அன்று ரொறொன்ரோவில் பனிகொட்டி கால நிலை மோசமாகும் என்று ரேடியோவில் அறிவித்தல் வந்துகொண்டிருந்தது. ஆஸ்பத்திரிக்கு அவசரமாகப் போய்ச் சேர்ந்தேன். மருத்துவர் கொடுத்த நேரத்துக்கு அவருடைய வரவேற்பறையில் நிற்கவேண்டும். இன்னும் ஐந்து நிமிடம் மட்டுமே இருந்தது. அந்த ஆஸ்பத்திரியில் கார்கள் நிறுத்துவதற்கு நாலு தளங்கள் இருந்தன. ஒவ்வொன்றிலும் பல பிரிவுகள். ஒவ்வொரு கார் தரிக்குமிடத்திலும் ஒவ்வொரு கார் நின்றது. கார்கள் வரிசையாகச் சுற்றிச் சுற்றி தரிப்பதற்கு இடம் தேடின. நானும் பலதடவைகள் சுற்றி இடம் கண்டுபிடித்து காரை நிறுத்திவிட்டு மருத்துவரிடம் ஓடினேன். அந்த அவசரத்தில் எங்கே காரை நிறுத்தினேன் என்பதை அவதானிக்க தவறிவிட்டேன்.
Category: இதழ்
காப்பிய இமயம்
வழக்கமாக மேடைப் பொழிவாளர்கள் பலரும் தம் கைவசமிருக்கும் நூற்றுக்கும் குறைவான கம்பன் பாடல்களையே எல்லாப் பந்திகளிலும் திரும்பத் திரும்ப விளம்புகிறார்கள். அதாவது கம்பனில், மேடைகளில் புழங்கும் பாடல்கள் ஒரு சதமானத்துக்கும் கீழே. ஆனால் அவற்றை வைத்துக் கொண்டு ஒரு புருஷ ஆயுளையும் ஓட்டிவிடலாம். விளைவு திரும்பத் திரும்ப காதில் ஒலிக்கும் அதே நூற்றுக்கும் குறைவான பாடல்கள்.
நின்று பெய்யும் மழை – பிரான்சிஸ் கிருபா
ஈரமேறிய மண்ணில் நின்று கொண்டிருப்பவனின் கால்களை நனைத்துச் செல்லும் ஓடையாக கவிதைகள் இருக்கின்றன. கவிதையின் மீதாக விருப்பம் இருப்பவர்கள் குனிந்து தங்களின் கைகளில் கொஞ்சம் கவிதைகளை அள்ளிக் கொள்கிறார்கள்.அவரவரின் கை வடிவத்திற்கு ஏற்ப அள்ளிய நீர் வடிவம் பெறுவதைப் போலவே, வாசகனின் அனுபவத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப கவிதைகள் அவனுக்குள் வடிவம் பெறுகின்றன. தன்னை யாரும் அள்ளி எடுப்பதில்லை என்பதற்காக எந்தக் கவிதையும் நின்றுவிடுவதில்லை.
தனியே எங்கே போகிறாய்? – கேசர்பாய் கேர்கர்
3:38 நிமிடம் பாடக்கூடிய இந்தப் பாடலைப் பாடியவர் கேசர்பாய் கேர்கர். உஸ்தாத் அல்லாடியாகானிடம் பல வருடங்கள் இசை பயின்றவர். 1977-இல் வாயேஜர் ஓடம் வின்வெளிக்கு அனுப்பப்பட்டபோது கூடவே சில பாடல்கள் தொகுத்து அனுப்பப்பட்டன. அத்தொகுப்பில் இந்தியாவிலிருந்து சென்ற பாடல் இது. விக்கிபீடியாவில் கிடைத்த இன்னொரு தகவல்: The recording was recommended for “தனியே எங்கே போகிறாய்? – கேசர்பாய் கேர்கர்”
‘விளிம்பில் உலகம்’ கட்டுரைக்கு ஒரு மறுவினை
சொல்வனம் இதழ் 37-இல் திரு.மித்திலன் எழுதிய ‘விளிம்பில் உலகம்’ என்ற கட்டுரையைப் படித்தேன். அவர் நுட்பமாகத் தன் கட்டுரையை வரைந்திருக்கிறார், சொல்வதைச் சுருக்கி எழுதியிருக்கிறார் என்பதால் வேகமான வாசிப்பில் சில அம்சங்கள் கவனிக்கப்படாமல் போகலாம் என்று நினைத்து இதை எழுதுகிறேன். இது விமர்சனமில்லை, கூடுதலான விவாதத்துக்குத் தூண்டுதல்.
வாசகர் மறுவினை
தன்னை முழுதாக தொகுத்துக் கொண்டு சமூகம் முன்னகரும் போது, அதற்கான கோட்பாடுகளை அது உருவாக்கிக் கொள்கிறது. வாழ்வின் ஒவ்வொரு தருணத்திலும் மனித குலம் தன் இருப்பை நீடித்துக் கொள்ள உதவும் கருவிகளை தேடி அலைகிறது. ஒரு கோட்பாட்டின் மூலம் அந்த கருவிகளை அடைய முடியும் என்று நம்பிக்கை போதும், சமூகத்தில் இந்த கோட்பாடு கண்மூடித்தனமாக ஏற்றுக் கொள்ளப்படும்.
இணையத்துடன் போராடும் விளம்பரத் தாள்கள்
செய்தித்தாள்களில் உள்ள ஒரு மிகப் பெரிய செளகரியம் அதன் parallel படிக்கும் முறைகள். அதாவது, அரசியல் படித்துவிட்டுத்தான் விளையாட்டைப்பற்றி படிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. அரசியல் படிக்கும் அப்பாவிடமிருந்து, கிரிக்கெட் பக்கத்தை மகன் உருவி படிக்கும் காட்சி நமக்கு மிகவும் பழக்கமானது. செய்தித்தாளின் முதல் போட்டி ரேடியோ. ஆனால், ரேடியோவில் மிகப் பெரிய குறை அதன் serial கேட்கும் முறைகள்.
மகரந்தம்
கடல் அமிலமாகிறது என்று ஆபத்தறிவிப்புகள் படித்திருப்பீர்கள், அதனாலென்ன என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறு விளக்கம். அமிலமாகும் கடல் நீரில் உயிரினங்கள் வளர்வது மிகக் குறையும். உயிரினங்கள் இல்லாத கடல் உலக மக்களுக்குப் பெரும் நாசததைக் கொணரும், ஏனெனில் கடலிலிருந்து கிட்டும் உணவு உலக மக்கள் திரளுக்குப் பெரும் பங்கு ஊட்டத்தை அளிப்பது. இங்கு கொணரப்படும் செய்தி சொல்வது வேறு ஒரு விந்தையைப் பற்றியது.
எலெக்ட்ரிக் எறும்பு – 2
என் பேரண்டமே என் விரல்களுக்கு இடையில் உள்ளது, அவன் புரிந்து கொண்டான். இந்த சனியன் பிடித்த நாடா எப்படி வேலை செய்கிறது என்று மட்டும் புரிந்து விட்டால். நான் முதலில் என்ன தேடினேன் என்றால், என் செயல்திட்டத்தை இயக்குகிற சர்க்யூட்களைக் கண்டுபிடித்தால், என் வாழ்க்கையை உண்மையாக ஒரு நிலைப்புள்ளதாக ஆக்கலாம் என்று யோசித்தேன். ஆனால் இதைப் பார்த்தால்…
கல்மேடு
சிறிய உருவம் கொண்ட முதியவரான உள்ளூர்ப் பாதிரியார் மலைகளின் மேல் ஏறிச் செல்ல வேண்டும் என்பது வேடிக்கையான யோசனையாக இருந்ததால், அங்கு நீண்ட சிரிப்பலை எழுந்தது. தந்தை இஜியஸ் அனாவசிய கர்வம் இல்லாதவர்தான். ஆனாலும், சிரிப்பலையால் சற்றே மனம் புண்பட்டாரோ என்னவோ, கடைசியில், விறைப்பாகப் பேச ஆரம்பித்தார், “ஐயா, அவர்களுக்கு அவர்களுடைய கடவுளர்கள் உண்டு.”
மூன்று கவிதைகள்
வழியெங்கும்
சிதறி ஓடும்
என் வயிற்றுப் பாம்புகள்
மகுடிக்காரனை விட்டுவிட்டு
எதிர்ப்படுவோரையெல்லாம்
கொத்திச் செல்கின்றன
மொழிபெயர்ப்பு என்னும் கலை – இறுதிப்பகுதி
முழு எத்தர்கள், சற்றே மந்த புத்திக்காரர்கள், மலட்டுப் புலவர்கள் ஆகியோரைத் தவிர்த்தால், தோராயமாக, மூன்று விதமான மொழி பெயர்ப்பாளர்கள் உள்ளனர். நான் முன்னர் கூறிய மூன்று வகைத் தீங்குகள்- அறியாமை, விட்டு விடுதல், மற்றும் ஒற்றித் திருத்தல்- அவற்றுக்கும், இவர்களுக்கும் தொடர்பு இல்லை என்றாலும், இந்த மூன்று வகையினரும் மேற்படி மூவகைப்
பிழைகளையும் செய்யக் கூடும்.
ஆயிரம் தெய்வங்கள் – 4
சூரியனைச் சுற்றியுள்ள எகிப்தியக் கதைகளில் எவ்வாறு தாய்தெய்வமாகிய ஐசிஸ் ஒளிபெற்றால் என்ற விவரம் சூரியனின் சுழற்சியை அறிவுப் பூர்வமாகச் சிந்திக்கும் உருவகமாகத் தோன்றுகிறது. ஐசிஸ் மூவுலகிலும் சக்தி நிரம்பிய தாய்தெய்வம். மாய-மந்திரங்களில் வல்லவள் என்றாலும் ரி, அதாவது சூரியனின் ரகசியத்தை அறியாமலிருந்தாள். ரி ரகசியம் தெரிந்துவிட்டால் அவள் சக்தி மேலும் உயரும். ஒரு புதிய சக்தி பிறக்கவும் வழி ஏற்படும்.
இடப்பெயர்வு
பல்லாயிரக் கணக்கான ஆண்டுகளுக்கு முன்பு துவங்கிய, இன்று வரை நில்லாத மனித குலத்தின் இடப்பெயர்வை, அதன் விளைவுகளை வரலாறு மீள மீளப் பேசுகிறது. தன்னைச் சுற்றிய இயற்கையை அதன் நடவடிக்கைகளை, இயற்கையின் பகுதியான பிற உயிரினங்களின் நடவடிக்கைகளை தனது முதல் படியிலிருந்தே மனிதன் கவனித்து வருகிறான். தொழில்நுட்பத்தின் வளர்ச்சி, “இடப்பெயர்வு”
இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்
ரஷ்ய நாட்டின் ஏறக்குறைய அனைத்து கலை இயக்கங்களும் சங்கத்துடன் இணைக்கப்பட்டன. யுக்ரேன் (Ukraine), லாட்வியா (Latvia), அர்மேனியா (Armenia) பகுதி ஓவியர்களும் இயக்கத்தில் இணைந்தனர். சங்கத்தின் வளர்ச்சியும், விரிவாக்கமும் ஆட்சிக்குத் தலைவலி கொடுத்ததால், அதை ஒடுக்கவும் அடக்கவும் ஆட்சி எடுத்த முயற்சிகள் பலனளிக்கவில்லை.
புற்றுநோய் சிகிச்சை: கனவு நனவானது
கடந்த சில வருடங்களில், முன்னேறிய நாடுகளில், குழந்தைப் பருவ புற்றுநோயாளிக்கான மருத்துவ வசதிகள் பெரும் முன்னேற்றம் கண்டுள்ளன. உலகளவில் 70 முதல் 90 சதவீத குழந்தைப் பருவ புற்றுநோய்கள் குணப்படுத்தக் கூடியவையே. இந்தியாவில், ஒவ்வொரு வருடமும் 40,000 முதல் 50,000 நபர்கள் புற்றுநோயால் பாதிக்கப்படுகின்றனர். இதில் 50 முதல் 60 சதவீத புற்றுநோய் பாதித்த குழந்தைகள் இறக்கின்றனர்.
நெடுஞ்சாலை
படைப்பாளி எதையும் எழுதப் புகுமுன் போருக்குப் போகிறவன் போல்தான். தனது களம், காலம், கரு சார்ந்து தனது உத்தியை அமைத்துக்கொள்கிறான். மொழியைத் தேர்ந்து கொள்கிறான். தற்செயலாக அமைவதும் திட்டமிட்டுக் கொள்வதும் உண்டு. வல்லவனுக்குப் புல்லும் ஆயுதம் என்றொரு கூற்றுண்டு வண்டமிழில். இயல்பாக ஒரு மெக்கானிக் சொல்வதில்லையா 24/26 ஸ்பேனர் எடு என அது போல.
விளிம்பில் உலகம்
வாசிப்பு தவறாக இருக்கும் போது, எவ்வளவுக்கெவ்வளவு நம் வாசிப்பு உறுதியாக இருக்கிறதோ, எவ்வளவுக்கெவ்வளவு அதன் நம்பகத்தன்மையில் நாம் முதலீடு செய்திருக்கிறோமா, அவ்வளவுக்கவ்வளவு பேரழிவை சந்திக்க வேண்டி வரும். அரசியல் இயக்கம் குறித்த புரிதலிலும் இதுதான் நடந்தது – ஜெர்மனியில். பொருளாதார கோட்பாடுகளை நிலை நிறுத்தியபோதும் இதுதான் நடந்தது – ரஷ்யாவில். சமூகவியலில் இத்தகைய போக்கைக் கண்மூடித்தனமாக நிகழ்த்தியபோதும் இதுதான் நடந்தது – சீனாவில். இன்று தொழிற்சாலை உற்பத்தியை, அது சார்ந்த அறிவுநுட்ப வளர்ச்சியை மட்டும் அறிவியல் என்று கருதி அந்த இயக்கத்தைப் பேரளவில் வாழ்க்கை முழுதும் நடைமுறைப்படுத்தும் பார்வை சூழியல் அழிவின் விளிம்பில் பூமியைக் கொண்டு சென்று நிறுத்தி இருக்கிறது – மேலை நாடுகளின் தயவால்.
ரோந்து
அவன் ஒவ்வொரு ரவையாக வெளியே எடுத்து உள்ளங்கையில் வைப்பான். பிறகு நாயின் நெற்றிப்பொட்டுக்குக் குறிவைப்பான். காலி துப்பாக்கியின் குதிரையை க்ளிக்… ரெண்டடி தூரம். அதன் கண்ணுக்கு இடையேயான குறி. சின்னச் சத்தம், பாதிவழியிலேயே அது தேய்ந்து அடங்கிவிட்டது. வழக்கமில்லாத வழக்கமாய் நாய் மூத்திரம் பெய்துவிட்டது. மற்ற சமயங்களில் அதன் இதயத்தில் அவன் முட்டிவிட்டாப் போல அது நடுங்கும்.
மகரந்தம்
சொரய்யா என்றொரு இரானியப்பெண், அயத்துல்லா கொமேனியின் ஆட்சியின்போது, திருமணத்தை மீறிய தகாத உறவு வைத்திருந்ததாகக் குற்றம் சாட்டப்பட்டு கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். இது ஏதோ வெஞ்சினத்தால் செய்யப்பட்ட கொலை அல்ல. அப்பெண் வசித்த கிராமத்து நிர்வாகமே தீர்ப்பாக எழுதிச் செய்த கொலை. அப்பெண்ணின் வயதான தந்தையே தன் மகளைக் கொல்வதற்கான முதல் கல்லை எடுத்து எறியும்படி கட்டாயப்படுத்தப்பட்டார். இப்போது அப்பெண்ணின் துயரமான கதை ஒரு விவரணப்படமாக வெளிவந்திருக்கிறது.
Surface – குறும்படம்
சமூகத்தின் நடவடிக்கைகளை நிலத்தடியிலிருந்து மேல் நோக்கி பார்க்கும் வாய்ப்பு கிடைத்தால் எப்படியிருக்கும்? இந்த கோணத்தில் எடுக்கப்பட்டிருக்கும் குறும்படம் ஒன்று :
முகமது அலி
குத்துசண்டை மீதான ஈடுபாடு நம்மில் பெரும்பாலானோருக்கு இருக்கும். ஆக்ரோஷமான மோதல்களும், முகத்தில் வழியும் ரத்தமும், வலியில் துடிக்கும் வீரரும் நம்மை எந்தவகையிலும் உறுத்துவதில்லை. மாறாக ஒரு வித கிளர்ச்சியை அது அளிக்கிறது. அதற்கான பரிணாம/உளவியல் காரணங்களை ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடிக்கட்டும். நாம் உலகப் புகழ்பெற்ற குத்துசண்டை வீரர் முகமது அலி “முகமது அலி”
இணையத்தில் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன், கணிதம்
தமிழ் எழுத்தாளர்களில் பெரும்பாலானோருக்கு இப்போது வலைத்தளம் இருக்கிறது. இவர்களில் பெரும்பாலானோர் வலைப்பக்கத்துக்கென்று பிரத்தியேகமாக எழுதுகிறார்கள். அச்சுப்பத்திரிகைகளில் வெளிவந்த படைப்புகளையும் இணைய வாசகர்கள் பயன்பெறும் வகையில் தங்கள் வலைப்பதிவுகளில் வெளியிடுகிறார்கள். இவர்களில் சமீபத்திய குறிப்பிடத்தக்க புதிய தளங்கள் அ.முத்துலிங்கம், நாஞ்சில்நாடன் இருவருடையதுமாகும்.
இரண்டு கவிதைகள்
இதுநாள் வரை
கடவுளே கடவுளுக்கே மட்டும் தெரிந்த
புதையல் மறைத்துவைக்கப்பட்டிருந்த
புரதான வரைபடம் போல இருந்த
இதயத்தின் சிக்கலான சூட்சுமங்களைக் கண்டுக்கொள்கிறார்
இதய அறுவை சிகிச்சை நிபுணர்
நடனமாடும் நாவலுலகம்
புத்தகத்தில் இல்லாத இன்னொரு விஷயம் விடியோ மற்றும் ஒலித் துண்டுகளை வலைப்பூக்களில் எளிதில் இணைக்க முடியும். செயல் விளக்கம் மற்றும் இசை போன்ற விஷயங்களை விளக்குவதற்கு இது மிகச் சக்தி வாய்ந்த ஊடகம். கிண்டில் போன்ற புத்தகம் படிக்கும் கருவி சில சந்தா உடைய வலைப்பூக்களை படிக்க வழி செய்கிறது! இந்தப் புரட்சியால் நன்றாக எழுதும் பல எழுத்தாளர்கள் நேராக தங்களுக்கு வலைப்பூ அமைத்துக் கொண்டு செளகரியப்பட்ட பொழுது, பிடித்தவற்றை எழுதுகிறார்கள். சில வலைப்பூக்களுக்கு, பத்திரிகைகளைவிட, நாவல்களை விட அதிகம் படிப்போர்கள் உள்ளார்கள்.
மொழிபெயர்ப்பு என்னும் கலை
ஷேக்ஸ்பியரையும், ஃப்ளூபேரையும் ட்யூட்சேவையும், டாந்தேவையும், ஸெர்வண்டெஸையும், காப்காவையும், ரசிக்க ஒரு மனிதனுக்கு ஆறு மொழிகளில் ஆழமான நுண்ணறிவு வேண்டியிருக்கிறது. இவற்றைத் தவிர பிற மொழிகள் இருக்கின்றன. அந்ததந்த மொழிகளில் சிறந்த கவிஞர்கள் இருக்கின்றனர்… லத்தீன் உள்ளதா, கிரேக்கமும் உள்ளதே? பிறகு, மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் என்னதான் செய்வதாம்?
அம்மா
கிணற்று மேடையில்
குடம் வைக்க அமைத்த குழியில்
தேங்கிய தண்ணிரைக் காகம் பருகும்.
துணி காயப் போடும் கம்பிகளில்
சென்ற நிமிடம் என்பது இருந்தது
என்னும் சாட்சியாய் நீர் முத்துகள்.
நகரும் வீடுகள்
எங்களின் சிறு வயதிலிருந்து பார்த்த பொறுமையும், அடக்கமும், மரியாதையும் இன்னும் இம்மியும் குறையவில்லை அப்பாவிடம். பகலில் கட்டிலிருக்குக் கீழே அமர்ந்துகொண்டு பாட்டியிடம் சமாச்சாரம் பேசிக் கொண்டிருப்பார் அப்பா. எதுவானாலும் தன் அம்மாவிடம் சொல்லியாக வேண்டும் அவருக்கு. பாட்டியிடம் சொல்லும்போது அம்மா கேட்டுக் கொள்ள வேண்டியதுதான்.
தனிமை- மேடை நாடகம் – அறிவிப்பு
கலிஃபோர்னியா சான்ஃபிரான்ஸிஸ்கோ பகுதியில் அமைந்துள்ள க்ரியா நாடக் குழுவும், பாரதி தமிழ்ச் சங்கமும் இணைந்து வரும் நவம்பர் மாதம் 6ம் தேதி “தனிமை” மேடை நாடகத்தினை அளிக்க இருக்கிறார்கள். தமிழ்நாட்டில் வாழும் வயதான பெற்றோர்களின் வாழ்க்கையையும் அமெரிக்காவில் புலம் பெயர்ந்து பிரிந்து வாழ நேரும் அவர்கள் பிள்ளைகளின் நிலைகளையும், தவிப்பினையும், குடும்பம், உறவு, பிரிவு ஆகிய நுட்பமான வாழ்க்கைக் கூறுகளையும் மிக அழகாகவும், நகைச்சுவை மிளிரவும் சித்தரிக்கின்ற ஒரு நாடகம் ‘தனிமை’.
உயிரின் கதை: உயிர் என்றால் என்ன?
மனம் என்றால் என்ன, என்ற கேள்வியைப் போன்றதே உயிர் என்றால் என்ன என்ற கேள்வியும். அறிவியல் தத்துவம் இரண்டிலும் ஆழ்ந்து சென்று அடைய வேண்டியவை. அல்லாமல் அனைவருக்குமான பொது வெளியில் சிறு விவாதத்தின் வழி கிடைக்கும் இக்கட்டுரை ஒரு எளிய சித்திரம் மட்டுமே என்பதை கவனமாக நினைவில் கொள்வோம். ஒரு எளிய தத்துவப் பயிற்சியாக ஜாலியாக மூளையைக் கசக்காமல் யோசித்துப் பார்க்கலாம். உயிர் என்றால் என்ன?
எலெக்ட்ரிக் எறும்பு
மேல்பரப்பில் பார்த்தால் சாதாரண உடலுறுப்பு போலவே இருந்தது. இயற்கையான தோல், அதன் கீழே இயற்கையான சதை, நிஜமான ரத்தம் தமனி, நாடி, சல்லிக் குழாய்களில் எல்லாம் ஓடியது. ஆனால் அதற்குக் கீழே, எலெக்ட்ரிக் சர்க்யூட்கள், சிறு கம்பிகள், நுண்ணிய அளவில் பொருத்தப்பட்டு… மின்னின…கைக்குள் கூர்ந்து பார்த்தான்…
இசைவழி ஓடும் வாழ்க்கை – 3
சங்கிலிகளில் கட்டப்பட்டிருந்த நிலைகளில் தம்மிடையே அவரவர் மொழிப் பாடல்களைப் பரிமாறிக் கொள்கிறார்கள். உரக்கப் பாடினால் தண்டனை கிட்டும், என்று ஒலி ஒடுங்கிய முனகலிசையும், தாளங்களும், சொல்லொடுங்கிய இசையும் அவர்களிடம் நிறைய பரிமாறிக் கொள்ளப் பட்டிருக்கிறது. சொற்கள் பேசிப் பழக ஒரே பகுதி மக்கள் இல்லாத காரணத்தால் பொருளிழந்து, தலைமுறைக்குத் தலைமுறை மாற்றிக் கொடுக்கப் படாமல் பாஷை ஞானம் அழிந்த பின்னும் எஞ்சுவன தாளங்களும், பாட்டுகளுடைய இசைப் பாணியும் மட்டுமே. இப்படி ஒரு வினோத பண்பாட்டுத் தொடர்ச்சி அமெரிக்கக் கருப்பர் இசையில் நீடிக்கிறது.
மான்பூண்டியா பிள்ளை
கஞ்சிராவில் விடாமல் சாதகம் செய்து, மிக வேகமான உருட்டுச் சொற்களைக் கூட தெளிவாகவும் இனிமையாகவும் வாசிக்கும் திறனை பெற்றார் மான்பூண்டியாப் பிள்ளை. அவர் கற்பனைக்கு உதித்த நடை பேதங்கள், மொஹ்ராக்கள், கோர்வைகள் ஆகியவை அதற்கு முன்னால் எவருக்குமே தோன்றாத புது வழியில் அமைந்திருந்தன. அவர் வாசிப்பைக் கேட்டவர்கள் எல்லாம், “கர்நாடக இசையில் ராகங்களின் நுணுக்கங்களை எல்லாம் வெளிக் கொணர தியாகபிரம்மம் தோன்றியது போல, லய நுணுக்கங்களை உலகத்தாருக்கு எடுத்துச் சொல்லத் தோன்றியவர் இவர்”, என்று கூறி மகிழ்ந்தனர்.
லீ ஜியாபெள – அமைதியின்மை தந்த அமைதிப்பரிசு
இந்த வருடம் நோபல் அமைதிப்பரிசு லீ ஜியாபெள என்ற சீனருக்குக் கிடைத்திருக்கிறது. யார் இந்த லீ ஜியாபெள? பரிசு பெறும்விதமாக இவர் என்ன செய்தார்? உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றைப் பெற்ற இவரை சீன அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கிறது. இவருக்கு நோபல் பரிசு கொடுத்ததையும் கடுமையாக எதிர்க்கிறது. நோபல் பரிசு குறித்த அறிவிப்பு சீனாவில் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. பரிசு அறிவிப்பு செய்த BBC, CNN போன்றவை உடனடியாக முடக்கப்பட்டன. ஏன்? இதிலிருந்து நாம் சீன அரசைக் குறித்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது? நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?
காமன்வெல்த்: கோலாகலமாய் முடிவுறும் குழப்பம்
பளுதூக்கும் போட்டியில் தங்கம் வாங்கிய ரேணு பாலா வீடு திரும்ப எந்தவித போக்குவரத்து ஏற்பாடும் செய்யப்படவில்லை. கிட்டத்தட்ட ஐந்து மணி நேரக் காத்திருப்புக்குப்பின் ஒரு ஆட்டோ பிடித்து வீடு போய் சேர்ந்தார். இந்தக் கஷ்டங்களுக்கு இடையிலும் தங்கள் திறமையை நிரூபித்து வரும் இந்திய வீரர்களின் மன உறுதியை நிச்சயம் பாராட்ட வேண்டும்.
இசைவழி ஓடும் வாழ்க்கை – பகுதி 2
ஒளரங்கசீப் தன் சபையிலிருந்த சங்கீத மேதைகளைப் பாடவிடாமல் பல்லாண்டுகள் தடை விதித்திருந்தான். நாஜிக்கள் ஐரோப்பியரல்லாத மற்ற அனைவரின் இசைக்கும் தடை விதித்திருந்தனர். கம்யூனிஸ நாடுகளில் ‘இயக்கப் பாடல்கள்’ தவிர மற்ற அனைத்து இசைவகைகளையும் தடை செய்திருந்தனர். தண்டிப்பும், சிறைச்சாலைகளும், கட்டாய உழைப்பு முகாம்களும், நொறுக்கப்பட்ட பியானோக்கள், வயலின்கள், உடைக்கப்பட்ட விரல்கள், அறுக்கப்பட்ட குரல் நாண்கள் – எதுவும் இசையை ஒழிக்க முடியவில்லை.
மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்
இத்தாலி என்றாலே நமக்கு மாஃபியா நினைவு வருவது சகஜம். மேலும் ஃபாசிஸம், முசோலினி இத்தியாதிகளோடு, ரோம், வாடிகனின் ஊழல்கள், டான் ப்ரௌன் நாவல்கள் என்று பல இருண்ட அத்தியாயங்கள் நினைவும் வரும். ஒரு காலத்தில் இத்தாலி என்றால் அழகுப் பெட்டகங்களான பெண்கள் – சோஃபியா லொரென், ஜினா லோலாப்ரிகெடா, “மாஃபியாக்களை எதிர்க்கும் சிஸிலிய மக்கள்”
வலைவெளியில்: உடுமலை.காம்
இணைய தளங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்தும் புதிய பகுதி: தமிழில் நல்ல தரமான புத்தகங்களை வாங்குவதற்கான சிறந்த தளமாக இருக்கிறது உடுமலை.காம். உடுமலைப்பேட்டையிலிருந்து இந்நிறுவனம் இயங்குவதால் இத்தளத்திற்கு இப்பெயர். இத்தளத்தில் புத்தகங்களை எழுத்தாளர் வாரியாகவும் வகைகள் வாரியாகவும் தேட வசதியிருக்கிறது. இந்தியாவுக்குள் 500 ரூபாய்க்கு மேல் வாங்கினால் தபால் செலவு ஏதும் இல்லாமல் இலவசமாகவே அனுப்பி வைக்கிறார்கள்.
மகரந்தம்
ஒரு விலங்குக்கு சுயபிரக்ஞை இருக்கிறதா என்று கண்டுபிடிக்கச் செய்யப்படும் பரிசோதனை அதன் சருமத்தில் ஒரு இடத்தில் வண்ணமடித்து அதன் முன் கண்ணாடியை வைப்பது. அந்த விலங்கு கண்ணாடியை பார்த்து தன் சருமத்தில் அந்த குறிப்பிட்ட வண்ணமடித்த பகுதியைத் தொட்டால் அதற்கு சுயபிரக்ஞை உண்டாம்.
வலையில் சிக்கித் தவிக்கும் அச்சுத்தொழில்
பல நூறு ஆண்டுகளாக ஆளுமை செய்து வந்த அச்சுத்தொழில் ‘இணைய புரட்சியால்’ கலக்கம் கண்டுள்ளது. இக்கட்டுரையை நீங்கள் படிப்பதே இத்துறையின் அதி வேக முன்னேற்றத்தால். அச்சு மீடியாவில் செய்தித்தாள்கள், பத்திரிகைகள் மற்றும் புத்தகங்கள் அடங்கும். இவர்கள் உணர்கிறார்களோ இல்லையோ, இவர்கள் சற்று தடுமாறும் நிலையில்தான் உள்ளார்கள். தொழில்நுட்பத்தை வியாபாரரீதியாகப் புரிந்து கொண்ட நிறுவனங்களே வெற்றி பெருகின்றன.
பந்தி
கல்யாணவீட்டுப் பந்தியில் பரிமாறும் வேலையை பெரும்பாலும் கல்யாண வீட்டுக்காரர்களேதான் கவனித்துக் கொள்வார்கள். அதை ஒரு கடைமையாகச் செய்யாமல் உரிமையுடன் இழுத்துப் போட்டுக் கொண்டு ஓடியாடி வேலை செய்வதை மனசும், உடம்பும் நிறைந்து மணமக்களின் பெற்றவர்கள் பார்த்து மகிழ்ந்து கொண்டிருப்பார்கள். ‘நம்ம கோமு கல்யாணத்துக்கு வேலாயுதம் மாப்ளே அலைஞ்ச அலைச்சல மறக்க முடியுமா? கடைசி பந்திவரைக்கும்லா நின்னு கவனைச்சுக்கிட்டான்!’
குணங்குடியார் பாடற்கோவை
எல்லோரும் நாத்திகம் பேசும்போது ஒற்றைத் தனியாளாய் எதிர் நின்று வாதாடுபவர் இருளப்பப் பிள்ளை பெரியப்பா. சிலசமயம் திருவனந்தபுரம் வாசம். எனவே, ‘கேரளாக் கொம்பையா’ எனப்பட்டப்பெயரும் உண்டு. வெற்றிலை – பாக்கு – புகையிலைப் பழக்கமும், பீடிப்புகையும் உண்டு. அவர்தான் சித்தர் பாதை பயின்றவர். சீட்டுக்களி இல்லாதபோது, ஆள் சேராதபோது உற்சாகமான மனநிலையில், அவர் தொண்டை திறந்து கம்பீரமாகப் பாடுவது மஸ்தான் சாகிபு பாடல்கள்.
காமப் புகை நடுவே…
போதையில்
புதைந்துள்ள ரகஸ்யங்கள்
வெளி வரலாம்.
ஈரலும் இருதயமும்
என்னவாகுமோ – எனவே
காமம் பாதுகாப்பானது.
களமும், ஐந்து கவிதைகளும்
உன் பழைய கடிதங்களை எடுத்துப் படித்துக் கொண்டிருக்கிறேன்.
உன் முகவரியை உறையில் விட்டு விட்டு
ஊரைத் தெருவை உன்னைக் கிழித்தெறிந்து விட்டது
காலம்
வாசகர் மறுமொழி
காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி, மிக அழகாக எழுதிய ஒரு ஆய்வுக்கட்டுரை. எத்தனை தகவல்கள். முற்றிலும் புதியது.நானும் காந்தளூர்ச்சாலை குமரி எல்லை என்று நினைத்திருந்தேன். முற்றிலும் வேறுபட்ட ஒரு ஆய்வு. நான் அறிந்த சரித்திரத்தின் படி திருவனந்தபுரம் என்பது வெகு சமீபத்திய நகரம். ஒரு நானூறு ஆண்டுகள் இருக்கலாம் எனபதுதான். அதிலும் வேணாடு அரசர்கள்தான் அதை தலைநகராக கொண்டு ஆண்டனர்.
விஷ்ணுக்ராந்தி
இன்று ஏதோ சாடிலைட் என்கிறார்கள், மேலே இருந்து படம் எடுக்கும் என்கிறர்கள், அதை வைத்து மொத்த வரைபடம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள். அவன் பார்த்தது கிடையாது. ஏதோ இண்டெர்னெட் ஓட்டவேண்டுமாம். ஆனால் பழய காலத்தில் எப்படி மகாராஜா இங்கு தான் கோட்டை வேண்டும் என்று தீர்மானித்தார். இங்கு தான் குளம் வேண்டும் என்றார்.இங்கு ஊர் அமைத்தார். எப்படி முடியும்.
நண்பேன்டா..!
கிட்டத்தட்ட அதே போல் இருந்த என்னுடன் முதல் பெஞ்சில் அமர்ந்தான். மேல் காகிதம் பிரிந்ததும் ஒட்டும் self adhesive tape போல இருவரும் ஒட்டிக் கொண்டோம். 200 மீட்டர் தள்ளி இருக்கும் பள்ளிக்கு சைக்கிளில்தான் செல்வேன் என்னும் வீம்பு கொண்ட விடலைப் பருவம். பின்னே எம் குலப் பெண்டிருக்கு முன்னே கால்நடையாகச் செல்வது இழுக்கல்லவா?
மீன்கள் அன்றும் இன்றும்
‘மீன்கள் அன்றும் இன்றும்,’ நூலை எழுதியது முனைவர் ச.பரிமளா. தமிழ்ப்பல்கலைக்கழகம் 1991-இல் வெளியிட்டது. சிலர் மணக்கோலத்தில் கூடக் கிழவன் போல் தோற்றம் தருவதுண்டு. அதுபோல, வாங்குபோதே பழம் புத்தகமாகத் தோன்றியது. விலை குறிப்பிட்டிருக்கவில்லை. 280 பக்கங்கள் கொண்ட டெமி அளவிலான நூலுக்கு, கழிவு போக, என்னிடம் ஐம்பத்தி நான்கு ரூபாய் வாங்கினார்கள்.
இசைவழி ஓடும் வாழ்க்கை
சுமார் 20 வருடங்கள் முன்னால் நண்பர் எனக்கு பீட்டர் காப்ரியேலை அறிமுகப் படுத்தி இருந்தார். குறிப்பாக இந்தப் பாட்டை, இந்த இசைத் தொகுப்பை அவர்தான் எனக்கு ஒரு ஒலிநாடாவாக வாங்கிக் கொடுத்திருந்தார். சூழலில் நிறைய தொழிலாளர்கள் என்பதால் இந்தப் பாட்டு அன்று உடலுக்குள்ளெல்லாம் பயணித்து மனதைப் பிழிந்தது.
பொது பண்பாட்டுக்குள் நுழைந்த வானியல்
வேதாந்த துறவியாக இருந்த ஜான் டாப்ஸன் இரவு நேரங்களில் மடாலய சுவரேறி குதித்து தொலைநோக்கி வழியாக விண்மீன்களை பார்த்துக் கொண்டிருப்பார். இந்த தியானத்துக்காக மடாலயத்தை விட்டு செல்ல நேர்ந்தது. அறிவியல் ஒரு ஆன்மிக இசையாக முடியுமா என்றால் மானுடம் உருவாக்கிய எந்த ஆன்மிகக்குறியீட்டைக் காட்டிலும் வலுவான ஆன்ம உணர்வுகளை “பொது பண்பாட்டுக்குள் நுழைந்த வானியல்”
