அறிதலின் எல்லைகள்- பகுதி 1

இந்தக் கட்டுரையில் நாம் பத்து கேள்விகளைப் பற்றி அதனால் என்ன ஏற்படும் என்பதைப் பற்றி சிறிது பார்க்கலாமா? நம் கற்பனையின் வரம்புகளுக்கப்பால் நாம் அறியக் கூடியது என்ன என்ற கேள்வி உயிரியல் சார்ந்த புத்தியையும், உள்ளுணர்வு மற்றும் கருத்துக்களால் உருவாகும் மொழி மற்றும் கணிதம் சார்ந்த அறிவினையும் கணக்கில் எடுத்துக் கொள்ளும். நமது பௌதீக யதார்த்தத்தை மீறக்கூடிய சாத்தியங்களையும், கணினியில் உருவகிக்கும் எண்ணற்ற உயிரற்றவைகளையும் கூட இந்தக் கேள்வி உள் அடக்கும். நமது தொழில் நுட்பக் குழந்தைகள், அறிவாற்றலால் நம்மை விஞ்சுவதைப் பற்றியும் கூட இக் கேள்வி அமையும். இந்தப் பத்து கேள்விகளால், மனிதனின் ‘தனித்துவம்’ என்பது ஆட்டம் காணும்