சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள் – 3

நச்சுயிர்கள், உயிருள்ள ஸெல்களின் மரபுக்கூறுகளைக் (genetic material) கையகப்படுத்தி அவற்றைத் தம் இனப்பெருக்கத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு செழிப்புறுகின்றன. விடாப்பிடியாக இனப்பெருக்கம் செய்துமுடித்து, அதிக ஸெல்களைக் கைப்பற்றப் பெரும்படையுடன் கடும்புயலெனப் பாய்கின்றன. வாழும் சூழலைத் தேடிக்கொள்ளும் நிர்ப்பந்தமில்லாததால், அவற்றிற்குக் கச்சிதமான வடிவே போதுமானது. மிக எளிய பாக்டீரியாவுக்கும் பல்லாயிரம் மரபீனிகள் தேவைப்படுகிற நிலையில், ஹெச்.ஐ.வி உட்பட்ட பல நச்சுயிர்கள், பத்துக்கும் குறைவான மரபீனிகளை மட்டுமே ஏற்றுக் கொண்டுள்ளன.

சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள் – 2

பாக்டீரியாக்கள், பல கோடி ஆண்டுகள் மனிதரில்லாத உலகில் உலவி வந்த உயிரினம். அவற்றின் துணையின்றி நாம் ஒருநாள் கூட வாழ்ந்திருக்க முடியாது. அவை நம் கழிவுகளைச் சுத்தீகரித்து, மறு சுழற்சிக்குத் தருகின்றன. அவை அயராது மென்ற பின்னரே இறந்த உயிரினங்கள் மக்கிப் போக இயலும். அவை, நாம் பயன்படுத்தும் நீரை சுத்தீகரித்தும், நம் விளை நிலங்களின் உற்பத்தித் திறனைத் தக்கவைத்தும் உதவுகின்றன. மேலும், நம் வயிற்றில் வைட்டமின்களை உணவுடன் ஒருங்கிணைப்பது, உடல் ஏற்கும் சர்க்கரைகளாகவும், கலப்புபல்சர்க்கரைகளாகவும் (polysaccharides) , உண்ணும் உணவை மாற்றுவது, நம் தொண்டை வழியாக நுழையும் அயலிடத்து கிருமிகளுடன் போரிடுவது போன்ற பலவற்றையும் அவை செய்கின்றன.

சில நேரங்களில் சில நுண்ணுயிரிகள்

1983-லேயே மேற்கு ஆஸ்திரேலியா, பெர்த் நகரில் வசிக்கும், பேரி மார்ஷல் (Barry Marshall) என்ற டாக்டர், பல வகையான வயிற்றுப் புற்றுநோய்க்கும் மற்றும் பெரும்பாலான வயிற்றுப் புண்களுக்கும் Helicobar pylori என்னும் பாக்டீரியம்தான் காரணம் என்று கண்டுபிடித்து விட்டார். இது மிகவும் புரட்சிகரமான கண்டுபிடிப்பாக கருதப்பட்டதால், சோதித்து உண்மை தெரிந்த பின்னரும், அறிஞர்களின் ஒப்புதல் பெற 10 ஆண்டுக்காலம் ஆனது. உதாரணமாக, அமெரிக்காவின் நேஷனல் இன்ஸ்டிட்யூட், 1994 வரை, இக்கருத்தை அங்கீகரிக்கவில்லை. இடைப்பட்ட காலத்தில், சில ஆயிரம் அல்ஸர் நோயாளிகள் அநியாயமாக மடிந்திருப்பார்கள் என்று மார்சல்,1993-ல் Forbes பத்திரிக்கை நிருபரிடம் கூறியிருக்கிறார்.