இந்த மழை என்ன செய்யும் ?
உன் நினைவன்றி ஏதுமில்லா
கணங்களாய் நிறையும்,
சொல்லாய் உன் பெயராய்
சாரலாய் பொழியும் ,
குளிராய் சூழ்ந்து
உள் நின்று தகிக்கும் ,
வெறுமையுற்ற எழுதுகோலில்
கவிதை மை நிரப்பும் ,
இந்த மழை ஏதும் செய்யும்.
Discover more from சொல்வனம் | இதழ் 365 | 26 ஏப். 2026
Subscribe to get the latest posts sent to your email.
