டுக் குடும்பத்தில் வளர்ந்தவள் ஆதலால் எப்போதும் நிறைய தோழிகளுடனேயே காணப்படுவாள். அவளுக்கு மஞ்சள் நிறம் மிகவும் பிடிக்கும். பேசிக்கொண்டே இருப்பாள், ஆதலால் கரும்பலகையில், பேசியோர் பட்டியலில் கல்பனாவின் பெயரே முதலிடம் பிடித்திருக்கும்.
மலங்கி மடுவாகலி
அவர்கள் வேட்டையாட வரும் போதெல்லாம், காட்டு யானைகள் ஓரிடத்தில் மரத்தை உலுக்கி பூமாரி பெய்து அதை வலம் வந்து மீண்டும் காட்டுக்குத் திரும்புவதைப் பார்த்தார்கள். வியப்பினால் உந்தப்பட்டு அந்த மரத்தின் அடியில் கோடாரியால் வெட்ட சிவலிங்கத் திருமேனியிலிருந்து குருதி கொப்பளித்து, அவனது ஐந்து முகம் போலவே ஐந்து திசைகளிலும் சிதறியிருக்கிறது
அதிரியன் நினைவுகள் -30
அக்கறையுள்ள ஒரு தொழிலாளி உன்னத படைப்பொன்றை மிகுந்த கவனத்துடன் நகலெடுப்பது போல, மூர்க்கத்துடன் என் நினைவிலிருந்து, எவ்வ்த ஒழுங்கிற்கும் இணக்கமற்ற அவனுடைய துல்லிய வடிவை உயர்ந்த அவனுடைய மார்பை கவசம் போல உருவாக்க முனைந்தேன், ஆனால் கண்ட பலன் பூஜ்யம். சிற்சில சமயங்களில் படிமங்கள், காட்சிகள் தானாக வெளிப்படும்; அப்படியொரு சூழல், இனிமை வெள்ளத்தில் மிதந்தேன்;
இன்வெர்னஸ் & ஸ்காட்டிஷ் ஹைலாண்ட்ஸ்
ஸ்காட்லாந்தின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ள ஹைலேண்ட்ஸ்ன் கரடுமுரடான அழகு, காலத்தால் அழியாத வசீகரம். பரந்து விரிந்த நிலப்பரப்பில் விரவியிருந்த இயற்கைக் காட்சிகளைக் கண்டுகளிக்க, ஆங்காங்கே வண்டிகளை நிறுத்தும் வசதிகள் வழியெங்கும் இருக்கிறது. கோடைக்காலத்தில்அழகு மேலும் மெருகேறியிருக்கலாம். நாங்கள் சென்ற மழைக்காலத்தில் அப்பொழுதுதான் மரங்கள் துளிர் விட ஆரம்பித்திருந்தது.
கொகெய்னும் கிரேக்கும்
துகளாக கிடைக்கும் கொகெய்ன் அதிக போதையளிப்பதால் அதன் தேவையும் விலையும் மிக அதிகம் எனவே விற்பனை செய்பவர்களுக்கு லாபமும் அதிகம். கிரேக் போதையும் விலையும் குறைவு என்பதால் அது பெரும்பாலும் ஸ்ட்ரீட் கொகெய்ன் என்னும் குறைந்த அளவிலும் பெயரிலும் விற்பனையாகிறது,
அபிராமியும், அண்டங்களும்
சூர்யனைச் சுற்றி வரும் நம் புவியின் வட்டப்பாதை மாறிக் கொண்டு வருகிறது; அது பெரிய அளவில் வருடம் தோறும் மாறுவதில்லை. சந்திரன், மற்றும் சில கிரகங்களின் ஈர்ப்பு இழுவைகளால், புவியின் சுற்று வட்டப் பாதை பாதிக்கப்பட்டு அதில் மாறுதல்கள் உண்டாகின்றன. இதனால், நம் பூமி காலநிலை/ பருவ நிலை மாற்றங்களுக்கு உட்படுகிறது. பூமியின் அச்சு சிறிது சாயும், அதன் சுழற்சி பாதை மாறும், மெலான்கோவிட்ச் கால நிலை சுழற்சிக்குக்(MilankOvitch Climate Cycles) காரணமாகும்.
