நந்தலாலா – பின்னணி இசை

‘Ilaiyaraaja musical’ என்று சொல்லத்தக்க வகையில் நந்தலாலா திரைப்படத்தின் பின்னணி இசை, காட்சி உணர்வுகளின் மெலடிக்கேற்ப நடனமாடுவதாக இருக்கிறது. மிஷ்கின் இளையராஜாவின் பின்னணி இசையை விஷுவல் காட்சிகளுக்குப் பின்னணியாக மட்டுமில்லாமல் கதை சொல்லும் ஒரு கருவியாகவே உபயோகப்படுத்திக் கொண்டுள்ளார்; வெளிப்படையாகச் சொல்லமுடியும் கதையை விஷுவல் காட்சிப்படுத்தல் மூலம் சொல்லிக்கொண்டே, பின்னணியில் வெவ்வேறு கதை இழைகளை இளையராஜா மூலம் சொல்லியிருக்கிறார்.

நாஞ்சில்நாடனுக்கு வாழ்த்துகள் – சாகித்ய அகாடமிக்கு அல்ல

நாஞ்சில்நாடன் என்று தன்னை அடையாளப்படுத்திக்கொள்கிறார். நாஞ்சில்நாடு என்னும் அந்த ஒரு சின்ன இடத்தைத்தான் எழுதுகிறார். அந்த மண்ணைச் சேர்ந்தவர்களைத்தான் திரும்பத் திரும்ப எங்கு சென்றாலும் பார்க்கிறார். ஆனால், அவர் இன்றைய தமிழ்நாட்டின் சீர்கேட்டையே அந்தச் சின்ன சித்திரத்தில் பார்க்கச் செய்துவிடுகிறார். இது யாருக்கு உவப்பாக இருக்கும்? சாகித்ய அகாடமிக்காரர்களுக்கு இது எப்படி உவப்பாகிப்போனது? அதன் ஆகி வந்த மரபும் பண்பும் என்ன ஆனது? புதிர்தான். விதிமுறைகள் பின்பற்றப்பட்டிருந்தால், பாரதிதாசனின் கவிதைகளையெல்லாம் ஒதுக்கிவிட்டு பிசிராந்தையார் என்னும் அவர் நாடகத்துக்கா தமிழ் மேதைகள் உலகம் பரிசு தந்திருக்கும்? பாரதிதாசன் அந்த சமயம் உயிரோடிருப்பாராயின் என்ன வார்த்தைகளால் அவர் அகாடமிக்காரர்களை அர்ச்சித்திருப்பார் என்று நினைத்துப்பார்த்தால், பயங்கரமாக இருக்கும். அந்த வார்த்தைகள் கவிதையாக இருந்திராது என்பது நிச்சயம்.

தாயார் சன்னதி, சிலிக்கான் கடவுள் – சொல்வனம் புத்தக வெளியீடுகள்

இந்த புத்தகக் கண்காட்சியையொட்டி ‘சொல்வனம் பதிப்பகம்’ மூலம் இரண்டு புத்தகங்கள் வெளியாகவிருக்கின்றன என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்கிறோம். சொல்வனம் இதழிலும், வார்த்தை சிற்றிதழிலும் சுகா எழுதிய கட்டுரைகள் தொகுக்கப்பட்டு ‘தாயார் சன்னதி’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. சொல்வனம் இதழில் ராமன் ராஜா எழுதிய கட்டுரைகள் ‘சிலிக்கான் கடவுள்’ என்ற பெயரில் புத்தகமாக வெளியாகிறது. எங்களுடைய இந்தப் புதிய முயற்சிக்கும் உங்கள் ஆதரவை வேண்டுகிறோம்.

‘குட்டி ஸ்ராங்க்’ – மலையாளத் திரைப்படம்

ஷாஜியின் வனப்பிரஸ்னம் ஒரு கதகளி சினிமா. ஜெயராஜின் களியாட்டம் ஒரு தெய்யம் ஆட்டம் பற்றிய சினிமா. இந்த சினிமாவில் இந்த சவிட்டு நாடகம் ஐசக் தாமஸ் கொட்டுக்காப் பள்ளியின் அற்புதமான மனம் மயக்கும் இசையுடன் நிகழ்த்தப் படுகிறது. நாடகத்தின் சோகமான காட்சிகள் போலவே பருவ மழையின் நடுவே கதை மாந்தர்களின் போராட்டங்களும், பேராசைகளும், கொலைகளும் நிகழ்ந்து குட்டி ஸ்ராங்க்கின் தோணி மீண்டும் ஒரு சூறாவளிக்குள் தள்ளப் படுகிறது.

03. செல்லோ நடனம்

பாக் இயற்றிய ஆறு செல்லோ தொகுப்புகளும் நடன இசை வகையைச் சார்ந்தவை. இசையை மையமாகக் கொண்ட படங்களில் பிரபலமாக இருந்த பால் ரூம் நடனத்துக்கு நெருக்கனமானவை. கசல்ஸ் அறிமுகம் செய்யும் வரை இவை மேடையில் இசைக்கப்படாமல், சில தனிப்பட்ட இசைக்கலைஞர்களின் ஞாபகத்தில் தேங்கி இருந்தது.

டிசம்பர் நாற்காலிகள்-1

ஒவ்வொரு கீர்த்தனையின் முடிவிலும் சில பல சென்னை ரசிகர்கள் பஞ்ச் பஞ்ச்சாக எழுந்து வெளியேறினார்கள். பாவம், எல்லோருக்கும் ப்ளாடர் வீக் போலிருக்கிறது. இவர்களைப் பிடித்து வைத்துக் கொள்வதற்காகவே இந்த மாதிரி அருமையான இசைக்கலைஞர்கள் மெலடியைக் குறைத்து ஓசையையும் வேகத்தையும் அதிகரிக்க வேண்டியிருக்கிறது. இருந்தாலும் கதிரி டீமுக்கு ஒரு ரிக்வெஸ்ட்: ஒவ்வொரு பாட்டின் முடிவிலும் மேற்கத்திய ஸிம்ஃபனி போல் அத்தனை பேரும் சேர்ந்து ஒரு orgasmic crescendo-வுக்குப் பாய்வதைத் தவிர்க்கலாம். தகரப்பாலத்தின் மீது குதிரைப் பட்டாளம் ஓடுவது போல் ஒலிக்கிறது.

காலனி ஆதிக்கமும், கால்டுவெல் திருப்பணியும்

ஆங்கிலேயக் கிழக்கிந்தியக் கும்பினியின் காலனியாதிக்கக் கண்ணோட்டத்திற்கு எல்லிஸின் நிர்வாக நடவடிக்கைகள் உகந்தவையாக இல்லை. குறிப்பாக இந்திய நாட்டு மண்ணின் மரபுகள் மீது மக்கள் கொண்டுள்ள மரியாதையை நீடிக்கச் செய்கின்ற வகையிலான நடவடிக்கைகளும் கல்விக் கொள்கைகளும் கிழக்கிந்தியக் கும்பினி நிர்வாகத்தின் தலைமை இடமாகிய கல்கத்தாவில் இருந்த இயக்குநர் குழுவுக்கும் எல்லிஸுக்கும் கருத்து வேறுபாட்டை ஏற்படுத்தின.

மகரந்தம்

உலகில் ஐந்தில் ஒருவர் மின்சாரம் இல்லாமல் வாழ்கிறார். இதற்கு முக்கியமான காரணங்கள் அரசியலும் வறுமையும். இவர்களுக்கு அரசாங்கத்தைச் சாராத தொழில்நுட்பம் மூலம் மின்சாரம் கிடைக்க வைத்தால் அவர்களுக்கு அது வரப்பிரசாதம். மேலும் அசாத்திய சமுதாய மாற்றங்களும் ஏற்படும். இந்த சந்தை பல பரிமாணங்கள் கொண்டது. இதனை சரியாகவே சீனா பிடித்துவிட்டது.

விட்ட ஷட்ஜம்

ராமன்ராஜா காட்டும் அறிவியல்சூழல், அச்சூழலோடு நேரடித் தொடர்பில்லாத வாசகர்களுக்குப் புதியதான ஒன்று. அரசுகளுக்கிடையே ஆராய்ச்சிச்சூழலில் நடக்கும் போட்டி, அதன் காரணமாக வெளிவரும் அரைகுறை முடிவுகள், பொய்யான வெற்றிகள், மருத்துவத்துறையின் ஆராய்ச்சிச்சூழல், மருந்துக் கம்பெனிக்காரர்களோடு ஒப்பந்தம் செய்துகொண்டு அவர்கள் ஏற்படுத்தும் செயற்கையான பதற்றம் – இவையெல்லாம் இதற்கு முன் தமிழில் நமக்குப் படிக்கக் கிடைக்காதவை.

தோள்சீலைக் கலகம்: தெரிந்த பொய்கள் தெரியாத உண்மைகள் – நூல் வெளியீட்டு விழா

நாள்: 07-01-2011 வெள்ளி
நேரம்: மாலை 6 மணி
இடம்: பாரதிய வித்யா பவன், மினி ஹால்,
கிழக்கு மாட வீதி, மயிலாப்பூர், சென்னை-4.

வரவேற்புரை: அ. கணேசன், நூலாசிரியர்
தலைமை & நூல் வெளியிடுபவர்: முனைவர் தியாக. சத்தியமூர்த்தி
முன்னாள் இயக்குநர், கேரள மாநில தொல்லியல் துறை

தமிழினி – புத்தகக் கண்காட்சியில் வெளியாகும் புத்தகங்கள்

தமிழின் பல முக்கியமான கலை, இலக்கியப் புத்தகங்களை வெளியிட்டு வரும் தமிழினி பதிப்பகம் 2011 புத்தகக் கண்காட்சியில் கீழ்க்கண்ட புத்தகங்களை வெளியிடுகிறது. இவற்றைக் கண்காட்சியில் அரங்க எண்: 354-55, 29 ஆகியவற்றில் வாங்கலாம்.

வாசகர் மறுமொழி

இன்றைய இலக்கியச்சூழலில் வெங்கட் சாமிநாதன் குறித்து ஒருவரால் பாராட்டாக எழுதமுடிகிறது என்றாலே அவர் தமிழில் வடிகட்டி எடுக்கப்பட்ட தேர்ந்த, நேர்மையான இலக்கியவாதி என்றுதான் அர்த்தம். அந்த வகையில் நாஞ்சில்நாடன், வண்ணதாசன், வண்ணநிலவன் போன்ற அலட்டலில்லாத, தேர்ந்த படைப்பாளிகள் – வெங்கட்சாமிநாதனை நெருங்கமுடியக்கூடியவர்கள் வெகு சிலரே இருக்கிறார்கள். அவர்களில் ஒருவரான நாஞ்சில்நாடனின் கட்டுரை மிகவும் நிறைவாக இருந்தது.

பிராந்து

முப்பிடாரி அம்மன் கோயில் கொடைக்கு கும்பாட்டம் வேண்டாம் என்று சொல்லி, இசைத்தட்டு நடனம் நூலகத் திடலில் ஏற்பாடாகி இருந்தது. திடல் நிறைய இருசனக் கூட்டம். பாட்டும் ஆட்டமும் நெரிபிரியாகப் போய்க் கொண்டிருந்தது. கன்னித்தமிழ் போன்றவளே என்பது போல் ஒரு பாட்டு. தொடையை இறுக்கிய காலாடையும் முலைகளைத் துருத்திய மேலாடையும் அணிந்த ஒருத்தி விரகத்தில் நெளிந்தாள். கண்ணைத் துன்புறுத்தும் நிறங்களில் உடையணிந்து, தொப்பிவைத்து, இரவிலும் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒருவன் இடுப்பை புணர்ச்சி விதிகளில் ஒன்றின்படி அசைத்துக் கொண்டிருந்தான்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்- 4

சூப்பர்மாட்டிஸம் என்னும் புதிய பாணி தொடர்பற்ற ஒரு வழியல்ல. மாறும் உலக ரீதியான கலைத்தளங்களுக்கு ஏற்ப அது தோற்றம் கண்டது. குழுவிலிருந்து பலர் ஊர் மாறிச் சென்றனர். சிலர் வேறுபாணிக்கு மாறினர். எல் லிஸ்சிட்சி, இலியா சாஷ்னிக் போன்றவர் தமது வாழ்நாள் முழுவதும் இந்தப் பாணியை விட்டு விலகாமல் ஓவியங்களைத் தொடர்ந்து படைத்தனர்.

கெளஷிகியின் ‘தும்ரி’

கெளஷிகி சக்ரபர்த்தி வளர்ந்து வரும் ஹிந்துஸ்தானி பாடகி. இவரது தந்தை அஜோய் சக்ரபர்த்தி பிரபல ஹிந்துஸ்தானி கலைஞர். புதாபெஸ்டில்(Budapest) நடைபெற்ற அவரது இசை நிகழ்ச்சியில் அவர் பாடிய ‘தும்ரி’ வகை செவ்வியல் இசையை கீழே கேட்கலாம். அந்த இனிய குரலை, அதன் துல்லிய, பிசகில்லாத ஏற்ற இறக்கங்களை அனுபவிக்க “கெளஷிகியின் ‘தும்ரி’”

உயிர், மாற்று உயிர் – 3

நேச்சர் என்னும் பிரசித்திபெற்ற ஆராய்ச்சி சஞ்சிகையில் இதுவரை வெளிவந்துள்ள ஒரே விஞ்ஞானப் புனைக்கதை, ஆர்தர் கிளெர்க்கின் கடைசி சிறுகதை. கதை ஒரே பக்கம்தான். நம் ஆகாச கங்கை காலக்ஸியில் வேறு சமுதாயத்தினர் பூமியின் அழிவிற்குப்பிறகு அதைப்பற்றி ”பாவம்பா நல்ல மனுஷன் போயிட்டான், ஆனா தேவைதான் அவனுக்கு” என்கிற ரீதியில் பேசிக்கொள்ளும் சிறு உச்கொட்டல் போல எழுதியிருப்பார். இது எதற்கு இப்பொது என்றால், அந்த சமுதாயத்தினரை ஜெர்மானியம் மூலக்கூறை ஆதாரமாகக்கொண்ட உயிரினமாக சித்தரித்திருப்பார்.

2011 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்

புதிய திறப்பு, புது துவக்கம் குறித்த மானுடத்தின் காதல் அளவற்றது. கடந்த கால நிகழ்வுகளில் பெற்ற பாடங்களிலிருந்து பெற்ற புதிய கண்ணோட்டங்கள், வருங்காலத்தை தன்னம்பிக்கையுடன் எதிர்கொள்ள வகைசெய்கிறது. அத்தகைய ஒரு புதிய துவக்கத்தை மானுடம் மிக கோலகலமாக கொண்டாடியுள்ளது. அதன் புகைப்படத் தொகுப்பை இங்கே காணலாம். வாசகர்களுக்கு புத்தாண்டு “2011 புத்தாண்டுக் கொண்டாட்டங்கள்”

மாநகர கோடை – திலீப்குமார்

திலீப்குமாரின் கதைகள், சாதாரண மனிதர்களின் ஆசைகளும் ஏமாற்றங்களும் சார்ந்தது. இவரது கதைகள் சென்னையில் வாழும் குஜராத்தி குடும்பங்களின் உலகை நுட்பமாகச் சித்திரிக்கின்றன. அதிலும் முதியவர்கள், பெண்களின் வெளிப்படுத்த முடியாத ஆசைகளும் இயலாமையுமே இவர் கதைகளில் அதிகம் வெளிப்படுகின்றன. திலீப்குமாரின் கதைகள் மெல்லிய நகைச்சுவைத்தன்மை வாய்ந்தவை. அவை சம்பவங்களின் அபத்தத்தை வெளிப்படுத்துபவை.

பாகிஸ்தானில் பறந்த கிருஷ்ணப்பருந்து

கிருஷ்ணப் பருந்து நாவலில் ஓர் இடம். ‘ஆரம்பப் பாட மாணவன் 100,99,98 என்று தலைகீழாக எண்ணுவதுபோல’ என்று வரும். இன்று தமிழில் வருடாவருடம் ஆயிரக்கணக்கான நூல்கள் வெளியிடப்படுகின்றன. கண்கவரும் அட்டைகளும், நல்ல தாள்களும், அழகான எழுத்துருக்களும் தமிழ் வாசிப்பை இனிய அனுபவமாக மாற்றிவிடுகின்றன. நிறைய இளம் எழுத்தாளர்கள் எழுதுகிறார்கள். இந்தச் சந்தடியில் மூத்த எழுத்தாளர்கள் மறக்கப்பட்டு விடுகிறார்கள். அவர்களுடைய உன்னதமான படைப்புகள் 100,99,98 என்று பின்னுக்கு தள்ளப்பட்டு விடுகின்றன.

நினைவுகளின் சுவட்டில்

பரந்த வாசிப்பும், நம்பும் தீவிரமான இலக்கியக் கொள்கைக்கான அர்ப்பணிப்பும், அஞ்சாமையும், கூர்ந்த அவதானிப்பும், நேர்மையான அபிப்பிராயங்களும் வெ.சாவின் பலங்கள் என்பதை அவர் எழுதிய ஒரு நூலையேனும் வாசித்திருப்பவர் உணர இயலும். வெ.சாவுக்கு இந்த பலம் வந்த ஊற்றுக்கண், நாற்றங்கால், உரக்குண்டு எதுவென இந்த நூலை வாசிப்பவர் உணர இயலும். இலக்கிய விமர்சனமாக 12, நாடகம் சார்ந்த 3, ஓவியம் சிற்பம் பற்றி 3, சினிமா சார்ந்து 3, இன்ன பிற 3, என 24 நூல்கள். மொழி பெயர்ப்புகள் 3, தொகை நூல்கள் 4 என்பன தமிழ் இலக்கியத் திறனாய்வுத் துறைக்கு அவர் கொடை. என் நினைவு சரியாக இருக்குமானால், எனது முதல் கட்டுரையை நான் 1982-ல் எழுதினேன். அது ஒரு மதிப்புரையாக இருந்தது. அதுவும் வெ.சா கேட்டதற்குப் பணிந்து- ஆ.மாதவனின் நாவல், ‘கிருஷ்ணப் பருந்து’ பற்றியது. மதிப்புரை அல்லது கட்டுரை எழுத எனக்கு வரும் என்றே தெரியாது அப்போது.

ஐந்து கவிதைகள்

சோறு வெந்து பதமாயிருக்கிறது.
என்னைத் தவிர யாரும் எஞ்சாத வீடெங்கும்
கொதிக்கும் குழம்பு மணக்கிறது;
பசிக்காகக் காத்திருக்க நாவிலும்
ஊறுகின்றன நினைவுகள்

பாச்சி

கடைத் தெரு முழுக்கச் சூன்யமாகக் கிடக்கிறது. இன்னும் நன்றாக விடியவில்லை. தேங்காய் மட்டை ஏற்றிய வண்டிகள்,எறும்புப் பட்டாளம் போல நீளமாக ஊர்ந்து செல்கின்றன சக்கரங்கள், அச்சுக் கோலில் டக்டக்கென்று மோதிக்கொள்ளும் சத்தம் தொலைவரை நீளக் கேட்கிறது. சாலையில் கடைகள் ஒன்றுமே திறக்கவில்லை. அப்புவின் புட்டுக்கடை மட்டும் திறந்து, வாசலில் தண்ணீர் தெளித்துவிட்டுப் போனான், பையன். உள்ளே, சாயரத் தட்டில் கரண்டி மோதுவதும், பாய்லரின் உள்ளே கரி வெடிக்கும் சத்தமும் கேட்கிறது.

உயிர், மாற்று உயிர் – 2

பூமியின் உயிர்களில் சக்கரை வலப்புறம் சுழற்சி, அமினோ அமிலங்கள் இடப்புறம் சுழற்சி. நான்கு பில்லியன் வருடங்களுக்கு முன்னர் பூமியில் உயிர் தோன்றும் சாத்தியம் இருந்திருக்கையில், உயிர் தோன்றியதே தற்செயல்தான் என்றால், ஏன் ஒரே ஒரு முறை மட்டும் சாதா உயிர்கள் தோன்றியிருக்கவேண்டும். இன்று ஒரு வகை சாதா உயிர், சில வருடங்கள் கழித்து மற்றொரு வகை சாதா உயிர் என்று தோன்றியிருக்கலாமே.

ஒளி விளையாட்டு

இயற்கை விளையாட்டின் ஒவ்வொரு துளியுமே பிரம்மாண்டம்தான். அந்த துளியின் ஏதோவொரு தெறிப்புதான் மானுடம் என்று கருத இடமுண்டு. Aurora borealis எனப்படும் இயற்கை நிகழ்த்தும் ஒளியின் அற்புத நிகழ்வை நீங்கள் அறிந்திருக்கலாம். மிக நீண்ட தூரத்திற்கு மேகத்தில் ஒளி தன்னுடைய பரப்பை நிகழ்த்திக் காட்டும். சமீபத்தில் ஐஸ்லாந்து நாட்டில் “ஒளி விளையாட்டு”

மெளனியுடன் கொஞ்ச தூரம்

தத்துவ சார்பில் விலகியுள்ள இரு எழுத்தாளர்களின் படைப்புகளையும் நம்மால் ஏற்றுக்கொள்ள முடியும் என்றே தோன்றுகிறது. உலகின் தலைசிறந்த எழுத்தாளர்களுக்கு அளிக்கப்படும் அந்தஸ்தும், மதிப்பும், அவர்கள் ஒரே விதமான தத்துவ சார்புகளைக் கொண்டிருந்தவர்கள் என்பதற்காகத்தான் என்று நம்மால் கொள்ளமுடியுமா? உலக இலக்கியத்தின் சிறப்பான தொகுதியை நாம் பார்க்க நேர்ந்தால், கால, தேச, எல்லைகளையும், தத்துவச் சார்புகளையும் மீறி அது நம்மை ஈர்த்துக் கொள்வதைக் காண்போம்.

மகரந்தம்

உலகில் என்னென்னவோ இயற்கை வளங்கள் தீர்ந்து போய்க் கொண்டிருக்கின்றன. ஆழ்கடலில் மீன்கள் பெரிதும் குறைந்து விட்டன. முத்துச் சிப்பிகள் எங்கே போயின? பல நகரங்களில் உலகெங்கும் சிட்டுக் குருவிகளே காணோம். தேனீககள் பல நாடுகளிலும் பெரும் கூட்டங்களாக அழிந்து போகின்றன. பல காட்டு மிருகங்கள் உலகில் இல்லாமல் போய் விட்டன. தவிர எரிபொருள்கள் தீர்ந்து வருகின்றன. வரும் ஐம்பதாண்டுகளில் குடிநீருக்குப் பெரும் பஞ்சம் எழும் என்று நீர் வள ஆய்வாளர்கள் சொல்கிறார்கள். இந்தப் பட்டியலில் இன்னொரு பொருளையும் சேர்த்துக் கொள்ளுங்கள். ஹீலியம் வாயு.

வாசகர் எதிர்வினை

சில துயரங்கள் என்ன செய்தாலும் நம்மை அவ்வளவு சுலபமாக கடந்து போவதில்லை என்பது மிக நிதர்சனம். ‘Time will heal’ என்பது சில இடங்களில் பொய்த்து விடுகிறது. ‘அதுவாய் கடந்து போனதில்லை’ என்று கூற கற்பனை போதாது. ஆழ்ந்த அனுபவமோ அல்லது தீர்கமான சிந்தனையோ வேண்டும். அதுவாக கடந்து போகாததால் அதை கடத்த மனிதன் எவ்வளவு பாடு பட வேண்டும் என்ற ஆதங்கமும் இந்த வரியில் சுமையாக தெரிகிறது. இந்த வரிகளுக்கு அப்புறம் ஒரு பெருமூச்சோ அல்லது ஒரு சொட்டு கண்ணீரோ எனக்கு தெரிகிறது.

புதுமைப்பித்தனின் ‘காஞ்சனை’

காஞ்சனையின் கோர வடிவையும் தாண்டி கதை சொல்லிக்கு அவளது முகத்தில் மோக லாகிரியை எழுப்பும் அற்புதமான அமைதி தெரிகிறது. காஞ்சனையின் குரூபம் பார்வையைப் பறிக்கும் கண்களில் இருக்கிறது, ஆவியை உட்கொள்ளும் பற்களில் இருக்கிறது. அவ்வளவே. இந்த தனி அவயங்களைத் தாண்டிய முகத்தின் மொத்த தோற்றத்தைக் காண்கையில் கதை சொல்லிக்கு மோக லாகிரி எழும்புகிறது.

ஷ்ரோடிங்கரின் பூனை

வீட்டுச் சாப்பாட்டின் ருசி இன்னமும் நாக்கிலிருந்து விலகாத முதல் செமஸ்டரின் ஓர் இரவு. ரூம்மேட் செந்திலுடன் எதைப்பற்றியோ பேசிக்கொண்டு மெஸ்ஸை நோக்கி நடந்து செல்கையில், திடீரென்று எங்கிருந்தோ ஓடி வந்து ஒட்டிக் கொண்டான் அவன். வந்தவன் ஒல்லியாகவும், உயரமாகவும் இருந்தான். அவனை நான் அப்போது இரண்டாவது முறையாகப் பார்க்கிறேன். அதற்கு முன்பு, ஏ விங் சீனியர்களின் ராகிங் பொழுதில் நாங்களெல்லாம் இடுப்பால் காற்றில் உயிர் எழுத்துக்களை எழுதிக் கொண்டிருக்க, இவன் மட்டும் கிதார் வாசித்துக் கொண்டிருந்தான்.

காஞ்சனை – ஓர் அனுபவம்

புதுமைப்பித்தன் எழுதிய காஞ்சனை சிறுகதை அக்காலத்துக்கே உரித்தான, வாழ்வின் பிரச்னைகளையும், வறுமையையும் மீறிய விச்ராந்தியான தருணங்களில் ஆரம்பிக்கும் கதை. இத்தகு தருணங்களை சத்யஜித் ராயின்படங்களில், தி.ஜா., கதைகளில் காண்கிறோம். படத்தைப் பார்க்கையில், கதைகளைப் படிக்கையில் ஒரு பறவையின் அழைப்பை, தூரத்து ஒலியைத் துல்லியமாகக் கேட்க முடியும். அதுதான் அடிப்படை. இயல்பு. சகஜம். அதன்மேல் இயக்கங்களும், இயக்கம் பற்றிய மாசு படிந்த கவனிப்புகளும், நினைவுப் பதிப்புகளும், அவற்றில் படியும் தூசிகளும் நிகழ்கின்றன.

ஆயிரம் தெய்வங்கள் – 5

அன்று இலக்கியவாதியாக வாழ்ந்தேன். வரலாறை நேசித்தேன். மக்களை அறிய பூகோளமும் வரலாறும் அறிவது நன்று என்று அவற்றையும் கற்றேன். இன்று இயற்கை விவசாயியாக வாழ்கிறேன். இயற்கை விவசாயத்தில் பள்ளிக்கூடம் கூட நடத்துகிறேன். ”வேதம்” என்ற சொல்லை அடிக்கடி நான் பயன்படுத்துவதைக் கண்டு இயற்கை விவசாயத்தில் என்னை குருவாக ஏற்றுக்கொண்ட ஒரு வேளாள சிஷ்யர், திடீரென்று ”ஐயா நீங்கள் பிராமணரா?” என்று கேட்டார், அதன் பின்னர், ”பட்டையா, நெட்டையா” என்றார்.

துயில், தோள்சீலைக்கலகம் – புத்தக வெளியீடுகள்

திரு.எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய துயில் நாவல், ஆய்வாளர்கள் எஸ்.இராமச்சந்திரன், அ.கணேசன் எழுதியுள்ள தோள்சீலைக்கலகம் என்ற வரலாற்றுநூல் இவற்றின் வெளியீடு குறித்த அறிவிப்புகள்.
மருத்துவத்தின் வரலாறு இன்று வரை நாம் முறையாக தொகுக்கப்படாதது. மதமும் மருத்துவமும் கொண்டுள்ள உறவும் அது சார்ந்த மனித நம்பிக்கைகளும் மிகப் புராதனமானவை, அவ்வகையில் நலமடைதல் என்ற அற்புதத்தின் மீதான விரிவான விசாரணையே இந்த நாவல்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள்-3

தொன்மையான கிராமியக் கலைகள், அரங்கம், இலக்கியம் – குறிப்பாக கவிதை – ஓவியம் என்று பல கலைத் தளங்களில் விரைவாகப் பரவிய நவீன சிந்தனைத் தாக்கம் புதிய பாதையில் பயணிக்க உகந்த களமாக அப்போது 20ஆம் நூற்றாண்டின் தொடக்க கால ருஷ்யா அமைந்தது. குறியீட்டு ஓவியர்களுக்குப் பின்னர் (Icon Painters) அங்கு அலுப்பூட்டும் அகடமிக் (Academic) வழிதான் பின்பற்றப்பட்டது. வரவிருக்கும் 1817-இன் புரட்சியை முன்னரே அறிந்தது போல கலையியக்கம் செயற்படத் தொடங்கியது.

முன்னோடிகளும், பின்வந்தவர்களும், ஈயடிச்சான்களும்

தாதா மிராஸி, அனந்து, பாலசந்தர் காலங்களை விட இப்போது உலக சினிமா சுலபமாக அனைவருக்கும் கிடைக்கிறது. திரையுலகில் உள்ள பலரும் இவற்றில் ஆர்வம் கொண்டு இருக்கிறார்கள். அதனால் இத்தகைய நகலாக்கங்கள் உடனடியாக வெளிச்சத்துக்கு வந்து விடுகின்றன. பெரிய ஜனரஞ்சக வியாபரப் படங்களிலிருந்து, கலைப் படங்கள் சாயம் பூசி வெளிவருபவை வரை இது நடக்கிறது.

திலீப்குமார், ஆ.மாதவன் – சமகால அங்கீகாரங்கள்

தமிழின் தேர்ந்த இலக்கியவாதிகள் விருதுகள் மூலம் அங்கீகரிக்கப்படுவது தமிழ்ச்சூழலில் மிகவும் அரிதானதொரு விஷயமாகவே இருக்கிறது. இக்குறையை ஓரளவு நீக்கும் விதமாக இந்த வருடம் இரண்டு தேர்ந்த இலக்கியவாதிகளுக்கு விருதுகள் வழங்கப்படுகின்றன. எழுத்தாளர் திலீப்குமார் ‘விளக்கு’ அமைப்பால் விருதுக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். எழுத்தாளர் ஆ.மாதவன் ‘விஷ்ணுபுரம்’ இலக்கியவட்டத்தால் இந்த வருடம் கெளரவிக்கப்படுகிறார். திலீப்குமார், ஆ.மாதவன் இருவருக்கும் சொல்வனம் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

எலெக்ட்ரிக் எறும்பு – இறுதிப் பகுதி

நியூயார்க் மாநகர் இரவில் ஒளித் தெப்பமாய் மின்னியது, கலங்கள் சுற்றி எங்கும் திரிந்தன, அதிர்ந்தன, ராத்திரி வானிலும், பகல்களிலும், வெள்ளங்களூடேயும், கடும் வறட்சியூடேயும் பரபரத்தன. வெண்ணெய் உருகி திரவமாக அவனுடைய நாவில் பரவியது, அதே நேரம் மோசமான நாற்றங்கள், சுவைகள் அவனைத் தாக்கின: கசப்பான விஷங்களும், எலுமிச்சைப் புளிப்பும், கோடைப் புற்களின் நுனிகளும் இருப்பதை உணர்ந்தான்.

இருபதாம் நூற்றாண்டு ஓவிய நிகழ்வுகள் – 2

கலையும் கைவினையும் அங்கு ஒருங் கிணைந்து வளரத்தொடங்கின. அது, இங்கிலாந்தில் நிகழ்ந்த கலை கைவினை சார்ந்த எழுச்சி (Arts and Crafts Movement)உடன் ஒப்புநோக்குதற்குறியது. அங்கு பல தொழிற்கூடங்கள் நிற்மாணிக்கப்பட்டு, கைவினைக்கலைகள், பீங்கான் பண்டங்கள் உருவாக்கல், பட்டு நெசவு போன்றவற்றில் ருஷ்யாவின் தொன்மையான கருப்பொருள்களும், கற்பனையும் இடம் பெற்றன.

செல்வராஜ் ஜெகதீசன் – கவிதைகளின் நேரடித்தன்மை

செல்வராஜ் ஜெகதீசன் தொடர்ந்து நேரடியான கவிதைகளையே முயன்றிருக்கிறார். கவிதையுலகுக்கு புதியவர்கள் கவிதையை வாசிப்பதில் இருக்கும் சிக்கல்களை இவரது கவிதைகளில் காண முடிவதில்லை. கவிதையின் நேரடித்தன்மை அல்லது எளிமைத்தன்மையை கொண்டாடுபவர்களும் இருக்கிறார்கள்; அவை கவிதைகளே அல்ல வெறும் காட்சிகள் மட்டுமே என்று விமர்சிப்பவர்களும் உண்டு.

காத்திருப்பு

சிலந்தியின் எச்சில்தடத்தின் மையத்தில்
நிலைகொண்டிருந்தது சிலந்தியின் கர்வம்
சிலந்திக்கும் பெண்ணுக்குமான போட்டியில்
கடந்துவிடுகிறது ஓர் யுகம்
காற்றடிக்கத் தொடங்குகிறது

ஆதலினால் காமம் செய்வீர்

மனோரி கரையில் இறங்கியவர்களை மீன்காரர்கள், ஆளுக்கொரு மீனை கையில் வைத்துக்கொண்டு விலைசொல்லிக் கொண்டிருந்தார்கள். எதிலும் கவனம் செலுத்தாமல் இருவரும் நடந்து கொண்டிருந்தார்கள். தூரத்தில் அவர்களுக்காகவே அவதரித்து காத்திருந்தது போல் ஒரு பாறை இருந்தது. மணி ஒன்பதைத் தொட்டிருந்தது. இருவரும் வாகாய் பாறைமேல் உட்கார்ந்தார்கள். கடல் காற்று அவர்களை வருடிக் கொண்டிருந்தது.

இணையத்துடன் போராடும் விளம்பரத்தாள்கள் – இறுதிப் பகுதி

செய்தித்தாள்களுக்குக் கிடைக்கும் விளம்பரங்களின் ஒரு குறிப்பிட்ட பகுதியும் இப்போது இணைய நிறுவனங்களுக்குச் செல்லத் தொடங்கியிருக்கிறது. 2008-இல் முதன்முறையாக வட அமெரிக்காவில் இணைய விளம்பர முதலீடு அச்சு விளம்பர முதலீட்டை விட அதிகரித்தது. இங்கிலாந்தில், கூகிள் இணையதள விளம்பர வருமானம் 2009-இல் அந்நாட்டில் உள்ள அத்தனை அச்சு செய்திதாள்களின் விளம்பர வருமானத்தைவிட அதிகரித்தது. சமீபத்தில், செல்பேசி விளம்பரங்களில் நூறு கோடி டாலர்கள் ஈட்டியுள்ளதாக கூகிள் அறிவித்துள்ளது!

போதையில் சிதையும் ரியோ

போதை மருந்து அனைத்து நாட்டிலும் பிரச்சனை தான். ஆனால் போதை மருந்துக் கடத்தல்காரர்களின் இரண்டு குழுக்கள் தெருவில் துப்பாக்கியுடன் சண்டையிட துவங்கினால்? பிரஸிலின் ரியோ நகரில் கடந்த வாரம் இத்தகைய விஷயம் நிகழ்ந்தது. பொதுமக்களின் உயிரிழப்பை தொடர்ந்து அந்நாட்டு பாதுகாப்புப் படை வீரர்கள் நடத்திய அதிரடி சோதனையில் மேலும் “போதையில் சிதையும் ரியோ”

யானியின் ’புகழுரை’

யானி(Yanni) உலகப் புகழ்பெற்ற இசைக் கலைஞர். மேற்கத்திய செவ்வியல் சார்ந்த இவரது இசைக் கோர்வைகள் மூலம் உலகமெங்கும் உள்ள இசை ரசிகர்களை தன்வசம் ஈர்த்தவர். மானுடத்தின் உள்ளுறைந்த உன்னதங்களை போற்றும் வகையில் “புகழுரை”(Tribute) எனும் மைய-நோக்கில் அமைக்கப்பட்ட இசைக் கோர்வை அவரது அற்புதமான ஆக்கங்களில் ஒன்று.

உயிர், மாற்று உயிர் -1

உயிர் அல்லது ”உயிருடன் இருப்பவை” என்றால் என்ன? நம் உலகிலேயே நாம் அல்லாத உயிர்கள், மாற்று உயிர்கள் (alternate life) பற்றி கேள்விப்பட்டிருக்கிறீர்களா? நாம் கரிமவேதியியல் பாதி பரிணாம உயிரியல் மீதி என்று கடவுள் பாதி மிருகம் பாதியாய் கலந்து செய்த கலவை. இன்று ஹோமோஸேப்பியன்ஸ் என்று அறியப்படும் நம் மனிதகுலத்தின் மூதாதையரும், மனிதக்குரங்கின் மூதாதையினரும் ஒரே பொது ஆதி-மனித-குரங்கு-மூதாதையினரிடமிருந்து தோன்றியவர்கள். இந்த உயிரினங்களின் பரிணாம வளர்ச்சியின் புரிதலை (கொம்பேறித்தாவும்) குரங்கிலிருந்து பிறந்தவன் மனிதன் என்கிற சினிமா பாட்டில் விளக்கியுள்ளோம்.

சிறிது சினிமா

சுதந்திர நாளன்று ரயில்வே ஸ்டேஷனில் வரும் வெற்றி கோஷங்களும், பொதுமக்கள் உரையாடல்களும் அபத்தக் களஞ்சியம். இதற்கெல்லாம் சிகரம் ‘சத்தியமூர்த்தி வாழ்க’ தான். ஆசாரியாரும் சத்தியமூர்த்தியும் வண்டியில் வருவதாக வேறு பேசிக் கொள்கிறார்கள். 28-3-1943ல் இறந்து போன சத்திய மூர்த்தியின் ஆவிதான் அங்கு வந்திருக்கக் கூடும். அந்த அளவில் ம.ப.(மதறாசப் பட்டணம்)வும் ஒரு ம.ப. (மர்மப் படம்) ஆகிவிட்டது.

கே.வி.மகாதேவனும், கர்நாடக இசையும்

மேற்கத்திய இசையின் பல கூறுகளை இசையமைப்பாளர்கள் கற்றுக்கொண்டு அவற்றைத் திரையிசையில் புகுத்துவது வழக்கமானது. இக்காலகட்டத்தில்தான் கே.வி.மகாதேவனின் பங்களிப்பு மிகவும் முக்கியமான ஒன்றாக இருக்கிறது. கர்நாடக இசையின் ராகங்களின் அழகைச் சிதைக்காமல், அவற்றின் பாவங்கள் வெளிப்படும் வகையில், மாறிவரும் நவீனத் திரையிசைச் சூழலுக்குக் கச்சிதமாகப் பொருந்திப் போகும் வகையில் அவர் பாடல்கள் அமைக்க ஆரம்பித்தார்.

மகரந்தம்

நம் ஊரில் படமெடுக்கும்போது சிரி சிரி என்று சொல்லித் தொல்லை கொடுப்பார்கள் இல்லையா? ஈன்னு சிரிடா என்று குழந்தைகளைச் சொல்வார்கள். பெரியவர்களை என்ன சொல்வது என்று தயங்கிக் கொஞ்சம் சிரிங்க சார், அம்மா என்பார்கள். மேற்கில் ஒவ்வொரு நாட்டிலும் ஒரு விதமாகச் சிரிக்கச் சொல்கிறார்களாம்.

சந்திரஹாசன்

சந்திரஹாஸனிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. தன்னை விட அதிகம் படித்த யாரையுமே, அவர்கள் வயதில் சிறியவராக இருந்தாலும், ‘ஸார்’ என்றே அழைப்பான். அந்த வகையில் எஸ்.எஸ்.எல்.ஸி பாஸ் பண்ணியிருந்தவர்களும் அவனுக்கு ஸார்தான்.எப்படியோ தட்டுத் தடுமாறி எஸ்.எஸ்.எல்.ஸி வரை வந்துவிட்ட சந்திரஹாஸன், நாற்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தும் எஸ்.எஸ்.எல்.ஸியில் தேர்ச்சி பெற முடியாமல் போனது குறித்து பெரிதும் வருந்தினான். ஒரு பாடத்தில் முப்பத்தைந்து மதிப்பெண்கள் எடுத்தால் பாஸ்தான். ஆனால் மொத்த மதிப்பெண்களும் நாற்பத்தைந்து என்றால் கவர்னரே கையெழுத்திட்டாலும் ஒன்றும் செய்ய முடியாது என்பதை மெதுவாக எடுத்துச் சொல்லி அவனுக்கு புரிய வைத்தோம்.