சுஜாதா காலமான போது, அஞ்சலி செலுத்த அசோகமித்திரன் வந்திருந்தார். இரண்டாம் முறையாகப் பார்த்தேன். மத்தியான வேளையில் சென்னை வெயிலுக்குக் களைத்துப் போயிருந்தார். வீட்டுக்கு கிளம்பியவர், முடியாமல் மயக்கத்தில் அப்படியே தரையில் உட்கார்ந்துவிட்டார். உடனே சிலர் அவருக்கு தண்ணீர் எடுத்துவந்து கொடுத்தார்கள். கொடுத்தவர்களுக்கு நிச்சயம் அவர் அசோகமித்திரன் என்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தண்ணீர் அருந்திவிட்டு சற்று ஆசுவாசப்படுத்திக் கொண்டு, “வேளச்சேரிக்கு போகணும், பஸ்டாண்ட் வரை யாராவது கொண்டு விட முடியுமா ?” என்று கூட்டத்தைப் பார்த்து கேட்டதை இன்றும் என்னால் மறக்க முடியவில்லை. அங்கிருந்த ஒரு பிரபல டைரக்டர், “இவர் தமிழ்நாட்டின் Hemingway. இவருக்கா இந்த நிலமை ?” என்றார்.
மேலும் படிக்க...»நளீம் நானா கொடுத்தனுப்பிய கொய்யாப்பழத்தினை அவர் பார்க்க, அறை ஜன்னலருகிலிருந்து புன்னகையுடன் சுவைப்பார் நுஸ்ரத் ராத்தா. இங்கு புளித் திராட்சைகளைக் கடிக்கும் நளீம் நானாவின் முகத்தில் நவரசங்களும் மிளிரும். புன்னகை, அஷ்டகோணலாகி உடல் சிலிர்க்கும். இருந்தும், தலைவியின் அன்புக் கட்டளையென்பதால் கருமமே கண்ணாக முழுக் குலையையும் உள்ளே தள்ளுவார் அவர்.
- எங்க தலைவர அவன் இவண்ணு சொல்றான் மாமா.
- விடு வேணு. இதென்ன புதுசா, எல்லோருமே அப்படித்தான் சொல்றோம். நீ மத்த நடிகருங்களை அப்படி சொல்றதில்லையா?
- இப்ப அவரு ஒரு கட்சிக்கு தலைவரு.
- எந்தத் தலைவராக இருந்தாலும், அப்படித்தான் நாம ஏக வசனத்தில் அழைக்கிறோம். மரியாதை கொடுக்கிறமாதிரி அவங்க நடந்துக்கணும், இல்லைண்ணா சொல்லத்தான் செய்வாங்க.
போலிஸ்காரர்கள் உணவகத்தில் தன்னைக் கைது செய்தபோது அவர்கள் பணத்தை எடுத்துக் கொள்வார்கள் என்று தனக்கு தெரியும் என்றும், அதனால் பணத்தைச் சுருட்டி ஆசன வாயில் வைத்துக் கொண்டதாகவும் ஈபோவில் சொன்னான்.“ஜெனரல் அபாச்சாவுக்கு நான் பணத்தை மறைத்து வைத்த சாமர்த்தியம் பிடித்திருந்தது. புது சிறைவாசிகளை அரைமணி நேரம் தோப்புகரணம் போடச் சொனான். என்னைப் பத்து நிமிடத்தில் விட்டுவிட்டான்”
மோசமான கனாக்கள் வருவது நின்ற பின் நான் கொஞ்சம் ஓய்வெடுக்க முடிந்தது. முதல் மாறுதல் நான் கவனித்தது, நான் படிக்கிற வேகமும், படித்ததைப் புரிந்து கொள்கிற வேகமும் மிகவும் கூடியிருந்தன. சீக்கிரம் ஏதோ ஒரு நாளைக்குப் படிக்க வேண்டும் என்று அலமாரியில் நாட்களாய் தொடாமல் வைத்திருந்த புத்தகங்களை எல்லாம், படிக்கக் கடினமாய் மிக டெக்னிகலாக இருந்த புத்தகத்தை எல்லாம் படித்து முடித்திருந்தேன்.
நாஸா சான்றாதாரம் தேடும் ஹிந்துத்துவர்களை நாம் இந்த வரைபடத்தில் எந்த புள்ளியில் நிறுத்தலாம்? முதலில் ஏன் நாஸா? இவர்கள் எப்போதும் சுதேசியை முன்வைப்பவர்கள் அப்படியிருக்க ஏன் இஸ்ரோவை தேர்ந்தெடுக்க கூடாது? ஏன் நாஸாவை தேர்ந்தெடுக்க வேண்டும்? தங்களை ஒரு உலகளாவிய வட்டத்தில் வைத்து பார்க்க முயல்கிறார்கள். அவர்களை அறியாமலே அதற்கான சிறந்த வெளிப்பாடாக அமெரிக்க அறிவியல் நிறுவனம் ஒன்றை தேர்ந்தெடுக்கிறார்கள். அதன் மூலம் தங்கள் பழமைக்கு ஒரு சான்றாதாரம் தேடுகிறார்கள்.
2004-ல் 2004FH என்ற பெயருள்ள 100 அடி அகலப் பாறை பூமியை மயிரிழையில் தப்பிச் சென்றது. 1992-ல் கைப்பர் வளையம் என்று புளூட்டோ வீட்டுக்கு அருகே மாபெரும் கற்களின் மாநாடு ஒன்று நடப்பதைக் கண்டுபிடித்தார்கள். இவற்றில் ஆயிரத்துக்கு மேற்பட்டவை, இங்கிருந்தே பார்க்கக்கூடிய அளவுக்குப் பெரியவை. இவற்றில் எது ஒன்று வந்து விழுந்தாலும் பூமிக்கு அத்துடன் ஜன கண மனதான்.
சமீபத்தில் மறைந்த நடுவர் டேவிட் ஷெபர்ட் குறித்த கட்டுரை இது: டேவிட் ஷெபர்ட் தன் சிறுவயதில் கிராமத்தில் நண்பர்களோடு கிரிக்கெட் விளையாடிக் கொண்டிருந்த காலத்திலிருந்தே அவருக்கும் இந்த ‘நம்பிக்கை’ ஏற்பட்டிருக்கிறது. நெல்சன் நம்பரால் ஏற்பட்ட துரதிர்ஷ்டம் நீங்க வேண்டுமென்றால் செய்ய வேண்டிய பரிகாரம், பேட்டிங் அணியின் வீரர்கள் அனைவரும் ஒற்றைக் காலைத் தூக்கிக் கொண்டு நிற்பது.