மிளகு அத்தியாயம் அறுபத்தைந்து

ஜெருஸோப்பா சின்ன ராஜ்ஜியம் தான். ஆனா பாருங்கோ இங்கே ஜெருஸோப்பாவில் ஒரு மாதிரி, ஹொன்னாவர்லே இன்னொரு மாதிரி பொதுஜன அபிப்ராயம் இருக்கறதா தெரியறது. ஹொன்னாவர்லே இங்கே கலவரம் வராதுன்னு சொல்றா. நன்னா சகல விதத்திலேயும் முன்னேறி காசு பணம் ஆட்ட பாட்டம்னு எல்லாம் நிறைஞ்சிருக்கு ஹொன்னாவர்.

மிளகு  அத்தியாயம் முப்பத்தொன்று

இந்த கலாசார பரிமாற்றத்தை போர்த்துகல்லில் பாதிரியார்கள் கண்டிக்கிறதாகவும், கொங்கணியை அவர்கள்  உத்தேசித்திருப்பதாகவும் லிஸ்பனிலிருந்து வரும் வதந்திகள் தெரிவிப்பதாக நஞ்சுண்டய்யா பிரதானி நேமிநாதனிடம் சொல்லியிருக்கிறார். எது எப்படியோ, கொங்கணக் கொங்கைகள் இப்போதைக்கு லிஸ்பனில் குலுங்கிக் கொண்டிருக்கின்றன.வார இறுதியில் கவிதை,  நஞ்சுண்டையா வீட்டு மிளகுப் பொங்கல், ரோகிணி என்று மனம் சுவாரசியமான கலவையாக எதிர்பார்க்க ஆரம்பித்து விட்டது.

மிளகு அத்தியாயம் இருபத்தொன்று 

பரமனுக்கு தாகம் எடுத்தது. பசி வேறே. விமானத்தில் கொடுத்த ரொட்டித் துண்டுகளும், சின்ன பாட்டில் ஜாமும், பொங்கலுக்கும் உப்புமாவுக்கும் இடைப்பட்ட ஏதோ இந்தி ஆகாரமும் பரமனின் கைப்பையில் இருப்பதால் பசி விஷயம் அவ்வளவு பெரிய உடனடிப் பிரச்சனை ஆகாது. என்றாலும் தாகத்துக்குத் தண்ணீர்? இந்தத் தாங்கு கட்டைகள் வேறே, எங்கே போனாலும் எடுத்துப் போக வேண்டியிருக்கிறது. அவை இல்லாமல் இருந்தால் நன்றாக இருக்கும்.