தீசியஸ் (Theseus)

இந்திய ஆயுர்வேத முறை, உடலை ஒரு இயக்கம் இல்லாத இயந்திரமாகவோ, அதற்கான மாற்றுப் பொருட்களை தயாரிப்பதையோ முன்னிறுத்திச் சொல்லவில்லை என்றாலும், உடல் உறுப்பை சரி செய்வதும், மாற்றுவதும் அறுவை சிகிச்சையினால் செய்ய முடியும் என்று சொல்கிறது. 1938ல் இடுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்யத் தொடங்கினார்கள். இப்போது இந்த துறையானது கிரிஸ்பர் (CRISPER) முதலான மரபணு திருத்தங்கள் மூலம் பல அற்புதங்கள் செய்து வருகிறது. எனினும், பயணிக்க வேண்டியது தூரம் அதிகமே.

மூன்றெழுத்தில் மூச்சிருக்கும்

பூமி, வளிமண்டலம், சொர்க்கம் (நரகம்) என்று அண்டத்தை மூன்று பெரும் பிரிவுகளாகச் சொன்னது. மண்ணிற்கு கீழே அதிலேயே நாட்டம் கொண்டுள்ள உலகமொன்று, மண்ணில் ஒரு காலும், விண்ணில் ஓரு காலும் பதிக்க ஆசைப்படும் நம் உலகம், தேவர்கள் வாழும் விண்ணுலகம்; நாம் 14 உலகங்களை அறிந்திருக்கிறோம். சத்வம், ரஜஸ், தமஸ் என்று மூன்று குணங்கள்; வாதம், பித்தம், கபம் இவை மூன்றின் ஆதிக்கத்தைப் பொறுத்து உடலில் வரும் நோய்கள், ஆணவம், கன்மம், மாயை என்ற மும்மலங்கள்.

நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் 2

ரிக் வேதம் பூமியை ‘சக்தி’ எனச் சொல்கிறது. அதர்வ வேத புவி சூக்தத்தில், இடம் பெறும் 63 செய்யுள்களில், சிலவற்றைக் கீழே பார்ப்போம். பூமியை நாம் எப்படி வைத்துக் கொள்ள வேண்டும், அதனால், உயிரினங்கள் எப்படி செழிக்கும் என்று பாடிய முனிவர்கள், சுற்றுச் சூழலின் அவசியம் தெரியாமலா இதைச் சொல்லியிருக்கிறார்கள்?

நலுங்கும் சுடர் – பால் கிங்ஸ்நார்த்தின் கலகம் – 1

ஆனால், நிஜ உலகில் இயந்திர அழிவு என்பது மாறுதலாகத்தான் இருக்கும். போல்ஷெவிக் சதிக்குப் பிறகு, ரஷ்யாவில் நடந்த உள்நாட்டுப் போரை நினைவில் கொள்ளுங்கள். கடைசி முடியரசான ரோமனாவ் 30 பகுதிகளாகச் சிதறுண்டது; மன்னரும், சுற்றமும், உற்றமும் கொல்லப்பட்டனர்; பன்னிரண்டிற்கும் மேற்பட்ட அயல் இராணுவம் இந்தப் போரில் உட்புகுந்தது; இந்தப் போர் தொடர்ந்த 3-5 வருடங்களில், 10 மில்லியன் மக்கள், இந்தச் சண்டை சிக்கலினால் இறந்தார்கள்.

சக்கர வியூகம்

பழக்க வழக்கங்களை எதிர்பார்த்திராத வகைமைகளில் மாற்றும் (தென் கொரியா மிகச் சிறந்த எடுத்துக்காட்டு). பல்லாயிரக்கணக்கான உபகரணங்கள் சாதாரண மக்களின் கரங்களிலும் இருக்கிறது/ பணம் படைத்தோர், அதிகாரம் படைத்தோர் ஆகியோரின் கைகளிலும் இருக்கிறது. எனவே, தரவுகள் பெறுவதோ, அதை அலசுவதோ, அதன் மூலம் விரும்பும் ஒரு கருத்தைப் பரப்புவதோ, அதை நம்பச் செய்வதோ, அதன்படி கட்டுப்படுத்துவதோ இயல்பாக, நாம் அறியா வண்ணம் நடை பெற்றுக் கொண்டேயிருப்பதால், கணக்கீடுகளும், உயிர் கூட்டமான மனிதர்களும் இணைந்து ஒரு சைபர்னேடிக்ஸ் அமைப்பாக நாம் வடிவெடுத்து வருகிறோம்.

உண்மையைத் தேடி

ன் புரிதல்கள், நம்பிக்கைகள், இவற்றை அவன் சரி பார்த்துக் கொண்டேயிருக்கிறானே? அவன் சிந்தனை செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. எந்த சீரற்ற குணத்தை சாதியா வெறுக்கிறாரோ, அதை நேர்மை என நான் உணர்கிறேன். கீழ்ப்படிதல் என்பது சிறந்த குணம் என்று மதங்கள் சொல்லக்கூடும்-ஆனால், அது அறிவுத் துறைக்குப் பொருந்துமா? ஏதோ ‘வெளிப்பாடுகளினால்/ உபதேசங்களால்’ சிந்தனை முன்னேறாது-அது கடவுளிடமிருந்து வந்தாலும், அது உனக்கு ஆன்ம விடுதலை தருவேன் என்று உறுதி கூறினாலும்.

பாட்டினைப் போல் ஒரு விந்தை பாரின் மிசை இல்லை

நமது சங்கீதமே ஒரு ராகத்தின் நுணுக்கங்களை எல்லாம் ஒரு பாடகன் அல்லது ஒரு வாத்தியக்காரன் நுணுகி நுணுகி வெளியிடுவதில் தான் இருக்கிறது மேற்கத்திய இசையில் பல ஸ்கேல்களில் குறுக்கும் நெடுக்கும் தறியில் நெய்யப் படுவது போல் அனந்தமான இழைகளால் அது ஊடும் பாவுமாய் உருவாக்கப்படுகிறது

அக்ஷய அக்ஷரம்

மனித குலத்திற்கான அக மொழி , ஒன்றாகவே இருக்கிறது என எடுத்துக் கொண்டாலும் அட்சய அட்சரம் என்று ஏன் தலைப்பு கொடுத்தேன்? என் நண்பர் ஒருவர் ஒருமுறை சொன்னார்: ‘பல சொற்கள் தமிழ் புழங்கும் சூழலில் இருந்து வெளியேறி வருகின்றன; அவற்றை ஒரு அகராதியாக தொகுத்துக் கொண்டிருக்கிறேன் என்றார் அவர். தமிழில் எழுதும் வகையில் இந்த சொல் இருப்பதால் இந்தப் பெயரை வைத்தேன் என்று பணிவோடு சொல்லிக் கொள்கிறேன்.

ஆராதனை- புத்தக அறிமுகம்

சரஸ்வதி பாயின் ஹரிகதா அனுபவங்கள், சமுதாயத்தில் நிலவிய/நிலவுகின்ற ஆண் பெண் இருவரின் திறமையைப் பற்றி அந்தந்த துறையைச் சேர்ந்தவர்களே, பெண்ணை தவறாக எடை போட்டு ஒதுக்கி இருக்கிறார்கள்/இன்றும் ஒதுக்கிக் கொண்டு இருக்கிறார்கள் எனபதைக் காட்டுகிறது. எல்லாவற்றையும் மீறி அவர் சாதித்துக் காட்டியதும், அவரது திறமையை அடையாளம் கண்டு கொண்ட பிரம்மஸ்ரீ திருவாதி கிருஷ்ணாசார் அவர்களும் நம் போற்றுதலுக்கு உரியவர்கள்.

பொற்பாதை

ரோமானியர்களுடன் நம் வர்த்தகம் செழிப்பாக இருந்த காலம். அவர்கள், நம் மிளகை, மசாலாப் பொருட்களை, தந்தங்களை, பருத்தியை, நவரத்தினங்களை, தேக்கை, சந்தனக் கட்டைகளை பெருமளவில் தங்கம் கொடுத்து வாங்கினார்கள். நமது வணிகம் பொருள் மிகுதி நிலையை நமக்குத் தந்தது. ரோமில், ப்ளினி,மூத்தவர்  கோபத்துடன் புலம்பினார் “ இந்தியாவுடனான நம் வர்த்தகத்தில், ஒவ்வொரு ஆண்டும் நம் அரசு 55 மில்லியன் செஸ்டர்கள் இழந்து வருகிறது.”

பிரித்தெடுத்தலும் தன்னகத்தலும்

பொருளாதார அறிவியலிற்கான நோபல் பரிசு 2024 ஆல்ஃபிரட் நோபலின் நினைவாக பொருளாதார அறிவியலுக்கான (Sveriges Riksbank) ஸ்வீடன் மத்திய வங்கிப் பரிசு 2024 “நிறுவனங்கள் எவ்வாறு உருவாகின்றன மற்றும் செழிப்பைப் பாதிக்கின்றன என்பதைப் பற்றிய ஆய்வுகளுக்காக” டாரன் அசெமோக்லு, (Daron Acemoglu) சைமன் ஜான்சன் (Simon Johnson) மற்றும் “பிரித்தெடுத்தலும் தன்னகத்தலும்”

அணு ஆயுத தடை ஒப்பந்தமும் அமைதிப் பரிசும்

நிகான் ஹெடாங்க்யோ (Nihon Hidankyo, என்ற சமூக இயக்க அமைப்பிற்கு 2024 ஆண்டிற்கான நோபல் பரிசு கிடைத்துள்ளது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியின் மீது அணு குண்டுகளை வீசி 1,20,000 நபர்கள் இறந்த நிகழ்வின் 79ம் ஆண்டில் இருக்கிறோம். அதன் கதிர்வீச்சுக்களாலும், அதன் எரியூட்டலாலும் கிட்டத்தட்ட 1,20,000 நபர்கள் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். “அணு ஆயுத தடை ஒப்பந்தமும் அமைதிப் பரிசும்”

என்னைப் போல் ஒருவன்?

நம் அத்வைத வேதாந்தம், உணர்வு என்பது ஒன்றே, பல மனிதர்கள், பல மனதுகள், பல உயிரிகள் என்று கண்டாலும், எல்லாவற்றிலும் இருப்பது ஒரு உணர்வே; அதை ப்ரக்ஞை, சைதன்யம் என்றெல்லாம் பெயரிட்டு நாம் அழைக்கிறோம் எனச் சொல்கிறது. மூளை பௌதீக வடிவம் கொண்ட ஒரு கருவி, மனம் என்பது எங்கும் பயணிக்கும் ஒரு செயல், இவ்விரண்டும் பொருள் என எதால் அறியப்படுகிறதோ அதுவே உணர்வு

நானே நானா, யாரோ தானா? – 1

நிலத்தடிக்கு நான் செல்ல மருத்துவர்கள் அனுமதித்தார்கள். நானும் தயார்தான். ஹூஸ்டனில் என் மூளையை விட்டுவிட்டு ஹெலிகாப்டரில் துல்சாவிற்குப் பயணித்தேன். அப்படித்தான் எனக்குத் தோன்றியது. என் தலையை விட்டு மூளை பிரிந்திருக்கிறது என்று தான் என்னால் சொல்ல முடியும். பயணத்தின் போது நான் முன்னர் கவலை கொண்டவை யாவும், அறுவை சிகிச்சைக்குப் பின்னான எனது பதட்டங்கள் நிறந்த ஊகங்கள் என்ற சிந்தனை எழுந்தது. நான் நினைத்தது போல இது ஒன்றும் மீமெய்யியலோ, விநோதமோ இல்லை. எங்கிருக்கிறேன் நான்? தெளிவாக இரண்டு இடத்தில்- தொட்டியின் உள்ளும், வெளியும்.

ரேமண்ட் வில்லியம்ஸ் – இறுதிப்பகுதி

கிராமப்புறத்தின் புரட்சி மரபை, ஒரு உண்மையான மாற்று வழியாக வில்லியம்ஸ் ஏற்கவில்லை. பெரும்பாலும், அது, உணர்ச்சி பூர்வ ஏக்கமான, எப்போதுமே இருந்திருக்க முடியாத, பழுதுபடாத உலகை நினைக்கிறது; அப்படியான ஒரு எதிர்காலமும் இல்லை. ‘மனித உள்ளுணர்வு, சமூகத்தினுடையதிலிருந்து வேறுபட்டது…. எதிர்ப்புகளை, கடந்த காலத்தை விரும்புவதாக ஆக்கி, நம் தேவைக்கேற்ற அவகாசமில்லாமல் மடிபவர்களாக நம்மை ஆக்குவது’ என்று, களவுபோன இனிய, நல்ல கிராமப்புறமென்னும் கருத்தைப் பற்றி எழுதுகையில் சொல்கிறார்.

மண்ணுலகில் உலவும் அயலக அறிவு(கள்)

ஜனவரி 2024-ல் New Hampshire வாக்காளர்களுடன் அதிபர் பைடன் (Biden) தொலைபேசியில் பேசினார். தேர்தல் நாளன்று மக்களாட்சி கட்சியை விரும்பும் வாக்காளர்கள் தேர்தல் மையத்திற்குச் சென்று வாக்களிக்க வேண்டாம் என்று கேட்டுக் கொண்டார். இது திகைப்பை உண்டாக்கியது. ஆனால், உண்மையில், AIயின் துணையுடன் ரோபோ ஒன்று பைடன் குரலில் பேசியிருக்கிறது!

நோக்கு அரிய நோக்கே, நுணுக்கு அரிய நுண்ணுர்வே

இந்திய வேதாங்களின்படி, நம்மைச் சுற்றி நாம் காணும் அனைத்தும் சக்தியின் மாறுபட்ட வடிவங்களே. பார்ப்பவர், பார்க்கும் பொருளை, அதன் உண்மை வடிவத்தில் பார்ப்பதாக நினைத்துக் கொள்கிறார், அவ்வளவே!ஹைஸென்பர்க் தன் ‘அன்செர்னிடியில்’, ஒன்றை நிறுவுகிறார். துகள் மின்னணுக்களை நீங்கள் ஆராய்கையில், ஒன்று அதன் நிலையைப் பார்ப்பீர்கள் அல்லது அதன் வேகத்தை. அவரது இந்த ஆய்வுதான் குவாண்டக் கணினி, குறியாக்கம் போன்றவற்றில் பயன்படுத்தப் படுகிறது

சித்சக்தி சேதனா ரூபா ஜடசக்தி ஜடாத்மிகா

விருந்தாளியாக, பிறப்புக் கணக்கு முடியாத நேரத்தில், தன் ஊருக்கு வந்த ஒரு சிறுவனிடத்தில் அவனை மூன்று நாட்கள் காக்க வைத்ததற்காக மன்னிப்பு கேட்கும் யமன், அவனுக்கு மூன்று வரங்கள் தருகிறார். முதல் இரண்டு கேள்விகளால், உலகில்  சினம் குறைந்து அன்பு பெருக வேண்டும் என்றும், யாக  அக்னியின் புனிதம் எது, அதன் முன் சொல்லப்படும் வார்த்தைகள் சத்தியமாகிவிடும் விந்தை என்ன என்பது பற்றியும் கேட்கும் சிறுவன் மூன்றாவதாகக் கேட்கும் கேள்வி யமனையே அசைத்து விடுகிறது

மார்க் தெரு கொலைகள்-  இறுதிப் பகுதி

This entry is part 5 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

அவர் இந்தியத் தீவுக் கூட்டங்களுக்கு பயணம் செய்தார்; அவரையும் சேர்த்து அவருடன் வந்த சில கடலோடிகள், போர்னியோ தீவின் உட்பகுதிக்கு உல்லாசமாகச் சென்றனர். அவரும், அவரது நண்பரும் அங்கே ஒரு ஓராங்-ஓட்டானைப் பிடித்தனர். அந்த நண்பர் இறந்து போனார்; இந்தக் குரங்கு இவரது ஏகபோக உடைமையாகியது. வழிப்படுத்த முடியாத முரட்டுத் தனங்கள் நிறைந்த அந்த விலங்கை பல இடர்களுக்கிடையில், பாரிசில், தன் வீட்டில் பாதுகாப்பாக பூட்டி வைத்தார். அண்டை அயலார் சற்று விலக்கமாகப் பார்க்கக்கூடும் என்பதால் தனியாகவே வைத்திருந்தார்.

மார்க் தெரு கொலைகள்- பகுதி 4

This entry is part 4 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

‘அதுதான் சாட்சியம்; என்ற டூபான், ஆனால், அது சாட்சியத்தின் விசித்திரமில்லை, நீங்கள் குறிப்பான, தனித்துத் தெரியும் ஒன்றை கவனிக்கவில்லை. காரணங்கள், சாதாரணத் தளத்திலிருந்து மேம்பட்டு முக்கியங்களைக் காட்டும் என்பதை நீங்கள் எடுத்துக் கொள்ளவேயில்லை. இருந்தும், சிலவற்றைக் குறிப்பிட வேண்டும். முரட்டுக் குரலில் ஒத்த கருத்தினைச் சொன்ன சாட்சியங்கள் அந்த’ க்றீச்’ குரலைப் பற்றி சொன்னவை-அவர்கள் ஒத்துப் போகாமலில்லை-ஆயின், அதிலுள்ள விசித்திர வர்ணனைகளை எண்ணிப் பாருங்கள்- இத்தாலியர், ஆங்கிலேயர், ஸ்பானியர், ஒல்லாந்தர் அனைவருமே, அது ஒரு அயல் தேசத்தவரின் குரல் என்று சொன்னார்களல்லவா? 

மார்க் தெரு கொலைகள் -3

This entry is part 3 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

அந்த நாளிதழின் மாலைப் பதிப்பு, அங்கே இன்னமும் இனம் புரியாத பரபரப்பு நிலவியதாகச் சொன்னது. அந்த வளாகம் மீண்டும் கவனத்துடன் ஆராயப்பட்டது. சாட்சிகளை மீள் விசாரணை செய்தார்கள். ஒன்றும் பிரயோஜனமில்லை. அதில் ஒரு பின் குறிப்பாக, அடோல்ப் லெ பான், (adolphe le bon) கைது செய்யப்பட்டு, சிறையில் உள்ளார் என்றும், முன்னர் சொன்ன விவரங்களை விட மேலதிகமாக அவரை இக் கொலைகளில் தொடர்பு  படுத்த காரணிகள் இருப்பதாகத் தெரியவில்லை என்றும் சொன்னது.

மார்க் தெரு கொலைகள் -2

This entry is part 2 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

இங்கே மேடம் லிஸ்பனேயைப் பற்றி எந்தச் சுவடுமில்லை. புகைக்கரி அதிகமாக மண்டியிருந்து கணப்படுப்பில். புகை போக்கியை ஆராய்ந்ததில் (சொல்வதற்கே அச்சம் தரும் ஒன்று) தலைகீழாய்த் தொங்கிக் கொண்டிருந்த மகளின் உடல் தென்பட்டது. அது கீழே இழுக்கப்பட்டது. அந்தச் சிறிய துவாரத்தில் குறிப்பிடத்தகுந்த நீளத்திற்கு அந்த உடல் பலவந்தமாகத் திணிக்கப்பட்டுள்ளதைப் பார்த்தார்கள். அந்த உடலைப் பார்வையிடுகையில் அதன் தோல் உரிந்து இருந்ததும், வன்முறையாக அந்த உடல் உந்தி மேலே தள்ளப்பட்டிருந்ததும், துண்டிக்கப்பட்டதுமான கோரக் காட்சியைக் கண்டார்கள்

இன்று நேற்று நாளை 

மகாபாரதக் கதை ஒன்று. அரசுக் கட்டில் யாருக்கு என்பதில் பெண்களிடையே நடக்கும் மௌன யுத்தம். குந்திக்குக் காட்டில் யுதிஷ்டிரன் பிறந்து விடுகிறார். செய்தி கேட்ட காந்தாரி தன் வயிற்றை ஓங்கி அறைந்து கொள்ள நிணமும், இரணமுமாக வெளி வரும் சிசுப் பிண்டங்களை நூறு பானைகளில் பிடித்து கௌரவர்களாக வளர்த்து எடுக்கின்றனர். இதில் கவனிக்க வேண்டியது மாயத் தன்மைகளையும், மனிதர்களின் குணங்களையும் மட்டுமே. 

மார்க் தெரு கொலைகள் – 1

This entry is part 1 of 5 in the series மார்க் தெரு கொலைகள்

பகுத்தாயும் திறன் (analytical ability) இருக்குமிடமும், அதன் அங்கம் பற்றியும் அத்தனைத் தெளிவாக அறிய முடியாவிடினும், மண்டை ஓடு மற்றும் மூளைத் திறன் அறிவியல் (Phrenological Science) எடுத்து வைக்கும் சில அடிகள், இருத்தலியலை நம்பச் செய்துவிடும் என்பது சாத்தியமற்ற ஒன்றல்ல. இந்த பகுப்பாய்வுத் திறனை விளக்க முடியலாம், சிந்தனைகளின் அங்கமென வரையறை செய்வது கடினம்; முந்தைய மெய்யியலாளர்கள் சொன்ன இலட்சியத்தின் முக்கிய அங்கமாக இதைக் கொள்ளாவிடினும், இது இயல்பில் அமைந்துள்ள பழைய திறன் எனச் சொல்வதற்கு நல்ல காரணங்கள் உள்ளன

சங்க நிதி, பதும நிதி, வங்கி கதி

மே மாதத்திலிருந்து தொடர்ந்து இதை ஏற்றி வந்த இந்திய மத்திய வங்கி இந்த முறை அதை ஏற்றாமல் விட்டிருப்பது திறமையான ஒரு செயற்பாடு. ‘வட்டி விகிதம் மட்டுமே கொண்டு பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த முடியாது; அதே நேரம் அது கட்டுக்கடங்காமல் செல்லவும் விட்டுவிடக் கூடாது. நிதி நிலைத்தலுடன், வினியோக சங்கிலிகள் இயல்பு நிலைக்குத் திரும்புவதும், தேவைகளின் அழுத்தத்தைத் தாங்கும் வழியிலுமே இம்முறை ‘ரிபோ’ வை மாற்றவில்லை, தேவையை உணர்ந்தால் நாங்கள் உடனடியாக வட்டி வீதத்தை மாற்றுவோம்’ என்று பணக் கொள்கையில் அறிவித்திருப்பது என்னைப் பொறுத்த வரை வரவேற்பிற்குரியது. பொதுவாக மேலை நிதிச் சித்தாந்தங்களைப் பின் தொடரும் தன்மையிலிருந்து ஒரு சிறு மாறுதல். 

மௌனமாய் இருந்து உன்னை நீ அறிந்து கொள்

சில ஆண்டுகளுக்கு முன் இதைப் படித்த போது நான் ஒன்றைப் புரிந்து கொண்டேன்- என் மனம்/சிந்தனை காலியாக இல்லை; அதற்குக் குறியீடுகள் இல்லை. ஆயினும், ஹெர்ல்பெர்ட் சொல்கிறார், தான் இந்த வகைதான் என்று அறுதிப்படுத்துதல் அவ்வளவாகச் சரியான ஒன்றல்ல. நாம் எப்படிச் சிந்திக்கிறோம் என்பது நமக்குத் தெரிவதில்லை, அந்தச் சோதனை ஒலிக்கு முன்னரும், பின்னருமான பதிவுகள் இதைக் காட்டித் தருகின்றன. நாம் சிந்திப்பதைப் பற்றி, சிலர் கேள்வி கேட்கையில் பொத்தாம்பொதுவாக நாம் பதில் சொல்கிறோம் அல்லவா? நம் எண்ண ஓட்டங்கள் மறைந்துள்ளதாக, மாறுபடுவதாக இருப்பதை ஓரளவிற்கேனும் நாமும் உணர்கிறோம். ஒரு மூளையில் சிந்தையின் பல வடிவங்கள் இருக்கின்றன.

சொல்லா, காட்சியா, எண்ணங்கள்?

உள் உரையாடல் கொண்டவர்கள், தன்னைப் பற்றி, தன் உணர்வுகளைப் பற்றி, ஆசைகள், ஆவல்கள் பற்றி சிந்தித்த வண்ணமிருப்பார்கள். இந்தத் தன் மையமானது வெளியில் உரத்த குரலில் ஒலிக்கும். 1980ல் மனோதத்துவவாதியான பெர்னார்ட் ரைம், (Bernard Rime) நாம் ஏன் நம் எதிர்மறை எண்ணங்களை பிறரிடம் சொல்கிறோம் என ஆராய்ந்தார். கெட்ட அனுபவங்கள், அசை போடுவதோடு நிற்பதில்லை, அதை வெளிப்படுத்தும் இச்சையையும் கொண்டவை. நாம் மகிழ்ச்சியாக இல்லை என்பதை மற்றவரிடம் சொல்கையில், அவர் நம்மை விட்டு விலகிச் செல்கிறார்.

மரத்தில் மறைந்தது மாமதயானை

குவாண்டப் பொருட்கள், அலைகளால் அமைந்துள்ளதால் இந்தக் கருத்து முக்கியத்துவம் பெறுகிறது. காற்றடிக்காத, அமைதியான, கண்ணாடித் தகடு போன்ற கடலை கற்பனை செய்யுங்கள்/ நேரிலும் பாருங்கள்(!). தனிப்பட்ட இரு அலை வகைகள், ஒன்றன் மீது மற்றொன்று மேலிட்டுவரும்போது, இது எப்படி சாத்தியமாயிற்று என்று சிந்தியுங்கள். முழுதும் தட்டையான பரப்புகள் இரண்டு, ஒன்றின் மீது மற்றொன்றாக அடுக்கப்படும்போது சீரான பரப்பு தெரியும்; மற்றொரு சாத்தியம், ஒரே மாதிரியான இரண்டு அலைகள் ஒன்றின் மீது மற்றொன்று  பயணிக்கிறதாக எடுத்துக் கொண்டு, (மாறி மாறியும் இது நடக்கலாம்) ஒன்றின் முகட்டின் மேல் மற்றொன்றின் நீளலைகள் பெயர்வதாலும் நடக்கலாம்.

காலமென்றே ஒரு நினைவும், காட்சியென்றே பல நினைவும்

மிக நுட்பமான, அதி உன்னதமான கருதுகோள்களை நாசாவின் முன்னேறிய கருதுகோள் அமைப்பு ( என் ஐ ஏ சி -Nasa Institute for Advanced Concepts) வரவேற்கிறது, உற்சாகப்படுத்துகிறது. தன் எதிர்காலக் குறிக்கோள்களுக்கான கூர்மையான தொழில் நுட்பங்களை அது ஆதரிக்கிறது. சனி கிரகத்தின் சந்திரனான டைடனில் (Titan) பறக்கும் கடல்- விமான ஊர்தியைப் (Sea-Plane) போன்ற ஒரு கருவியைப் படைப்பதற்கும், செவ்வாயில், உயிரினங்களின் குடியேற்றத்திற்கான தானே வளரும் செங்கற்களை உருவாக்கும் கருத்திற்கும் நாசா சமீபத்தில் நிதி அளித்துள்ளது. திரவ வானத் தொலைநோக்கி, (Fluid Telescope) ஆயிரக்கணக்கில் செயற்கைக் கோள் அடங்கிய மெய்நிகர் தொலைநோக்கி, பூமி 2.0 கண்டுபிடிக்க வானக் கண்காணிப்பகம் போன்றவைகளும் இந்தப் பிரபஞ்ச இரகசியங்களை அறிந்து கொள்ள உதவக்கூடும் என்பதால் இவைகளுக்கும், என் ஐ ஏ சி அமைப்பு நிதி அளித்துள்ளது. இந்த முதல் நிலை வெற்றியாளர்கள் ஒவ்வொருவருக்கும் $1,75,000 கிடைத்துள்ளது; அவர்கள் ஒன்பது மாதங்களில் அந்தந்தக் கருத்துக்களின் சாத்தியங்களை நிரூபிக்க வேண்டும்.

கனவு மெய்ப்பட வேண்டும்

கற்பனைகள் கொண்டு வரும் கனவுகள், அதை நனவாக மாற்றும் பெரும் முயற்சி, அவற்றில்  சில வெற்றி பெறும், சில கருத்துக்களாக மட்டுமே நிலவும், சில மனித வாழ்வின் தரத்தை மேம்படுத்தும், சில பாதிப்பதே தெரியாமல் சூழலை சிதைத்துக் கொண்டே வரும். எப்படியிருப்பினும், கற்பனைகள், கனவுகள் உருவம் பெறுகையில் எழும் உணர்வுகள் வார்த்தைகளுக்குள் அடங்கி விடாது.

அறிவாகிய கோயிலின் புதிய தீபங்கள்

முக்கியமாகக் கருதத் தக்கவைகள் என்னென்ன, எதிர்கால தொழில் நுட்பம் எது, வியப்பான, விசித்திரமான படைப்புகள், சாதனங்கள், சேவைகள் என்னென்ன, அனைத்துக்கும் மேலாக 2023-ல் சந்தையில் நீங்கள் வாங்கும் விதத்தில் கிடைக்கப் போகிற பொருட்கள்/ சேவைகள் என்ன என்று வகைப்படுத்தித் தருவது. இதற்கான சி என் இ டியின் செயல்பாடு இவ்வாறாக இருந்தது.

காலப் பெருங்களம்

அறிவியல், பொதுவாக, பலகட்டச் சோதனைகளை எதிர் கொண்டுதான் தன்னை நிரூபித்துக் கொள்ளும். அவ்வகையில் 2022ன் அறிவியல் செழுமையும், காலம் நிர்ணயிக்கும் ஒன்றாகவே இருக்கும். ஆயினும், 2022லேயே அறிவியலின் எட்டு வியத்தகு அதிசயங்கள் தங்களின் இருப்பையும், அவசியத்தையும் உணர்த்தியுள்ளன. இதில் அதிசயம் என்னவென்றால், அந்தத்துறையைச் சார்ந்த விற்பன்னர்களே அதன் வீச்சைக் கண்டு வியக்கிறார்கள்.

உன்னை ஒன்று கேட்பேன்

சேட்ஜிபிடி மனிதனுக்குகந்த சாதனம். அது நம் மொழியில் உரையாடுகிறது. தொலைக் காட்சி, இணையம், காணொலிகளுடன் நாம் நிகழ்வின் நடுவே உரையாட முடியாது. பின்னரும் கூட கருத்துக்களை மட்டும் தான் சொல்ல முடியும். சேட்ஜிபிடி அப்படியல்ல. அது உங்கள் அலைபேசியில் இருக்கும் பல்திறன் களஞ்சியம், உரையாடும் நண்பன், வழிகாட்டும் ஆசிரியர், கற்றுக் கொள்ளும் சீடன், செல்லக் குழந்தை, மீள மீளக் கேட்டாலும் அலுத்துக் கொள்ளாத உறவு, பாரதி கண்ணனைப் பற்றி பாடியதைப் போல், நண்பனாய், சேவகனாய் என்று சொல்லிக் கொண்டே போகலாம்.

 சொல்லவல்லாயோ, கிளியே?

அவர் கண்டிபிடித்த இந்த நாட்டில் ஏற்கெனவே பூர்வீக அமெரிக்கர்கள் வாழ்ந்திருந்தார்கள் என்பது அவருக்கு அதிர்ச்சியாக இருக்கும். மாறுபட்ட கலாச்சாரங்களைச் சேர்ந்த மனிதர்கள் இன்று அமெரிக்காவில் வாழ்கிறார்கள் என்பதும், தொழில்நுட்பம் இன்று மேம்பட்டுள்ளது என்பதும், வானை முட்டும் கோபுரங்களும், திறன் பேசிகளுமாக உலகம் வளர்ச்சியடைந்துள்ளது என்பதும் அவருக்கு ஆச்சர்யமாக இருக்கும். மேலும், அவரை, பலர் ஒரு சாதனையாளர் என நினைக்கவில்லையென்பதும், சிலர் அவர் மிருகத்தனமான வன்முறையைக் கையாண்டு பூர்வ குடிகளைக் கொன்றார்/அல்லது அடிமைப்படுத்தினார் என நினைப்பதும் அவருக்கு அவமான உணர்வினை ஏற்படுத்தும். 500 வருடங்கள் என்பது ஒருவரை பற்றிய சிந்தனையை எப்படியெல்லாம் மாற்றியுள்ளது என அவர் நினைப்பார்.

நண்பனே பகைவனாய்

அவர் அணியும் டி ஷர்ட், கலைந்த தலை, எளிமையான தோற்றம், வீகன் (Vegan) உணவுப் பழக்கம் அனைத்தையும் சொன்னவர்கள், சொல்ல வேண்டிய முக்கியமான ஒன்றைச் சொல்லாமல் விட்டுவிட்டார்கள்- அது அவரது நிறுவனம் நிலைத்து, நேர்மையாக நடை பெறுமா என்பது. அட்டையை வைத்து புத்தகத்தை மதிப்பிடுவது, குறிப்பிட்ட மார்பு, இடை, தொடை அளவுள்ளவர்கள் மட்டுமே பெண்களில் பொருட்படுத்தத் தக்கவர்கள் என்பது, ஆண் என்பவன் அறிவுஜீவி என நினைப்பது மனித இனத்தின் குணம் போலும்; பல பத்திரிக்கையாளர்களுக்கு இதையும் மீறிய ஒன்று இருக்கிறது- அது தாங்கள் விரும்பும் விதத்தில் செய்திகளை வளைப்பது, பெரும் கௌரவங்களை இந்தத் தொடர்புகளின் மூலம் அடைவது, பரபரப்பை அள்ளித் தெளிப்பது.

யாருற்றார்,யாரயலார்?

பல நேரங்களில் நம்மை நாம் நேசிப்பதும், நம்மை நாமே வெறுப்பதும் நடக்கிறது. தன் கோட்பாட்டிற்கும், அதையே வேறு விதக் கோட்பாடாகச் சொல்லி தன்னுடன் தானே சண்டையிட்டவர் ஆல்பர்ட் ஐன்ஸ்டென். பொது சார்பியல் கோட்பாட்டில் 1915ல் அவர் காலவெளியில் சக்தியையும், ஆற்றலையும் பற்றிப் பேசினார். சூரியன், பூமி போன்ற பெரிய பொருட்கள், தாம் நின்று கொண்டு சுழலும் காலவெளியை, தம் எடையினால் கீழ் நோக்கி வளைப்பதால் ஏற்படுவதே ஈர்ப்பு விசை என்பது அந்தத் தேற்றம். அவரே 1905ல் குவாண்டம் இயக்கவியலின் அடிப்படையைச் சொன்னவர்.

அறிதலின் எல்லைகள்- பகுதி 1

இந்தக் கட்டுரையில் நாம் பத்து கேள்விகளைப் பற்றி அதனால் என்ன ஏற்படும் என்பதைப் பற்றி சிறிது பார்க்கலாமா? நம் கற்பனையின் வரம்புகளுக்கப்பால் நாம் அறியக் கூடியது என்ன என்ற கேள்வி உயிரியல் சார்ந்த புத்தியையும், உள்ளுணர்வு மற்றும் கருத்துக்களால் உருவாகும் மொழி மற்றும் கணிதம் சார்ந்த அறிவினையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். நமது பௌதீக யதார்த்தத்தை மீறக்கூடிய சாத்தியங்களையும், கணினியில் உருவகிக்கும் எண்ணற்ற உயிரற்றவைகளையும் கூட இந்தக் கேள்வி உள் அடக்கும். நமது தொழில் நுட்பக் குழந்தைகள், அறிவாற்றலால் நம்மை விஞ்சுவதைப் பற்றியும் கூட இக் கேள்வி அமையும். இந்தப் பத்து கேள்விகளால், மனிதனின் ‘தனித்துவம்’ என்பது ஆட்டம் காணும்

பிணை

சச்சதுரமாக இடித்துக் கொண்டே வந்தான். வியர்வை ஆறாகப் பெருகியது. மதிய சூரியன் தகித்தது. அவன் கண்ணிற்குத் தெரியாத எதிரியுடன் மோதுகிறான்; அவனா, நானா பார்த்துவிடுவது என்ற எண்ணம் ஒரு புறம், அறிவிற்கு உட்பட்டுத்தான் இதைச் செய்கிறோமா என்ற எண்ணம் மறுபுறம் அவனை அலைக்கழித்துக் கொண்டேயிருந்தது. அவன் கை ஓய்ந்து கடைசி அடி அடிக்கையில் உலோகத்தின் மீது மோதும் ஒரு ஒலி கேட்டது. மண்ணுக்குள் கிடந்த நிர்வாண ஆணுருவம் வாயைக் கோணலாக்கி, கைகளைப் பின்புறம் கட்டிக் கொண்டு நின்றது. அதை எடுக்கப் பயந்தவன், அப்படியே விட்டுவிடலாமா என நினைத்தான்.

சரியும் அதிகாரமும், புரவலர்த் தேவையும்

அனைத்தையும் விட பழமையின் மதிப்பு தெரிந்தவர்கள் இந்தியர்கள். சிலைகளை அழிப்பதை விட, அவைகளைக் கடத்துவதில் பண வரவு அதிகம் எனக் கண்டு கொண்டார்கள். இன்றும் தொடரும் அவலம் இது. வெளி நாட்டிற்குக் கடத்தப்படும் இந்தச் சிலைகள், அங்கே நல்ல நிலையிலிருக்கும் என்ற காரணத்தைச் சொல்லி அதை  மறைமுகமாக நியாயப்படுத்துபவர்களும் இங்கே உண்டு. எதையும் உருவாக்க அறிவும், உழைப்பும் வேண்டும்; அழிப்பதற்கு, தூண்டப்பட்ட உணர்ச்சிகளே போதும். வரலாறு என்றென்றும் உண்டு; ஆனால், நாம் விரும்பும் வகையில் அது இருப்பதில்லை. அதிலிருக்கும் சில கசடுகளுக்காக நாம் நம் சக்தியை வீணடிப்பது தேவையா, இல்லாத அர்த்தங்களை அதில் ஏற்றுவது தேவையா, அல்லது மனதைப் பண்படுத்தி இணைந்து வாழ்க்கையை வாழ்வது நல்லதா என்பதை சிந்திப்போம்.

சிலையெடுத்தான்  சிலை எடுத்தான்

மகாபாரதத்தில் ஒரு காட்சி- போர் முடிந்து வெற்றி வீர்ர்களாக ஆனால் வருத்தத்துடன், தங்கள் பெரியப்பாவைச் சந்திக்க வருகிறார்கள் பாண்டவர்கள். திருதராஷ்டிரன், தன் புதல்வர்களைக் கொன்ற பீமனைக் கட்டி அணைக்க வருகையில் இரும்பாலான பீம உருவினை கண்ணன் பேரரசரின் முன் நிறுத்துவான்; வெறுங்கைகளாலேயே அதை திருதராஷ்டிரன் நொறுக்கி விடுவான். நிஜ பீமனின் உயிர் இப்படியாகத் தப்பிக்கும்.காமாலைக் கண்ணிற்கு காண்பதெல்லாம் மஞ்சள்.

சிலை கொய்தலும் சில சிந்தனைகளும்

சுக்ரீவன்- கும்பகர்ணப் போரில் முன்னவன், பின்னவனின் மூக்கையும், செவியையும் கடித்து பங்கம் செய்துவிடுகிறான். பின்னரும் நடக்கும் யுத்தத்தில் தன் உடல் பாகங்கள் துண்டிக்கப்பட்டும் கவலையுறாத கும்பன், தோல்வி நிச்சயம் என்ற தருணத்தில் ‘என் உடல் பாகங்களற்றுப் போய்விட்டது; ஆனாலும், குறைபட்ட நாசியோடும், செவியோடும் பிறர் நகைக்கும் விதத்தில் என்னை யாரும் பார்க்க வேண்டாம்; என் கழுத்தை நீக்கி கடலுள் என் தலையைப் புதைத்துவிடு, இராமா என்று வேண்டுகிறான்.

செந்தணல்

சீனா, ஆப்ரிகாவின் கொம்பு (Horn of Africa) என அழைக்கப்படும் நாடுகளில் தன் வணிக ஆதிக்கத்தை அதிகரித்துள்ளது. ஆப்ரிகாவின் வடகிழக்கிலுள்ள தீபகர்ப்ப நாடுகள் இவை; செங்கடலின் தெற்கு எல்லையில் இவை அமைந்துள்ளன. எதியோப்பியா (Ethopia) சீனாவின் இராணுவ வன்பொருட்களுக்கான சந்தை. ஜெபோடியில் (Djibouti) தன் இராணுவத் தளத்தை அமைத்துள்ளது சீனா. எரித்ரியா, (Eritrea) எதியோப்பியா, சோமாலியா, (Somalia) ஜெபோடி ஆகிய நாடுகளில் கட்டுமானத்திற்கெனவும், பிற முதலீடுகளாகவும் $14 பில்லியன் கடன் வழங்கியுள்ளது சீனா. இந்த ஆப்பிரிக நாடுகளில், இரும்புத் தாது, தங்கம், விலையுயர்ந்த நவரத்தினங்கள், இயற்கை வாயு, அதிக அளவில் இருப்பதுதான் சீனாவின் இத்தகைய ஆர்வத்திற்கும், முன்னெடுப்பிற்கும் காரணம்.

அணுவிற்கணுவாய்

இன்றைக்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் நம் பாரதத்தில் அணுவியல், அணுத்தன்மை, புவியீர்ப்பு, இயக்க விதிகள், அணுவின் அமைப்பு என்பதைப் பற்றிய சூத்திரங்கள் இருந்திருக்கின்றன என்று சொன்னால் பலருக்கு வியப்பாக இருக்கலாம். ‘வைசேஷிகம்’ என்பது அணுவைப் பற்றி மகரிஷி கனாதா (Kannada) எழுதிய சூத்திரங்கள் அடங்கிய நூல். சூத்திரங்கள் என்பவை புரிவதற்குக் கடினமாக இருக்கும் விஷயங்களை, சுருக்கமாக, நினைவில் நிற்பதற்கு ஏற்ற வழியில், அதே நேரம் ஆழ்ந்த பொருளுடன் சொல்வதாகும். நம் திருக்குறளை நினைவில் கொள்ளுங்கள்.

நான் யார் யாரென்று சொல்லவில்லை

ஒரு திரைப்படப் பாடல் இவ்வாறு தொடங்கும்- ‘நான் யார் யாரென்று சொல்லவில்லை; நீ யார் யாரென்று கேட்கவில்லை’. ஆனால், கேட்காவிட்டாலும், சொல்லாவிட்டாலும் ‘நான் யார்?’ என்ற கேள்வி மனிதர்களுக்கு எழுந்து கொண்டுதான் இருக்கிறது. விஞ்ஞானமும், மெய்ஞானமும் அதற்கான விடைகளைத் தேடியவாறு இருக்கின்றன.

அகிலம் அண்டம்

இவ்விரு சொற்களும் ஒன்றையே சுட்டுவதா? அல்லது அகில அண்டங்களையா? திருவானைக்காவின் அரசி, தாடங்கம் அணிந்த தேவி, அகிலாண்டேஸ்வரி என்ற திரு நாமத்தால் வணங்கப்படுகிறார். அனைத்து அண்டங்களையும் உள்ளடக்கிய அகில நாயகி அன்னை என்ற பொருள் அந்த ஒரு நாமத்தால் உணர்த்தப்படுகிறது. அறிவியலாளர்களின் கூற்றுப்படி இந்த உலகில் 68% கரும் “அகிலம் அண்டம்”

குருதி நிலம்

உலகில் ஒரே ஒரு தனித்த மனிதன் 22 ஆண்டுகளாக பிரேசிலின் ரான்டோனியாவில், (Rondonia) மரத்தில் வசிக்கிறார். அவர் இனம் முற்றிலும் அழிக்கப்பட்டுள்ளது. கோடாரியைக் கொண்டு மரங்களில் வசிப்பிடம் அமைத்துக் கொள்கிறார். முன்னர் கீழே விழும் பெரும் மரக் கிளைகளைக் கொண்டு குடிசை கட்டிக் கொண்ட அவர் தற்போது மரங்களிலேயே இருக்கிறார். கிட்டத்தட்ட 50 வயது, முற்றானத் தனிமை; அவரை அணுகக் கூடாது என்றும், அவரை நாகரீக மனிதனாக்கும் முயற்சியும் கூடாதென்றும் அறிவுறுத்தப்பட்டிருக்கிறது

உள்வெளி

தர்க்க நியாயத்தில், விவாதங்களில் அல்லது எண்ணப் போக்கில் ஏற்படச் சாத்தியங்களுள்ள தவறுகளையும் பற்றி இந்திய தர்க்கம் சிந்தித்திருக்கிறது. அந்தத் ‘தவறை’ ‘ஹேத்வபாஷா’ என்று அழைத்தார்கள். உண்மையான காரணமாகத் தோன்றும் ஒன்று அப்படியில்லை என்று சொல்வதில் அவர்களின் மூளைத்திறம் வெளிப்படுகிறது. அதிலும் ஐந்து விதங்கள்- சவ்யவிசாரா, விருத்த, சத்பதிபக்ஷா, அசித்தா, பதிதா.

கொடி அசைந்ததும் காற்று வந்ததா?

இந்திய ஞானம் தர்க்கத்தைப் பற்றி ஆழமாகச் சிந்தித்து உலகிற்குக் கொடையாக அளித்திருக்கிறது. பொது யுகத்திற்கு முன்பான 5-ஆம் நூற்றாண்டில் பாணினி அளித்த சமஸ்ருத இலக்கணம் தர்க்கமாகவும், தர்க்க விதிகளுக்குட்பட்டும் அமைந்துள்ளது. 13-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கங்கேசாவின் ‘நவ்ய ந்யாயா, ப்ரத்யக்ஷம், அனுமானம், உபமானம், சப்தம் என்று தர்க்கத்தின் கூறுகளைச் சொல்கிறது.

பொன்மான்

பிட் ஃபைனெக்ஸ் (Bitfinex) என்ற நிகர்நிலை தளத்திலிருந்து 2016-ல் 1,19,754 பிட் காயின்கள், சுமார் 2000 பரிமாற்றங்களில் திருடப்பட்டன. அப்போது அவற்றின் மதிப்பு $71 மில்லியன். நம் ஸ்ரீகி சொல்கிறார்: ‘அந்தப் பங்கு வர்த்தகத் தளம் இருமுறை கொந்தப்பட்டது; அதையும் முதலில் செய்தவன் நானே. இஸ்ரேலிய இராணுவத்தில் பணியாற்றும் இருவர் பின்னர் அதே தளத்தில் களவாடினார்கள். அப்போது ஒவ்வொரு பிட்காயினின் மதிப்பு $100- $200 வரை. பின்னர் மற்றொரு பிட் காயின் பரிவர்த்தனைத் தளமான பி டி சி-ஈ. காமைக் (BTC-e.com) கொந்தி 3000 பிட் காயின்கள் திருடினேன்.

யாயும் ஞாயும்

தன் அந்தரங்கத்தைப் பேண விரும்பும் மனிதர்களால் கொண்டாடப்பட்ட ஒன்று 1993-ல் ஸ்டீபன் லெவி (Stephen Levy) ‘வொயர்ட்’டில் (Wired) எழுதிய கட்டுரை : “குறியீட்டு ஆர்வலர்கள் காணும் கனவு- எந்த ஒரு மனிதனும், அது அவனது மருத்துவ நிலையாக இருக்கட்டும், அல்லது கருத்தாக இருக்கட்டும், அவனாக விரும்பினாலொழிய அதைப் பற்றிய விவரங்கள் சேகரிக்கப்படக் கூடாது; வலையில் உலவும் தகவல்களைக் கொத்தக் காத்திருப்பவர்களுக்கு அவை புகை மூட்டங்களாகிக் கரைந்துவிட வேண்டும்; உளவுக் கருவிகளே பாதுகாக்கும் கருவிகளாக வேண்டும்.”