அன்று நாள் முழுவதும் 7 நொடிப் பேச்சுதான். இதை, விஜய் டிவியில் ‘நொடிப் பேச்சு, எங்கள் உயிர் மூச்சு’ என்று சீரியலாகக் கூட போட்டு விடலாம்! முழு கட்டமைப்பையும் மாற்றினால் கூட, 3 நொடிகள்தான் குறைக்க முடியும் என்று ஒரு கணினி நிரலர் (programmer?) சொல்ல, மற்றொருவர், என்னால் கட்டமைப்பை மாற்றாமல் 5 நொடிகள் குறைக்க முடியும் – ஆனால், அதற்கு 4 வாரங்கள் தேவை என்றார்.
Category: அறிவியல்
வாயேஜர் என்கிற டீன் ஏஜர்
இந்த எல்லைக்கு வெளியே என்னதான் இருக்கிறது ? வெறும் சூனியமா ? இல்லை. ப்ளாஸ்மா என்ற மின்சாரத் துகள் மேகம் இருக்கிறது; எப்போதோ வெடித்துச் சிதறிய நட்சத்திர மத்தாப்பிலிருந்து சிந்திய பொறிகள் அவை. காந்தப் புலமும் உண்டு. இந்த ப்ளாஸ்மாவை அளந்து பார்த்தால் வாயேஜர் இருப்பது சூரிய மண்டலத்துக்கு உள்ளேயா வெளியேயா என்பது தெரிந்துவிடும்.
விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி – 3
நம்முடைய இன்றைய பொது விஞ்ஞானப் புரிதலுக்கு 20-ஆம் நூற்றாண்டின் கடைசி 30 ஆண்டுகள் ஒரு காரணம். சந்திரனில் கால் வைத்த மனிதன், சிலிகான் சில்லு விந்தைகள், இழை ஒளியியல் (fibre optics), லேசர்கள், இணையம் மற்றும் கணினிகள் நம் வரலாற்றுப் பார்வையை மிகவும் மழுங்கடிக்கும் தொழில்நுட்பங்கள். இவை அனைத்திற்கும் பின்னுள்ள பெளதிகம், குவாண்டம் இயக்கவியல்தான். அது ஏற்கப்பட்ட அறிவாகி 60 ஆண்டுகள் கழித்துத்தான் மேற்படிப் பயன்பாடுகள், தொழில்நுட்பங்கள் எல்லாம் உருவாயின என்பதை மறந்துவிடக் கூடாது.
இயற்பியலும் தத்துவமும்
20-ம் நூற்றாண்டின் தொடக்கத்தில் இரு புதிய கோட்பாடுகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று ஐன்ஸ்டீனின் சிறப்பு சார்பியல் கொள்கை. இரண்டாவது குவாண்டம் கோட்பாடு. கரும்பொருள் நிறமாலையை (Spectrum of Blackbody Radiation) கிளாசிக்கல் அறிவியல் கொண்டு விளக்கமுடியவில்லை. நியூட்டனின் இயக்கவியல், தெர்மோடைனாமிக்ஸ், மின் காந்தக் கொள்கை எதுவும் இந்த நிகழ்வை விளக்க உதவவில்லை. புது கருத்தாக்கங்கள் தேவைப்பட்டன. மாக்ஸ் பிளாங்க் என்பவர் குவாண்டம் ஆற்றல் என்ற புது கருத்துருவைக் கொண்டு விளக்கினார்.
விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி- 2
இன்றும் ஒரு அமெரிக்கருக்கு எடிசனைத் (Thomas Alva Edison) தெரியும்; ஆனால் ஃபைன்மேனைத் (Richard Feynman) தெரியாது. எடிசன் எல்லோருக்கும் தேவையான மின்குமிழ் (electric bulb) மற்றும் மின் உற்பத்தி போன்ற விஷயங்களில் ஈடுபட்டவர். ஆனால், ஃபைன்மேன் அப்படி ஒன்றும் சாதாரண வாழ்க்கைக்கு உபயோகமான பொருளை உருவாக்கவில்லை. இன்றுவரை, விஞ்ஞானி (scientist), மற்றும் கண்டுபிடிப்பாளர் (inventor) என இருவேறாகப் பிரித்துப் பார்ப்பது பொது அறிவாக எழவில்லை. இது 19-ஆம் நூற்றாண்டின் தாக்கம் என்றே சொல்லலாம். இந்தியர்களைப் பற்றிக் கேட்கவே வேண்டாம் – சி.வி. ராமன் பெரிய விஞ்ஞானி என்பதோடு நின்று விடுவார்கள். பலருக்கு அப்துல் கலாமுக்கும் (Dr. A.P.J. Abdul Kalam) விண் இயற்பியலாளர் சந்திரசேகருக்கும் (Dr. S. Chandrashekar) உள்ள வித்தியாசம் என்னவென்று தெரியாது.
குறுகத் தரி
இன்று பல நானோ பொருட்கள் ஆய்வுப் பட்டறையிலிருந்து தெருவுக்கு வந்துவிட்டன. வாஷிங் மெஷின், ஃப்ரிட்ஜ், ஏ ஸி போன்ற நுகர்வு பொருட்களில் நானோ சில்வர் தொழில்நுட்பம் பயன்படுகிறது. கொலுசு வடிவில் வெள்ளி பெண்களின் பிரியமான தோழன். நானோ வடிவில் நல்ல கிருமி நாசினி. வாஷிங் மெஷினில் உள்ள சில்வர் அயனிகள் அழுக்குத் துணிகளில் உள்ள பாக்டீரியாவை கொல்கின்றன. இந்த அயனிகள் துணிகளின் மீது ஒரு மெல்லிய படலமாகப் படிந்து ஒரு மாத காலம் வரை பாக்டீரியாவுடன் தொடர்ந்து போராடி ஒரு பாதுகாப்பு வளையத்தை அளிக்கின்றன. .ஃபிரிட்ஜ் மற்றும் ஏ ஸி யில் உள்ள சில்வர் நானோ கோட்டிங் பாக்டீரியாவைக் கட்டுபடுத்துகின்றன. அழகுசாதனப் பொருட்களில் உள்ள நானோதுகள்கள் ரசாயனங்களை பொதி போல சுமந்து சென்று சருமத்தின் அடியில் உள்ள செல்களுக்கு போஷாக்கை அளிக்கின்றன…
பூத்துக் குலுங்கும் கொன்றை, மருதம், மனோரஞ்சிதம்
சூழல் பற்றியும், இயற்கைசார்ந்த உயிரினங்கள் பற்றியும் எழுதும் நல்லாரைச் சொல்வனம் தொடர்ந்து தேடிக்கொண்டிருக்கும் ஒரு பத்திரிகை. இந்தத் தேடலில் நமக்குச் சமீபத்தில் கிட்டிய ஒரு அறிஞர் ஜெகநாதன். இவர் ஒரு வன உயிரியலாளர். இந்த இதழில் இவரது கட்டுரைகள் பூக்கள் பற்றி அமைந்திருக்கின்றன.
விஞ்ஞான வளர்ச்சியின் வளர்ச்சி
விஞ்ஞான முறை என்று கலிலியோ போன்றார் கருதியதோ எல்லாக் கருத்துகளையும் சோதித்துப் பார்த்து நிரூபணமான பின்னரே ஏற்பது என்ற துவக்க கால அறிவியல் முறைமை. அது சர்வ வல்லமையுள்ள இறையின் தீர்மானத்தைச் சந்தேகிப்பதாகத் தோன்றலாம் என்று கருதியது கத்தோலிக்கம் என்பதோடு, இறையின் எண்ணக் கிடக்கை இதுதான் என்று தீர்மானிக்கவும் தமக்கு மட்டுமே உரிமை இருப்பதாகவும் கருதியவர்கள் கத்தோலிக்க சர்ச்சின் மேலாளர்கள்.
முடிவற்ற படிகளில் ஏறுதல்
இந்த அகாடமியின் குறிக்கோள்கள் வளரும் நாடுகளில் அறிவியல் ஆய்வை மேம்படுத்ததுதல், வளர்ச்சியடைந்த நாடுகளுடன் அறிவியல் ஒப்பந்தங்கள், இளம் விஞ்ஞானிகளுக்கு விருதும், ஊக்கமும் அளித்தல் போன்றவை ஆகும். இன்னும் இருபது வருடங்களில் அறிவியலில் வளரும் நாடுகளின் பங்களிப்பு 30 சதவீதம் இருக்க வேண்டும் என்பது சி என் ஆர் ராவின் கனவு.
பேய், பிசாசு, ஏலியன்கள்: அறிவியலா புரட்டா?
பேய் பிசாசுகள் மனிதர்கள் இல்லை என்பது திண்ணம். அவைகளை உலகில் அநேகர் தினநிகழ்வாய் பார்க்காதிருக்கையில், நான் பார்த்தேன் என்றால், அது அசாத்தியமான நிகழ்வு. அதற்கான நம்பகத்தன்மையை உயர்த்த அசாத்தியமான சாட்சியங்கள் வேண்டும். இதுவரை நமக்குக் கிடைக்கக்கூடிய சாட்சியங்கள் அவ்வளவு அசாத்தியமானது அல்ல என்று நிரூபிக்கமுடிகிறது. பேய் பிசாசுகளை பார்த்ததற்கான தருணங்களை வேறு எளிய காரணங்களால் விளக்கமுடியும் என்று தெரிகிறது.
எக்ஸ் பாக்ஸ் ஒன் – மைக்ரோசாஃப்டின் புதிய பாதை
விளையாட்டு மட்டுமில்லை எக்ஸ் பாக்ஸ். இப்பொழுது அதன் மூலமாகத்தான் என் மொத்த தொலைக்காட்சியும் உயிர் பெறுகிறது. ஆயிரங்கோடி திரைப்படங்கள் நிறைந்த நெட்ஃப்ளிக்ஸ் வாயில் மூலமாக ஹாலிவுட்டும் பாலிவுட்டும் கோலிவுட்டும் டிவியில் கிடைக்கிறது. சில காலம் முன்பு வரை இணையத்தைப் பார்க்க ஒரு கணினி, தமிழ்க் கன்னல்கள் பார்க்க இன்னொரு பொட்டி, அதெல்லாம் இணைக்க இன்னொரு பொட்டி, என்று டிவியைச் சுற்றி இடைதடை ஓட்டப் பந்தயத் தடங்கல்களாக இருந்த கம்பிகளும் டப்பாக்களும் கழன்று அவற்றுக்கெல்லாம் ஒரேயொரு நிவாரணியாக எக்ஸ் பாக்ஸ் இருந்தது. அதை புதிய எக்ஸ் பாக்ச் ஒன் மேலும் விரிவாக்குகிறது.
பாதரசம் என்னும் உயிர்க்கொல்லி
குழந்தைப் பருவம் மட்டுமே வாழ்வின் அற்புதங்கள் நிரம்பிய காலம். அதில் சேட்டைகளும், சுறுசுறுப்பும், குறும்புகளும் தான் பிரதானம். எல்லா பிள்ளைகளுமே இந்தத் தன்மைகளுடன் பிறந்து, தன்முனைப்புடன் வளர்ந்து விடுவதில்லை. சில பிள்ளைகள் ஆட்டிஸம் ஸ்பெக்ட்ரம் டிஸார்டர் (ASD) என்ற குறைபாட்டுடன் பிறக்கின்றன. அதற்கான தெளிவான காரணங்களும் கண்டறியப் படாமலே இருக்கின்றன. இதுபோன்ற குழந்தைகளை வளர்ப்பதும், பராமரிப்பதும் சவால் நிறைந்த பணி. ஏறக்குறைய 90 பள்ளிகள் இதற்கெனத் தமிழகம் முழுவதும் செயல்பட்டாலும், அரசு நடத்தும் சிறப்புப் பள்ளிகள் ஒன்றோ இரண்டோ தான். மற்ற எல்லாத் தனியார் பள்ளிகளும் மிகுந்த சிரமத்திற்கு இடையில்தான் நடத்தப்படுகின்றன. வறுமைக் கோட்டில் வாழும் மனிதர்களுக்கும், நடுத்தர வர்க்கத்தினருக்கும் இதுபோன்ற சிறப்புக் குழந்தைகள் இருந்தால் முறையான வழியில் பயிற்சி கொடுத்துப் பராமரிப்பது சிரமத்திலும் சிரமம் தான்…..
…தன்முனைப்புக் குறைபாட்டுடன் ஒரு குழந்தை பிறக்கிறது எனில் அதற்கு இதுதான் காரணம் என்று உறுதியாகக் கூற முடியாமல் ஆராய்ச்சியாளர்கள் குழம்பித் தவிக்கிறார்கள். என்றாலும் சில வேதிப் பொருட்களின் நச்சுத்தன்மை தான் மூளைக் குறைபாடு மற்றும் நரம்பியல் பிரச்சனைகளுக்கு மூல காரணமாக இருக்கலாம் என்ற வாதத்தையும் முன்வைக்கிறார்கள்.
ஒரு புதுவகை அறிவியல்
கணிதத்தின் இந்த 300 வருட பெரும் வெற்றியை கடவுள் கணக்கு வாத்தியாராகத்தான் இருக்கவேண்டும் என்று விஞ்ஞானிகள் கொண்டாடினர். இப்போது காலம் மாறிவிட்டது. அவர் ஏன் ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியராக இருக்கக்கூடாது?
அம்புலி மாமாவும் செம்புலி மாமாவும்
சமீப காலம் வரை விண்வெளிப் பயணம் என்பது, காசு கொழுத்த நாடுகளின் அரசாங்கங்களுக்கு மட்டுமே கட்டுப்படி ஆகும் என்ற நிலை இருந்தது. இப்போது பல தனியார் நிறுவனங்களும் துணிந்து இறங்கிக் கலக்குகிறார்கள். கோடீசுவரர் எலான் மஸ்க் போன்றவர்கள் அமைத்த ராக்கெட் நிறுவனங்கள் நம் கிங்ஃபிஷர் விமானக் கம்பெனியைவிட லாபகரமாக இயங்குகின்றன. நாசாவிடம் ஒப்பந்தம் போட்டு அவர்களின் விண்வெளி நிலையத்துக்கு வேண்டிய சாதனங்கள் சுமந்து செல்வதற்கு, சரக்கு லாரி போல லோடு அடித்துத் தருகிறர்கள்.
பெருவெடிப்பும் பிரபஞ்ச நுண்ணலை பின்புல கதிர்வீச்சும்
ஒரு குறிப்பிட்ட வெப்பநிலையில் அணுக்கரு துகள்களும் எலக்ட்ரான்களும் இணைந்து அணுக்கள் உருவாகின. அதன் பிறகு இந்தப் பிரபஞ்சம் ஒளி ஊடுருவிச் செல்லும் வெளியாக ஆனது. அதற்கு முன் ஒளி மீண்டும் மீண்டும் (பருப்பொருள்) துகள்களினால் சிதறக்கடிக்கப்பட்டது. அவை துகள்களுடன் பிணைக்கப்பட்டிருந்தது போன்ற ஒரு நிலை. பெருவெடிப்பில் இருந்து 380000 வருடங்கள் வரை பிரபஞ்சம் இந்த நிலையில் இருந்தது. எந்தப் புள்ளிகளிலிருந்து ஒளி வெளியை சுதந்திரமாக ஊடுருவ ஆரம்பித்ததோ அந்தப் புள்ளிகளை இறுதி ஓளிச்சிதறல் பரப்பு என்று கூறலாம். இந்தப் பரப்பிலிருந்து வெளியை ஊடுருவ ஆரம்பித்த ஆதி ஒளித்துகள்கள்தான் இன்று வெளியெங்கும் பரவியுள்ளது.
தற்செயலாய் உருவான பிரபஞ்சம்-பகுதி 2
இதமான வாழ்வுக்குத் தேவையான பிராணவாயு, தண்ணீர் (அதன் உறை நிலை பூஜ்யம் டிகிரியாகவும் ,கொதி நிலை நூறு டிகிரியாகவும் இருப்பது) போன்ற எத்தனையோ நல்ல அம்சங்களைக் கொண்ட இந்த பூமியில் நாம் ஏன் வாழ நேர்ந்தது என்று கேட்டாலும் , இதே போன்ற பதில் தான் கிடைக்கும் . இது தற்செயலா? நம் அதிர்ஷ்டமா? இறையருளா? வேறெதுவோ?
விஞ்ஞான முட்டி மோதல் –9
ஹிக்ஸ் போஸான் பற்றிய ஆய்வு இன்னும் சில ஆண்டுகள் தொடரும். இந்த ஆய்வின் முடிவு,நம் அணுக்கட்டுமானம் பற்றிய நம் புரிதலை உறுதி செய்யலாம். இல்லையேல், புதிய அணுகுமுறைக்கான உந்துகோலாகவும் இருக்கலாம். விஞ்ஞானிகள் எதற்கும் தயாராக இருக்கிறார்கள். சரி, இந்த ஹிக்ஸ் விஷயத்தை விட்டால் வேறு எந்த விஷயமும் இல்லையா?
தற்செயலாய் உருவான பிரபஞ்சம்
முன்பு விபத்துகளாகக் கருதப்பட்ட நிகழ்வுகளை, அடிப்படைக் கொள்கைகளுக்கும் காரணங்களுக்கும் உட்பட்ட நிகழ்வுகளாக நிலைநிறுத்துவதே அறிவியலின் வரலாற்றுச் செயல்பாடுகள். இதுவரை தெள்ளத் தெளிய விளக்கப்பட்ட நிகழ்வுகளோடு பட்டியலில் சேர்க்க வேண்டியவை இதோ: வானத்தின் நீல நிறம், கோள்களின் சுற்றுப்பாதைகள், ஏரியில் இயக்கப்படும் படகு விட்டுச்செல்லும் வழித்தடம் , உதிர்பனித்துகளின் அறுகோணப் பாங்கு, பறந்து செல்லும் வான்கோழியின் எடை, கொதிக்கும் நீரின் வெப்ப நிலை, மழைத்துளியின் பரிமாணம், சூரியனின் வட்டவடிவத் தோற்றம் எனப்பல.
விஞ்ஞான முட்டி மோதல் – பகுதி 7-8
ஒவ்வொரு முறை, ஒரு புதிய அணுத்துகள் வேகப்படுத்தும் எந்திரத்தை உருவாக்கினாலும், முதலில் விஞ்ஞானிகள் செய்யும் வேலை, நியமான அணு அமைப்பு மாடல் இன்னும் சரிப்பட்டு வருகிறதா என்று பார்ப்பதுதான். பல முறை இந்த சோதனைகளைக் கடந்த 40 ஆண்டு காலமாக செய்து, இதுவரை சரியாகத்தான் உள்ளது என்கிறார்கள் விஞ்ஞானிகள். இத்தனைக்கும் இந்த ஆண்டு வரை ஹிக்ஸ் போஸான் தண்ணி காட்டியது.
விஞ்ஞான முட்டி மோதல் – 5
பல வித அணு சோதனைகளுக்கும் அடிப்படை ஹைட்ரஜன் வாயு. ஹைட்ரஜன் அணுவில் சுழலும் ஒரு எலெக்ட்ரான், அணுக்கருவினுள் உள்ள ஒரு ப்ரோட்டானைச் சுற்றுகிறது. இதில் நியூட்ரான் கிடையாது. 1930 –களில் உருவாக்கப்பட்ட முதல் அணு வேகப்படுத்தும் கருவியான சைக்லோட்ரானிலிருந்து (cyclotron) இன்று ராட்சச உருவில் அணு ஆராய்ச்சிக்கு உதவி வரும் LHC-வரையில் அடிப்படை மூலப்பொருள் ஹைட்ரஜன் வாயுதான்.ஹைட்ரஜன் இயற்கையில் சேர்மங்களாகத் (compounds) தான் தோன்றுகிறது.
விஞ்ஞான முட்டிமோதல் – தொடர்கிறது
எலெக்ட்ரான் மிகவும் சன்னமான துகள். எவ்வளவு சன்னம் என்று விளக்க, ஒரு கிலோ எடையுள்ள சர்க்கரைப் பை ஒன்றை எண்ணிப் பாருங்கள். ஒன்றரைக் கோடி பூமிகளுடைய எடையுடன் ஒப்பிட்டால், சர்க்கரைப் பை எவ்வளவு சன்னமானது என்று எண்ணிப் பாருங்கள். ஒரு கிலோ சர்க்கரைப் பையுடன் ஒப்பிட்டால் எலெக்ட்ரான் அதே அளவு சன்னமானது! இதைச் சரியாகப் புரிந்து கொண்டு, சில பல கோடி எலெக்ட்ரான்களை வேண்டியபடி நாம் கட்டுப்படுத்தத் தெரிந்து கொண்டதன் விளைவு, நீங்கள் இக்கட்டுரையைப் படித்துக் கொண்டிருக்கிறீர்கள்!
விஞ்ஞான முட்டி மோதல்
குவாண்டம் பெளதிகம் என்பது ஒரு நூறாண்டுக்கு மேல் விஞ்ஞானிகளின் உழைப்பினால் உருவாக்கப்பட்டத் துறை. இதனால், நம் நுண் அளவு புரிதல் (understanding of the small) வளர்ந்துள்ளது. மின்னணுவியல் துறையின் வளர்ச்சியால் இன்று கணினி, செல்பேசி, தட்டை திரை டிவி, டிஜிட்டல் காமிரா, தொலைத்தொடர்பியல் யாவும் வளர்ந்து சமுதாயத்திற்கு உதவியுள்ளன. 20 -ஆம் நூற்றாண்டின் பெரும் மனித வளர்ச்சிக்கு உதவியது குவாண்டம் பெளதிக துறையை அடிப்படையாய் கொண்ட பல துறைகள் என்றால் மிகையாகாது.
அறிவியலும், சந்தை அறிவியலும்
என்னதான் பொதுமக்களிடம், முன்பு எப்போதுமில்லாத வகையில், உடனுக்குடன் பல அறிவியல் தளங்களில் நடக்கும் ஆராய்ச்சி முடிவுகளைக் கொண்டு சேர்க்கிறது என்றாலும், இவ்வகை மிகைகளும் சார்ந்த மீள்-மிகைகளும் சந்தை அறிவியலின் முக்கியமான இடர். கைசொடுக்கும் நேரத்தில் ஒற்றை வரிச் செய்தி மிகைகளை வாசித்துத் ‘தெளிந்து’ தீர்க்கதரிசன மதிப்பீடுகளை கிடைக்குமிடத்தில் (இணையத்தில்) அரைபண்டித அறைகூவலாய் அழற்றுவதும் தவிர்க்க இயலாது.
மின் எரிபொருளைத் தரும் செயற்கை இலைகள்
ஜப்பானைச் சேர்ந்த ஹோண்டா நிறுவனம், இந்த இரு செயல்பாடுகளையும் ஒன்றிணைக்க வல்ல மாதிரி ஒன்றினை வடிவமைப்பதில் ஈடுபட்டது. ஓர் குளிர்சாதனப் பெட்டியை விடவும் சற்று உயரமான பெட்டி போன்ற ஒன்று ; ஃபோட்டோ வோல்றிக் கலங்களால் மூடப்பட்டு அதன் உள்ளே ஓர் மின்பகுப்பான் பொருத்தப்பட்டது. இதன் மூலம் பெறப்பட்ட ஹைட்ரஜன் வாயுவை மின்கலத்தால் இயங்கும் கார்களை மீள மின்னேற்றுவதற்குப் பயன்படுத்த அந் நிறுவனம் திட்டமிட்டிருந்தது.
தீங்குயிரி ஒழிக்கும் மரபணு அறிவியல்
காலங்காலமாக வேளாண் உணவு உற்பத்திக்கு அச்சுறுத்தலாக விளங்குபவை தீங்குயிரிகளே. இவற்றை அழிப்பதற்கெனப் பூச்சி கொல்லிகள் கண்டுபிடிக்கப்பட்டாலும், அவை சம்பந்தப்பட்ட தீங்குயிரிகளை அழிப்பதோடு மட்டும் நின்றுவிடாது சுற்றுச் சூழலையும் மாசுபடுத்தி விடுகின்றன. மேலும், பூச்சிகொல்லிகளைப் பயன்படுத்தும் மனிதர்கள், அண்மையில் வாழும் ஏனைய உயிரினங்கள் முதலியனனவற்றுக்கும் இவை தீமை விளைவிக்கின்றன.
ஒரு முடிவை மாற்ற எத்தனை பேர் தேவை?
பொதுவாகவே நம் அனைவருக்கும் மனச்சாய்வுகள் உண்டு என்பதையும் ஒரே பண்பாட்டைச் சேர்ந்த அறிவியலர்கள் தம் பண்பாட்டையொட்டிய மனச்சாய்வுகளைத் தாண்டி வருவது அவ்வளவு எளிதல்ல என்பதையும் மனச்சாய்வுகளின் இயல்பை அறிந்தவர்களும்கூட அதற்கு பலியாகின்றனர் என்பதையும் இணையத்தில் அண்மையில் வாசிக்கக் கிடைத்த சில கட்டுரைகள் சுட்டுகின்றன. மொத்தத்தில், பல பண்பாடுகள் கொண்டதாக மானுட இனம் இருப்பதே அறிவியலையும் சிறப்பிக்கிறது.
செயற்கைக் கருவூட்டல் : கவனமின்மையும் பின்விளைவுகளும்
விந்தணு தானம் போன்ற செயற்கைக் கருவூட்டல் சிகிட்சைகள் அளிக்கும் மருத்துவமனைகள் இந்தியப் பெருநகரங்களில் முன்னெப்பொழுதையும் விட வேகமாகப் பெருகி வருகின்றன. விந்தணு வங்கிகள், குழந்தைபேறுக்கான மருத்துவ உதவி செய்யும் மருத்துவமனைகளின் தரம், விந்தணுக்கள் அல்லது கருமுட்டைகளில் தொற்று நோய்கள் மற்றும் மரபணுக்கோளாறுகளை கண்டுபிடிக்கும் பரிசோதனைகளைச் செய்வதில் அவற்றின் உண்மையான நடவடிக்கைகள், விந்தணு கொடையாளர்களின் தகவலட்டவனையை (Database) மேம்படுத்தி வைத்திருக்கும் விதம் போன்றவை தீவிரமாகக் கண்கானிக்கவும் நெறிப்படுத்தவும் படவேண்டும்.
பூனை குறுக்கே நடந்தால்… : மேக்னெட்டோரிஸப்ஷன்
பூனை குறுக்கே நடந்தால் அபசகுனம். வடக்கே தலை வைத்து படுத்தால் உடல் நலத்திற்கு கேடு. இவ்விரண்டு சமூக நம்பிக்கைகளை நாம் எதிர்கொண்டிருக்கிறோம். எனக்களிக்கப்பட்ட இவற்றின் அன்றாட ’விளக்கங்களும்’, சார்ந்த என் அறிவியல் தேடல்களையும், புரிதல்களையும் அனுபவக்கல்வி தடவி இக்கட்டுரையில் விவரிப்போம்.
குறிக்கோளில்லாத பிரபஞ்சம்
நம் பிரபஞ்சமும், அதன் இயக்க விதிகளும் , தெய்வீக வழிகாட்டலோ, குறிக்கோளோ இல்லாமல், தன்னிச்சையாகத் தோன்றின என்பதற்கான நிரூபணமாகிவிடுமா? அல்ல, ஆனால் அப்படியும் நடந்திருக்க வாய்ப்பு உண்டு என்பதையே தெரிவிக்கிறது.
ஹப்பர்ட் சிகர உச்சியிலிருந்து…
அமெரிக்காவின் எண்ணைவளம் பற்றி வெளியான செய்தி போலவே, உலக எண்ணைவளத்தைப் பற்றிய செய்தியை ஓப்பெக் குழு 2004இல் சந்தடியின்றி வெளியிட்டது. அதிகரித்துவரும் எண்ணைத் தேவையின் கணிப்பு சவுதி அரேபியாவின் சோர்வடைந்த எண்ணைக்கிணறுகளுக்கு சவால்: இதுதான் பிப்ரவரி 24, 2004 அன்று வெளியான நியூயார்க் டைம்ஸ் செய்திக்கட்டுரையின் தலைப்பு. இக்கட்டுரையில் உலகில் அதுவரை எண்ணை உற்பத்தியில் முன்னனியில் இருந்த சவுதி அரேபியாவின் எண்ணைக்கிணறுகள் காலியாகிவருவது குறிப்பிடப்பட்டது; அதாவது அவை நூறு சதவிகித உற்பத்தி அளவை தொட்டுவிட்டன.
சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள் – 3
நச்சுயிர்கள், உயிருள்ள ஸெல்களின் மரபுக்கூறுகளைக் (genetic material) கையகப்படுத்தி அவற்றைத் தம் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு செழிப்புறுகின்றன. விடாப்பிடியாக இனப்பெருக்கம் செய்துமுடித்து, அதிக ஸெல்களைக் கைப்பற்றப் பெரும்படையுடன் கடும்புயலெனப் பாய்கின்றன. வாழும் சூழலைத் தேடிக்கொள்ளும் நிர்ப்பந்தமில்லாததால், அவற்றிற்குக் கச்சிதமான வடிவே போதுமானது. மிக எளிய பாக்டீரியாவுக்கும் பல்லாயிரம் மரபீனிகள் தேவைப்படுகிற நிலையில், ஹெச்.ஐ.வி உட்பட்ட பல நச்சுயிர்கள், பத்துக்கும் குறைவான மரபீனிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன.
சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள் – 2
பாக்டீரியாக்கள், பல கோடி ஆண்டுகள் மனிதரில்லாத உலகில் உலவி வந்த உயிரினம். அவற்றின் துணையின்றி நாம் ஒருநாள் கூட வாழ்ந்திருக்க முடியாது. அவை நம் கழிவுகளைச் சுத்தீகரித்து, மறு சுழற்சிக்குத் தருகின்றன. அவை அயராது மென்ற பின்னரே இறந்த உயிரினங்கள் மக்கிப் போக இயலும். அவை, நாம் பயன்படுத்தும் நீரை சுத்தீகரித்தும், நம் விளை நிலங்களின் உற்பத்தித் திறனைத் தக்கவைத்தும் உதவுகின்றன. மேலும், நம் வயிற்றில் வைட்டமின்களை உணவுடன் ஒருங்கிணைப்பது, உடல் ஏற்கும் சர்க்கரைகளாகவும், கலப்புபல்சர்க்கரைகளாகவும் (polysaccharides) , உண்ணும் உணவை மாற்றுவது, நம் தொண்டை வழியாக நுழையும் அயலிடத்து கிருமிகளுடன் போரிடுவது போன்ற பலவற்றையும் அவை செய்கின்றன.
சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள்
1983-லேயே மேற்கு ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் வசிக்கும், பேரி மார்ஷல் (Barry Marshall) என்ற டாக்டர், பல வகையான வயிற்றுப் புற்றுநோய்க்கும் மற்றும் பெரும்பாலான வயிற்றுப் புண்களுக்கும் Helicobar pylori என்னும் பாக்டீரியம்தான் காரணம் என்று கண்டுபிடித்து விட்டார். இது மிகவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக கருதப்பட்டதால், சோதித்து உண்மை தெரிந்த பின்னரும், அறிஞர்களின் ஒப்புதல் பெற 10 ஆண்டுக்காலம் ஆனது. உதாரணமாக, அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட், 1994 வரை, இக்கருத்தை அங்கீகரிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில், சில ஆயிரம் அல்ஸர் நோயாளிகள் அநியாயமாக மடிந்திருப்பார்கள் என்று மார்சல்,1993-ல் Forbes பத்திரிக்கை நிருபரிடம் கூறியிருக்கிறார்.
வண்ணத்துபூச்சியின் நிறமற்ற வானவில்
உத்திரத்தில் ஆடும் ஹரிக்கேன் விளக்கு வெளிச்சத்திலும் பாட்டியின் அந்தக்கால நவரத்தின பெண்டண்ட்டில் மற்ற கற்களைக்காட்டிலும் வைடூர்யம் மட்டும் டாலடித்து ஜுவலிக்கிறதேன்? தோகை இளமயில் ஆடி வருகையில் வானில் மழைவராவிட்டாலும், தோகை நிறங்கள் அசாதாரணமாய் ஒளிருவதேன்? சாலையிலுள்ள மழைநீர்தேங்கிய குட்டைகளில் பெட்ரோல் டீஸல் ஒழுகிப் படர்ந்து, தாண்டிச்செல்கையில் நாம் பார்க்கும் கோணத்திற்கேற்ப பல நிறங்களில் தெரிவதேன்? கணினி மென்தகட்டை வெளிச்சத்தில் அப்டி இப்டி திருப்பினால் பல நிறங்களாய் தெரிவதேன்? அநேக வண்ணத்துபூச்சியின் இறகுகள் பளபளப்பதேன்?
எம்மைப் பறித்தால், எம் குருதி வடியாதா
1900ஆம் ஆண்டு வாக்கில் போஸ் தாவரங்களின் ரகசிய உலகம் பற்றிய தனது புலனாய்வுகளை ஆரம்பித்தார். அனைத்துத் தாவரங்களுக்கும், தாவரங்களின் உறுப்புகளுக்கும், பிராணிகளை ஒத்த கூர் உணர்வுடைய நரம்பு மண்டலம் இருப்பதையும், புறத்தூண்டுதல்களுக்கு அவற்றின் எதிர்வினைகள் அளக்கப்பட்டு பதிவு செய்யக்கூடியவை என்றும் அவர் கண்டறிந்தார்.
ஏன் பல்லி கொன்றீரய்யா
பத்து வருட ஆராய்ச்சியில் பல பல்லிகளை சந்தித்து, க்ளவுஸ் அணிந்து கைகுலுக்கி, நுண்னோக்கி, சிந்தித்து, பல்லியின் கால் படம் மட்டும் வரைந்து, நுண்ணோக்கியில் தெரியும் பல பாகங்களை குறித்து… என்.சி.வசந்தகோகிலம் இன்றிருந்து இப்பல்லி ஆராய்ச்சியை கேள்விப்பட்டிருந்தால், தான் ரங்கனாதர் மேல் பாடியதை சற்றே திருத்தி, “ஏன் பல்லி கொன்றீரய்யா” என்று மோஹனத்தில் பொருமியிருப்பார்.
ஈர்ப்பு : ஒரு வியப்பு
அமர்ந்திருக்கும்போது அல்லது நின்றுகொண்டிருக்கும் போது, நம் உடலின் எடை முழுவதும் ஏதோ ஒரே ஒரு புள்ளியில் குவிந்திருப்பதைப் போல் தோன்றும்படி, ஈர்ப்பு விசையை அளிப்பதுபோல் தோன்றும். பொருளுக்கு ஒன்று ஓர் அடித்தளம் கொண்டிருக்குமானால் அந்த அடித்தளத்தின் மீது பொருளின் ஈர்ப்பு மையம் இருக்கும்; அப்போதுதான் அந்தப்பொருள் தடுமாறி விழாமல் இருக்கும்.
மொழியின் விதை
மூளையில் மொழி மையங்கள் இருப்பது உறுதியானாலும், மூளை என்பது உடல் செயல்பாடுகளை ஒருங்கிணைக்கும், கட்டளைகளைக் கடத்தும் கட்டுப்பாட்டு மையம் மட்டும் தான். மூளையின் செயல்க்கட்டுப்பாட்டு மையங்களைத் தூண்டும் காரணிகள் அதற்கான புரதங்களே. புரதங்களோ மரபணுக்களால் குறிக்கப்படுபவை. மரபணுக்களே உயிரியல் பண்புகளைத் தலைமுறைகளுக்குக் கடத்தும் அடிப்படை அலகுகள். அப்படியானால் மூளையின் மொழிமையங்களின் வளர்ச்சிக்கும், தூண்டுதலுக்கும், இணைப்புக்கும், செயல்பாடுகளுக்கும் காரணமான மரபணுக்கள் எவை?
தெனாலிராமன் பூனையும், ச்ரோடிங்கர் பூனையும்!
க்வாண்டம் இயற்பியலுக்கு நூறு வயதாகிறது (இன்னும் புரியவில்லை). இத்தாலிய மொழியில் க்வாண்டம் என்றால் ‘எவ்ளோ?’ என்று பொருள். இந்த இயலை ஆரம்பித்து வைத்தவர்களால் விடை காண முடியாத பல கேள்விகள் இருந்தன. யாரும் பார்க்காத போது அதையெல்லாம் துடைப்பத்தால் தள்ளி பீரோவுக்கு அடியில் குவித்துவிட்டுப் போய்விட்டார்கள். உதாரணமாக, ‘ஒளியும் மின் காந்த அலைதான்’ என்று காலையில் சொன்ன அதே வாய், மாலையில் கொஞ்சம் போட்ட பிறகு ‘அது அலை அல்ல, துகள்’ என்று சொல்ல ஆரம்பித்தது.
தாமரை இலையும், மகா நீரொட்டா பரப்புகளும்
வைரஸ் நுண்ணுயிர்களின் எளிய செயல்பாடுகளையே கணிணிவகை பைனரி செய்திகளாய் பாவிக்கும் நேனோபாட் எனும் நுண்ணுடுருவிகளிலிருந்து, ஆட்டோவைவிட சற்றே பெரிதான ஊர்த்தியை நேனோ என்று பெயரிடும் அளவிற்கு நேனோ என்றதும் அறிவியலாளர்களுடன் நேனு நேனு என்று வர்த்தகவித்தகர்களும் கைகோர்க்கும் நேனோ டெக்னாலஜி என்கிற அறிவியல் துறை இன்று பிரபலம். இயற்கையை அறிதலுக்கு அறிவியல்சிந்தை ஒரு உகந்தவழி என்றால், அவ்வறிதலின் வெளிப்பாடான தொழில்நுட்பங்களுக்கும் இயற்கையே முன்னோடி. நேனோ டெக்னாலஜி விஷயத்திலும் இது உண்மையே. பல நேனோ பொருட்கள், டெக்னாலஜிகள், இயற்கையில் நம்முலக ஜீவராசிகளிடையே ஏற்கனவே படைப்பில், உபயோகத்தில் இருக்கிறது. இக்கட்டுரைத் தொடரில் இயற்கை தரும் நேனோடெக்னாலஜி சிலவற்றை எனக்குப்புரிந்த அறிவியல் எல்லைக்குள் விளக்கமுற்படுகிறேன். மற்றபடி, கட்டுரையின் வசனநடையும் கோமாளி உடையும், தீவிரத்தை உள்வாங்க ஏதுவாக்கும் குதூஹல மனநிலைக்கான பாவனைகளே.
ஆழ்கடலின் விந்தைகளும், அச்சங்களும்
ஹார்ப் திட்டத்தின் ஒரு குறிக்கோள்- மிகத் தாழ் அதிர்வலைகளை உருவாக்குவதுதான்(ELF அலைகள்). இந்த ஈஎல் எஃப் அலைகள் திரட்சியான பூமியையும், கடல்களையும் ஊடுருவிச் செல்லக் கூடிய ஆற்றல் உள்ளவை. நீரில் ஆழத்தில் மூழ்கி இருக்கும் நீர்மூழ்கிக் கப்பல்களோடு தொடர்பு வைக்க இந்த அதிர்வலைகளை பாதுகாப்புப் படைகள் பயன்படுத்துகின்றனர். இதைப் பயன்படுத்தி குறிப்பிட்ட இலக்குகளை அழிக்க முடியும்.
வைரஸ் – சில முக்கிய விவரங்கள்
பெரும்பாலான நச்சியங்கள் சில குறிப்பிட்ட உயிரினங்களில் குறிப்பிட்ட கண்ணறைகளிலேயே இனப்பெருக்கம் செய்கின்றன. மூச்சுப்பாதையில் உள்ள கண்ணறைகள் நச்சியத்தால் தாக்கப்படும்போது தடுமண் (சளி) உண்டாகிறது. நச்சியங்களால் கண்ணறைகளுக்கு வெளியே தனித்து வாழ இயலாது.
நுண் உயிர்களும், மூளையும்
நுண்ணுயிர்கள் மனிதர்களின் மன அழுத்தத்தையும், விரக்தியையும் குறைக்கலாம், அல்லது மூளை வளர்ச்சியையும் அறிவாற்றலையும் கூட பாதிக்கலாம்! நேரடியாகவும், மறைமுகமாகவும் மூளையைப் பாதிப்பதன் மூலம் நன்மை, தீமை மற்றும் அவ்வாறு பிரித்தறிய முடியாத தாக்கங்கள் என எதுவும் செய்யலாம் என்பது நவீன உயிரியல் ஆய்வுகளின் எளிய பதில். மனிதனின் குடலில் எந்நேரமும் சராசரியாக ஆயிரம் ட்ரில்லியன் (1 ட்ரில்லியன் = 1 லட்சம் கோடி) நுண்ணுயிர்கள் குடியிருந்து கொண்டிருக்கின்றன. இது மனித உடலின் ஒட்டுமொத்த ‘செல்’களின் எண்ணிக்கையை விட பத்து மடங்கு அதிகம்! எடை கிட்டத்தட்ட ஒன்றரைக் கிலோ. ஏறத்தாழ ஐநூறு வகையான நுண்ணுயிர் இனங்கள். நாம் இம்மாபெரும் குடியேறிகளுடன் சமரசம் செய்தபடியேதான் ஒவ்வொரு நாளும் வாழ்ந்து வருகிறோம். இந்த எண்ணிக்கையும், வகைவிரிவும் தான் நம்மைச் சற்று மிரட்டி அவற்றைப் பொருட்படுத்திப் பார்க்க வைக்கிறது. இவற்றுள் உடலுக்கு நன்மை செய்யக்கூடியனவும் (Probiotic), சந்தர்ப்பவாத நோய்க்கிருமிகளும் (Opportunistic pathogens), இதர நோய்க்கிருமிகளும் உண்டு. பிறக்கும்போது மனதைப் போலவே குடலும் மிகத் தூய்மையாகத்தான் படைக்கப்பட்டு பூமிக்கு அனுப்பப்படுகின்றது. பிறந்து இரண்டே வருடங்களில் ஒரு முழு வளர்ச்சி அடைந்த மனிதனின் குடலுக்குள் இருக்கும் அதே அளவுக்கு பல்வேறு இனவகை நுண்ணுயிர்கள் பெருகிவிடுகின்றன. இந்த ஆரம்ப கட்ட குடல் நுண்ணுயிர்ப் பெருக்கம், மூளை வளர்ச்சியிலும் பிற்கால நடத்தையைத் தீர்மானிப்பதிலும் பங்கு வகிக்கலாம். மனிதனில் இன்னும் நேரடியாக ஆராயப்படவில்லை. ஆனால், எலிகளை வைத்து செய்யப்பட்ட சோதனையில் இது நிரூபிக்கப்பட்டுள்ளது
அறிவாற்றல் மரபுப் பண்பா?
நெடுங்காலமாக மனித இனத்தில் இருந்து கொண்டிருக்கும் கேள்விகளுள் ஒன்று: அறிவாற்றல் இயற்கையாகவே அமைவதா அல்லது வளர்த்தெடுக்கக் கூடியதா? (Nature Vs Nurture). இந்தக் கேள்வியின் இன்னொரு பரிமாணம் தான், ”அறிவாற்றல் மரபுப் பண்பா இல்லை சமூக சூழ்நிலையால் அமைவதா?”
தாய்ப்பால் சுரக்கும் பசுக்கள்
மாற்று மரபணு விலங்குகளை(transgenic) உருவாக்கும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள் சில நாட்களுக்கு முன் இதற்கு முன்பு எட்டப்படாத புதிய உயரத்தை அடைந்திருக்கிறார்கள். தங்கள் ஆராய்ச்சியின் மூலம் தாய்ப்பால் சுரக்கும் கன்றுகளை உருவாக்கியுள்ளனர். சீன விஞ்ஞானிகள் இதை முதலில் சாத்தியப்படுத்தினர். அவர்களைத் தொடர்ந்து அர்ஜென்டேனிய விஞ்ஞானிகள் அதே முயற்சியை அடுத்த தளத்திற்கு நகர்த்தியுள்ளனர்.
மெலமீன் – நடந்தது இதுதான்
மெலமீன், நைட்ரஜன்(N என்பது நைட்ரஜனைக்குறிக்கும்) நிறைந்த ஒரு வேதிப்பொருள்(C6H6N6). குறைந்த செலவில் அதிக வருவாய் கிடைக்கவேண்டும் என்று பேராசை கொண்ட குழந்தை பால்மாவு தயாரிப்பாளர்களில் சிலர், பால்மாவில் உள்ள புரதத்தைக் காட்ட நச்சுத்தன்மைதான் இல்லையே என்று நினைத்து பால்மாவில் நைட்ரஜன் நிறைந்த மெலமீனைக் கலக்கத் துணிந்தனர்.
கற்க கசடற
பல வருடங்களாய் கல்வி என்று பயின்ற அறிவியல் பாடங்கள், முதலில் நம்மை கேள்விகளை இயல்பாய் (நமக்குள்) கேட்கச்செய்யவேண்டும். அறிவியல் சிந்தையுடன் பதில்களை விடைகளை அணுகும் மனநிலையை வளர்த்திருக்க வேண்டும். தற்காலிகமாக கிடைக்கும் பதில்களை ஆராய்ந்து சரிபார்க்கும் பகுத்தறிவை வளர்த்திருக்க வேண்டும். படித்த அறிவியலின் தகவல்களை மறந்திருக்கலாம். அறிவியலின் நோக்கை உணர்ந்து மனதில் ஊறி நிலைத்திருக்கவேண்டும். அறிவியல் கல்வி, அனுபவக் கல்வியாகாமல் போகலாம். அனுபவத்திற்கு வேண்டிய கல்வியை சிந்தையை கொடுக்க முடியாமல் ஏட்டுச்சுரைக்காயாக நின்றுவிடக்கூடாது. தனிமனிதன் படித்திருந்தும் கல்வியறிவு தந்திருக்கவேண்டிய தீர்க்கமும் மனத்திடமும் வளராமல் படித்தால் மட்டும் போதுமா என்று வாழ்வின் பல தருணங்களில் எள்ளலுக்குள்ளாகும் நிலைக்கு பல காரணங்கள் கூறலாம்.
உயிரின் கதை – 7
பூமியைப்போல பல கோடி நூறாயிரம் கோள்கள் நட்சத்திரக் குடும்பங்கள் நிறைந்த பிரபஞ்சப் பெருவெளியில் நாம் மட்டும் தான் இருக்கிறோமா? அல்லது பிரஞ்சத்தின் வேறோர் மூலையில் இன்னும் வேறு உயிரிகள் நம்மைப் போலவே கட்டுரை எழுதிக்கொண்டும் படித்துக் கொண்டும் இருக்கிறார்களா? உங்கள் பகுதியில் பவர்கட் ஆன இரவொன்றில் வீட்டுக்குள் புழுங்காமல் மொட்டைமாடிக்குப்போய் வானத்தைப் பார்த்துக்கொண்டு இந்தக் கேள்வியை நிதானமாக யோசித்துப் பாருங்கள்.
உயிரின் கதை – 5
நம் உடலிலே உயிர் எங்கே இருக்கிறது என்ற கேள்வியைத்தான் நானும் சின்னப் பையனாக காய்ச்சல் வந்து வீட்டில் தனியாகப் படுத்திருந்தபோது ஒருநாள் யோசித்துக் கொண்டிருந்தேன். ஆஸ்பத்திரியில் ஊசி போடப்போன டாக்டர் மாமாவிடம் கேட்டபோது, ”இதயத்துக்குள், வலது ஓர மூலையில், ஆவி ரூபத்தில்!” சொல்லிவிட்டு தாம்பூலத்தை எடுத்து வாயில் போட்டு குதப்பிக்கொண்டே சிரிஞ்சில் மருந்தை எடுத்துக் கொண்டிருந்தார். பயந்து கொண்டே தைரியத்தை வரவழைத்துக் கொண்டு ”அப்ப ஓப்பன் ஹார்ட் சர்ஜரி பண்ணும்போது வெளியே போய்டாதா?” என்றேன்.
உயிரின் கதை – 4
கூட்டிக்கழித்துப் பார்த்தால், இந்திய சிந்தனை மரபில் உள்ள ஏறக்குறைய அதே விஷயங்களைத்தான் பிளாட்டோ, பித்தாக்ரஸ், அரிஸ்டாட்டில், ஹிப்போகிரடெஸ் ஆகியோரும் சொல்லியிருப்பதாகத் தெரிகிறது. தொல் இந்திய நூல்களின் காலம் இவர்களின் காலத்துக்கும் முந்தியது என்பதை ஏற்கனவே பார்த்தோம். அப்படியானால் இச்சிந்தனைகள் இந்தியாவில் தோன்றி பிற்காலத்தில் பரவி கிரேக்கத்திற்குச் சென்றவையா என்ன?
