ஒன்றும் சொல்வதற்கில்லை ஊரில் நிலவரம்.
நிலவும்
சங்கடமான அமைதியைக் குலைக்க ஓர் அலறல் போதும்.
பிணம் தூக்கிப் போன பின்
Category: கவிதை
நிழல்களிடையில் மணக்கும் தாழை மடல்
கவிஞர் ஞானக் கூத்தன் சென்ற வாரம் காலமானார். . . 50 ஆண்டு காலத்துக்கும் மேல் தமிழில் கவிதைகளும், இலக்கிய விமர்சனமும் எழுதி வந்த ஞானக் கூத்தன் தமிழ் இலக்கியத்தை உறுதியான நவீனப் பாதைக்கு அழைத்து வந்த சில இலக்கிய கர்த்தாக்களில் முக்கியமானவர். . . 60களில் பெரும் பாய்ச்சலை நிகழ்த்திய தமிழ்க் கவிதை … சமகாலத்தை சமகால மதிப்பீடுகளுடன் பார்க்கத் துவங்கிய நிலை, புத்தித் தெளிவு ஏற்படக் காரணமானவர்களில் ஞானக் கூத்தன் ஓர் அசாதாரணமான சக்தி. . . அவரது கவிதைகளையே பலரும் சிலாகித்துக் கட்டுரைகள் எழுதி வருகிறார்கள். ஒரு விமர்சகராக ஞானக் கூத்தன் அறியப்படவில்லை என்று தோன்றுகிறது. குறிப்பிட்ட சிலரின் வட்டத்தைத் தாண்டி அவர் இந்த வகையில் அறியப்படாததற்குக் காரணங்கள் என்னவென்று புலப்படவில்லை. பெரும்பாலும் சிறு பத்திரிகைகளில் எழுதியது ஒரு காரணமாகாது. ஏனெனில், அவருடைய கவிதைகளே பெருமளவும் சில நூறு பேருக்கு மேல் படித்திராத சிறு பத்திரிகைகளில் வந்தவைதான். ஆனால், அவற்றின் தாக்கம் அன்றாடச் செய்தித்தாளில் இவர் மறைவுக்கு ஒரு தலையங்கம் எழுதுமளவு விரிந்திருக்கிறது என்று தெரிகிறபோது நமக்கு வியப்புதான் எழ வேண்டும். ஆனால், எல்லா செய்தித்தாள்களிலும் தலையங்கங்கள் வரவில்லை என்பதையும் கவனிக்கலாம்.
இரு கவிதைகள்
துளி நீரைத் தண்முகிலாக்கித்
தருக்களால் தாங்கி மழையாக்கும் !
மூளி யிலாமுது நிலத்தைப்
பசுமை கூட்டி இளமையாக்கும் !
கவிதைகள் இரண்டு
ஆறடிக் குழிக்குள் அடங்கப் போகிறாய் என்று அச்சமூட்டியவர்கள்
ஆன்மாவின் நெடும் பயணம் பற்றிய அறிவற்றவர்கள்
எல்லையற்று விரிந்தோடும் வாழ்தலின் வெளி
மேலே நட்சத்திரங்களால் அலங்கரிக்கப்பட்ட வானம்
பயணம் இப்போது தான் ஆரம்பித்திருக்கிறது.
லாங்ஸ்டன் ஹ்யூஸ்- மூன்று கவிதைகள்
எல்லோரும் சொல்வதைக் கேட்டுப் புளித்துப் போனது,
நாளை மற்றுமொரு நாளே
நான் இறக்கும் போது எனக்குச் சுதந்திரம் தேவையில்லை
நாளைய ரொட்டியை நினைத்து என்னால் வாழமுடியாது.
சுதந்திரம்
என்பது ஆழமான விதை
இர.மணிமேகலை, கு.அழகர்சாமி கவிதைகள்
‘கட்டத்துக்குள் அடி’ என்பார்
டீச்சர்.
குழந்தை
மறுபடியும் கலரடிக்கும் கட்டத்துக்கு வெளியே
மீன் நகர்ந்திருக்கும் நீந்தியென்று.
ஞான. வித்யா, ப. ஆனந்த் கவிதைகள்
நிழல் நகர்ந்து
எல்லைகள் மாறுவது அறியாமல்..
இருள் மெல்லக் கவிய
அவரவர் பார்வையில் நிழல் மறைந்த நேரம்
ஆட்டம் அர்த்தமற்றதென புரிந்தது…
கவிதைகள்
தேய்ந்து கிடக்கிறது பூமி
காலடித்தடங்களால்.
கால்கள் ஊர்ந்து
துகள்களாய்
பெரும் பாறைகள்.
இலக்கில்லாப் பயணங்கள்
அசோதை நங்காய்! உன் மகனைக் கூவாய்!
யசோதையின் கூற்றாகத் திருவெள்ளறையில் உறையும் பிரானைப்பாடுகிறார் பெரியாழ்வார். ‘சந்திரன் மாளிகைசேரும் சதுரர்கள் வெள்ளறை,’ என்றும், ‘மதிள்திரு வெள்ளறை’ என்றும், ‘முப்போதும் வானவர் ஏத்தும் முனிவர்கள் வெள்ளறை,’ என்றும் அவ்வூரைப் புகழ்கிறார். …“காடுகளிலிருந்து நாவல்பழங்களைக் கொண்டுவந்து விற்ற ஒருபெண்ணிடம் அவ்வளைகளைக் கொடுத்து அவற்றிற்குப் பதிலாக நாவல்பழங்களை வாங்கித்தின்கிறான். நான் அந்தப்பெண் கையில் என் மகளின் வளைகளைப் பார்த்து, ஏனடா கிருஷ்ணா என் மகளின் வளையைக்கொடுத்தாய் எனக்கேட்டால்…
கன்று மேய்க்க ஒரு கோல் கொண்டுவா!
மலர்களில் மிக உயர்ந்தவை என மனிதர்கள் கொண்டாடும் சிலவகை மலர்களைக் குழந்தைக்குச் சூட்டி அழகுபார்க்க எண்ணுகிறாள் அன்னை. அவன் தன்னுடைய அழைப்புக்கும் ஆசைகாட்டுவதற்கும் மயங்கிவருவான் என எதிர்பார்ப்பது எதனால்? குழந்தை வளரும்பொழுதில், “இப்பொருள் உயர்ந்தது; இது அழகுமிக்கது; இது உனக்கு நல்லது,” என்பதெல்லாம் தாய் கூறித்தான் குழந்தை அறிந்துகொள்கின்றது. இல்லாவிடில், தெருவோரச் செடியில் பூத்துக்குலுங்கும் வண்ணமயமான அந்திமந்தாரையும், அரிதாகக் கிட்டும் செண்பகமலரும் அவனுக்கு ஒன்றுதான். தாய் கூறித்தான் இம்மலர்கள் உயர்ந்தவை, மணமிக்கவை, மிக அரியவை, விலைமதிப்பற்றவை என அறிந்துகொள்கிறான். அவளும் இவற்றையெல்லாம் கூறி அவனை ஆசையாக அழைத்துத் தன் உள்ளப்படி அவன் நடந்துகொள்ளுமாறு செய்கிறாள்!
‘மேகங்கள் போலக் கருத்தநிறம் கொண்டு, அவற்றின் குளிர்ந்த தன்மையையும் உடையவன் நீயல்லவோ குழந்தாய்! ஏழுலகும் உய்ய எங்கள் ஆய்ப்பாடியில் வந்து பிறந்தாய். உனக்கு மணம்மிக்க மல்லிகைப்பூவைச் சூட்டுவேன், வருவாயாக,” என அன்போடு விளிக்கிறாள்.
பூவரச மரங்கள் இல்லாத நகரம், பயணம்
உயிருள்ள இந்த நிமிடம்
எத்தனை அழகானது ?
இந்த நிமிடத்தில்
முளை வேரிட்ட வித்தொன்று
இரு வித்திலைகளுடன் முளைக்கலாம்
கவிதைகள்
என்னவென்றே தெரியாமல் நெஞ்சு கனக்கும்
இதுபோன்ற நாட்களில் தான்
உன்னை நினைத்துக் கொள்கிறேன்
இரவு என் மதுக்கோப்பையை கவிழ்த்துவைக்கிறது
இரு கவிதைகள்
தரைத் தூசியைப்
பெருக்குகிறது
ஓடும் மின்விசிறி,
அதன் இறகுகளில்
படிந்திருக்கும்
அழுக்கைச் சுமந்தபடி
ஹாங்காங் தமிழ் வகுப்பு- வானொலி நிகழ்ச்சி
கண்ணதாசன் புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும் கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், மேலும் நாவல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். தமிழக அரசின் அரசவைக் கவிஞராக இருந்தவர். அரசியல்வாதி, திரையிசைக் கவிஞர், வசனகர்த்தா, எழுத்தாளர், நடிகர், படத் தயாரிப்பாளர் , பத்திரிகையாசிரியர் என்று பல் முகங்களுடன் விளங்கினார். அர்த்தமுள்ள இந்து மதம், இயேசு காவியம் ஆகியவை கண்ணதாசன் எழுதிய முக்கியமான புத்தகங்கள். அவரது பாடல்கள் தமிழகத்தின் பட்டி தொட்டியெங்கும் ஒலித்தவண்ணமிருக்கின்றன. அவற்றுள் ஒன்று …
தரிசனம்
சுற்றித் தடுத்து என்னைத் தன்
ஆளாக்கி
என்னுள் படர்ந்து என்னுயிரை
இயக்கிவந்த மாயத் தெய்வத்
திரைப்படலம்
மராத்தி மொழிக் கவிதைகள்
எப்.எம். ஷின்டே ஓரங்க நாடகம் மொழி பெயர்ப்பு, ,நகைச்சுவைக் கட்டுரைகள்,கவிதைகள் என்ற பன்முகம் கொண்ட படைப்பாளி. மகாராஷ்டிர மாநில விருதை மூன்று முறை பெற்றவர். இது தவிர பரிமள விருது,அஸ்மிதாத தர்ஷ விருது, விகெ பாட்டீல் விருது ஆகிய விருதுகளைப் பெற்றவர். இதுவரை 24 கவிதைத் தொகுப்புகள் வெளி வந்துள்ளன. கணேஷ் விஸ்புத் மகாராட்டிர மாநில அரசுத் துறையில் சிவில் இன்ஜினியராகப் பணி புரிந்தவர். கவிஞர் ,மொழி பெயர்ப்பாளர், ஓவியர்.திரைப்படத் துறையிலும் ஈடுபாடு உடையவர்.
க. நா. சு. கவிதைகள்
நான் எழுதுவதில் நல்ல காபி சாப்பிடுவதில்போல, அழகிய யுவதி ஒருத்தியைப் பார்ப்பதில்போல, நல்ல நூல் ஒன்றை படிப்பதில்போல – ஒரு ஆனந்தம் இருக்கிறது. அந்த ஆனந்தம் வாழ்வை நிறைவுறச்செய்ய எனக்கு அவசியமாக இருக்கிறது. எழுதுகிறேன், தினமும், இடைவிடாமல் எழுதுகிறேன் நான் – கவிதை, கதை, நாவல், விமரிசனம், சிந்தனைகள் எல்லாம் எழுதுகிறேன். இப்படி எழுதுவதிலே ஒரு விஷேஷம் என்னவென்றால் தமிழில் எழுதுவதில் – மற்ற மொழிகளில் எழுதுவதை விட – அதிக ஆனந்தம் கிடைப்பதாகத் தோன்றுகிறது. எழுதுகிறேன் – தினம் எழுதுகிறேன். ஆங்கிலத்தில் எழுதுவதிலும் அவ்வளவில்லா விட்டாலும் – சற்றுக் குறைவான ஆனந்தம் இருக்கிறது என்று கண்டு ஆங்கிலத்திலும் வேறு சில மொழிகளிலும் கவிதைகள், கதைகள், நாவல்கள், விமரிசனங்கள் எழுதுகிறேன். ஆயினும் எனக்காகவேதான் எழுதிக்கொள்கிறேன். ஆனால் நான் எழுதுவதை நீங்கள் பார்ப்பதில் எனக்கு ஆட்சேபமோ, சந்தோஷக் குறைச்சலோ இல்லை. அதனால்தான் G.M.L. பிரகாஷ் இந்த நூலை வெளியிடுகிறேன் என்று சொன்னபோது, முதலில் தயங்கினாலும் பின்னர் சம்மதித்தேன்.
கடைசி மழைக் கவிதை
கவிழ்ந்த பாத்திரமென
கவிதைகளெல்லாம் பொழிந்து தள்ளிவிட்டன.
முதல் கவிதையின் முதல் துளி
இன்னும் சுவடின்றி அலைக்கழிகிறது.
தேவதச்சனின் கலைக்கூடம்
ஏற்கனவே புழக்கத்திலிருந்த கவியுருவின் போதாமையை நிரப்பும் தேவையின் பொருட்டு தோன்றி, வளர்ந்ததே நவீனக்கவிதை. ஆகவேதான் நாடகீயமான தருணங்களின் களஞ்சியமாக விளங்கும் மையக்கருவோ, நீண்டு விரிந்து துயரமான முடிவை நோக்கிச்செல்லும் கதையோ நவீனக்கவிதைக்கு கருப்பொருளாவதில்லை. இன்னும் குறிப்பாக சொல்ல வேண்டுமானால் பரவலாக அறியப்பட்ட, விக்டோரியன்/ ஷேக்ஸ்பியரியன் அழகியலை மீறிச்செல்லும் நோக்கத்தின் தோன்றிய பாணியின் வீச்சே நவீனக்கவிதைகளின் அழகியலை தீர்மானிக்கும் விசை.
நான்கு கவிதைகள்
பறவை மூழ்க
பரந்த வானம் மூழ்கும்.
வானம் மூழ்க
மூழ்காமல் முழுநிலா மட்டும் தத்தளிக்கும் ஒளிப் பந்தாய்
இருள் சூழ் உலகைக் காப்பாற்ற.
அறிதல் – நெடுங்கவிதை
ஒரு கிளையில் நான்கு முட்டைகள் பொரியும் காக்கையின் கூடு
கூட்டுக்கான சுள்ளிகள் எதுவும்
கட்டப்பட்ட மரத்திலிருந்து உடைக்கப்பட்டது இல்லை
ஒரு கிளைக்கும் மற்றொரு கிளைக்குமான இடைவெளியையும்
கிளையின் தூரத்தையும், கிளையின் திசையையும்
கிளைகள் உயர்ந்து, தாழ்ந்து, வளைந்து செல்வதையும்
தீர்மானிப்பவை வேர்கள் என்றால்,
வேருக்கு அந்த வித்து எங்கிருந்து வந்ததோ
பாழடைந்த சுவரில் மோதி வளராமல்
பாதியிலேயே முடமாக நிற்கும் அந்தக் கிளையின் மீதம்
கவிதைகள்: த.அரவிந்தன், சார்லஸ் புகோவ்ஸ்கி
ஓங்கிய ஓர் தீச்சுடர்
பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுகையில்
ஓர் சுடர், ஓர் நற்சுடர்
வெயிலில்
பூங்காவில் முதியவர்கள் சதுரங்கம் ஆடுகையில்.
மாணிக்குறளனே தாலேலோ!
கிருஷ்ணனைக் குழந்தையாக்கி அவனுடைய பால லீலைகளில் ஆழ்ந்து விடுவது பக்தி செலுத்துவதில் ஒரு அழகான வகை. பக்தி செய்ய வேண்டும் என்பதற்காக யாரும் இறைவனைக் குழந்தையாக எண்ணிக் கொஞ்சுவதில்லை. குழந்தையாகக் கொஞ்சும் போது இறைவன்- அடியார் என்ற நிலையைக் கடந்து, இவன், இந்தக் குழந்தை என்னுடையவன், என அவனிடம், இறைவனிடம் (அவனை இறைவன் என்று உணர்ந்தும் உணராத நிலையில்) எல்லையற்ற அன்பும் பாசமும் பிணைப்பும் ஏற்படுகிறதே, இது பக்திக்கும் மேல் ஒருபடி உயர்ந்த உறவல்லவா?
இந்த மழை என்ன செய்யும் ?
உன் நினைவன்றி ஏதுமில்லா
கணங்களாய் நிறையும்
வடிவழகு- மதுராதிபதேர் அகிலம் மதுரம்!
ஒரு குழந்தையைப் பார்க்கும் போது ‘இவனுடைய கண் இவன் தந்தையுடையதைப் போலுள்ளது,’ எனவோ, ‘இவனுடைய சுருட்டைத் தலைமயிர் தாயினுடையதைப் போலுள்ளதே,’ என்றோ வியந்து மகிழ்கின்றோம். அது போன்றே, சிறு மகவிற்கு, அது ஆணோ பெண்ணோ, விதம்விதமாக ஆடை அணிமணிகள் புனைவித்து, அலங்காரம் செய்து அழகு படுத்திக் கண்டு களி கொள்கிறோம். அப்படிப்பட்ட குழந்தை, ஆண்டவனாகவே, ஸ்ரீ கிருஷ்ணனாகவே இருந்து விட்டால் என்ன செய்வோம்?
இரவின் போதை
இப்பொழுது
வெற்றிடத்தை
அழுத்தத் தொடங்கியது
இரண்டு யானைகளின்
பாரம்
கவிதை எனும் வேதாளம்
மெல்ல மெல்ல உறக்கத்தில் நழுவும்
நள்ளிரவில் கவனித்தால்
யாரோ யாரையோ முத்தமிடும் காட்சி
மனதின் எல்லாப் பக்கங்களிலும்
வரைந்து வைக்கப்பட்டிருக்கிறது
கிருஷ்ணன் எனும் சிறு குட்டன்!-2
நங்காய்! இந்த என் குழந்தையைத் தொட்டிலில் இட்டால் அத்தொட்டில் கிழிந்து போய்விடுமோ என்னும் படியாக உதைக்கிறான்; சிறிது நாழி எடுத்து இடுப்பில் வைத்துக் கொண்டால், நழுவி இறங்கி, என் இடுப்பை முறித்து விடுகிறான்; சிறிது நேரம் ஒன்றும் செய்யாமலிருப்பானாக என்று இறுக மார்புடன் சேர்த்து அணைத்துக் கொண்டால் குட்டிக் கால்களால் வயிற்றில் உதைக்கிறான். இப்படி இவன் தனது பருவத்துக்கு ஒவ்வாத செயல்களைச் செய்வதனால் நான் மிகவும் மெலிந்து களைத்துப் போய் விட்டேன்…
கார்ஸன் கழிமுகம்
காலையில் மீண்டும் நடந்தேன் குன்றுகளின் மீது
கடலை நோக்கி,
பின்னர் நேராகத் திரும்பி
அலை அலம்பும் கரைவழிச் சென்று
நிர்மூலமான தலைவரையைச் சுற்றித்
திரும்பி வந்தேன்
கழிமுகத்தின் கரை வழியே
பவளமல்லியின் வாதை & மௌன முள்
மௌனம் ஒரு ஆட்கொல்லியல்ல யெனினும்
மௌனம் ஒரு கூரிய முள் போல
ஒரு செடி எதற்காக முள் தாங்கி நிற்கிறதோ
அதற்காகவே மௌனித்திருக்கிறான்
மெலிதான மர்மம் & மழை – சில குறிப்புகள்
இந்த அடை மழையிலும் துயிலும் அவன் கனவில்
மழை பெய்கிறதா?
எந்த மழை நிஜம் அவனுக்கு?
கதவு, நிறுத்தம்
யாருமற்ற பாதையில்
நெடு நிழல் துணை செல்ல
தலையில் கோணிப்பையுடன்
தளர்வாக நடந்த பெரியவர் முகத்தில்
ஆதித் தகப்பனின் சாயல்.
ஏழைகள் – வில்லியம் கார்லோஸ் வில்லியம்ஸ்
மர உலோக வேலிகள்:
கம்பளிச் சட்டையும் மிருதுவான தொப்பியும்
அணிந்திருக்கும் கிழவனொருவன்
அந்த டைனோசர், அப்போதொரு காகம்
அதைப்
பழக்கிவிடுதலில் இருக்கும் சிரமங்களை
அரும்பச் செய்த அயற்சி
தீருவதற்குள்
கொஞ்சம் பழகியிருந்தது
வழுக்குப் பாறையின் வளமான கவிதைகள்
நாஞ்சில் சொற்கள்மீது தீராக் காமம் கொண்டவர். ஒரு புதுச் சொல்லைக் கண்டால் மிகவும் மகிழ்ந்து அதைத் தம் படைப்பில் பயன்படுத்தி வெளிக்கொணர்பவர். அதே நேரத்தில் நிறைய சொற்கள் பயன்பாடு இல்லாமல் போய்விட்டனவே என்று வருத்தமும் கொள்பவர். அந்தச் சொற்களெல்லாம் வீணாய்க் கிடக்கிறதே என்று வருந்தித்தான் இப்படி எழுதுகிறார்.
கவிதைகள்
மின்சாரம் இல்லை
நொடிக்கு நொடி
புழுக்கம் அதிகமாகிறது
உடலெங்கும்
வியர்வையின் ஈரம்
கொசு என்னை உணவாகக்
கொள்கிறது
சீன மொழிக் கவிதை உலகம் : ஓர் அறிமுகம்
லி பை சீன மொழி இலக்கிய உலகில் சிறந்த கவிஞராக மதிப்பிடப் படுபவர்.ஆயிரக் கணக்கான கவிதைகளை எழுதியவர்.கவிதைகளின் மிக உயர்ந்த கறபனைத் திறத்திற்காக எல்லோராலும் அறியப் பட்டவர். நட்பு,இயற்கையின் செறிவு,தனிமையின் தன்மை என்று பல கருக்களை கவிதைப் பொருளாக்கிக் கொண்டவர். டாங் வம்ச கால கட்டம் சீன இலக்கியத்தின் ’ பொற்காலம் ’என்று மதிப்பிடப் படுகிறது. லி பை அக்கால கட்டத்தைச் சேர்ந்தவர். என்பது குறிப்பிடத் தக்கது
கவிதை
பூட்டிய கதவுக்குப் பின்னால்
காத்திருக்கிறது
பிசுபிசுக்கும்
தனிமை திரவம்
கவிதைகள்
முகம்
நூல்தான்
திறந்தே
இருக்கும்
ஆனால்
திறந்த நூல்
அல்ல
கவிதைகள்
மண்ணின் மடியில்
அடைக்கலமான மழை நீர்
விரவியதெங்கே
வேர்கள் அறியும்
கவிதைகள்
சிகரெட் அட்டைகள் தான் என் அம்மாவின் கிரடிட் கார்டு
சைக்கிள் தான்
என் அப்பாவின் ஜெட் வாகனம்
கவிதைகள்
நெடுநாட்களுக்கு முன்பு
எங்கள் எல்லோருக்காகவும்
கட்டப்பட்டது
ஒரு வீடு
அதிலிருந்து…
டொமஸ் ட்ரான்ஸ்ட்ரமர் – அஞ்சலிக்குறிப்பு
தூய்மையான ஸ்வீடிஷ் மொழியில் எந்தவித தேவையில்லாத ஒப்பனையும் இல்லாமல் அவர் எழுதினார். இயற்கையைப் பற்றிய அவருடைய விவரிப்புகள் ஜப்பானிய ஓவியம் போல் உயிர் ஊட்டத்தோடும் அதே சமயம் மட்டுப்படுத்திய மொழியும் வைத்திருந்தது. 1954ல் அவருடைய பதினேழு கவிதைகள் வெளியான தருணத்தில் இருந்தே அவருக்கு பல பரிசுகளும் பரவலான பாராட்டுகளும் வந்து சேர ஆரம்பித்தன.
கவிதைகள்
நிறைய புதிய முகங்கள் பார்க்கிறேன்
நிறைய புதிய குரல்கள் கேட்கிறேன்
நான் வசிக்கும் அதே தெருவின் கடைக்கோடிவீட்டின்
ஹார்மோனிய இசைவகுப்புகளின் ஸ்வரவரிசைகள்
மொழிபெயர்ப்புக் கவிதைகள்
ஒருபக்கமாய் தலையை சாய்த்து
எதிர்பார்ப்பதுபோல்
சற்றே புருவத்தை உயர்த்தி
கேளுங்கள், உங்கள் கேள்வியை.
கவிதைகள்
வாய்ப்பின் சுடர் தேடி
ராவோடு ராவாக ஊரைவிட்டு என்னிடம் வந்தார்
வண்ண வெளிச்சமும் நவயுகப் பூச்சும்
கண்களைக் கூச மயங்கி நின்றார்
காலப் பெருவெளி – கவிதை நூல் விமர்சனம்
வார்த்தைகளை உடைத்து வரிகளை நீட்டித்தல், கவிதை அதன் நிலையை எட்டிய பின்பும் விரித்தல் என கவிதையின் செழுமையை வறட்சியாக்கக் கூடிய விசயங்களால் கட்டமைக்கப்படிருக்கும் சில கவிதைகளுக்கிடையே இத்தொகுப்பில் கவனிக்கத்தக்க கவிதைகளாக மகேஷ்குமாரின் ”வலையில் விழாதவை”, ”ஒற்றை மரம்”, முளைப்பாரி, ராஜீரமேஷின் ”நான்”, மதிக்குமாரின் ”செய்தியாகாதவர்களின் கதை” பாலாவின் “நத்தையின் தலை மீதொரு சிறுவன்“ ஆகியவைகளை அடையாளப்படுத்தலாம்.
கவிதைகள்
என் வீட்டு முற்றத்தில்
காத்து நிற்கிறது
ஒரு டைனோஸர்
கவிதைகள்
சுற்றி வரும்
ஈக்கு விசிறியபடி
எருமை இறங்கியது
நீருக்குள்..
கவிதைகள்
உச்சரிப்பதைப் போல இலகுவாய் இல்லை
வாழ்க்கையில் கைக்கொள்வதும்
நித்தம் கடைப்பிடிப்பதும்.
