நூற்றாண்டுகள் தாண்டிய அந்த அரச மரத்தினடியில் கால் மடக்கிச் சம்மணமிட்டு அமரும் வேளை மழை விம்மிச் சாரலாய் இறங்கிக் காற்று சில்லென உடல் ஊடேறிற்று. பெருமரத்தண்டின் உட்புறமாக மடிந்திருந்த மரயிடுக்கின் உள்ளே மேலும் நுழைந்து போய் அமர்ந்து கொண்டார். ஏதோவொரு முன்னுணர்வு, அவ்விரவில் பல்லாண்டு காலத் தவத்திறத்தின் பயனாக இம் மானுடனுக்கு அர்த்தமிக்கதொரு ஞானதரிசனம் வாய்க்குமென்று. குசா புல்மெத்தை மேல் இன்னும் வசதியாகக் கால்மடக்கித் தன்னை அமர்த்தி முதுகு நிமிர்த்தித் தவத்தில் நிலைக்கத் தொடங்கினார்.
Tag: புத்தம்
போதி மரத்தடியில்
இந்த அறிதலுக்கு, வெளியிலிருந்து சான்றுகள் ஏதும் தேவையற்று இருக்கிறது. பொருள்களை அறியத்தான் வெளிச்சம் தேவையாகிறது. வெளிச்சத்தை இன்னொரு வெளிச்சம் கொண்டு அறியத் தேவை இல்லை. இவ்வறிதல்களை அறிந்துணர்ந்து கடந்துசெல்வது ஞானம் என்றால் அது அளிக்கும் உயரிய கொடை என்பது விடுதலையே என்றாகிறது.
சரியும் அதிகாரமும், புரவலர்த் தேவையும்
அனைத்தையும் விட பழமையின் மதிப்பு தெரிந்தவர்கள் இந்தியர்கள். சிலைகளை அழிப்பதை விட, அவைகளைக் கடத்துவதில் பண வரவு அதிகம் எனக் கண்டு கொண்டார்கள். இன்றும் தொடரும் அவலம் இது. வெளி நாட்டிற்குக் கடத்தப்படும் இந்தச் சிலைகள், அங்கே நல்ல நிலையிலிருக்கும் என்ற காரணத்தைச் சொல்லி அதை மறைமுகமாக நியாயப்படுத்துபவர்களும் இங்கே உண்டு. எதையும் உருவாக்க அறிவும், உழைப்பும் வேண்டும்; அழிப்பதற்கு, தூண்டப்பட்ட உணர்ச்சிகளே போதும். வரலாறு என்றென்றும் உண்டு; ஆனால், நாம் விரும்பும் வகையில் அது இருப்பதில்லை. அதிலிருக்கும் சில கசடுகளுக்காக நாம் நம் சக்தியை வீணடிப்பது தேவையா, இல்லாத அர்த்தங்களை அதில் ஏற்றுவது தேவையா, அல்லது மனதைப் பண்படுத்தி இணைந்து வாழ்க்கையை வாழ்வது நல்லதா என்பதை சிந்திப்போம்.
