லீ ஜியாபெள – அமைதியின்மை தந்த அமைதிப்பரிசு

இந்த வருடம் நோபல் அமைதிப்பரிசு லீ ஜியாபெள என்ற சீனருக்குக் கிடைத்திருக்கிறது. யார் இந்த லீ ஜியாபெள? பரிசு பெறும்விதமாக இவர் என்ன செய்தார்? உலகின் மிக உயர்ந்த பரிசுகளில் ஒன்றைப் பெற்ற இவரை சீன அரசாங்கம் சிறையில் அடைத்திருக்கிறது. இவருக்கு நோபல் பரிசு கொடுத்ததையும் கடுமையாக எதிர்க்கிறது. நோபல் பரிசு குறித்த அறிவிப்பு சீனாவில் முழுமையாக இருட்டடிப்பு செய்யப்பட்டது. பரிசு அறிவிப்பு செய்த BBC, CNN போன்றவை உடனடியாக முடக்கப்பட்டன. ஏன்? இதிலிருந்து நாம் சீன அரசைக் குறித்து என்ன தெரிந்து கொள்ள முடிகிறது? நாம் பெற்றுக்கொள்ள வேண்டிய பாடங்கள் என்ன?