மௌனத்தின்
தருணங்களிலும்
வாஞ்சையுடன்
அணைத்துக்கொள்ளும்
வீட்டின் நினைவுகள்…
ஆசிரியர்: அருணா சுப்ரமணியன்
கடலும் காடும்
அலைகளிடமிருந்து
அதுகாறும் காத்துநின்ற
தன் மணல் கோபுரத்தை
பச்சை வண்ண வாளியில்
பெயர்த்தெடுத்து வந்து
தங்கமீன்கள் வளரும்
தொட்டியில் பரப்பி
என் கடல் என்றான்
அருணா சுப்ரமணியன் – கவிதைகள்
கூண்டுக்குள்
அடைக்கும் முன்னர்
பிடுங்கப்பட்ட
இறக்கைகளை
பத்திரப்படுத்தி
பாதுகாத்து வந்தது
வனப்பட்சி