ஒவ்வொரு
அதிகாலையிலும்
அதிசுத்தமாய்
கழுவி முடிக்கும்
என் கப்பரைக்கு
ஒவ்வொரு
அதிகாலையிலும்
எங்கோ ஓர் உலை
கொதிக்கிறது
Category: கவிதைகள்
ஆனந்த் குமார் கவிதைகள்
ஒழுங்குபடுத்தினேன்
ஒவ்வொரு பொருளையும்
அதனதன் இடத்தில்.
சிறு இடைவெளி போதும்
ஒவ்வொன்றும்
அதனதன் தனிமையில்.
சரியான இடத்தில் அமர்ந்தவுடன்
ஒவ்வொரு பொருளும்
அமைதி கொள்கிறது.
நவநீதா தேவ் சென்: ஐந்து கவிதைகள்
என் வனவாசம் முடிந்துவிட்டது, தாயே
வனம்
இப்போது
எனக்குள் வாழ்கிறது.
மார்கழி
உன் திங்களில் தான்
சூரியனும் கூட
மோகத்தினால் எழுகிறான்
தாமதமாக!
கடலும் காடும்
அலைகளிடமிருந்து
அதுகாறும் காத்துநின்ற
தன் மணல் கோபுரத்தை
பச்சை வண்ண வாளியில்
பெயர்த்தெடுத்து வந்து
தங்கமீன்கள் வளரும்
தொட்டியில் பரப்பி
என் கடல் என்றான்
புத்தர் சிறு ஒலியாகவும் இருந்திருப்பார்
சிறு கீறலின் நிம்மதியின்மையில்
ஒரு அர்த்தம் துவங்கும் போது
புத்தராதல் மிக எளிது,
ஆனால்
தான்தான் புத்தரென்பதை உணர்ந்து கொள்ளுதல்
மிகக் கடினம்.
முற்றுப் பெறா புதினம்
மெளனித்துக் கிடந்த
கரையின் மேல்
வந்து மோதுகின்றன
உரைகல்; கடந்த வழி -கவிதைகள்
பற்றிலேதும் வரவின்றி
உதித்து விரைந்து
உதிரும் நாட்களுக்குள்
கணக்கேதுமின்றி
எதையும் பதியாமல்
தடமெதுவும் இல்லாமல்
மகிழ்வேதும் தாராமல்
துயரதுவும் கொள்ளாமல்
மறைந்து போவது
குறைவென்பதா அன்றி அதுவே
நிறைவென்பதா
கசப்பு; யாரு சாமி நீ- கவிதைகள்
கீழே சிந்திய தேனை
பருக வந்திருக்கும்
எறும்புகளை
பாவம் என்றெண்ணுவதற்குள்
மெல்ல எட்டிப் பார்க்கிறது
பொறாமை.
கவிதைகள் – வ. அதியமான்
யசோதா
தேகமெங்கும்
குரல் முளைத்து
கூவி நிற்கிறாய்
கொள்ளும் செவிகள்
திரும்ப வருமென
இடுப்பில் கையூன்றி
உறுதியாய்
காத்திருக்கிறாய்…
கவிதைகள் – புஷ்பால ஜெயக்குமார்
எதுவும் அப்படியே இருப்பதில்லை
காலை மாலை இரவென
விரட்டிய போது
அதில் நான்
சிக்கிக்கொண்டிருப்பதைப் பார்த்தேன்
இப்படியாயின்
ஒரு வயோதிகனின்
அந்தரங்கத்தின் ஆசை
மேலே மிதந்து வந்தது
சிசு, அப்போது, நெடும் பயணி
அதனால் என்ன?
வளையாத வானத்தில்
ஒரு வளைந்த வானவில்லும்
வளைந்த வில்லில்
ஒரு வளையாத அம்பும்
அத்தனை ஆச்சரியம்
ஒன்றுமில்லை காண்!
கூடு, அதிகாலை & (அ)சாத்தியம்
தானே ’புன்னகையாய்’
’புன்னகை’ அதற்கு அதுவே புன்னகைப்பதில்லையாய்ப்
புதிராய்ப் புன்னகைக்கிறார்
இது
போதும்—
ஆசையில் வறண்ட என்
அகங் குளிர
நிறைவாய்ப்
புன்னகைக்கிறார்
இடம், தபால்காரன் & மனதின் பாதை
ஒரு நினைவில் தப்பிய மனிதனாகிய நான்
வீணாய் எனது உடலின் சுமையைச் சுமப்பவன்
வழுவாத சலிக்கும் பாதையில் நடப்பவன்
பேசி தீர்த்துக் கொள்வதற்கு
மொழி இல்லாதவன்
நான் எல்லோரையும்
சமாதானம் செய்து கொள்கிறேன்
ஒளி மனிதன் & காசநோய்க்கு ஒரு பாடல்
(நித்ய சைதன்ய யதியின் “நோயை எதிர்கொள்ளல்” கட்டுரைக்கு)
என் வேர்கள் பலவீனமானவை
சந்தோஷத்தை சரியாக உறிஞ்சக்கூட தெரியாதவை
அறுபது சதவீதம் மாலைநேர உளைச்சல்களாலும்
நாற்பது சதவீதம் கூரையை முட்டும் இருமல் ஒலிகளாலும் ஆன
ஒரு பேருந்து நிறுத்தத்திற்கு
மறுபடியும் வந்து நிற்கிறது இந்த உடல்
கற்பனாவாத யுகத்தின் செல்லக் குழந்தையே இவை உன் கைங்கர்யம்தானா
ராஜா நடேசன் கவிதைகள்
மண்ணில் இருந்து வந்தது
மண்ணுக்கே செல்கிறது
அன்னமிட்ட மண்
எடுத்துக்கொள்கிறது கொடுத்ததனைத்தையும்
உயிர்ப்பிக்க வரும் தேவன்
எடுத்துச்செல்ல ஒன்றும் இல்லை
இறைஞ்சி நிற்கும் கடவுளிடம்
கையளிக்கிறது மண்
வ.அதியமான் கவிதைகள்
எழுந்து நின்றிருந்த
வானவில்லும்
எரிந்து ஒளிர்ந்திருந்த
மின்மினியும்
வண்ணம் நுரைத்திருந்த
புஞ்சிறகும்
வானுக்கெழுந்திருந்த
இன்பா – கவிதைகள்
ஆற்று நீரில் குளித்துவிட்டு
கரையேறிய நீர்நாய்
அருகிலிருந்த மஞ்சள் ஆரஞ்சு செடியில்
மோதிவிட்டுச் செல்கிறது
தூங்கிவிட்ட குழந்தையின்
கைநழுவி விழும் பொம்மையைப் போல்
குட்டி ஆரஞ்சு காம்பிலிருந்து நழுவி விழுகிறது
நிறையிசை!
காப்புகளிட்டச் சங்கிலி உரச நகரும் நான்
மூலையிலிருக்கும் பியானோவை வாசித்திருக்க
என்னை ஓடிவந்து அணைத்துக் கொண்டாள்
ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்
1. அன்றாடப் பணி காரண காரியம் உருப்பெருவதன் வழி ஒரு சாய்சதுரம் அசைவது போல் நிகழ்கிறது, என் அன்றாடப் பணி அற்புதமான ஒரு சூரிய அஸ்மதனதிற்கு எதிரே துப்பறிவாளனைப் போன்ற துணிகரமான பார்வை. இனி நிகழப்போகும், என்னால் காணமுடியாத ஓர் இனிய நாளின்மீது உடனடியாக எழுதப்படும் வேகமாக “ரொபெர்த்தோ பொலான்யோவின் ஆறு கவிதைகள்”
கொரொனா காலத்தில் ஹைக்கூ
பழகிய மரம்
வீட்டுக்குள் நான், வெளியே
பறவை – இன்றும்
வ. அதியமான் – கவிதைகள்
சின்னஞ் சிறு பட்டுக்குருவியின்
உருளும் மணிவிழிகளில்
ஒளிர்பவன்
எனக்காக காத்திருக்கிறான்
புஷ்பால ஜெயக்குமார் – கவிதைகள்
நுரைத்து வரும் குமிழிகள் நொடியில் மறையும்
எனது சுதந்திரம் அர்த்தமற்றது என்னைப் போலவே
மிகைகொள்ளாது நிலைபெற்ற வழியில் வெடித்தபோது
வெளியே நடமாடுகிறேன் நான்
இரா. கவியரசு – இரு கவிதைகள்
ரேகைகள் கலக்கும் போது
தொலைகின்றன நதிகள்
விட்டுவிடக் கூடாது என்பதற்காக
இன்னும் இறுக்கமாக
பற்றிக் கொள்கிறோம்
கவிதைகள் – கா. சிவா
பல தடைகளைத் தாண்டி
இறையுருவைத் தரிசிக்கையில்,
மெய்யன்பை எப்போதாவது
எதிர்கொள்கையில்,
இயையிசையின் ஒரு சுரம்
உயிராழம் தீண்டுகையில்…
கவிதைகள்- வ. அதியமான்
என் பெருவிரலுக்கும்
ஆள்காட்டி விரலுக்குமான
இதே விரலிடுக்கில்
எத்தனை முறை
எத்தனை உலகங்கள்
நழுவிப்போயிருக்கிறது
என்பதை
மறந்து போனபடி…
வைரம் பாய்ந்த மரம்
விறகாக எரியும் போது முனகும் ஒலி
காட்டில் உள்ள
எல்லா மரங்களையும் குழப்புகிறது
விதை
கவிதைகள்
கணினியில் ஏதோ தட்டிக்கொண்டிருப்பான்
வாய்க்கு வராத பெயரிலிருப்பவற்றை
வாய்க்குள் திணித்து
நவநாகரிகத் தொட்டிலுக்குள்
சவப்பெட்டியாகக் கிடப்பான்
இரா.கவியரசு-கவிதைகள்
நள்ளிரவில்
மலர்களாக விழித்திருக்கும் மரம்
சிணுங்கினால் கூட போதும்
முழுமையாகத் தொலைந்து விடலாம்
சிறிது தலைகாட்டி வரலாம் வா !
காலத்தின் கடைசிச் சொட்டு & அப்பாவின் முகம்
ஆயிரம் நிறங்களில் மிதந்தன
ஓசைகள் சருகுகளின் மீது
பெய்யும் மழை போல
மிக நுண்ணியதாய்
கவிதைகள்- கு.அழகர்சாமி
ஒன்று பலவாய், பல ஒன்றாய், உருவருவாய்
ஒன்றில்லா ஒன்றாய், ஓயா இயக்கமாய்
ஆணிப்பொன் அம்பலத்தாடு ஆனந்தக்கூத்தா!
மொழிபெயர்ப்பு கவிதை – குண்டர் க்ராஸ்
சிறு பிராயத்தில்
திரும்பிய பக்கங்களிலெல்லாம்
‘கடவுள் எல்லாவற்றையும் பார்த்துக்கொண்டிருக்கிறார்’
என்ற அறிவிப்பில் உறைந்துபோனேன்
மினியாப்பொலிஸில் திருப்பள்ளியெழுச்சி
முற்றத்து மணியசைத்து
விளையாட
அழைத்து நிற்கும் காற்று
பொறுமையிழந்து
அனுமதியில்லாமல்
அறைக்குள் நுழைகிறது.
கவிதைகள் – பானுமதி ந. , அனுக்ரஹா ச.
யாரும் உடன் இருக்கையில்
அது பேசுகிறது தன் மொழியில்
யாருமற்ற போது அதன்
இரைச்சல் பேரலைகள் போல்
அதன் கூக்குரல் விழுங்கும்
உலகனைத்தையும்;பின்னரும்
பசிக்கும் அதற்கு. நீ வந்து
அருகில் அமர அது அடங்கிவிடும்.
வான்மதி செந்தில்வாணன் – கவிதைகள்
வீட்டிற்குப் போனதும் முதல்வேளையாக
கதவடைத்துக்கொண்டு
சத்தமாகச் சிரிக்கவேண்டுமென எண்ணமிட்டவாறே
பேருந்து விட்டிறங்கினேன்.
எதையும் தாங்கவியலாத
இம் மூத்திர வாழ்வுபோல் ,
வீடடையும் முன்பே அடக்கமாட்டாமல்
அடிவயிற்றைப் பிடித்துக்கொண்டு
பலமாகக் கனைத்தபடி சிரிக்க ஆரம்பித்துவிட்டேன்.
பொன். தனசேகரன் – கவிதைகள்
நேற்று இருந்த நேரம்
நேற்றே செலவழிந்தது
இன்றும் அப்படித்தான்.
நாளும் பொழுதும்
கைச்செலவு போக
எதுவும் மிச்சமில்லை.
நேரத்துக்கும் அகோர பசி.
என் எதிரே
எனக்குக்
கொஞ்சம்கூட
மிச்சம் வைக்காமல்
சாப்பிட்டுக் கொண்டிருந்தது.
சாப்பிட்டு முடிந்ததும்
நேரம் இருந்தது.
நான் இல்லை.
தனிக் கவிதைகள்- பூராம், கு.அழகர்சாமி, நித்யா எஸ்.
என்று இன்னொரு முறை பொற்குதிரை ஏறி வரும் கள்ளழகர்
தந்தையின் தோளேறிக் கண்டேன் நான் இன்றளவும்
தீராத அந்த ஏக்கம்
தீர?
செவல்குளம் செல்வராசு -கவிதைகள்
எல்லா நிகழ்ச்சி நிரலையும்
கலைத்துப் போட்டு விட்டது
இரண்டு நாட்கள் முன்னரே வந்து
நீளாவுடன் நீளும் பயணம்
மேக் மல்ஹாரில் அஸ்வினி பீடே பாடும் ஜமக ஜுகி ஆயீ, பதரியா காலீ (ஒளிர்ந்தபடி தாழ்ந்து வந்தன கரிய மேகங்கள்) பாடல் ஞாபகம் வந்தது. முதலில் ஜமக ஜுகி ஆயீ என்று பாடிவிட்டு ஆயீ என்ற சொல்லை விஸ்தரித்துவிட்டு ஹோ என்று அதிசயத்தைச் சொல்வதுபோல் ஓசையை எழுப்புவார். பிறகு பதரியா காலீ என்று மேகங்களை இசையால் வரைந்து கொண்டே போவார். ஒளிரும் கரிய மேகங்களை நாம் உள்வாங்கிக்கொண்டிருக்கும்போதே ஜூலா (ஊஞ்சல்) என்று இடைவெட்டுவார். ஊஞ்சலா? எங்கிருந்து வந்தது ஊஞ்சல் என்று நினைக்கும்போதே ஜூலா ஜூலே நந்தகிஷோர் என்று கிருஷ்ணன் ஊஞ்சலாடுவதை
மரணபரியந்தம்
மரணபரியந்தம் கைளை உயர்த்தாதே என்றார்கள் கைகளைக் கட்டி நின்றேன்.. கைகளே கைகளை சிறைப்பிடித்தது. கால்களை மடக்கி வை என்றார்கள். தரையில் மண்டியிட்டேன். பாதைகள் இருந்தும் பயணம் முடிவுக்கு வந்தது. கண்களை மூடு என்றார்கள் இறுக்கி மூடிக்கொண்டேன். சூழ்ந்தது இருள். காதுகளை மூடு என்றார்கள். அதற்கும் காது கொடுத்தேன். “மரணபரியந்தம்”
வெளியும் உள்ளும்
புராதன வெளியில் வந்திறங்குகின்றனவலசைப் பறவைகள்.வரப்புகளில் தேங்கும் நீரில் சுற்றிலும் புல்வெளியில்அவை தனித்துப் பொருத்தமற்று தோன்றுகின்றன. பறவைகள் ஒன்றை ஒன்றுபார்த்து நிற்கையில்புல்வெளியின் பரப்பில்மார்கழி இரவின் பனிகாலைக் கதிரவனின் வெம்மையில்மெல்லக் கரைந்து கொண்டிருக்கிறது.
ஆதி விடம்
அவன் முன்பின் நகரமுடியாத இக்கட்டில் மாட்டியபோது சரியாக அச்சொல்லை எய்ய இவனைத் தூண்டி அவன் குருதியைக் கொப்பளிக்க வைத்தேன் சொல் தைத்துப்பெற்ற தீந்துயரை திரும்ப அளிக்கக் காத்திருந்து பிடுங்கப்பட்ட அதேசொல்லை எறிந்தான் இவனை நோக்கி எளிய வழியில் எதிரிக்கு வெந்நோவை அளிக்க பாவனை செய்கிறான் இவன் வலிக்காதது போல “ஆதி விடம்”
சுருண்டிருக்கும் உயிர்
காடுகளில் சுற்றித்திரியும் ஆனைகளின் காலடியில் முட்டிமோதும் குட்டியைப்போல் கழிந்திருக்கிறது சிறுபிராயம்… பழகாத துடுப்பால் சுழலும் ஓடமாய் பள்ளி நாட்கள் சுழன்றிருக்கின்றன கல்வி நீரோட்டத்தில் … சகமாணவரின் சூட்டிகை அறைகூவல்களும் வர்க்கத்தின் பாரபட்ச பரிகாசங்களும் உடைந்துபோன மனக்கிளையில் துளிர்த்த அறிவு தளிர்களை வளர்ந்தெழாமலே செய்திருக்கின்றன… வேர்க்கும் வினாக்களை அதிகாரம் எழுப்புகையில் “சுருண்டிருக்கும் உயிர்”
தொழுது உயர் கையினன், துவண்ட மேனியன் (5)
குழுவும் நுண் தொளை வேயினும், குறி நரம்பு எறிவுற்று
எழுவு தண் தமிழ் யாழினும், இனிய சொல் கிளியே!
முழுவதும் மலர் விரிந்த நாள் முருக்கு இடை மிடைந்த
பழுவம், வெம் கனல் கதுவியது ஒப்பது பாராய். (2162)
குழலிசையினும் யாழிசையினும் இனிமையானவளே! அடர்ந்த மரங்களில் பூத்திருக்கும் சிவந்த முருக்க மலர்கள் காடு தீ பற்றி எரிவதைப் போல காட்சி தருவதைப் பார்.
இரு கவிதைகள் – சதீஷ் குமார்
எப்போதும்
பகலாக..
இரவோடு
புணர விரும்பா
நகரத்து இரவு
கிராமத்து இரவுக்கான
வாலஸ் ஸ்டீவென்ஸின் உன்னதத் தேடல்
சமய உணர்வு மற்றும் சுதந்திர வேட்கை வெளிப்படும் மனநிலையில், அவற்றுக்கு அர்த்தம் இருக்கும் சூழலில், இது போன்ற உன்னத ஏக்கங்கள் இயல்பாகவும் பொருத்தமாகவும் தோன்றுகின்றன. ஆனால் அவ்விதமான பரவசங்கள் இல்லாத நிலையில், நம் காலம் போன்ற வறிய காலத்தில், புலப்பாட்டு எல்லைக்குக் கிட்டாத புலப்படாத் தூண்டுதல்களை நிகழ்த்தும் ‘சப்லிமினல்’ விளம்பரங்கள் மனதை மாற்ற யத்தனிக்கும் யுகத்தில், ஒருவன் உன்னத நாட்டத்தை ஆற்றிக் கொள்வதோ, அதை எதிர்கொள்வதோ எவ்வாறு? ‘நவீன காலத்துக்கான உன்னத நாட்டம்” என்று நான் அழைக்கவிருக்கும் உணர்வு நிலையின் ஒரு சன்னலை மகத்தான அமெரிக்க கவிஞர் வாலஸ் ஸ்டீவென்ஸ் கவிதைகளில் நாம் காண இயல்கிறது.
நான்கு கவிதைகள்
விபத்தில் வீங்கிய கை
அடிபட்ட நாயைப்போல
எப்போதும் அழுகிறது
“டேய், சும்மா இரு” என்று
செல்லமாக அதட்டினாலும்
உடம்பைக் குறுக்கி
பிருட்டத்துக்கு அடியில்
இரவு – கவிதைகள்
நிழல்
சபிக்கப்பட்ட வசைகளாய்
வடிவங்களின்றி
என்னைக் காட்டிக் கொண்டிருந்தது
சலனமில்லாத குளத்தின் தோலுக்கடியில்
ஊரும் பார்வைகள்
குமிழியிட்டு ஒளிந்து மறைகின்றன
கவிதைகள்
ஒரு குழந்தையின் பிடிவாதத்துடன்தான்
மீண்டும் மீண்டும்
என் கைகளில் ஏறினாய் .
இருந்தும் உன்னை முழுக்க நழுவவிட்டு விட்டுதான்
வே.நி.சூர்யா, திருமூ, நந்தகுமார் கவிதைகள்
வானத்தை
விழுங்கிக் கொண்டிருந்தது
நிலவும் சூரியனும்
கண்ணாடிச்
சில்லுகளாய்’
உடைந்து
விழுகின்றன
