திபெத்தில் எதிர்ப்பாளர்களை வெளி உலகில் அர்த்த புஷ்டியோடு ஆதரிக்கும் ஒரு குரலாக ஓஸரின் குரல் இருக்கிறது. அதே போல, தனக்கு மிக்க ஆபத்து வரும் என்ற போதும், சீனாவின் ஒரே நோபெல் அமைதிப் பரிசை வென்றவரான லியு ஷியாஓபோ வை சிலாகித்துப் பேசி இருக்கிறார். ஒருக்கால் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் அதிகார அடுக்கில் இவருக்கு இருக்கும் யாரோ சில சக்தி வாய்ந்த ஆதரவாளர்களால்தான் இவர் சிறையில் அடைக்கப்படாமல் தப்பி இருக்கிறாரோ என்னவோ.
Tag: மைத்ரேயன்
தேறு மனமே, தேறு!
“செகாவ் எழுதினார், ‘மூடர்களும், எத்தர்களும்தான் எல்லாவற்றையும் அறிந்தும், புரிந்து கொண்டும் இருப்பவர்கள்.”
“ஒத்துக் கொள்கிறேன்” அவள் சொன்னாள். “ஆனால் எதையுமே அறிந்து கொள்வதும், புரிந்து கொள்வதும்தான் சாத்தியமா? கடந்த காலம் என்பது எப்போதுமே போனதுதானா? இறந்தவர்களோடு சமாதானம் செய்து கொள்வது சாத்தியமா?”
சம்பாஷணை
“பாருங்க. நேத்திக்கி காலைல என் வீட்டுக்காரர் ஆஃபிஸ் போகிற வழீலெ ஒரு நியூஸ்பேப்பர் வாங்கறத்துக்கு தாமசிச்சார். அவர் எப்போதுமே டைம்ஸ்தான் வாங்குவார், அதையும் ஒரே கடைலதான் வாங்குவார், என்னன்னா நேத்திக்கி அந்தக் கடைக்காரர்கிட்டெ என் வீட்டுக்காரருக்குக் கொடுக்க டைம்ஸ் ஒரு பேப்பர் கூட இல்லை, மாலைல வீட்டுக்குத் திரும்பினப்புறம் ராத்திரிச் சாப்பாட்டுல மீன் தீய்ஞ்சு போயிருக்கு, இனிப்பு வகையறால இனிப்பு அதிகமுன்னார், அப்புறமா அங்கெயும் இங்கெயும் உக்காந்துகிட்டு சாயந்தரம் பூராவும் தனக்குத் தானே பேசிக்கிட்டிருந்தார்.”
தோல்விக்கு மருந்து: எண் 76
அன்பார்ந்த எழுத்தாளர்களே.
உங்களுக்கு நான் எண் 76 ஐக் கொடுக்கிறேன். எதையும் 76 தடவைகளாவது முயன்று பார்க்காதவரை கைவிடாமல் இருக்க உங்களை ஊக்குவிக்கிறேன், அது வேலைக்கு விண்ணப்பிப்பதானாலும் சரி, ஒரு படைப்பைத் திருத்தி எழுதுவதானாலும் சரி அல்லது வெளியே அனுப்பி வைப்பதானாலும் சரி. தன்னை இழந்தும், சலியாத உறுதியோடும் எழுதுங்கள் என்று ஊக்கம் கொடுக்கிறேன்.
பொறியியல் போதனையாளருடன் ஒரு உரையாடல்
சார்ந்திருப்பதிலிருந்து விடுதலை பெற்று சுயமாகச் செயல்பட முனையும்போது துவக்கத்தில் பல குறைபாடுகள் எழும். ஜப்பானியரின் உதாரணம் ஒன்றையோ, தாய்வானியரின் அனுபவங்களையோ, ஏன் சீனர்களின் அனுபவங்களையோ கூட நாம் எடுத்து நோக்கலாம். அந்த நாட்டு உற்பத்தித் துறைகளின் விளை பொருட்கள் முதல் பத்து ஆண்டுகள், ஏன் பதினைந்தாண்டுகள் வரையிலும் கூட மேலைப் பொருட்களோடு ஒப்பிட்டால் கீழ்த்தரமானவையாகவும், மலினமான தொழில் திறன் உள்ளனவாகவும் தெரிய வந்திருந்தன. மேற்கு நாடுகளுக்குத் தொடர்ந்து பொருட்களைக் கொடுக்கத் துவங்கிய போது அவர்கள் மேற்கின் அளவைகளைத் தம் பொருட்கள் ஈடுகொடுத்து நிற்க வேண்டும் என்ற அவதிக்கு உட்பட்ட போது தர மேம்படுதல் அவசியமாயிற்று. ஜப்பானியர் மேற்கின் உற்பத்தித் தொழில் நுட்பங்களைத் தம் சமூகக் குழுவினரின் பழக்க வழக்கங்களோடும், பண்பாட்டுத் தேர்வுகளோடும் பொருத்தி…
ஜன்னல்கள்
அந்த லாட்டரியில், குருட்டு லாட்டரி அது, இதர சிலர் பெயர்களோடு அவள் பெயரும் பொறுக்கப்பட்டு வெளியே வந்த போது, அந்த லாட்டரியில் தான் வென்றதை பெரிய அதிர்ஷ்டமாகக் கருதினாள் அவள். அவர்கள் எல்லாரையும் விட்டுப் போகவும், அனைத்தையும் என்றென்றைக்குமாக விட்டு நீங்கவும் ஜெல் எத்தனை ஆர்வமாக இருந்தாள் என்பதை நினைத்தாலே வாஞ்ஜீ தன் இதயம் கிழிக்கப்படுவது போல உணர்கிறாள்.”நான் நட்சத்திரங்களை நோக்கிப் போகிறேன்!” என்றாள் ஜெல், ஆனால் அவள் செய்வதென்னவோ ஒரு தகரப் பெட்டியில் தன் வாழ்க்கையைக் கழிப்பதுதான், அதிலேயே வாழ்ந்து அதில் இறக்கவும் போகிறாள், ….
சுட்டுக் குறிப்புக்கு அப்பால்
வாழ்வது என்பது ஒரு மகிழ்ச்சியின் மீது இன்னொன்றாக அடுக்கப்படுவது இல்லையே. அது போகப் போக வலிகள் குறையும் எனும் நம்பிக்கை மட்டுமே, சீட்டுக் கட்டு விளையாடுவதைப் போல ஒரு நம்பிக்கையை இன்னொரு நம்பிக்கை மீது போட்டு விளையாடப்படுவது. ஆட்டத்தில் ஒரு எதிர்பாராத திருப்பமாக, ராஜாக்களும், ராணிகளும் அவ்வப்போது கைக்கெட்டுவது போல, அன்பான செய்கைகளும், கருணை பாலிப்புகளும் கிட்டுமென்ற விருப்பத்தோடு ஆடப்படுவது. நாமே அந்தச் சீட்டுகளை வைத்திருக்கிறோமோ இல்லையோ: அவை எப்படியுமே முன்னே விழத்தான் செய்யும். மென்மை என்பது அதில் நுழைவது இல்லை, எப்போதாவது சிதிலமடைந்ததாகக் கிட்டலாம்.
ஸ்பினோஸா ஏன் இன்றும் பொருட்படுத்தக் கூடியவராக இருக்கிறார்?
அப்ரஹாமிய மதங்களுக்குப் பொதுவாக உள்ள தேவபிதாவை மறுப்பதைத் தன் அடித்தளமாகக் கொண்டது ஸ்பினோஸாவின் தத்துவம். ஸ்பினோஸாவின் கடவுள், மனித அனுபவ உணர்தல்கள் அனைத்தையும் கடந்த, எல்லாப் பாதுகாப்பையும் கொடுக்கும் தேவதையின் உளநிலை, ஒழுக்க குணங்கள் எதுவும் இல்லாத ஒரு கருத்துரு. ஸ்பினோஸாவின் ‘அறம்’ (1677ஆம் வருடத்தியது) என்னும் தத்துவச் சாதனையான புத்தகத்தில் உள்ள ‘தேவன்’ அன்பு செலுத்தும் ஒரு நபர் அல்ல. அதற்கு நம்பிக்கைகள், எதிர்பார்ப்புகள், ஆசைகள் அல்லது உணர்ச்சிகள் எவையும் கிடையாது.
விட்டுச் செல்வோர்
லீலா ஒரு பெண் மீமனுஷி (Übermensch). பொய்க் கடவுளரைப் பொறுக்க மாட்டாதவள். அந்த நகரில் சௌக்கியமான வாழ்க்கையை ஆபத்தில்லாத முறையில் பெறுவதை உறுதி செய்ய உதவும் கருத்தியலாக அது இருந்த போதும், ஃபாசிஸத்தை விலக்குகிறாள்- சிறுமியாக இருந்த போது, மார்ச்செல்லோ ஸோலாராவின் கழுத்தில் கத்தியைப் பதிக்கிறாள், அவனோ நகரில் அனைவரும் அடிபணியும் ஃபாசிஸ்டுகளின் மகனாக இருக்கிறான். தன் ஒரே அரசியல் உரையைத் துவக்குகையில் உழைக்கும் வர்க்கம் என்பது பற்றித் தனக்கு ஒன்றும் தெரியாது என்று கிண்டலோடு துவங்கும் அவள் கம்யூனிசத்தையும் ஒதுக்குகிறாள், இவளை மிக்க மதிப்போடு பார்க்கிறார்கள் என்ற போதும் அதன் சார்பாளர்களை ஏளனமாகப் பார்க்கிறாள். புத்தித் தெளிவு கொடுப்பதற்கு வழி என்று கல்வியைப் பார்க்கும் நடுத்தர வர்க்கத்தின் கருத்தையும் ஒதுக்குகிறாள்- எலீனாவின் ஆசிரியரிடம் இவள் சொல்வது இது: “உங்களைப் போலப் பேராசிரியர்கள் கல்வியை இத்தனை தூரம் வலியுறுத்துவது ஏனென்றால், அதன் மூலம்தான் நீங்கள் பிழைப்பு நடத்துகிறீர்கள், ஆனால் படிப்பதால் ஒரு பயனும் இல்லை, அது ஒருத்தரை மேம்படுத்துவது கூடக் கிடையாது- இன்னும் சொன்னால் அது ஒருவரை கெடுமதியாளனாகத்தான் ஆக்குகிறது.” கடைசியாக தீவிர பெண்ணியத்தையும் ஏற்கவில்லை, ஏனெனில் அது மறுதலிக்கும் பல விஷயங்களில் நெருக்கக் குடும்பமும் இருக்கிறது. காதலனான நீனோ சார்ரடோர்ரெக்காக எலீனா தன் கணவனையும், குழந்தைகளையும் விட்டு நீங்க முடிவெடுக்கும்போது லீலா வெடிக்கிறாள். லீலாவைப் பொறுத்தவரை இது விடுதலை இல்லை, முட்டாள்தனம்:
வேறு எந்தப் பெயரிலும் அது ஒரு ரோஜா: உம்பர்த்தோ எக்கோ (1932-2016)
ஒரு வரலாற்றாளர் ஒரு ஆவணத்தைப் படிக்கும்போது, அவர் கடந்த காலத்திற்குள் திறக்கும் ஜன்னலுள் பார்க்கவில்லை, முன்பு இருந்த ஒரு சமூக அமைப்பின் ஒரு செய்பொருளைப் பார்க்கவில்லை, ஆனால் தான் அதோடு ஒத்துழைத்தால், ஒப்பேறக் கூடிய ஒரு முடிவைக் கொடுக்க உதவும் ஏதோ ஒரு பொறியமைப்பையே பார்க்கிறார் என்றாகிறது. அந்த முடிவு ஆவணத்தின் படைப்பாளி என்ன சொல்ல விரும்பினாரோ அல்லது விவரிக்க நினைத்தாரோ அதனுடைய சற்றேறக் குறைய ஏற்புள்ள ஒரு பிம்பத்தைக் கொடுக்க வேண்டும் என்றாகிறது. அது ஒரு கூட்டமான மாற்று வாசிப்புகளுக்கும் இடம் தரக்கூடும், சிலவை மற்றவற்றை விட ‘மகிழ்வு’ தரக்கூடியனவாக இருக்கலாம். ஆனால் நாம் பெறும் பொருள் கச்சிதமாகப் பொருந்துவதாகத் தோற்றமளித்தாலும், நாம் எழுத்தாளரின் நோக்கங்களைக் கைப்பற்றி விட்டதாகக் கொண்டு விட்டதாகவோ, அல்லது ஒரு விவரணையாளர் என்ற அளவில் அவருடைய தரத்தைச் சரியாக மதித்து விட்டதாகவோ கொள்ள முடியாது. எனவே கடந்த காலத்தைப் பற்றி உறுதியான எந்த முடிவுகளையும் அடைவது பற்றி நாம் நிச்சயம் கொள்ள முடியாது- அதை விட, அதில் ஒளிந்திருக்கும் இரும்பு விதிகளை அதிலிருந்து கைப்பற்றி விடுவதாக நவீனத்துவர்கள் அடித்துப் பேசுவது சாத்தியமே இல்லை. நாம் செய்யக் கூடியதெல்லாம், நமது அறிவின் விசாலத்தை வைத்துக் கொண்டு அதிலிருந்து சாத்தியமான விவரணைகளைக் கட்டமைப்பதுதான்.
இது வரலாறுக்கும் புனைவுக்கும் இடையே உள்ள எல்லைக் கோட்டைத் தெளிவாகவே ஒழித்து விடுகிறது.
ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சின் முக்கியத்துவம்
இந்த வருடத்து இலக்கியப் பரிசை பேலாருஸ் நாட்டின் எழுத்தாளர் ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச்சுக்குக் கொடுக்க நோபெல் கமிட்டி முடிவு செய்தபோது உலக இலக்கிய மஹா சக்திகளான நாடுகளில் அதிசயிப்பு எழுந்தது. ’ஸ்வெட்லானாவா, யாரது? பேலா- என்ன நாடு அது?” என்றே ஒரு கருத்தாளர் கேட்டாராம், கடைசியாக நோபெல் பரிசை ஒரு அமெரிக்க எழுத்தாளர் வென்றது 1993 இல் (அவர் டோனி மாரிஸன்) என்பதைச் சொல்லி வருந்தியபடி. இங்கிலிஷ் பேசும் உலகில் ஸ்வெட்லானா அலெக்ஸியெவிச் பற்றி மிகவும் கொஞ்சமாகத்தான் தெரிந்திருக்கிறது என்பதும்,
சுயதிருப்தியில் சிக்காமல் விலகி எழுதுதல்
இந்தப் புத்தகத்தில் தவிர்க்கமுடியாதபடி ஒரு கருவாக இருப்பது பெண்கள் மீது வெறுப்பு. இது ஆண் எழுத்தாளர்களிடம் உள்ளதும், பெண்களை கற்பனையைத் தூண்டும் சக்திகளாகவோ, அல்லது வேசைகளாகவோ, மனைவிகளாகவோ, வேலைக்காரிகளாகவோ வருணித்து அவர்கள் வாழ்வுகளைக் கட்டுப்படுத்தி வைக்கிறதுமான பெண் வெறுப்பு. இந்தப் பெண் வெறுப்பைத் தாமும் உள்வாங்கிக் கொண்டுள்ளதாலேயே தமது காலத்துக்கும் இடத்துக்கும் எதிராக முரண்டிக் கொண்டிருக்கிற பெண் எழுத்தாளர்கள் . இந்த இரண்டு போக்குகளுக்கும் இடையில் உள்ளே உங்களைப் பொருத்திக் கொள்வதால் நீங்கள் ஏதோ தனிச்சிறப்பான ஒன்றைச் செய்கிறீர்கள்- பெண் வெறுப்பு என்பது இதயத்தை நொறுக்குவது, இல்லையா…
உறுதிப்படுத்தல்: ஐசாயா பெர்லினின் பிற்காலக் கடிதங்கள் -1975-1997
தமிழகத்தில் இன்னமுமே கணிசமான ‘அறிவு ஜீவிகள்’ மார்க்சிய மாயையில் மூழ்கியவர்கள் என்பதால் இந்த எழுத்தாளரின் கருத்துகளைப் பற்றிய ஒரு கட்டுரை ஒரு சிறு அளவு மயக்கத் தெளிவிப்பு முயற்சியாக இருக்கட்டுமே என்றுதான் இதைக் கொணர்கிறேன். மாறாக, மனநல மருத்துவ சிகிச்சையை அளித்தாலாவது ஏதாவது பயன் இருக்கும் என்று சிலர் சொல்லக் கூடும். இப்படி நகைச்சுவையைக் கருதிச் சொன்னாலும், இன்றைய மனநல மருத்துவமுமே அப்படி ஒன்றும் பயனுள்ள சிகிச்சை முறை என்று தோன்றவில்லை என்றும் சுட்டுகிறேன். வேப்பிலை அடித்து மஞ்சள் நீராட்டிப் பேயோட்டியவர்கள் காலம் போய்…
அச்சமற்ற, சின்ன டோஸ்டர்
டூஸ்ஸான்ட் தன் ஃப்ரிட்ஜிடம் சண்டைக்குப் போனார். அதுவோ மர்மமான முறையில் முற்றிலும் காலியாக இருந்தது, இத்தனைக்கும் அன்று காலையில் அது முழுதும் நிரம்பியதாகவே இருந்தது. சற்றுப் பொறுக்கவும், கிட்டத்தட்ட காலியாக இருந்தது: அதில் சக்தி தரும் பானப் பை ஒன்று பின்னாலே இருந்தது. முந்தின தினம், மிக்க உற்சாகத்துடன் சிரித்தபடி மெட்ரோ நடைமேடையில் வருவார் போவாருக்கெல்லாம் அந்த பானப் பையைக் கொடுத்துக் கொண்டிருந்த ஒரு இளம் பெண்ணிடமிருந்து அவர்தான் அந்தப் பையை வாங்கி இருந்தார். அவள் எல்லாருக்கும் அந்தப் பையைக் கொடுத்திருந்தாள். “எதற்காக என்னுடைய எல்லா உணவையும் நீ தூக்கி எறிந்தாய்?” அவர் அந்த ஃப்ரிட்ஜிடம் கேட்டார்.
சார்லியோடு சென்ற பயணங்கள் – அமெரிக்காவைத் தேடி
இருக்கிற இடத்தில் நிலை கொள்ளாது போவது என்ற தொற்று நோய் ஒரு தறுதலை மனிதனைப் பீடிக்கத் துவங்கினால், இங்கே இருந்து தொலைந்து போகும் சாலை அகலமாகவும், நேரானதாகவும், இனிமையானதாகவும் தெரியத் துவங்கினால், அந்தப் பலிதானி முதலில் செய்ய வேண்டியது என்னவென்றால், போவதற்கு ஒரு நல்ல, போதுமான காரணத்தைக் கண்டு பிடிப்பதைத்தான். செயல்திறன் உள்ள ஒரு ஓடுகாலிக்கு இது ஒன்றும் கஷ்டமானதே இல்லை. பயணம் திட்டமிடப்பட்டு, தேவையான உபகரணங்கள் எல்லாம் சேகரிக்கப்பட்டு, எல்லாம் செயல்படத்துவங்கிய பிறகு ஒரு புது விஷயம் நுழைகிறது, அது ஆளத் துவங்கி விடுகிறது. ஒரு யாத்திரை, சுற்றுலா…
ராஸ்ப்பெர்ரிகள்
நான் அவரிடம் பாதசாரிகள் குறுக்கே கடக்குமிடத்தில் தெருவைக் கடந்த பறவையைப் பற்றியும், உணர்கொம்புகளோடு இருந்த சிவப்பு சிலந்தி பற்றியும் சொன்னதுதான், எனக்கு இந்த நோட்டுப்புத்தகத்தை அவர் கொடுக்கக் காரணம். சிலந்திகளுக்கு உணர்கொம்புகள் கிடையாது, எனச் சொல்கையில் அவர் முறுவலித்தார், நான் சொன்னேன், இதற்கு இருந்தது என்று, அது ஒரு வேளை வேறேதோ பூச்சியாக இருக்கும், என்றார் அவர், அதற்கு நான் சொன்னேன், அப்படி இல்லை, அது சிலந்திதான், அவளிடமே நான் கேட்டிருந்தேன், அவள் தன் தலையிலிருந்து வெளியே நீட்டிய கருப்பு ஊசிகள் போல இருந்த உணர்கொம்புகளை அசைத்தாள், அது அவள் ஒரு சிலந்திதான் என்பதை எனக்கு உறுதி செய்தது என்றேன்.
நன்றியறிவிப்புகள் – பீடர் வாட்ஸ்
இது நாள்பட்ட விவகாரம். மூன்று பதிப்பாசிரியர்கள், மூன்று குடும்பத்து சாவுகள், சதையை அரித்துச் சாப்பிடும் வியாதியோடு கிட்டத்தட்ட சாவுக்கு அருகில் வந்த போராட்டம். குற்றவாளிதான் என ஒரு நீதிமன்றத் தீர்ப்பு. ஒரு திருமணம்.
இப்போது இது.
மோசமான நிலைகள்
என் குடும்பம் அதிகாரம் உள்ள பதவிகளுக்கு ஏற்றதில்லை; வாழ்நாளில் பெரும்பகுதியை அதிகாரம் கொண்டவர்கள் மேல் கசப்போடு வாழ்ந்து விட்ட எங்களுக்கு, அப்படி ஒரு அதிகாரமுள்ள பதவிக்கு மாறுவது என்பது உளநிலையளவிலேயே செய்ய முடியாததாக இருக்கிறது. வெகு நாட்களுக்கு, மேல்மட்டத்தினர்பால் நான் கொண்டிருந்த ஆங்காரம், என் நிலையை முன்னேற்றிக் கொள்வதில் நான் காட்டிய சுணக்கம், இதெல்லாம் என் சொந்த ஒழுக்கப் பார்வையிலிருந்து கிளைத்த விடலை மார்க்சிய நிலைப்பாட்டால் நேர்கிறவை என்று நான் கருதி இருந்தேன். என்னுடைய நடு 30களில்தான், நான் என் வீட்டில் கேட்டதனைத்தையும் கிளிப்பிள்ளை போலத் திரும்பிச் சொல்லிக் கொண்டிருந்தேன் என்பதை உணர்ந்தேன்.
பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா – பகுதி 2
நான் வெளியே போகுமுன் அவர் வரிசையாகப் பல கட்டளைகளை இடுவார்.
“பொடியைக் கொடுக்குமுன் நீ பணத்தை எண்ண வேண்டும்.”
“போலிஸ்காரர்களை முகம் கொடுத்துப் பார்க்கக் கூடாது.”
“நீ மீறுகிற சட்டத்தைத் தவிர பாக்கி எல்லா சட்டங்களையும் மதிக்க வேண்டும்.”
“நீ நின்று யாரோடும் பேசக் கூடாது.”
“வளர்ந்த ஆள் போல நீ நடந்து கொண்டால், அப்படியே நடத்தப்படுவாய்.”
பாட்டாளிகளின் அரண்மனை – ஆந்தனி மார்ரா
ராணுவப் பணியிலிருந்து விடுவிப்பை, பல்கலைக் கழகத்துக்குப் போகிறவர்களுக்கோ, ஜெயிலுக்குப் போனவர்களுக்கோ மட்டுமே கொடுப்பார்கள். என் நண்பர்களில் சிலருக்கு வேண்டும் அளவு மதிப்பெண்கள் இருந்தாலும், பல்கலைக்கு நுழைவதற்குக் கொடுக்க வேண்டிய லஞ்சப் பணத்தைக் கொடுக்க அவர்களிடம் வசதி இல்லை, வேறென்ன செய்வது, அதனால் நாங்களெல்லாம் ஜெயிலுக்குப் போகத் திட்டமிட்டிருந்தொம் அதற்கு உயர்கல்வி என்று நாங்கள் பெயரிட்டோம். உயர்நிலைப் பள்ளியின் கடைசி வசந்த காலத்தில், வகுப்புகளுக்குப் போகாமல் டாவ்ரைட் தோட்டத்தில் பியர் குடித்தோம்.
சார்ல்ஸ் ஸிமிக் கவிதைகள்
பூஞ்சை எறும்பொன்றுதான் எனக்கு
இன்று சிந்திக்கத் துணை.
பிறரிடம் உண்டு புனிதர்களின் படங்கள்,
பிறரிடம் உண்டு ஆகாச மேகங்கள்.
ஃபின்லாண்டியா
ரயில் நின்றதும் கீழிறங்குகிறீர்கள், அல்லது கப்பல் கரை சேர்ந்ததும், இறங்குவதற்குப் போடப்பட்ட மரப்பாதை வழியே கீழிறங்குகிறீர்கள், அல்லது விமானம் கீழே இறங்கித் தரை தொடுகிறது, உங்கள் கால்கள் எங்கே நியாயமாக இருக்க வேண்டுமோ, அந்தத் தரையில் மறுபடி பதிகின்றன, ஆனால் அங்கெல்லாம் வெறுமைதான் இருக்கிறது. நீங்கள் வந்து சேர்ந்தாயிற்று, ஆனால் நீங்கள் எங்குமே சேரவில்லை. அந்த நகரத்தின் பெயர் வரைபடத்தில் இருக்கிறது. ரயில் நிலையத்தில் பெரிய எழுத்துகளில் அந்தப் பெயர் இருக்கிறது. நாம் ரொட்டி வாங்கக் கொடுக்கிற புதுக் காசுகளில் அந்த நாட்டின் பெயர் பொறித்திருக்கிறது, ஆனால் நீங்கள் வந்து சேர்ந்திருப்பது எங்குமில்லை, மேன்மேலும் வேறு இடங்களுக்கு நீங்கள் போகப் போக உங்களுக்குப் புரிவதெல்லாம், மனிதனுக்குச் சேருவதற்கு பூமியில் ஒரு இடமும் இல்லை என்பதே.
மழை மேகங்களை அனுப்ப ஒரு மனிதன்
பாதிரியார் பச்சை நிற நாற்காலியில் தளர்ந்து அமர்ந்தார், ஒரு பள பளப்பான சமயப் பரப்புப் பத்திரிகையை எடுத்தார். அதில் இருந்த குஷ்டரோகிகள், மேலும் கிருஸ்தவரல்லாத மனிதர்களின் படங்களைப் பார்க்காமல் வண்ணமயமான பக்கங்களைப் புரட்டினார். “லியான், என்னால் அப்படிச் செய்ய முடியாதென்று உனக்குத் தெரியுமே. முழு கிருஸ்தவச் சவ அடக்கமும் நடந்திருக்கவேண்டும், மேலும் குறைந்தது அடக்கத்தின் போது பிரார்த்தனையாவது செய்யப்பட்டிருக்கவேண்டும்.”
தேவைகள்
இப்படி ஏதாவது சிறுமையாகச் சொல்லி வைப்பது இருபத்தி ஏழு வருடங்களாக அவரது வழக்கம். அது ஒரு குழாய் ரிப்பேர்க்காரரின் அடைப்பு நீக்கும் வளைகம்பி போல என் காதுகள் வழியே தொண்டைக்குள் இறங்கி என் இதயத்துக்குப் போகிற வழியில் பாதி தூரம் வரை போய்விடும். அப்போது அவர் போயிருப்பார், நானோ தொணடையை அடைத்து மூச்சுத் திணற வைக்கும் கருவியோடு அமர்ந்திருப்பேன்.
பேச்சொலிகள்
சரளமான பேச்சு! அந்தப் பெண் இறந்ததற்குக் காரணமே அவளால் பேச முடிந்தது, அவள் அக்குழந்தைகளுக்கும் பேசக் கற்றுக் கொடுத்தாள் என்பதா?அவள் கொல்லப்பட்டதற்குக் காரணம் ஒரு கணவனின் புண்ணான புத்தியில் எழுந்த கோபமா அல்லது ஒரு அன்னியனின் பொறாமையால் எழுந்த வெறியா?
வியாதியின் பேரலைக்குப் பின் பிறந்திருக்க வேண்டும். அப்படியானால் அந்த வியாதியின் வெள்ளம் ஓய்ந்து விட்டதா? அல்லது இந்தக் குழந்தைகள் வியாதிக்கு எதிர்ப்பு சக்தியோடு பிறந்தவர்களா?
ஏட்டுச் சுரைக்காயும், மெக்ஸிக அதிபரும்
ஒரு நிருபர் பென்யா நியதோவிடம் அவரது வாழ்வை மாற்றிய மூன்று புத்தகங்களைக் குறிப்பிடும்படி கேட்டார். அவருடைய தடுமாற்றமான பதில், பின்னால் யு ட்யூபில் வெளியிடப்பட்டுள்ளது, முள் முனையில் நிற்பது போன்ற துன்பம் தரும் நான்கு நிமிடங்கள் நீடித்தது. முதலில், அவர் தனக்குப் பிடித்த நாவல்களைப் பற்றி குழறினார், ஆனால் அவற்றின் தலைப்புகள் அவருக்கு நினைவில்லை. அவர் மொத்த பைபிளையும் படித்ததில்லை என்ற போதும், அதில் சில பத்திகள் அவரது இளம்பருவத்தில் மிக நம்பிக்கையூட்டுவதாக இருந்தன என்று யோசித்துச் சொன்னார்.
ஜெஃப் டையருடன் ஒரு நேர்காணல்
“நான் பற்பல பொருள்களைப் பற்றி நிறைய புத்தகங்கள் எழுதி இருக்கிறேன். எல்லாப் பொருள்களுக்கும் ஒரே மாதிரி கட்டமைப்பையே பயன்படுத்தியிருந்தால், அதெல்லாம் ஒரு தூசுக்குச் சமமாகி விடும்..”
அணு ஆற்றலின் அரசியல்
ஃபூகுஷீமா அணு உலை விபத்து நடந்து ஓராண்டு இந்த வாரம் பூர்த்தியாகிறது. இக்கட்டத்தில் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது : நாசமடைந்த அணு உலைகள் காற்று, நிலம், நிலநீர் மற்றும் கடல் நீரில் கதிர்வீச்சைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அணு உலை எரிபொருள் மேலும் உருகுவதைத் தடுப்பதற்காக டெப்கோ குளிர்விக்கும் அமைப்புகளைச் சீர்திருத்தி, அணு உலைகளைச் சுற்றிப் பாதுகாக்கும் புதிய தடுப்புச் சுவர்களை எழுப்பி விட்டதென்பது உண்மைதான். ஆனால், இந்தக் குளிர்விக்கும் அமைப்புகளும் தடுப்புச் சுவர்களும் எளிதில் பழுதடையக் கூடியவையாகவும் பல குறைகளோடும் இருப்பதால் அவற்றால் கதிர்வீச்சு வெளியே கசிவதையும் சரிவரத் தடுக்க முடியவில்லை
அதெல்லாம் மாறியபோது
எங்களை விட உருவில் பெரியவர்கள். பெரிதாக மட்டுமில்லை, அகலம் வேறு. இரண்டு பேர் என்னை விட உயரம், நானே ரொம்பவும் நெட்டை என்று பெயர். காலணி இல்லாமல் என் உயரம் ஒரு மீட்டர், 80 சென்டி மீடர். அவர்களைப் பார்த்ததுமே எங்கள் இனம் என்று தெரிந்தது, ஆனால் எங்களிடமிருந்து வேறுபட்டு இருந்தனர். எளிதில் சொல்லி விட முடியாதபடி மாறிய ஆட்களாகத் தெரிந்தார்கள்.
மொழிபெயர்ப்பு என்னும் கலை
ஷேக்ஸ்பியரையும், ஃப்ளூபேரையும் ட்யூட்சேவையும், டாந்தேவையும், ஸெர்வண்டெஸையும், காப்காவையும், ரசிக்க ஒரு மனிதனுக்கு ஆறு மொழிகளில் ஆழமான நுண்ணறிவு வேண்டியிருக்கிறது. இவற்றைத் தவிர பிற மொழிகள் இருக்கின்றன. அந்ததந்த மொழிகளில் சிறந்த கவிஞர்கள் இருக்கின்றனர்… லத்தீன் உள்ளதா, கிரேக்கமும் உள்ளதே? பிறகு, மொழிபெயர்ப்பாளர்கள் இல்லாமல் என்னதான் செய்வதாம்?
எல்லாக் கோடையும் ஒரே நாளில்
ஏழு வருடமாக மழை பெய்கிறது; ஆயிரமாயிரம் நாட்களையும் கூட்டிக் குவித்தால் எல்லாம் மழை, ஒரே நீர்த்தாளம், பீறிக் கொண்டு ஓடும் நீரொலி, அவ்வப்போது இனிமையாக மணிமணியாகச் சிதறும், சில நாள் புயலாக மழை பெய்து பெரும் சுவர்களைப் போல எழுந்து அலைகள் அந்தத் தீவுகளை அறையும். ஆயிரம் காடுகள் மழையில் அழிக்கப்பட்டு, ஆயிரம் காடுகள் மறுபடி எழுந்து மறுபடி அழிந்திருக்கின்றன.
தனிப்பாடல்
வண்ணங்கள் அவன் மனதில் ஓசைகளாய் ஒலித்தன என்பதைய் அவன் கண்டான். கோடைக்காலச் சூரிய ஒளி வீறிடும் சுரம். குளிர்கால நிலவொளி மெலிவான சோகப் புலம்பலொலி. வசந்தத்தின் புதுப்பச்சை கன்னாப்பின்னா தாளங்களில் முணு முணுப்பாயிற்று (ஆனாலும் காதில் விழுந்தது.) இலைகளூடே மின்னித் தெறித்து ஓடும் செந்நரியோ அதிர்ச்சியில் திக்கித் திணறும் மூச்சொலி. அத்தனை ஒலிகளையும் அவன் தன் வாத்தியத்தில் வாசிக்கப் பழகினான்.
பேரரசின் தொலைந்த தொடுவானங்கள்
மத்திய அரசுடைய நிதிப்பற்றாக்குறை நாட்டு வருமானத்தில் 10 சதவீதத்துக்கு மேலாகும் என்று எதிர்பார்க்கப் படுகிறது. இதைச் சமாளிக்க வேகம் வேகமாக அரசுடைய கடன் பத்திரங்களையும், பண நோட்டுகளையும் அச்சடித்துத் தள்ளுவார்கள். இதனால் ஏற்படும் பணவீக்கம் சமூகத்தைக் குதறி எடுத்து விடும். கடந்த மூன்று மாதங்களில் அதிகமாக விற்ற பொருள் என்ன தெரியுமா? கைத்துப்பாக்கிகளும், ரைஃபிள்களும்தான்.
