இன்னமும் அணையவில்லை
யாழ் நூலகம் எரிந்த பெருநெருப்பு
இன்னமும் கருகிக்கொண்டிருக்கிறது
அறிவின் வேர்களைப் பொசுக்கிய வாடை
பசிபிக் பெருங்கடலிலும் கேட்கிறது
குமுதினிப் படகில் வெட்டிச் சாய்க்கப்பட்டவர்களின்
குடல் சரிந்த மரண ஓலம்
காஞ்சி பூசூடா உமையாள் படலம்
யாருக்கு கற்றுத்தருவது என்று காத்திருந்தாற் போல சொன்னாள். “நிரம்ப செய்யலாம்பா, மொளகா இருக்குல, அது, கொஞ்சூண்டு எண்ணெய், சின்னவெங்காயம் நிறைய, உப்பு, புளித்தண்ணி, பெருங்காயம் இதெல்லாம் போட்டு வதக்குனினா தொட்டு திங்க நாக்கு மெச்சுக்கொட்டும், கீரைய பொரிச்சுவைக்காம பருப்பு கொத்தமல்லி புதினா போட்டு கடஞ்சு வைய், தோசைக்கு மாத்தா ஆப்பஞ்செய்.”
பேட்டை நாவல் காலத்தின் ஆவணம்
1639-இல் ஆங்கிலேயர்கள் புனித ஜார்ஜ் கோட்டையை நிறுவுவதற்கு முன்பு, சோழமண்டலக் கடற்கரையோரம் மீன்பிடித் தொழிலையும் வேளாண்மையையும் வாழ்வாதாரமாகக் கொண்ட தமிழ் சமூகங்கள் வாழ்ந்து வந்தன. மயிலாப்பூர், திருவல்லிக்கேணி, எழும்பூர், நுங்கம்பாக்கம் மற்றும் புரசவாக்கம் போன்ற கிராமங்கள் கடலோர வணிகப் பாதைகள், கோயில் வலைப்பின்னல்கள் மற்றும் விவசாய நிலப்பரப்புகளுடன் இணைக்கப்பட்ட சிறிய குடியிருப்புகளாக இருந்தன. இவர்களின் உலகம் கடல், பருவமழை என்றுதான் பிணைக்கப்பட்டிருந்தது.
மஜ்ரேஹா
என் மனைவி ஊருக்குப் போயிருந்த ஒரு நாளில் நண்பர் ஷியாம் படம் பார்க்க ‘வன்கோல்பேஸ்’ வருமாறு அழைத்திருந்தார். அவர் வரும்வரை அங்கிருந்த கடைகளை நோட்டம் விட்டவாறு நடந்து திரிந்துகொண்டிருந்த போதுதான் பீப்பி என்னைக் கண்டிருக்க வேண்டும். அவளும் அவளது பிள்ளைகளுடன் குடும்பமாக கொழும்புக்கு விடுமுறைக்காக வந்திருந்தார்கள்.
இந்தியக் (காலனிய) ஒப்பந்தத் தொழிலாளர்கள் முறையும் தொடரும் மனநலப் பிரச்சினைகளும்
வறுமையின் கோரப்பிடியில் இருந்து தற்காத்துக்கொள்ள இத்தகைய இடப்பெயர்வு நடைபெற்றாலும் பெரும்பாலான வரலாற்று ஆய்வாளர்களின் கூற்றுப்படி இடைத்தரகர்களின் மூளைச் சலவையால் இவர்கள் வெகுவாக ஊக்குவிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக தாங்கள் மிகச் செல்வச் செழிப்பான நாட்டிற்குச் செல்ல இருப்பதாகவும், மிக அதிக சம்பளத்தை வருமானமாக ஈட்டப் போவதாகவும் நம்ப வைக்கப்பட்டார்கள். Girmit.org என்ற இணையத்தளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள ஒப்பந்தத் தொழிலார்களின் முதல் நிலை தரவுகள் இதனை உறுதிசெய்கின்றன
பிறந்தநாள் பரிசு
காசு, நிலம், வீடு இல்லாதவனுக்கு அம்மாவை கட்டிக்கொடுக்க மாமாக்கள் விரும்பவில்லை. அதனால் அம்மாவுக்காக அப்பாவை எதிர்க்க மாமாக்கள் முற்பட்டார்களாம். அப்பா, அம்மா வீட்டுக்குச் சென்று அம்மாவை அழைத்தார். மாமாக்கள் அதைப் பார்த்து அப்பாவை அடிக்க ஓடி வர, அப்பா சிரித்துக்கொண்டே, ‘சண்டை வேண்டாம். உங்கள் தங்கச்சி வந்து ‘’போ’’ என்று சொன்னால் நான் போய்விடுகிறேன்’ என்று சொன்னாராம்.
உடைந்த காலவரிசைகளும் நம்பகமற்ற சுயமும்
நோலனின் திரைமொழியில் மிகவும் வியக்கத்தக்க அம்சம் அதன் வழக்கத்திற்கு மாறான கட்டமைப்பாகும். ஃபாலோவிங் (1998) தொடங்கி, நோலன் கதையாடல் விவரிப்பைத் துண்டாடும் ஒரு தனித்துவமான நடைமுறையை (Practice of narrative fragmentation) நிறுவினார். இது மரபார்ந்த ஹாலிவுட் கதைசொல்லல் முறைக்கு நேரெதிரானது. கிளாசிக்கல் கதையாடல் என்பது, போர்ட்வெல் விளக்குவது போல, காரண-காரியத் தொடர்புகளால் பிணைக்கப்பட்ட, ஒரு இலக்கை நோக்கி நேர்க்கோட்டில் நகரும் நிகழ்வுகளின் சங்கிலித் தொடர். நோலன் இந்தத் தர்க்கத்தை முறையாகச் சிதைக்கிறார்.
சின்னா தேவி
“உன்னுடைய வேதனையும் கவலையும் எங்களுக்குத் தெரியும் கிருஷ்ணா. இன்னும் கொஞ்ச நாள்தான். நீ துளுவ வம்சத்தில் பிறந்தவனாக இருந்தாலும் ஆந்திர சாம்ராஜியத்தை நிலைநிறுத்தப் போவது நீ ஒருவன்தான். இது உண்மை. வித்யாரண்ய சுவாமி மகா விஷ்ணுவின் அம்சம். அவருடைய வாக்கு பொய்க்காது, மகனே. உன்னைப் பெற்ற தாயார் நன்றாக இருக்கட்டும். நாகமாம்பாவின் ஆசியோடு தென்னாட்டுக்கு ஏக சக்ராதிபதியாக நீ மகுடம் சூடும் நாள் விரைவில் வரப் போகிறது. இந்த பூமித்தாய் அதற்காகக் காத்திருக்கிறாள். அந்த நொடிக்காகவே இந்தக் காத்திருப்பு” என்றார்.
புதைகுழி மேல் நின்ற வாழ்க்கை
போரின் இரு பக்கங்களிலும் சாதாரண மனிதர்கள் சிக்கிக்கொள்கிறார்கள் என்பதை இந்தச் சம்பவம் மிக எளிமையாகவும் ஆழமாகவும் வெளிப்படுத்துகிறது. ஒரு பக்கம் தமிழர்கள் தப்பிச் செல்ல வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்; மறுபக்கம் சிங்கள இளைஞர்களும் தங்களுக்கு விருப்பமில்லாத ஒரு போரில் சிக்கிக்கொண்டு அதிலிருந்து தப்பிச் செல்ல முயல்கிறார்கள். இந்தச் சந்திப்பு போரின் அரசியல் எல்லைகளைத் தாண்டி மனித துயரத்தின் பொதுவான தன்மையை வெளிப்படுத்துகிறது.
தேனம்மை
கல்யாணப்படம் எதிர் சுவற்றில் தொங்கியது. ‘அக்கா மஞ்சள் நிறம்..அத்தான் மாநிறமானாலும் அழகு. கண்கள் ஈர்ப்புடையது. நின்று நேருக்கு நேர் பார்க்கமுடியாது. இவனுடைய அப்பாவின் இறப்பிற்கு பின் அங்குதான் அண்ணனோடு சேர்த்து இவன் ஜாகையும்.பயமும் மரியாதையும் கலந்த உறவு. நேருக்குநேர் பார்த்துப் பேசியதில்லை’.
ரோஸலிண்ட் ஃப்ராங்க்ளின்- போட்டோ 51
ரோஸலிண்ட் DNA வை வெறும் புகைப்படம் மட்டும் எடுக்கவில்லை, அந்தப் புகைப்படங்களில் உள்ள புள்ளிகளுக்கு இடையிலான தூரத்தை மிக நுணுக்கமாகக் கணக்கிட்டார். ஒரு சுருளின் நீளம் எவ்வளவு? இரண்டு இழைகளுக்கும் இடைப்பட்ட தூரம் என்ன? பாஸ்பேட் மூலக்கூறுகள் எங்கே அமைந்துள்ளன? இவை அனைத்தையும் அவர் கணித ரீதியாகத் தனது குறிப்பேடுகளில் பதிவு செய்திருந்தார்.
நரனா? நாராயணனா?
அவன் சொன்ன விஷயம், அதைச் சொன்ன விதம், அதுவும் என் கண்களை நேராகப் பார்த்தபடி அவன் சொன்னது, எனக்கு என்னவோ மாதிரி இருந்தது. என் இதயம் துடிப்பதைக் கூட ஒரு நொடி மறந்திருந்தது. வெட்கத்தால் என் முகம் சிவந்ததை மறைப்பதற்காகத் தலைகுனிந்தேன். இதை அவனே எழுதினானா, இல்லையென்றால் யாராவது உதவினார்களா என்று யோசித்தேன்.
என் பெயர் பூனா (Buna)!
இன்றைக்குக் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாக அதிகம் வர்த்தகம் செய்யப்படும் பொருள் நான்தான். அராபிகா, ரொபஸ்டா என்று இரண்டு வகையில் என்னைப் பயிரிடுகிறார்கள். இந்த இரண்டு வகைகளையும் கலந்து காபி தயாரிப்பவர்களும் உண்டு. இவை இரண்டுதான் முக்கியமான வகைகள் என்றாலும் நான் நூற்றுக்கணக்கான வகைகளில் பயிரிடப்படுகிறேன்.
வாட்ஸாப்ப் தாத்தா
குழந்தை எங்கே போய் இருப்பாள்? அந்த கோவில் வளாகம் பெரியது. கேட்டு வழியே குழந்தை போகவில்லை என்று செக்யூரிட்டி ஆள் சத்தியமே செய்தான். நுழைவு வாயில் பக்கம் அமர்ந்து இருக்கும் பூக்காரி கூட குழந்தையைப் பார்க்கவில்லை என்றாள். நாகராஜனுக்கு சற்றே நிம்மதியாக இருந்தாலும் வயிற்றைக்கலக்கியது. லலிதாவிடமும் ப்ரகாஷிடமும் எந்த மூஞ்சியை வைத்துக்கொண்டு குழந்தை இல்லாமல் நிற்பார்? யாரேனும் குழந்தையைக்கடத்தி இருந்தால்? நினைத்துப்பார்க்கவே முடியவில்லை.
காளான்கள் சித்தரிக்கும் நவீன உலகம்
காளான் (mushroom) உயிரினங்களின் வித்தியாசமான உலகத்தை பிரதிபலிக்கும் ஒரு சுவாரஸ்யமான வாழ்க்கைச்சுழலைக் கொண்டுள்ளது. காளானின் முதன்மையான உயிரியல் அமைப்பு மைசீலியம் என்கிற நுண்ணிய ஊசிகளால் (hyphae) ஆன வலையாகும், தரையிலும், மரச்சரிவிலும், மற்றும் உயிரியல் பொருள்களில் உள்ள வெற்றிடங்களில் பரவுகிறது. காளானின் உணவு உறிஞ்சுதல், வளர்ச்சி ஆகியவை மைசீலியம் மூலம் நடைபெறுகிறது.
றெக்கை – அத்தியாயம் 17
நிறைசூலியான ஒரு பேரிளம்பெண் கம்புக்கூட்டுக்கு கீழே தூவெண் சிறகுகள் பறப்பித்து உந்தி எழ கடுமையான பிரயத்னம் செய்து கொண்டிருந்தாள். அவள் அருகே ஆறு வயது காணும் ஓரு சிறுமி இவள் பறக்க றெக்கை விரிக்க தன்னால் ஆன எல்லாம் செய்து கொண்டிருந்தாள்.
தென்னை மரத்தில்…
மார்ச் 2026ல், இந்தியாவும், ஐக்கிய அமீரகமும் இதன் தொழில் நுட்ப சாத்தியங்களையும், அதற்குத் தேவையான நிதிகளையும் பற்றிய தீவிரமான கட்டுரைகளை விவாதித்து ஒரு வடிவத்திற்கு கொண்டு வந்துள்ளன. சுருக்கமாகச் சொல்வதென்றால், இந்தியா பகல் நேரத்தில் சூர்ய சக்தியை ஐக்கிய அமீரகத்திற்கு அனுப்பும்; அந்திப் போதில், சூரியன் இந்தியாவில் மறையும் நேரத்தில், சூரியன் மேற்கிலிருப்பதால் ஐக்கிய அமீரகம் சக்தியை அனுப்பும். 2025ல் சவுதி அரேபியாவும் இந்தத் திட்டத்தில் இணைந்து கொண்டுள்ளது. அது இந்த ‘ஆற்றல் பெட்டகத்தை’ யூரோப் வரை எடுத்துச் செல்ல உதவும்.
படுக்கை வரையில் பனி
அறைக்குள் போர்வையில் பனி பொழிந்திருப்பது கூரையின் வழியாகவும் இருக்கலாம் எனக் காட்சியமைப்பு விரிவதை நுட்பமாக மூன்றாம் அடியின் திருப்பம் தடுக்கிறது. மேலிருந்து கீழே பனி வீழ்வதைச் சொல்லாமல், புனிதபூமியிலிருந்து எனச் சொல்லி பௌத்த மடாலயம் இருக்கும் புனிதபூமியின் திசையிலிருந்து வீசுகின்ற காற்று பனித்துகளை அறைக்குள் நிறைப்பதைச் சொல்கிறது.
எழுதாக்கிளவியும், ஏனைய நூற்களும்
முழு வேத இலக்கியத்தையும் ஆறு அடுக்குகளாக அல்லது தொகுப்புகளாகப் பிரித்து விடலாம். முதலாவதும் மிக முக்கியமானதுமானவை வேதங்கள் ஆகும். வேதம் என்ற சொல்லே அறிவின் மூலத்தைக் குறிக்கிறது. ‘வித்’ என்ற மூலச்சொல்லுக்கு அறிதல் என்று பொருள். வேதங்கள் சுமார் இருபதாயிரத்துக்கும் மேற்பட்ட மந்திரங்களைக் கொண்டுள்ள மிக விரிவான இலக்கியம். முழு வேத இலக்கியமும் ரிக் வேதம், யஜுர் வேதம், சாம வேதம் மற்றும் அதர்வண வேதம் என நான்கு பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரிக் வேதம், செய்யுள் அல்லது கவிதை அல்லது “பத்ய” வடிவில் உள்ள ரிக் மந்திரங்களைக் கொண்டுள்ளது. யஜுர் வேதம், உரைநடை வடிவில், அதாவது “கத்ய” வடிவில் உள்ள யஜுர் மந்திரங்களைக் கொண்டுள்ளது.
கர்ணனும் குந்தியும்
தங்களது குரல் என்னைப் புராதனமான, உலகின் குழந்தைப்பருவத்தைத் தொலைத்த, அந்திக்கருக்கல் போலும் பிரக்ஞைக்குள் நடத்திச் செல்கிறது. எப்படியானாலும், இது கனவாக இருந்தாலும், அல்லது மறந்துபோன நிஜத்தின் துண்டாக இருப்பினும், என்னருகே வந்து உங்கள் வலதுகரத்தை எனது நெற்றிமீது வையுங்கள். என் தாய் என்னை நிராகரித்து விட்டாள் எனும் வதந்திகள் உலவுகின்றன. பல இரவுகளில் அவள் எனது உறக்கத்தில் வந்திருக்கிறாள்; ஆனால் நான், “உனது முக்காட்டை எடுத்து உன் முகத்தைக் காட்டு,” என்று அழுதபோது, அவள் உருவம் மறைந்துவிடும்.
மெக்கானிக் கதைகள்
சிறிய எளிய கதைகள், எளிமை இக்கதைகளில் வலிமை எனலாம். நேரடியாக வாசகருடன் உரையாடும் இக்கதைகளை நாம் அவ்வளவு எளிதில் மறக்க முடியாது. தன் கதைகள் மேலிருக்கும் அளவிலாத பற்று ஒவ்வொரு கதைகளிலும் மிளிர்க்கிறது. தன் சொந்த அனுபவத்தின் சாயல்களும் நெருக்கமான ஒன்றின் அமைதியும் கதைகளில் பிரதிபலிக்கின்றன. கூடவே இக்கதைகளை சொல்லியே தீரவேண்டும் என்கிற ஆசிரியரின் வேட்கையும் வெளிப்படுகிறது.
விழுது தேடிய வேர்
எப்போதும் மடிப்பு கலையாத, தங்கப் பொத்தான்கள் மின்னும் அந்த வெள்ளை ஜிப்பா இன்று இல்லை. அதற்குப் பதிலாக மார்பு வரை போர்த்தப்பட்டிருந்த வெண் பட்டு வேஷ்டி , அந்தத் தேகத்தின் கம்பீரத்தை மறைத்திருந்தது. காதுகளில் எப்போதும் மின்னும் அந்தக் கடுக்கன்கள் கழற்றப்பட்டு, வெறும் துவாரங்கள் மட்டுமே எஞ்சி நின்றன.
