பாலை நிலத்து தாகமாய்
பேச்சு நீர்
குடிக்க அலைகிறது செவி.
ஆசிரியர்: இரா. மதிபாலா
இரா. மதிபாலா – கவிதைகள்
என் கால்கள்
புகழின் கைகளில் இருந்தன
கண்கள் வெளிக் கிளம்பிப் போய் மின்வெளியில் இடப்பட்ட
பாராட்டுப் புழுக்கைகளை எண்ணிக் கொண்டிருந்தன.
காலத்தின் கடைசிச் சொட்டு & அப்பாவின் முகம்
ஆயிரம் நிறங்களில் மிதந்தன
ஓசைகள் சருகுகளின் மீது
பெய்யும் மழை போல
மிக நுண்ணியதாய்