சோவியத் என்றொரு கலைந்த கனவு

சோவியத் என்றொரு புவி அமைப்பு இருந்தது. அது உலகெங்கும் பல மக்களின் கனவாகவும் இருந்தது. 20 வருடங்களுக்கு முன் அந்தக் கனவு கலைந்தது. ஒரு சித்தாந்தத்தின் வீழ்ச்சியாக அது கருதப்பட்டது. தனி மனித அளவில் பலருக்கு அது அளித்த ஏமாற்றம் அளப்பெரியது. ஏமாற்றம், அதைத் தொடர்ந்து வெற்றிடம். அந்த “சோவியத் என்றொரு கலைந்த கனவு”

செல்வராஜ் ஜெகதீசன் – கவிதைகளின் நேரடித்தன்மை

செல்வராஜ் ஜெகதீசன் தொடர்ந்து நேரடியான கவிதைகளையே முயன்றிருக்கிறார். கவிதையுலகுக்கு புதியவர்கள் கவிதையை வாசிப்பதில் இருக்கும் சிக்கல்களை இவரது கவிதைகளில் காண முடிவதில்லை. கவிதையின் நேரடித்தன்மை அல்லது எளிமைத்தன்மையை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்; அவை கவிதைகளே அல்ல வெறும் காட்சிகள் மட்டுமே என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

நின்று பெய்யும் மழை – பிரான்சிஸ் கிருபா

ஈரமேறிய மண்ணில் நின்று கொண்டிருப்பவனின் கால்களை நனைத்துச் செல்லும் ஓடையாக கவிதைகள் இருக்கின்றன. கவிதையின் மீதாக விருப்பம் இருப்பவர்கள் குனிந்து தங்களின் கைகளில் கொஞ்சம் கவிதைகளை அள்ளிக் கொள்கிறார்கள்.அவரவரின் கை வடிவத்திற்கு ஏற்ப அள்ளிய நீர் வடிவம் பெறுவதைப் போலவே, வாசகனின் அனுபவத்திற்கும் மனநிலைக்கும் ஏற்ப கவிதைகள் அவனுக்குள் வடிவம் பெறுகின்றன. தன்னை யாரும் அள்ளி எடுப்பதில்லை என்பதற்காக எந்தக் கவிதையும் நின்றுவிடுவதில்லை.