தத்துவப் பூனை

மூட நம்பிக்கையைச் சாடி தன் ‘கீதப் பூங்கொத்து’ பாடல் நூலில் பிரும்ம ராயர் இப்படிச் சொல்கிறார்:
‘போகும் வழியிலோர் பூனைதான்
எந்தப் புறம் சென்றால் உனக்கென்ன?
அந்தந்த ஜீவன் இயற்கையாம்-இதில்
அச்சங் கொண்டேகுதல் ஏனடா?’

திலகம்- கவிதை

அதில் மீதமாக அதிக இனிப்பில்லை
மனிதர்களின் அருகே வசிக்க விரும்புகிறேன்
தன் தவறுகளுக்காகச் சிரிக்கத் தெரிந்த,
யதார்த்தமான, உண்மையான
தன் வெற்றிப் பெருமிதத்தில் மிதக்காதவரிடையே
தன் செயல்களுக்குப் பொறுப்பேற்வரிடையே
வாழ நினைக்கிறேன்

பொது யுகம் 2050-ல் நாமறிந்த உலகு அழியுமா? –

இன்று நாம் காணும் உலகம், 2050க்குள் அழிவதற்கான பாதையை 49% தேர்ந்தெடுத்துள்ளது; நான் உயிரோடு இருப்பது துர்லபம், ஆனால் என் குழந்தைகள்?இது நடைமுறை சார்ந்த என் ஈடுபாடு. சிக்கலான, கலவையான சமூகத்திற்க்குத் தேவையான உறு பொருட்களை, அதன் தக்க வைக்கும் விதங்களைக் கருதாமல் நாம் இன்று நுகர்ந்து கொண்டிருக்கிறோம். கடல் சார் உயிரினங்களை நாம் அதிகமாக நுகர்ந்தும், அழித்தும், அவ்வளங்களைத் தக்க வைத்துக்கொள்ளும் படிப்பினையற்றும் இருக்கிறோம். வளங்கள் குறைகின்றன, பண்ணைகளும், காடுகளும் குறைகின்றன. மண் வளம், நீர்வளம், விளை நிலம் ஆகியவற்றைத் திறமையாகப் பயன்படுத்தி பாதுகாக்கத் தவறிவிட்டோம். 2050க்குள் ஒரு நல்ல வழியினை நாம் கண்டறியாமல் இப்படியே தொடர்ந்தால் அழிவினை நோக்கி சிலப் பத்தாண்டுகளில் சென்றுவிடுவோம்.