எங்கே போகிறேன்?

சுவாமிகள் எப்போது சித்தியடையப் போகிறார்? ஒரு மாசமாக அப்படியே கண்ணைமூடி அமர்ந்திருக்கிறாரே! உடலில் ஒரு அசைவும் இல்லையே! மூச்சு போய்வருவதாகவும் தெரியவில்லை. எல்லாம் அடங்கிவிட்டாற்போல இருக்கிறதே! ஜீவசமாதிதான் செய்யப்போகிறார்களா?’அவர் உடம்பில் பிராணன் இருக்கா இல்லையான்னு எப்படித் தெரிஞ்சுக்கறது? அவரை நாம தொட்டுப்பார்க்கவா முடியும்?” இது இன்னொருவரின் கேள்வி?