ஃபுகுஷீமா பேரிடர் ஜப்பானிய மக்களுக்கு அணு ஆற்றலை நம்பியிருக்கும் தம் நிலை , கொள்கை உருவாக்கத்தில் அரசாங்கத்தின் ஆதிக்கம், இன்னும் பல விஷயங்களிலும் நன்மை தீமைகளை ஆராய்ந்து சிந்திக்க ஒரு “வாய்ப்பை”க் கொடுத்திருக்கிறது. இன்னொரு வகையில் சொன்னால், ஃபுகுஷீமா பேரிடர் போன்ற பெருநாசத்துக்குக் காரணமான பழைய அமைப்பைத் தொடர்வதா, அல்லது முன்னேற உதவும் ஒரு புது அமைப்புக்கு மாறிச் செல்வதா என்ற முக்கியமான முடிவை எடுக்க வேண்டிய நிலையில் ஜப்பானை நிறுத்தியுள்ளது.
ஆசிரியர்: hirocayto
அணு ஆற்றலின் அரசியல் – பகுதி 4
ஜப்பானியக் கல்வி அதிகாரத்துக்கு அடிபணிவதை வலியுறுத்துவதால், அதிகாரிகளின் உத்தரவுகள் நியாயமானவையோ இல்லையோ, அவற்றைத் தட்டிக்கேட்க ஜப்பானிய மாணவர்களுக்குப் பயிற்சி இல்லை. குழுவின் மற்ற அங்கத்தினர்களுடன் வேறுபடவும் அவர்களுக்குப் பயிற்சி இல்லை.
அணு ஆற்றலின் அரசியல் – பகுதி 3
விஞ்ஞானப் பிரச்சினைகளில் நிபுணர்கள் அனேகமாய் எப்போதுமே திடமான ஒத்தக் கருத்துடன் இருப்பதில்லை. இதனால்தான் இந்த இழுபறி விஞ்ஞான உண்மைக்காக என்றல்லாமல் விஞ்ஞானச் சர்ச்சையே எனப்படுகிறது. ஃபுகூஷிமா பேரிடர் மற்றும் ஜப்பானின் ஆற்றல் கொள்கை பற்றிய ஆணையங்களில் குழு உறுப்பினர்களிடையே கடுமையான உடன்பாடின்மை அபரிமிதமாய் நிலவுகிறது.
அணு ஆற்றலின் அரசியல் – பகுதி 2
ஜப்பான் ஒரு ஜனநாயகம் என்றாலும், பல நாடுகளோடு ஒப்பீட்டில் அது செவ்வனே இயங்கும் ஒரு அமைப்பு என்றே தோற்றமிருந்தாலும், தொடக்கத்திலிருந்தே, ஜப்பானியக் குடிமக்களுக்கு ஃபுகுஷிமா பேரழிவைப் பற்றி நம்பகமான தகவல்கள் கிடைக்கவில்லை. இதற்கு டெப்கோதான் (TEPCO) முக்கியக் காரணம். ஃபுகுஷிமா டாயீச்சியை தாக்கக்கூடிய நிலநடுக்கம், சூனாமி ஆகியவற்றின் வலிமையை டெப்கோ குறைத்து மதிப்பிட்டிருந்ததால், அணு உலைகளைக் கண்காணிப்பதற்கான அமைப்பையும், ஃபுகுஷிமாவிலும் டோக்யோவிலும் உள்ள பணியாளர்களுக்கும் இடையான தொடர்பு வழிகளையும் பாதுகாக்கத் தேவையான நடவடிக்கைகள் எதையும் டெப்கோ மேற்கொள்ளவில்லை.
அணு ஆற்றலின் அரசியல்
ஃபூகுஷீமா அணு உலை விபத்து நடந்து ஓராண்டு இந்த வாரம் பூர்த்தியாகிறது. இக்கட்டத்தில் இந்தக் கட்டுரையின் முக்கியத்துவம் அதிகரிக்கிறது : நாசமடைந்த அணு உலைகள் காற்று, நிலம், நிலநீர் மற்றும் கடல் நீரில் கதிர்வீச்சைச் செலுத்திக் கொண்டிருக்கின்றன. அணு உலை எரிபொருள் மேலும் உருகுவதைத் தடுப்பதற்காக டெப்கோ குளிர்விக்கும் அமைப்புகளைச் சீர்திருத்தி, அணு உலைகளைச் சுற்றிப் பாதுகாக்கும் புதிய தடுப்புச் சுவர்களை எழுப்பி விட்டதென்பது உண்மைதான். ஆனால், இந்தக் குளிர்விக்கும் அமைப்புகளும் தடுப்புச் சுவர்களும் எளிதில் பழுதடையக் கூடியவையாகவும் பல குறைகளோடும் இருப்பதால் அவற்றால் கதிர்வீச்சு வெளியே கசிவதையும் சரிவரத் தடுக்க முடியவில்லை