கோடை ஈசல்

முந்தைய பகுதிகள்:பகுதி – ஒன்றுபகுதி – இரண்டு பீட்டர் வாட்ஸ் + டெரில் மர்ஃபி அந்த அறை காயங்கள் ஏற்படும் வாய்ப்பைக் குறைப்பதற்கென கட்டமைக்கப்பட்டிருந்தது. அங்கு படுப்பதற்கு ஒரு கட்டில் இருந்தது. அதன் ஒரு மூலை கிழக்குப் புறச் சுவருக்குள் பதிந்திருந்தது. அது போதுமானதாக இருந்தது. அவள் ஓடிய “கோடை ஈசல்”

கோடை ஈசல்

பாதி உலகம் தள்ளி தூரத்தில இருக்கற கதகதப்பான உங்க ஆஃபிஸ்ல உட்கார்ந்துக்கிட்டு, எங்களுக்கு போதனை செய்யறது உங்களுக்கு சுலபமா இருக்கு. நாங்கதான் ஜீனியோடு போராட வேண்டி இருக்கு, அவ தன்னோட முட்டிகளை தன் முகத்திலே குத்திக்கறா, தன் கையில இருக்கற தோலை உரசிப் பிச்சுப்புடறா, வெறும் மாமிசம்தான் அவ கையில தொங்கறது, அல்லது தன்னோட கண்ணுல ஒரு ஃபோர்க்கால குத்திக்கறா. அவ ஒரு தடவை (உடைஞ்ச) கண்ணாடியைத் தின்னா, ஞாபகம் இருக்கா? ஒரு மூணு வயசுக் குழந்தை அடாவடியா கண்ணாடியைத் திங்கறா! நீங்க இருக்கீங்களே, டெர்ரகானோட சோமாறிகள், எல்லாராலும் என்ன செய்ய முடியறது?

கோடை ஈசல் – பீட்டர் வாட்ஸ் & டெரில் மர்ஃபி

குழந்தைகளை வதைப்பதில் ஒரு சிந்தனைச் சோதனை இது: அப்போதே பிறந்த ஒரு குழந்தையை, நேர்க்கோடுகளே இல்லாத ஒரு சூழலில் கிடத்துவது. அவளுடைய மூளை ஒரு சமன நிலைக்கு வரும்வரை, மூளையின் நரம்புத் தொடர்புகள் எல்லாம் உறுதியாகும் வரை, அங்கேயே இருக்கச் செய்வது. உருக்களின் அமைப்புகளை ஒன்றோடொன்று பொருத்திக் காட்சிப்படுத்தும் கண் விழித்திரையின் மொத்த இணைப்புகளும், தேவை என்று கேட்கும் தூண்டுதலே இல்லாததால், செயல்படுவதை நிறுத்தி விடும், இனிமேல் அவற்றை மறுபடி செயல்பட வைக்க முடியாது போகும். தொலைபேசிக் கம்பங்கள், மரங்களின் தண்டுகள், வானளாவும் கட்டிடங்களின் செங்குத்து உயரங்கள்- உங்களுக்குப் பலியான அந்தப் பெண், தன் வாழ்நாள் பூராவும் நரம்புகளின் வழியே இவற்றைப் பார்க்க முடியாதவளாகவே ஆகி இருப்பாள்.